பாத்திமா மலர் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பாத்திமா மலர்
இடம்:  அண்ணா நகர் , chennai
பிறந்த தேதி :  07-Oct-1950
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2014
பார்த்தவர்கள்:  9932
புள்ளி:  2325

என் படைப்புகள்
பாத்திமா மலர் செய்திகள்
பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2025 12:43 pm

பொன் விளையும் பூமியெல்லாம்
பூத்துக் குலுங்கும் பொற்காலம்
பச்சைப்பசும் போர்வையினால்
கண்கொள்ளா காட்சியினை
தந்து நிற்கும் பாரெங்கும் மழை

இந்த நிலை நிலைத்திடத் தான்
விரும்புகின்றோம் எந்நாளும்
மழையின்றி நீரில்லை
மரமில்லை செடியில்லை
பயிரில்லை பாரினிலே

எவ்வுயிரும் உயிர் வாழ வழியுண்டு
மழையெனும் வள்ளல்தன்னாலே /
வள்ளலவன் கொடையாலே
இறைவன் படைப்பில் எண்ணிலடங்கா
அதிசயங்களில் மழை முதன்மையானது

மேலும்

பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2025 7:05 pm

நானிலமும் போற்றும்
நாம் என்ற சொல்லில் நல்லவர்கள்
நண்பர்கள் அன்பர்கள்

நலமுடனே கூடி வாழும் போது
நாலும் தெரிந்து நலமுடன் பழகும்
நற்பண்பும் நன்மைகளும் நம்மிடமே

நாம் என்ற சொல்லில் தனிமை இல்லை
நன்மையெனும் பெரும் பயனும் உண்டு
நன்றியுடன் நம்முடன் நமக்காக

நாலும் தெரிந்த நல்மனங்கள் உண்டு
நாம் என்றால் உரிமையுள்ள உணர்வுகளால்
நெகிழ்ந்திருக்கும் நேரமுண்டு

நாமென்றால் தனிமையில்லை
நாற்புறமும் நமக்கென்றே நாம்
நலம் கண்டு நாம் வாழ்வோம்

நல்ல பல நற்பண்பும் நற்குணமும்
நாமாக இணைந்திருக்க
நலிவில்லை நம் வாழ்வில் ஒருபோதும் ..

மேலும்

பாத்திமா மலர் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2025 10:46 am

மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை

மேலும்

அழகிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய பாத்திமா மலர் 06-Jun-2025 2:32 pm
மல்லிகையின் தூய்மையும் மென்மையும் அழகிய வண்ணமுமே நிறங்களில் சிறந்தது வாழ்த்துக்கள் மென்மையான கவிதைக்கு வாழ்த்துக்கள் கவின் . 06-Jun-2025 11:55 am
ரோஜாவின் மணம் மல்லிகையின் மணத்தோடு போட்டியிட முடியாது ---ஆம் உண்மை மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா என்ற இனிய பாடலுண்டு அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் 05-Jun-2025 9:30 pm
மல்லிகை என்றுமே வெண்மை. ரோஜாவின் மணம் மல்லிகையின் மணத்தோடு போட்டியிட முடியாது. மல்லிகையின் வெண்மையை அருமையாகக் கவி புனைந்துள்ளீர் கவிஞர் கவின் சாரலரே. வாழ்த்துகள். 05-Jun-2025 6:45 pm
பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2016 12:16 pm

இல்லையென்ற சொல் இறைவனிடம் இல்லை
இருந்தும் மனிதன் இறைவனை விடுவதில்லை

தேடல் கொண்ட மனிதன் தேடிக் கொண்டே தான்
தேவைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டே தான்

ஓன்று தேவை நிறையும் போது இன்னொன்று மனிதனிடம்
ஒவ்வொன்றையும் ஒழுங்காக கொடுக்கின்றார் இறைவன்

போதுமென்ற மனம் மனிதனிடம் இல்லையே
பொறுமை கொண்ட கடவுள் பொறுமை கொள்கின்றார்

அதிகார வெறி, அந்தஸ்து வெறி, சாதி வெறி, சமய வெறி
அத்தனைக்கும் மனிதன் அடிமையாகின்றான்

நெறி தவறா நேர்மை கொண்ட மனிதனை
நேசக் கரம் கொண்டு காக்கின்றார் கடவுள்

பிஞ்சு நெஞ்சம் உன்னிடம் வஞ்சம் கொள்ளாதே
பஞ்சு போன்ற வெண்மை உன் உள்ளம் மறவாதே

கள்ளம் கபடு தந

மேலும்

நன்றி ஐயா அன்று தங்கள் பார்க்கவில்லை மன்னிக்கவும் 05-Jun-2025 12:01 pm
பொருளிய வாழ்க்கையே முதன்மை ஆனதால் போலித் தனங்களில் திளைப்போருக்கு மொழிப்பற்று, நாட்டுப் பற்று, மொழி சார்ந்த இனப்பற்று, ஆன்மீக நம்பிக்கையெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இறை நம்பிக்க உள்ளதாகச் சொல்வோர் எல்லாம் உண்மையானவர்களாகளவும் நல்லவர்களாகவும் இருந்தால் கெட்டவர்களே இந்த உலகில் இருக்க வாய்ப்பில்லை. 17-Feb-2016 5:36 pm
பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2025 12:17 pm

