ஏக்கத்தில் மனிதன்

உலகம் முழுமையும்
கலக்கம், ஒருவித தயக்கம்
என்ன செய்வோம் இப்பாரினில் /
இயன்றவரை போராட்டம்
வாழ்வில் பிடிப்பு
என்ற வார்த்தை எங்கே/
தொலைத்து விட்டு தேடுகிறோமா/
இல்லை, இல்லை
தொடரும் பாதையில் சோதனைகள்
வெல்ல முடியாமல் திணறல்
ஏன் இந்த மயக்கம் கலக்கம் /
உறவு என்ற அத்தியாயம்
ஏக்கத்தில் மட்டுமே ,
நாடு விட்டு நாடு காண்பதெப்போது/
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
நலமாக நம்மை தேற்றுகிறது.
அதிகரிக்கும் அக்கிரமங்கள்
கண்கள் முன்னே...
நாளும் பொழுதும் நலமாக விடிகிறது
அதை மகிழ்வுடன் வரவேற்கும் அமைதி
தொலைவில் தெரிகின்றதே,
மனிதனின் அழகிய வாழ்வில்
எவர் கண்கள் உறுதியதோ/

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Jul-20, 11:31 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : yekkathil manithan
பார்வை : 388

மேலே