பாத்திமா மலர் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பாத்திமா மலர் |
இடம் | : அண்ணா நகர் , chennai |
பிறந்த தேதி | : 07-Oct-1950 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 9868 |
புள்ளி | : 2316 |
கவிதை ஓன்று கண்ணுக்குள்
பொதிந்து வைத்தேன்
வைத்த கண் வாங்காமல்
பார்த்திருந்தேன்
கவிதையே நிஜமாக அவளாக
ஆனந்தம் அகமகிழ்ச்சி
கொண்டேன் பெருமிதம்
கொண்ட மகிழ்ச்சி சொற்ப நேரம்
மறைந்து விட்டாள் மக்களுள் மக்களாய்
மீண்டும் வருவாளென ஏமாற்றத்துடன்
பொய்யோடு நான்கொண்ட புத்துறவால் பூத்தது
பொய்பொய்யாய் புத்தம் புதுக்கவிதை நெஞ்சினில்
கையோடு கைசேர்த்து காதலே நீநடந்தால்
பொய்யா குமோகவி தை
காலங்கள்மாறலாம்
காட்சிகள் மறையலாம்
உண்மை அன்பு மறையாது
வாழ்ந்த வாழ்க்கையின்
எண்ணங்கள் எழுத்தாணிபோல்
உள்ளத்தில் ததும்பி நிற்கும்
அவை இன்று நடந்தது போல்
அத்தனையும் கல்வெட்டாய்
காலமெல்லாம் கனிந்து நிற்கும்
கடந்து வந்த பாதையில்
கரடு முரடு மேடு பள்ளம்
எண்ணிலடங்கா இருந்தும்
அன்பில் பாசத்தில் துவண்டு
வஞ்சமின்றி கஞ்சமின்றி
நெஞ்சம் முழுவதும் நேசம்
அலைகடலென திரண்டு வரும்
உறவுகளின் பாசம்
நினைவுகளின் ஓட்டத்தில்..
அழகிய மலர்களின்
அற்புத வண்ணமதை
நாடிவரும் எண்ணங்கள்
நறுமணமோ கவர்ந்திழுக்கும்
காந்தமென தன்னகமும்
தாவி வரும் வண்டுகளும்
வண்ணங்களை கொண்டுலவும்
வண்ணத்து பூச்சிகளும்
ஒயிலாக நடமாடும்
நளினமிகு மங்கையரும்
கூடிவிளையாடும் குழந்தைகளும்
வண்ணக் கலவைகளில்
வாசமிகு பூக்களைத்தான்
வாஞ்சையுடன் வாரி எடுத்து
தலையினிலே சூடிடவே
ஆகா என்ன அழகு என்னே அழகு /
என்ன கொண்டாட்டம்
ஆண்டவன் படைத்திட்ட
ஆனந்தம் ஆனந்தம்
மலர்களே மனங்கவரும் அழகிய
படைப்புகளில் ஒய்யாரமாய்..
நல்ல நண்பன் நிழலில்
நாளும் பொழுதும்
நடமாடி நல்ல எண்ணம்
நலம் கூடி நன்மை பல
கைகூடி உயர்வின் மேன்மை
உய்த்து மகிழ உண்டு
கோடி நன்மை உண்டு
அன்பின் மகிழ்ச்சி அயரா முயற்சி
அனைத்தும் காண்போம்
நட்பின் நிழலில் நட்பின்
பெயரில் நாமும் உண்டு
நீ யார் என்றால்
நம்மை அவனில் தெரிந்து
கொள்ளும் அன்பின் நெகிழ்ச்சி
அவனே நான் என தெரிந்து
கொள்ள உற்ற துணையும்
உயிர் தோழனும் எவனோ அவனே
நண்பன் நல்ல நண்பன்
நண்பனாக மட்டுமல்ல
நம்மை தொடர்ந்து வரும்
நிழலாக நிஜமாக நம்முடன்
என்றும் நிறைந்து நிற்பான்
நண்பன் நல்ல நண்பன்
அழகிய நகரில்
அமைதியின் ஊற்றில்
ஆனந்த ஊஞ்சலில்
அன்பின் வசம்தன்னில்
ஆடிவரும் தென்றலென
அச்சமின்றி அகமகிழ்ந்து
அத்தனையும் சொந்தங்கள்
ஆலமர விழுதென ..
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
அசராத பாசங்கள்
ஆண்டவன் தந்திட்ட
அரண் கொண்ட இல்லங்கள்
அந்நிய இராணுவத்தின்
அக்கிரம செயல்களால்
அழிந்ததே அவர்களின்
ஆனந்த சொர்க்க பூமி
அதுவே அவர்கள் தாய்நாடு
அங்கேயும் இங்கேயும் எங்கேயும்
ஆலாய் பறந்து திரிந்து
அவனிதனில் அங்கலாய்க்கும்
ஆதரவின்றி அனாதைகளாய்
அலைந்து அலைந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அத்தாய் நாட்டின் மக்கள் ..
சிறகடித்து பறக்கும் காலம்
அன்பை பகிரும் காலம்
அணைத்து மகிழும் காலம்
கல்வி கற்பதும
கற்பனையில் மிதப்பதும்
கதைகள் பிறப்பதும்
காதலில் தவழுவதும்
அன்பில் அணைப்பதும்
ஆனந்த கடலில் திளைப்பதும்
கல்லூரிக் காலம்
எத்தனை காலங்கள் வந்தாலும்
கல்லூரிக் காலம் போலாகுமா /
நினைப்பதெல்லாம் நடத்திடும் காலமது
அதில் கல்வியா செல்வமா வீரமா /
அத்தனையும் அத்துப்படி
நினைத்தாலே இனிக்கும் காலம்
கல்லூரிக் காலம்
அன்று நடந்ததெல்லாம் இன்று போல்
இனிமையாய் தித்திக்கிறதே
கல்வியில் ஊக்கம்