இயற்கையின் சீற்றங்கள்
மும்முரம்
மனிதனின் போராட்டங்களும் மும்முரம்
எது எப்படி முனைந்தாலும்
மனிதனால் இயற்கையை]
வெல்ல முடியாது
முயற்சியும் அவனதே
மாற்றமும் அவனதே

எங்கு பார்த்தாலும் கோர தாண்டவம்
இயற்கையின் மாற்றத்தில்,,
அமைதியான அழகிய நாடெல்லாம்
பொலிவின்றி போகின்றது
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற
வேறுபாடு காணமுடியாத காலம்
நெருங்கி விட்டது,
அனைவரும் அன்புடன் பண்புடன்
வாழும் காலம் வெகு விரைவில்..

மேலும்

உலக மக்கள் இன்றைய காலகட்டங்களில் நிலையற்ற வாழ்வில் போராடுகின்றனர் இதனால் இனிமேல் உலகில் மிகப்பெரிய அமைதி கிடைக்கும் என நினைத்து இக்கவிதை எழுதினேன் என் கவிதை பார்த்ததற்கு நன்றி கவின் நன்றி god bless you 05-Jun-2025 11:38 am
என்ன சொல்ல வருகிறீர்கள் பாத்திமா மலர் இயற்கையின் சீற்றம் இதயத்திலும் ஓர் climatic change கொண்டுவந்து மனித மன மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சொல்ல வருகிறீர்களா ? ஓகே புதிய நோஸ்டரடாமஸ் prophesy 31-May-2025 10:21 am
பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2025 12:30 pm

கவிதை ஓன்று கண்ணுக்குள்
பொதிந்து வைத்தேன்
வைத்த கண் வாங்காமல்
பார்த்திருந்தேன்
கவிதையே நிஜமாக அவளாக
ஆனந்தம் அகமகிழ்ச்சி
கொண்டேன் பெருமிதம்
கொண்ட மகிழ்ச்சி சொற்ப நேரம்
மறைந்து விட்டாள் மக்களுள் மக்களாய்
மீண்டும் வருவாளென ஏமாற்றத்துடன்

மேலும்

நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு 30-May-2025 11:48 am
மீண்டும் வருவாள் தங்கள் மனக்கண் முன்னே. 22-May-2025 7:35 pm
பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2025 12:41 pm

இணையில்லா ஈழமதில்
இன்புற்று அமைதியுடன்
இயல்பாய் வாழ்ந்த மக்கள்
இன்று எங்கெங்கோ/

பகட்டான பக்குவத்தில்
பற்றின்றி பணம் கண்டு
பச்சிளம் பிள்ளைகளும்
பெற்றவரும் உற்றவரும்

இன்றென்ன நாளையென்ன
இயன்றவரை முன்னேறி
இந்த நிலை மாறிடுமோ
இல்லை இது தான் என்றிணைந்து

பண்புடனும் பக்தியுடனும்
பவ்வியமாய் பாசத்துடன்
பத்திலொரு பங்கினராய்
பரந்து வாழ்கின்றனர் பாரினிலே

வாழ்க வளமுடன் ..

மேலும்

பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2025 12:17 pm

இயற்கையின் சீற்றங்கள்
மும்முரம்
மனிதனின் போராட்டங்களும் மும்முரம்
எது எப்படி முனைந்தாலும்
மனிதனால் இயற்கையை]
வெல்ல முடியாது
முயற்சியும் அவனதே
மாற்றமும் அவனதே

எங்கு பார்த்தாலும் கோர தாண்டவம்
இயற்கையின் மாற்றத்தில்,,
அமைதியான அழகிய நாடெல்லாம்
பொலிவின்றி போகின்றது
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற
வேறுபாடு காணமுடியாத காலம்
நெருங்கி விட்டது,
அனைவரும் அன்புடன் பண்புடன்
வாழும் காலம் வெகு விரைவில்..

மேலும்

உலக மக்கள் இன்றைய காலகட்டங்களில் நிலையற்ற வாழ்வில் போராடுகின்றனர் இதனால் இனிமேல் உலகில் மிகப்பெரிய அமைதி கிடைக்கும் என நினைத்து இக்கவிதை எழுதினேன் என் கவிதை பார்த்ததற்கு நன்றி கவின் நன்றி god bless you 05-Jun-2025 11:38 am
என்ன சொல்ல வருகிறீர்கள் பாத்திமா மலர் இயற்கையின் சீற்றம் இதயத்திலும் ஓர் climatic change கொண்டுவந்து மனித மன மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சொல்ல வருகிறீர்களா ? ஓகே புதிய நோஸ்டரடாமஸ் prophesy 31-May-2025 10:21 am
பாத்திமா மலர் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2025 12:15 pm

வகுப்பறையில்:
ஐயா, இவன் என்ன 'துர்னாப், துர்னாப்'னு

கிண்டல் பண்ண்றானுங்க ஐயா.

