புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 23---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௩

221. முதலில் சட்டத்தின் குறைகளைத் திருத்துப்
பின் நீதியை வழங்கு.

222. சட்டத்தில் உள்ள சல்லடைகளில் நீதியை வடிகட்டிக் கொடுப்பதற்குள்
நீதியைக் கேட்டவனின் நிலை மிக மோசமாய் மாற்றப்படுகிறது.

223. காய்கறிகள் அதிகம் விளைந்தாலும் விலை ஏறினாலும்
விற்பனையின் பலன் விவசாயிக்குச் சேர்வதே இல்லை.

224. சட்டம் இல்லாமல் வழங்கப்படும் நீதி ஒரு நாள் கூத்தைப் போல
சில நாள்களில் மறைந்தே போகும்.

225. நெல்லை விதைத்த உடனே அறுவடை செய்ய விரும்புகிறார்கள்
களப்பணி செய்யாமல் கனவு காணும் மனிதர்கள்.

226. உடல் குளித்து உள்ளே செல் கோவில் அசுத்தம் பெறாது
மனம் குளித்தே வெளியே செல் உலகம் அசுத்தம் பெறாது.

227. அதிகாரப் பலமும் அரசியல் பலமும் பாதை மாறி நிலைத்து விட்டால்
நீதிக்கே தூக்குத் தண்டனை கிடைக்கும்
அது அடிக்கடி நடக்கும்.

228. ஒரு பெண்ணின் எழுதுகோல் தலை குணியும் போது
பல தலைமுறையின் எதிர்காலம் தலை நிமிரத் தொடங்குகிறது.

229. சொல்லியவர் யாரென்று பார்த்துக் கருத்தை ஏற்பவர் ஒருவகை
சொல்லிய கருத்து என்னவென்று பார்த்துக் கருத்தை ஏற்பவர் ஒருவகை.

230. பணத்தை விதைத்து அரசியல் செய்பவர்
பணத்தை தான் அறுவடை செய்வார்.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (12-Jul-20, 11:53 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 64

மேலே