Sam Saravanan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Sam Saravanan |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 2286 |
புள்ளி | : 133 |
தாயையும் தமிழையும் என்னொடியும் நேசிப்பவன்
--------------------
காக்கைக்கு தன் குஞ்சு
பொன் குஞ்சு என்பர்..
அக்குஞ்சிற்கும் தன் தாய்
என்றும் தங்க தாயன்றோ..
அம்மா என்று அழைத்தாலே
அன்பான சொல்லன்றோ..
அவனுக்கோ.. அவளுக்கோ..
அம்மா என்றும் அழகியன்றோ..
அழகு இல்லா அம்மாக்கள்
இவ்வுலகில் இல்லையன்றோ..
-----------
சாம்.சரவணன்.
-------------------
வலிகள் தந்த நேர்
வழிகள் என்றும்
வலிமை சேர்ந்து
வளமை பெற்ற
வாழ்வாய் சிறக்கும்..
--------
சாம்.சரவணன்
-----------------
தெரிந்த பதில்கள்
மனதில் உரைத்து
முடித்த தருணம்..
சபையில் இருக்கும்
யாரோ ஒருவர்
உரக்க சொல்லி
கை தட்டல் பெற்றிட..
நாமறிந்த பதிலென
உன்னில் இறுமாப்பு
இன்னும் இருப்பின்..
இழந்த வாய்ப்புகள்
இனியும் தொடரும்..
----------
சாம்.சரவணன்
-----------
இலவசத்தை அள்ளி தெளித்து
கோடிகளை அடைய நினைக்கும்
கட்சிகளை கத்தி சாடுவதா?
தன் உழைப்பு ஏதுமின்றி
கிடைக்கும் பொருளை கூச்சமின்றி
எதிர் பார்க்கும் நம்கூட்டம் மீது
கோபம் கொண்டு எழுவதா?
நூறு வருடம் நாம் வாழ்ந்தாலே
வாழ போகும் நாட்களென்னவோ
முப்பத்து ஆறாயிரம் சொச்சம் தானே..
உணவு உடை உறைவிடமென
ஒருத்தனுக்கு தினச்செலவு
சராசரி சில நூறுகள் வைத்தாலே
அது லட்சங்களை தாண்டாது..
காவி பச்சை வெள்ளையென
சாதி மத சாயம் எடுத்து..
கரை வேட்டி கூட்டத்துடன்
கத்து குட்டி கூட்டம் சில
அண்டி பிழைக்க பார்க்குது..
லட்சம் கோடிகள் கடன் இருக்க
கோடிகளில் கடன் வாங்கி
அடுத்த ஐந்தாண்டு மீண்டும
---------------------------
நோனார் (எதிரி) தேச வரையறை எல்லை..அல்கல்(daily) அடங்கா நோனார் சீண்டல்..
கண் காணும் தூரம் கரடு முரடு மலைகள்..தோட்டாக்கள் துளைத்த கருநிலம் (useless fields) இடையில்..
நாற்காலி வைத்தார் போல் பனைவுயர கோபுரம்..
கோபுரம் மேலே குறுகிய மரப்பரப்பு.. காற்று சேர கடுங்குளிர் அணைப்பு..
கானக வண்ணம் கலந்த கெட்டி காழகம் (uniform)..
இடக்கரம் துப்பாக்கி.. வலக்கரம் தொலைநோக்கி..
ஆமணக்கு எண்ணெய் அகல் விழியிலிட்டார் போல்..
வெறும் கண் கண்டும் தொலை நோக்கி கொண்டும்..
அதிகவனத்துடன் அரைவட்ட கண்காணிப்பு..
நீறு(துகள் particle) பறந்திடினும் நிற்கும் இவன் பார்வை அங்கு..
ஆதவனுடன் பணி தொ
--------------------------
நாட்கள் தள்ளி செல்ல தன் நடையின்
அதிர்வை குறைத்து அடிவயிறு தடவி
தன் கருவை காக்கும் பெண்கள்..
பிரசவ உத்தேச நாள் பக்கம் நெருங்க
பதற்றம் அகமேறி தைரியம் புறமிருக்க
பிரசவ நாள் எண்ணி தவிக்கும் ஆண்கள்..
தடுப்பூசி அட்டையதை பத்திரம் போல் காத்து
தேதி மறந்திடுமோ என தேதி நினைவிலிட்டு
சிசு மருத்துவன் நாடிய அந்த தருணம்..