கற்பனையில் ஏக்கம்
எல்லாமே சுகமான காலம்தான்
கல்லூரிக் காலமது
கவலைகள் ஏதுமின்றி கல்லூரியில்
அன்பு துளைக்காத இதயம்
ஈரமற்றது
கல்வி கொடுக்காத செல்வம்
நிலையற்றது
விட்டுக் கொடுக்காத மனம்
வேண்டாதது
கேள்வியுறாத செவிகள்
ஞானமற்றது
காதல் இல்லாத வாழ்கை
கனிவற்றது
வறுமை காணாத உள்ளம்
செருக்குற்றது
பொறுப்பற்ற ஆட்சி நாட்டில்
துடுப்பற்றது
நகைப்பற்ற மனிதன் உடல்
நோயுற்றது
கறுப்பற்ற மேகங்கள் அவை
மழையற்றவை
வளைவற்ற நீரோட்டம் அவை
நதியற்றவை
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
எங்கள் செல்ல குழந்தை நீ
உன்னை தாலாட்டும் உள்ளமெல்லாம்
புன்னகையில் பூக்குதம்மா
உன் புன்னகையில் எங்கள்
மனம் எல்லாம் நிறையுதடி
தங்க மகள் நீ எங்கள் தங்கமே
இன்றுனக்கு பிறந்தநாள்
எங்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல் கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் நலமுடனும்
வாழவேண்டும் என எங்கள்
மனசெல்லாம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என் செல்ல பேத்திக்கு
அன்புள்ள அம்மம்மாவின்பாசம்
நிறைந்த முத்தங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்மா......
அன்புள்ள அம்மம்மா அம்மப்பா
சஜிபெரியம்மா, லதா பெரியம்மா,அன்பு மாமாவின்
அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்
wish your happy
உலகம் முழுமையும்
கலக்கம், ஒருவித தயக்கம்
என்ன செய்வோம் இப்பாரினில் /
இயன்றவரை போராட்டம்
வாழ்வில் பிடிப்பு
என்ற வார்த்தை எங்கே/
தொலைத்து விட்டு தேடுகிறோமா/
இல்லை, இல்லை
தொடரும் பாதையில் சோதனைகள்
வெல்ல முடியாமல் திணறல்
ஏன் இந்த மயக்கம் கலக்கம் /
உறவு என்ற அத்தியாயம்
ஏக்கத்தில் மட்டுமே ,
நாடு விட்டு நாடு காண்பதெப்போது/
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
நலமாக நம்மை தேற்றுகிறது.
அதிகரிக்கும் அக்கிரமங்கள்
கண்கள் முன்னே...
நாளும் பொழுதும் நலமாக விடிகிறது
அதை மகிழ்வுடன் வரவேற்கும் அமைதி
தொலைவில் தெரிகின்றதே,
மனிதனின் அழகிய வாழ்வில்
எவர் கண்கள் உறுதியதோ/
அன்புள்ள தந்தையருக்கு
வாழ்வதிலும் மிகப் பெரிது தியாகம் ,
தன்னலம் பேணாது ஓடியோடி உழைத்து
உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும்
மட்டுமே தனதாக்கி
மிஞ்சுகின்ற பொழுதெல்லாம்
தன் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று
பணத்தையும் பாசத்தையும் உழைப்பையும்
கொட்டிக் கொடுத்து வளர்க்கும்
அன்பும் அக்கறையும் உள்ள தந்தையரே
உங்களுக்காக இந்நாளை
மிக சிறந்த நாளாக தெரிந்து
தந்தையின் மடியில், அவன் கரத்தில் பிள்ளைகள்
என்கின்ற விழிப்புணர்வு கொள்ள
தந்தையர் தினமாக உலகத்தில் சிறந்த
உள்ளமெல்லாம் தொட்டு விட்ட
இத்தினம் மிக மிக உயரிய தினம் .
என்றென்றும் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
தந்தை இன்றிய
நீயே ஒரு கவிதை
இக் கவிதைக்கோர் கருத்து
தேடுகிறேன் கிடைக்கவில்லை
மனமார வாழ்த்துகிறேன்
உன் வாழ்வில் வளமனைத்தும்
பெற்று, பெற்றிட, பெற்றிட, போற்றிட
புகழ் ,செல்வம், சுகம் சேர்ந்து
வாழ்வெல்லாம் நிறைந்து
நீயும் உன் குடும்பமும்
நீடூழி வாழ்கவென்று
நெஞ்சமெல்லாம் நிறைந்து
மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்
அம்மா அப்பா அண்ணா அக்கா சஜி,
loveing mathan , childs kirupal , sinmaiyi
god bless you
wish your happy birthday tishanthimma
நண்பர்கள் (15)

வீ முத்துப்பாண்டி
மதுரை

பிரியாராம்
கிருட்டினகிரி

ஜின்னா
கடலூர் - பெங்களூர்

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
