யோகராணி கணேசன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யோகராணி கணேசன் |
இடம் | : Norway |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 10292 |
புள்ளி | : 142 |
வாசிப்பதும் எழுதுவதும் என் இரு கண்கள். கேட்டதும், பார்த்ததும், ரசித்ததும், அனுபவமும் , உண்மையும் , கற்பனையும் என பற்பல பொருள் கொண்டு விரிந்து கொண்டிருக்கிறது எனது கவிதைகளும் சிறுகதைகளும்...... என்னை சூழ உள்ளவர்களின் எழுத்தார்வத்தை வளர்ப்பதற்காகவே வளர்ந்து கொண்டிருக்கிறது எனது தளம்! https://aasipori.blogspot.com
*நோர்வேயில்*
*தமிழ்ச் சிறுவர் கதைகள் நூல் வெளியீடு!*
அருகிவரும் சிறுவர் கதை இலக்கியத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் தமிழ்ச் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பென்குயின் பயணம்’ நூல் வெளியீடு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வைபவத்தை திருமதி கலைவாணி நகுலேஷ்வரன் தொகுத்து வழங்கினார். வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தினைத் தொடர்ந்து நூலாசிரியர்களான யோகராணி கணேசன் அவரது பிள்ளைகள் கனிசா கணேசன் மற்றும் கஷ்வினி கணேசன் குறித்த அறிமுகத்தினை திருமதி சியாமினி கென்றிலிஸ்மன் நி
*நோர்வேயில்*
*தமிழ்ச் சிறுவர் கதைகள் நூல் வெளியீடு!*
அருகிவரும் சிறுவர் கதை இலக்கியத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் தமிழ்ச் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பென்குயின் பயணம்’ நூல் வெளியீடு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வைபவத்தை திருமதி கலைவாணி நகுலேஷ்வரன் தொகுத்து வழங்கினார். வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தினைத் தொடர்ந்து நூலாசிரியர்களான யோகராணி கணேசன் அவரது பிள்ளைகள் கனிசா கணேசன் மற்றும் கஷ்வினி கணேசன் குறித்த அறிமுகத்தினை திருமதி சியாமினி கென்றிலிஸ்மன் நி
அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத்தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. எப்படி எங்கே தொடங்குவது என்ற கேள்விதான் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. எப்படியாவது கேட்டுவிட வேண்டும்.
“ என் நண்பி சுபாவைத் தெரியும்தானே உங்களுக்கு, அவளும் நானும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவதாக முடிவு செய்திருக்கிறோம். அவள் ஏற்கனவே இருவருக்கும்சேர்த்து பதிவு செய்துவிட்டாள். நான் போய்வரலாம் என்றிருக்கிறேன். நீங்கள்
விரைவில் நான் எனது நகரத்தை
இனங்காண முடியாதிருக்கும்
மிகவும் கைவிடப்பட்டும், பாழடைந்தும் இருக்கும்
அது எளிதாக்கும் திருப்புமுனைப்புள்ளிக்கு
சற்று முன்னதாகவே
நகரம் விரைவில் என்னையும்
அடையாளங்காணமுடியாது போகலாம்
நிழல்கூட என்னைப் பின்தொடராது
கடிகாரம்கூட எனக்குப் பின்னோக்கி ஓடுகிறது
ஒன்றுமட்டும் நிச்சயம்- அது
அதற்கு நேரமெடுக்கும், அதற்கு நேரமெடுக்கும்
ஆனால் அது மேடு, மேல் நோக்கிச் செல்லுங்களென்று
ஒருபோதும் சொல்லாதீர்கள்
யாராவது இறக்கும்வரை அதைச் சொல்லாதீர்கள்
யாராவது விடைபெறாதவரை அதைச் சொல்லாதீர்கள்
யாராவது தமது வாழ்வாதாரத்தை இழந்து
சுவரில் சென்று முட்டிக்கொள்ளாதவ
நினைவுகளை கிளறி
கடந்த காலத்தை
கடைந்தெடுத்து
தவில் பாடி
ஒற்றைக் கனவில்
படகோட்டும் பலம்
தனிமைக்கே உரித்து
சிந்தனைத் திறன்
செயலாய் உருவெடுக்க
உடலும் உள்ளமும்
நின் மதிகொள்ள
இடம் கொடுத்து
வரம் தருவது
தவம் பெறும்
தனிமையில்தான்
சுய சிந்தனைக்கு
தாள்ப்பாள் இட்டு
காப்ரேட் கம்பனிகளின்
காசோலைக்கு கவிழ்ந்து
காலமோட்டும் காலமதில்
கொரோனா கொடுத்த
வைர விடுதலை
தனிமைப்படுத்தலில் தனிமை!
கச்சிதமாய் கைப்பற்ற
இதுவே தருணம்
சிந்தனை சிறக்க
இதுவே தருணம்
புதிய முய்ற்சிகள் சிறக்க
இதுவே தருணம்!
பச்சை என்பது துவக்கம்,
சிவப்பு என்பது நிறுத்தம்,j
மஞ்சள் என்பது தயார் நிலை.
இது வீதி விளக்கின் விதி .
வாழ்க்கை வழிக்கும் இது பொருத்தமென்பேன்.
பச்சை என்பதை கனிவென்று கொண்டு
நாளதைத் தொடங்கு.
சிவப்பு என்ற கோபம் வரும் நேரம்,
செய்தலை நிறுத்தி பின் செயலதைத் தொடங்கு.
மஞ்சள் என்பது மங்கலம் என்றே மனதில் நிறுத்தி,
சோம்பல் தவிர்த்து என்றும் தயார் நிலை கொள்.
வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா
கடந்து
வந்த
பாதையை அறிந்து
கொண்டாலே
போதும்...
மௌனத்தின் வேர்களை
மெல்ல தீண்டிய சலனமாய்
அழுகையின் ஒவ்வொரு
விசும்பலுக்கும் புதுப்புது காரணங்களை
பட்டியலிட்டு தன்னை தேற்றிக்கொள்ள
முயற்சிக்கும் மனது
இன்று ஏனோ கைகட்டி வேடிக்கை
பார்க்கிறது தண்ணீர் தீர்ந்துபோன
குளத்தை சுற்றிவரும் வெண்கொக்குபோல்...
கண்ணீரின் சுவடுகளை
தாங்கிக்கொண்டிருக்கும் கன்னங்களை
சுமைதாங்கியாய் உயர்த்திப்பிடித்தபடி...
சலனமில்லாது தனிமையில் உழன்றபடி...
தூக்கத்திலும் நிறைவாய் சிந்தித்தபடி.....
கவிதை
கதை
விவாதம்
சமர்ப்பிக்கவும்
நண்பர்கள் (10)

sethuramalingam u
vickramasingapuram

வாணிகுமார்
உடுமலைப்பேட்டை

செ பானுப்ரியா
மதுரை

கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்

முஹம்மது உதுமான்
திருநெல்வேலி
இவர் பின்தொடர்பவர்கள் (15)

sethuramalingam u
vickramasingapuram