சிசுவின் தொடர் அழுகை நடுநிசியில் வந்திட..
நால் விழிகள் கலங்கி அவ்விருள் நேரம்
ஒரு மருத்துவன் தேடி அலைந்த அந்த தருணம்..
பருவம் வந்த பிள்ளை பிடித்த வாகனம் கேட்க..
பார்த்த சோதிடர் ஏனோ சிவப்பு கொடி காட்ட..
பிள்ளை விருப்பம் கொன்று பரிதவித்த அந்த
------------------
பேனா இல்லை..
காகிதம் இல்லை..
எழுதிய தவறை
அடிக்கவும் இல்லை..
அழித்து எழுத
அழிப்பான் இல்லை..
காகிதம் தாங்க
அட்டை இல்லை..
கசக்கிய காகித
குப்பை இல்லை..
நால் விரல் மேலே
லேசாய் கைப்பேசி..
கட்டை விரல்
தட்ட பிறக்குது
கவிதை சிசுவாய்..
நதிக்கரை ஓரம்
பூங்கா இருக்கை
விடியற்காலை
சாயங்காலம்
காலம் பார்த்து..
தேடி அமர்ந்து
எழுதியது இல்லை..
சமைக்கும் மனைவி
குக்கர் சத்தம்
ஆடும் சுட்டிகள்
ஓடும் தொலைக்காட்சி
நடுவே இருக்கை
இருந்தும் உதிக்கும்
தேடிய வார்த்தைகள்..
தெளிவாய் பிறக்கும்
இவனுள் கவிதை..
தமிழ் தாகம் தீரா
தமிழர்கள் சிலரில்
நானும் ஒருவனாய்
இருப்பது நிறை
கவிதை போட்டிக்காக எழுதியது..---------------------------------------------------கவிதைகளில் கலைச்சொற்கள்---------------------------------------------கீழ்க்கண்ட இலக்கிய சொற்கள் கவிதையில் இடம் பெற வேண்டும்._-------------- ------1. *கவ்வை* - பழிச்சொல்2. *காழகம்* - ஆடை 3. *குரம்பை* - குடிசை 4. *சகடம்* - வண்டி5. *சிற்றில்* -விளையாட்டு வீடு6. *ஓர்வு* - சிந்தனை 7. *கங்குல்* - இரவு8. *அசும்பு* - சகதி9. *அத்தம்* - வழி, காட்டுவழி, பாலைவழி10. *அயில்* - உண், பருகு, குடி11. *அல்கல்* - நாள்தோறும்12. *உறவி* - எறும்பு-------------------------------------விதவையின் ஒரு நாள்------------------------------கணவனை இழந்
ஒரு கவிதை போட்டிக்காக எழுதியது..---------------------------------------------------கவிதைகளில் கலைச்சொற்கள்---------------------------------------------கீழ்க்கண்ட இலக்கிய சொற்கள் கவிதையில் இடம் பெற வேண்டும்._--------------------------------------கணவனை இழந்து கவ்வை சுமந்துகடுந்துயர் கொண்டு காலம் தள்ள..கந்தல் காழகந்தன் கடமை தவற..சுற்றோர் சுடுகண் சூரியனை வெல்ல..குரம்பை தேடி ஊர் ஊராய் ஓட..காலை உண்ட கால் வயிறு கஞ்சிகரைய தொடங்கி கால்கள் சுரந்திட..கதிரவன் ஒளிய கங்குல் ஒளிர..சிற்றில் போல சிறு குரம்பை கிட்டாதன் நிலையோர்வு தன் மனதை கொல்ல..சகடம் தேடி சாலையோரம் நிற்க..கடக்கும் கண்களில் காமம் தெரிய..ஒத்தையட
----------------------------------
உறவுகளுடன் உறவாட
காலை உணவில் சேர்ந்த
உற்ற உறவுகள் இன்று ..
வந்த உறவுகள் கலைய
மதிய உணவு தீர
மணமக்கள் மாலை துவள
அவ்விருவர் களைத்திருக்க..
வந்தும் வராமல்
பட்டும் படாமல்
பார்த்தும் பாராமல்
யார் கை தொடாமல்
அன்பளிப்பு அளித்து
பந்தி பக்கம் போகாமல்
முகக்கவசம் மறையாமல்
கிருமி நாசினி கை நனைய
முந்தி புறம் ஓடும்
முறை என்னவோ
இக்கால முறையாகி
போனதோ?
-----------
சாம்.சரவணன்