Sana - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sana |
இடம் | : சிவகாசி |
பிறந்த தேதி | : 15-Dec-1976 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 297 |
புள்ளி | : 81 |
முதுநிலை அறிவியல் பட்டதாரி எழுத்துக்களை நேசிப்பவள். கவிதைகளின் களம் விரும்பி.
தொலைத்தது என
அறியாமல் தேட
கிடைத்தது நீயும்
உன் நினைவுகளும் தான்..
தேடல் முடிவதில்லை..
தேகம் மடியும் வரை....
கண்ணில் பதிந்த முதல் நாள்..
பேசி முதல் தருணம்......
பேச்ச றுத்த நொடி...
ஆனாலும் மறைத்த
என் நினைவுகள் உன்னில்...
இத்தனையையும்
நினைவில் கொண்டாலும்...இன்றும்
மறைக்க முயன்று தோற்ற நீ.,...
மறக்காது மனமற்ற நான்..
அட! வெளியே சொல்ல முடியாமல்..
உள்ளேயும் வைக்க முடியாத
உண்மை என்றும் உறங்காது....
உன் சுவாசம் கலந்த
காற்று என்னைத் தொடும்
எனில்......
புதைத்தாலும் பிழைப்பேன்
மறுபடியும்.....
தனித்த நொடிகளிலும்
உன் நினைவிலதிளைக்கும்
நொடிகளே! இனியவை..
இணைசேரா தண்டவாளமாய்
பிரிந்தே வாழினும்
நினைவுகள் இணைக்க
பயணிப்போம் இறுதி வரை.
பக்கமிருந்தும் பாராது..
பரமபத பாம்பாய் கொத்தி
இறக்குகிறது காலம்..
காத்திருப்பேன் நீ
கனியும் வரை..
இணைந்தால் பிறவிக்கு
முற்றுப்புள்ளி..இன்றேல்
தொடரட்டும் முடிவின்றி...
இப்படிக்கு. வாடாத வாசனை
மலராய் நான்....
தேடினாலும் கிடைக்காத
தங்கப்புதையலாய். நீ!!
என் வாய்ப் பேசும்
வார்த்தைகளுக்கு
நீ கண்களால் பதில்
சொல்கின்றாய்
வார்தைகள் விரையம்
இன்றி
எங்கு கற்றாய் இம்
மொழியை
சொல்ல துடிக்குது மனசு
மெல்ல தடுக்குது நாணம்
என்ன நினைத்தேனோ/
அவளே என் முன்னால்
இதுவும் ஒருவகை ஈர்ப்புதான்
காதலும் காந்தமும் ஒன்றுதான்
எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு
இருந்தும் நான் சிரிப்பதை
அவள் தெரிந்து கொள்ளவில்லை
திடீரென என்பக்கம் அவள் பார்வை
ஒரு வினாடி பயந்துவிட்டேன்
என்ன பயம் அது புரியவில்லை
சுதாரித்து விட்டு நோக்கினேன்
அவள் கண்களை
அவை சொன்னது இப்படிப் போல் தோன்றிற்று
ஹாய் ஐ லவ் யூ டா
எனது கண்களும் அப்படியே சொல்வதுபோல்
நானும் நினைத்தேன் ,
அவள் தோழிக்கு good bye சொல்லும் பாவனையில்
என்னையும் ஒரக் கண்ணால் நோக்கினாள்
மீண்டும் சந்திக்கும் வரை .......
சிவந்த மின்னலில்
மழை வருமென அறிந்தேன்.
காற்று இடக்கை
பக்கத்தை கடந்து சென்றது.
இரவில் கொக்குகள்
வேடனை போல் அலைந்தன.
இடியின் ஒலிப்பு
அத்துணை கௌரவமாக இல்லை.
காற்று இப்போது
என்னை மோதி கடக்கிறது.
கிழக்கும் மேற்குமாக
நடந்து சென்று நடந்து வருகிறேன்.
யார் வீட்டிலும்
எந்த இசையும் கேட்கவில்லை.
பூனையின் நிழல்
சுவரில் எழும்பி அமிழ்கிறது.
பழகிய பூனைகள்
சில சமயம் கடிக்காது.
ரஹீனா இப்போது
அப்பாவென தேடி வரக்கூடும்.
அவள் முன்பே
மழையில் நனைந்து விட்டாள்.
(அவள் தேசத்தில்).
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் பாடலை கேட்பாள்.
மழை தூரலாகி
சுவர் மீது மெத்'தென ஓட்டுகின்றன.
அவள் பாடலை
நேற்றேல்லாம் கேட்
நீயில்லாமல் உயிர் விட
விருப்பமில்லை...!
காற்றில் உன் வாசம் மட்டும்
தேடும் வண்ணத்துப்பூச்சியாய்
வாழ்கிறேன் உன் நினைவுகளுடன்...!
நீ என் விழி வழி
நுழைந்த பின் உன்னை
மனதிற்குள் பூட்டி
சாவியைத் தொலைத்து விட்டேன்...!
திறக்கவும் முடியாது
பூட்டவும் முடியாது
விழிக்கிறேன்..
வழி மறந்த வெள்ளாடாய்...!
உன் பிரிவில் ஏனோ
என்னை அளக்கிறேன்..
இப்போது தான் அதை
உணர்கிறேன்..,நீ
இன்றி நான் பூஜ்யமாய்..,!
சிப்பிக்குள் உருவாகும்
முத்தாய் எவரும்
அறியாமல் மலரும்
பூ