பாத்திமா மலர் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பாத்திமா மலர் |
இடம் | : அண்ணா நகர் , chennai |
பிறந்த தேதி | : 07-Oct-1950 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 8456 |
புள்ளி | : 2276 |
ஏமாற்ற நினைப்பவன்
முன்னாள் திருடன்,
ஏமாறுபவன் இன்றும்
நேர்மை தவறாதவன் ,
எத்தனை எத்தனை aemaatruthal
பொறுமைக்கும் எல்லை உன்டு ,
காற்று மெதுவாக வீசும் போது
இளந்தென்றலாகிறது
அது புயலாக மாறும் போது எப்படி/
புலி பதுங்கும் நிலையில் இது
பாய்ச்சலுக்கு அடையாளம்
பாயும் போது மனிதனுக்கு புரிகிறது
மீள முடியாது என்பது ,
ஏமாற்றும் வேலையும்
சிக்கி சிதறும் போது புரியும்
இதுதான் ஏமாற்றுதலின் நிலை
ஏமாற்றாதே ஏமாறாதே ,
உன்னால் என்றான் உனக்காக என்றான்
எண்ணங்கள் யாவிலும் நீயென்றான்
அவளும் அவனிடத்தில் நிறைந்து நின்றாள்
அவள் அவன் என்ன மாய கண்ணனோ/
இவன் என்று மனசிற்குள் செல்லமாக ,
உண்மை அன்பு கொண்ட உள்ளங்களில்
உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றாயின
ஆனாலும் ஜாதியும் மதமும் வேறு வேறு
இவற்றை உணராத வயதில்
தன்னைத் தாங்கிக் கொள்ள துணை மட்டும்
தேடி நிற்கும் பருவம்
அது இயற்கையின் நன்கொடைதான்
இறைவன் இணைத்திட நினைக்கும் போது
மனிதன் பிரித்திட முடியாது ,முடிவாக
இருவர் குடும்பமும் இணைந்து நின்றே
இணைத்து வைத்தனர் மகிழ்வாக ,
அந்த பிஞ்சு உள்ளங்கள் இரண்டும்
சோலை கிளிகளாய் ...
உன்னால் என்றான் உனக்காக என்றான்
எண்ணங்கள் யாவிலும் நீயென்றான்
அவளும் அவனிடத்தில் நிறைந்து நின்றாள்
அவள் அவன் என்ன மாய கண்ணனோ/
இவன் என்று மனசிற்குள் செல்லமாக ,
உண்மை அன்பு கொண்ட உள்ளங்களில்
உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றாயின
ஆனாலும் ஜாதியும் மதமும் வேறு வேறு
இவற்றை உணராத வயதில்
தன்னைத் தாங்கிக் கொள்ள துணை மட்டும்
தேடி நிற்கும் பருவம்
அது இயற்கையின் நன்கொடைதான்
இறைவன் இணைத்திட நினைக்கும் போது
மனிதன் பிரித்திட முடியாது ,முடிவாக
இருவர் குடும்பமும் இணைந்து நின்றே
இணைத்து வைத்தனர் மகிழ்வாக ,
அந்த பிஞ்சு உள்ளங்கள் இரண்டும்
சோலை கிளிகளாய் ...
ஓவியம் வரைந்து
காதல் கனிந்து
இதயம் நெகிழ்ந்து
மானென கண்கள்
மலரென மனங்கள்
மயங்கும் வேளை
காதலில் விழுந்தது
புரிந்தது புதிராகி
அதிசயம் அதிசயமே
உலகின் உயிர்கள்
எதுவும் இதற்கு
விதிவிலக்கல்ல
இதுதான் நியதி
படைப்பின் நோக்கம்
காதலில் நிறைவுறும்
வளர்க காதல்
அழகு தமிழ் என்னை
பிரசவித்தது
அது தன் தாலாட்டினால் என்னை
தூங்க வைத்தது
பாசத்துடன் எனக்கு பாலூட்டியது
நான் வளர வளர
அது தமிழ் அமுது ஊட்டியது
சக்தி கொடுத்த தமிழ்
என்னை மெருகூட்டியது
பள்ளிப் படிப்பில் பட்டப் படிப்பில்
என்னை புடமிட்டு ஜொலிக்க செய்தது
தாயே என் தமிழ் தாயே
நீயே எனக்கெல்லாம் என்றாகி
எழுச்சி கொண்ட நிலையில்
அந்நிய மொழி ஆதிக்க வெறி
எம்மை ஆள நினைத்தது
எதற்கும் அசராமல் நின்ற எம்மை அழிக்க
அயோக்கியரின் கடின உள்ளம்
ஆர்ப்பரித்தது ,
ஆனாலும் அடங்கா தமிழன்
எதற்கும் அசர மாட்டான் என
நிரூபிக்க
தமிழ் தாயே நீ கொடுத்த
வீரம் மிக்க தமிழ் பால் தைரியம் கொடுத்தது
எதிர்பார்ப்பு இல்லை
வீண் வேதாந்தம் இல்லை
ஆரம்பம் முதல் தொடர்ந்து
என்னில் அவன், அவனுள் நான்,
பார்ப்பவர் கண்களுக்குள் ஏன் /
அவர்கள் மனசுக்குள்
புலப்படும் இலக்கணம்
அது எது/
தூய்மையின் இருப்பிடம்
கலப்படமில்லா அன்பு
தையிரியம் ஊட்டும்
தாய்மையின் நிழலாக
உயிர் உள்ளவரை உடலாக
தொடர்வது எது /
அதுவே நட்பு,
நட்புக்கு மறு பெயர் நிழல் .
மாலையாக கழுத்தில் தொங்கும்
துப்பட்டாவின் அசைவில்
சோலைக் காற்று வீசுது
மௌனமாய் சிரிக்கும் புன்னகையில்
மாலை மஞ்சள் நிலா
நெஞ்சில் வந்து போகுது
மயக்கும் இருவிழிகளின் பனிப்பொழிவில்
காஷ்மீரத்து பனிநீரோடை உடைந்து
உள்ளே துள்ளி ஓடுது !
