தூய்மையின் நன்மை

இல்லையென்ற சொல் இறைவனிடம் இல்லை
இருந்தும் மனிதன் இறைவனை விடுவதில்லை

தேடல் கொண்ட மனிதன் தேடிக் கொண்டே தான்
தேவைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டே தான்

ஓன்று தேவை நிறையும் போது இன்னொன்று மனிதனிடம்
ஒவ்வொன்றையும் ஒழுங்காக கொடுக்கின்றார் இறைவன்

போதுமென்ற மனம் மனிதனிடம் இல்லையே
பொறுமை கொண்ட கடவுள் பொறுமை கொள்கின்றார்

அதிகார வெறி, அந்தஸ்து வெறி, சாதி வெறி, சமய வெறி
அத்தனைக்கும் மனிதன் அடிமையாகின்றான்

நெறி தவறா நேர்மை கொண்ட மனிதனை
நேசக் கரம் கொண்டு காக்கின்றார் கடவுள்

பிஞ்சு நெஞ்சம் உன்னிடம் வஞ்சம் கொள்ளாதே
பஞ்சு போன்ற வெண்மை உன் உள்ளம் மறவாதே

கள்ளம் கபடு தந்திரம் கணமும் நினையாதே
கருணை கொண்ட உள்ளமதில் கறையும் இல்லையே

உள்ளம் என்பது உண்மையின் இருப்பிடம்
உயர்வு என்பது ஊக்கத்தின் பிறப்பிடம்

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Feb-16, 12:16 pm)
பார்வை : 148

மேலே