@@@@@

ஏண்டா அறிவழகா 'அர்னாப்'பைத்

துர்னாப்னு கிண்டல் பண்ண்ற?

@@@@@@

ஐயா, அந்த அர்னாப் எப்ப பாத்தாலும்

பச்சை, பச்சையா கெட்ட வார்த்தைகளைப்

பேசறாணுங்க ஐயா. என்னால அதை

சகிக்க முடியல. கெட்ட வார்த்தைகளைப்

பேசியே வகுப்பில் உள்ள மாணவர்களை

எல்லாம் கெடுத்துடுவான் ஐயா.

@@@@@

ஏண்டா அர்னாப் கெட்ட வார்த்தை

பேசினாயா?

@@@@@@

கெட்ட வார்த்தையா? ஐயா நான் கனவில்

கூட கெட்ட வார்த்தை பேசமாட்டேனுங்க

ஐயா

@@@@@@@

(நான்கு மாணவர்கள் எழுந்து): ஐயா,

இவன் பொய் சொல்லறான். இவன்

மேலும்

மிக்க நன்றி கவிஞரே. 24-May-2025 10:07 am
நன்றி ஐயாஉங்கள் பதிலுக்கு நீங்கள் என்றும் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் god bless you always 23-May-2025 12:30 pm
தங்கள் விடுகைக்கு மிக்க நன்றி. நலமாக இருக்க தினம் 10 விதமான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். பணியில் இருந்தபோது அதிக பணிச்சுமை. உடல் நலனைப் பேணத் தவறிவிட்டேன். 2014ல் பணிநிறைவு பெற்றேன். இப்போது வயது 73 துவங்கிவிட்டது. வீட்டோடு முடங்கிக் கிடக்கிறேன். நீண்ட நாட்கள் சென்றபின் தங்கள் மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் மிக்க நன்றி. 22-May-2025 7:31 pm
ஐயா நீங்கள் எப்படி நலமா god bless you 22-May-2025 3:25 pm
பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2020 2:03 pm

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
எங்கள் செல்ல குழந்தை நீ
உன்னை தாலாட்டும் உள்ளமெல்லாம்
புன்னகையில் பூக்குதம்மா
உன் புன்னகையில் எங்கள்
மனம் எல்லாம் நிறையுதடி
தங்க மகள் நீ எங்கள் தங்கமே
இன்றுனக்கு பிறந்தநாள்
எங்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல் கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் நலமுடனும்
வாழவேண்டும் என எங்கள்
மனசெல்லாம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என் செல்ல பேத்திக்கு
அன்புள்ள அம்மம்மாவின்பாசம்
நிறைந்த முத்தங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்மா......
அன்புள்ள அம்மம்மா அம்மப்பா
சஜிபெரியம்மா, லதா பெரியம்மா,அன்பு மாமாவின்
அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்
wish your happy

மேலும்

பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2020 11:31 am

உலகம் முழுமையும்
கலக்கம், ஒருவித தயக்கம்
என்ன செய்வோம் இப்பாரினில் /
இயன்றவரை போராட்டம்
வாழ்வில் பிடிப்பு
என்ற வார்த்தை எங்கே/
தொலைத்து விட்டு தேடுகிறோமா/
இல்லை, இல்லை
தொடரும் பாதையில் சோதனைகள்
வெல்ல முடியாமல் திணறல்
ஏன் இந்த மயக்கம் கலக்கம் /
உறவு என்ற அத்தியாயம்
ஏக்கத்தில் மட்டுமே ,
நாடு விட்டு நாடு காண்பதெப்போது/
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
நலமாக நம்மை தேற்றுகிறது.
அதிகரிக்கும் அக்கிரமங்கள்
கண்கள் முன்னே...
நாளும் பொழுதும் நலமாக விடிகிறது
அதை மகிழ்வுடன் வரவேற்கும் அமைதி
தொலைவில் தெரிகின்றதே,
மனிதனின் அழகிய வாழ்வில்
எவர் கண்கள் உறுதியதோ/

மேலும்

பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2019 11:12 am

அன்புள்ள தந்தையருக்கு
வாழ்வதிலும் மிகப் பெரிது தியாகம் ,
தன்னலம் பேணாது ஓடியோடி உழைத்து
உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும்
மட்டுமே தனதாக்கி
மிஞ்சுகின்ற பொழுதெல்லாம்
தன் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று
பணத்தையும் பாசத்தையும் உழைப்பையும்
கொட்டிக் கொடுத்து வளர்க்கும்
அன்பும் அக்கறையும் உள்ள தந்தையரே
உங்களுக்காக இந்நாளை
மிக சிறந்த நாளாக தெரிந்து
தந்தையின் மடியில், அவன் கரத்தில் பிள்ளைகள்
என்கின்ற விழிப்புணர்வு கொள்ள
தந்தையர் தினமாக உலகத்தில் சிறந்த
உள்ளமெல்லாம் தொட்டு விட்ட
இத்தினம் மிக மிக உயரிய தினம் .
என்றென்றும் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
தந்தை இன்றிய

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (28)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே