நீயே

இதயக்கூட்டில் வரைந்த உருவம் ,
நிஜமாய் இங்கே தோணுதே..
இதழ்கள் சுமக்கும் உன்பெயரை,
வீதியெங்கும் விழிகள் தேட,
விஸ்வரூபமாய் நேரம் ஓட,
என்னை ஏற்றுக்கொள் என் காதலே... 💓
அன்பே இந்த இளமையே,
அணுஅணுவாய் உன்னால் சாகுதே,
ஆயிரம் ஆண்கள் மத்தியில் ,
அவன் முகம் மட்டும் தெரியுதே... 💓
நிழல் தொடும் தூரத்தில்
நீ நடக்க,
நிலவுடன் நீந்தி நான் பறக்க,
மனதுக்குள் ஏனோ சாரல் தூவுதே...
புருவம் தூக்கி நீயும் பார்க்க,
பூனைக்கும் புறாவுக்கும் உன் பெயர் வைக்க,
புத்திமாறி, சித்தம் கலங்கி
போதையில் நானிருக்க...
ஜிமிக்கி கம்மல் முத்தங்கள் கொடுக்க,
கன்னங்கள் இரண்டும்
காயங்களில் துடிக்க,
உந்தன் உதடுகள் மட்டுமே
மருந்தாய் அன்பே.. 💓
படித்ததும் பிடித்ததும் எல்லா மறக்க,
உன்னை பார்த்த நாள் மட்டும்
நினைவிலிருக்க,
தவறி விட்ட உன் கைக்குட்டை,
காதல் சின்னமாய் ஜொலிக்க...
தனிமையில் கால்கள் உன்னை தேட,
நம்மை சேர்த்து சுமக்க
பூங்கா தவிக்க,
உயிரே உன்னைச் சேர
தலையணையும் என்னோடு தவமிருக்க...
வளையலும் , கொழுசும் உனக்காக தொடுக்க,
வண்ணத்து பூச்சிகளை தூதாய் அனுப்ப,
அலைபேசி எண் தேடி
அலைந்து திரிகின்றேன் அன்பே.... 💓
தொடுதிரை தொடங்கி துயில் கொள்ளும் வரை
உன் முகமே வேண்டும்,
எமன் வந்து என்னை தொடும் வரை,
நீயே என்றும் வேண்டுமடா....💖

எழுதியவர் : சிபூ (6-Aug-22, 1:41 pm)
Tanglish : neeye
பார்வை : 131

மேலே