வணக்கம்.வாங்க ஐயா..ரொம்ப நாளா உங்களுக்கு தூது அனுப்பினேன். இன்னிக்கு தான் வந்திருக்கிறீர். வருக, வருக. வளம் பெற்று வாழ்க..
@@@@@@@
வணக்கம் தலைவரே..நீஙங்க கடைசியாச் சொன்னீங்களே அதுக்காகத் தான் உங்க கட்சியில சேர வந்தேன். அரசல் புரசலா இதைப்பத்தி தகவல் தெரிஞ்சதும் எங்க கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கிட்டு விலக்கிய பின் விளக்கம் கேக்கறாங்க. நான் தகுந்த விளக்கம் குடுத்தா மீண்டும் கட்சில சேத்துக்கறாங்களாம். நான் அந்தக் கட்சில மிகச்சிறந்த முன்னணிப் பேச்சாளராவும் செய்தி தொடர்பாளராகவும் இருந்தேன். எனக்குரிய.மரியாதை கிடைக்கலீங்க தலைவரே.
@@@@###@
நல்லதுங்க. நாங்க நல்லா கவனிப்போம். கவலையே வேண்டாம் கனவிலும்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
எங்கள் செல்ல குழந்தை நீ
உன்னை தாலாட்டும் உள்ளமெல்லாம்
புன்னகையில் பூக்குதம்மா
உன் புன்னகையில் எங்கள்
மனம் எல்லாம் நிறையுதடி
தங்க மகள் நீ எங்கள் தங்கமே
இன்றுனக்கு பிறந்தநாள்
எங்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல் கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் நலமுடனும்
வாழவேண்டும் என எங்கள்
மனசெல்லாம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என் செல்ல பேத்திக்கு
அன்புள்ள அம்மம்மாவின்பாசம்
நிறைந்த முத்தங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்மா......
அன்புள்ள அம்மம்மா அம்மப்பா
சஜிபெரியம்மா, லதா பெரியம்மா,அன்பு மாமாவின்
அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்
wish your happy
உலகம் முழுமையும்
கலக்கம், ஒருவித தயக்கம்
என்ன செய்வோம் இப்பாரினில் /
இயன்றவரை போராட்டம்
வாழ்வில் பிடிப்பு
என்ற வார்த்தை எங்கே/
தொலைத்து விட்டு தேடுகிறோமா/
இல்லை, இல்லை
தொடரும் பாதையில் சோதனைகள்
வெல்ல முடியாமல் திணறல்
ஏன் இந்த மயக்கம் கலக்கம் /
உறவு என்ற அத்தியாயம்
ஏக்கத்தில் மட்டுமே ,
நாடு விட்டு நாடு காண்பதெப்போது/
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
நலமாக நம்மை தேற்றுகிறது.
அதிகரிக்கும் அக்கிரமங்கள்
கண்கள் முன்னே...
நாளும் பொழுதும் நலமாக விடிகிறது
அதை மகிழ்வுடன் வரவேற்கும் அமைதி
தொலைவில் தெரிகின்றதே,
மனிதனின் அழகிய வாழ்வில்
எவர் கண்கள் உறுதியதோ/
அன்புள்ள தந்தையருக்கு
வாழ்வதிலும் மிகப் பெரிது தியாகம் ,
தன்னலம் பேணாது ஓடியோடி உழைத்து
உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும்
மட்டுமே தனதாக்கி
மிஞ்சுகின்ற பொழுதெல்லாம்
தன் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று
பணத்தையும் பாசத்தையும் உழைப்பையும்
கொட்டிக் கொடுத்து வளர்க்கும்
அன்பும் அக்கறையும் உள்ள தந்தையரே
உங்களுக்காக இந்நாளை
மிக சிறந்த நாளாக தெரிந்து
தந்தையின் மடியில், அவன் கரத்தில் பிள்ளைகள்
என்கின்ற விழிப்புணர்வு கொள்ள
தந்தையர் தினமாக உலகத்தில் சிறந்த
உள்ளமெல்லாம் தொட்டு விட்ட
இத்தினம் மிக மிக உயரிய தினம் .
என்றென்றும் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
தந்தை இன்றிய
நீயே ஒரு கவிதை
இக் கவிதைக்கோர் கருத்து
தேடுகிறேன் கிடைக்கவில்லை
மனமார வாழ்த்துகிறேன்
உன் வாழ்வில் வளமனைத்தும்
பெற்று, பெற்றிட, பெற்றிட, போற்றிட
புகழ் ,செல்வம், சுகம் சேர்ந்து
வாழ்வெல்லாம் நிறைந்து
நீயும் உன் குடும்பமும்
நீடூழி வாழ்கவென்று
நெஞ்சமெல்லாம் நிறைந்து
மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்
அம்மா அப்பா அண்ணா அக்கா சஜி,
loveing mathan , childs kirupal , sinmaiyi
god bless you
wish your happy birthday tishanthimma
நண்பர்கள் (15)

வீ முத்துப்பாண்டி
மதுரை

பிரியாராம்
கிருட்டினகிரி

ஜின்னா
கடலூர் - பெங்களூர்

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
