ஊரடங்கு திருமணங்கள்

----------------------------------
உறவுகளுடன் உறவாட
காலை உணவில் சேர்ந்த
உற்ற உறவுகள் இன்று ..
வந்த உறவுகள் கலைய
மதிய உணவு தீர
மணமக்கள் மாலை துவள
அவ்விருவர் களைத்திருக்க..
வந்தும் வராமல்
பட்டும் படாமல்
பார்த்தும் பாராமல்
யார் கை தொடாமல்
அன்பளிப்பு அளித்து
பந்தி பக்கம் போகாமல்
முகக்கவசம் மறையாமல்
கிருமி நாசினி கை நனைய
முந்தி புறம் ஓடும்
முறை என்னவோ
இக்கால முறையாகி
போனதோ?
-----------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (1-Sep-20, 11:04 pm)
பார்வை : 150

மேலே