பவீரக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பவீரக்குமார்
இடம்:  திருச்சுழி, தழிழ்நாடு
பிறந்த தேதி :  24-May-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2017
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  5

என்னைப் பற்றி...

கல்லூரி உதவிப் பேராசிரியர்

என் படைப்புகள்
பவீரக்குமார் செய்திகள்
பவீரக்குமார் - பவீரக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2019 12:56 pm

அழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ! அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ! பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே! சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே! வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா! மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா! நீவைகை அண

மேலும்

பவீரக்குமார் - பவீரக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2019 9:56 pm

சொட்டுச் சொட்டாய் விழும்
வானத்துப் பாதரசம்
பூமிக்குத் தரும் தேன்ரசம்
பூக்கள் நனைந்தாலும்
காய்ச்சல் இல்லை
என் பாக்களை நனைக்க
இதுதான் பேரருவி
காதலிக் கண்களின் சிமிட்டல்
ஒளிருமோ மின்னல் என்று;
இமைக்கும் ஒலிதான்
இடியின் குரலோ
மடியில் விழுந்த துளிகளைப்போல்
மனதில் விழுந்தாய் தூளியைப்போல்
அரும்பிய பருவங்கள்
அலையாய் அலையும்
ஆசை வெள்ளம்
மரையாய் ஓடும்
எப்படி சொல்வது
உந்தன் உருவை
உலக மொழிகள்
தராத சொற்கள்
ஆயிரம் வாசல் இதயமாம்
வெளியேற வழியிலாமல் துடிக்கிறேன்;
இறைவனின் உருவைப்
பார்த்தது யார்?
பெண்ணின் மனதில் இருப்பவர் யார்?
ஆழ்கடலின் ஆழங்காண வழியுண்டு
இவள் கண்களின் வழியாய்
மொழி காண்ப தெப்படி?
மறதி கொடு ஆண்ட

மேலும்

கீழடி தொன்மை −−−−−−−−−−−−−−−− பண்டையர் குலமாகப் பாரினில் தோன்றி// பண்புள்ள குலமாகப் பாரினை உயர்த்தி// எங்கெங்கும் எச்சத்தை மிச்சமாகத் தூவி// எதிரிகள் இல்லாத நல்வழி புகுத்தி// உலகின் முதலாய் மூலத்தின் வடிவாய்// வாழ்ந்த குலமே எங்கள் குலம்// எண்ணாயிர ஆண்டுக்கு முன்னேக் கல்வியிலுயர்ந்து// சங்கங்கள் வைத்து தமிழைப் போற்றியகுடி// செம்பினில் கலங்களைச் செய்து வாழ்ந்தகுடி// பெண்ணுக்கு சரிநிகர் பகன்றப்பண் ணேற்றுக்குடி// மட்கலத்துள் மக்காத்தன்மை அறிந்த மங்களக்குடி// இறைவனால் ஆண்டு, இறைவனைச் சமைத்தகுடி// நாகரீகத்தின் உண்மை எதுவெனச் சொன்னகுடி// வைத்திய, தத்துவ, அறிவியலை அறிந்தகுடி// சாட்சியாய் உலகுதரும் தொல்லியல் ஆய்வின்வழி// கீழடிபோல் உலகம் முழுதும் வாழ்ந்தகுடி...... −−− ப.வீரக்குமார், திருச்சுழி. 25-Aug-2020 5:19 pm
பவீரக்குமார் - பவீரக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2019 2:49 pm

நீரின்றி அமையாது
−−−−−−−−−−−−−−−−−
நீரின்றி அமையாது உலகு− அட
நீ இன்றியும் அமையாது உலகு
பருவ கால மாற்றங் காரணமோ , இல்லை உன்
பட்டோடோப வாழ்வின் காரணமோ;
முல்லைக்குத் தேர் கொடுத்தான் தமிழன்
பிள்ளைக்கு பீர் கொடுப்பவனும் தமிழன்;
நாட்டின் வளர்ச்சி தண்ணியால் உயருது
மக்கள் வளர்ச்சி தண்ணீரால் சரியுது;
குப்பைக்குள்ளே குண்டுமணி கிடைக்குமாம்;
தமிழகத்துள்ளே தறுதலைகள் கிடைக்குமாம்;
சொன்னதை மறுப்பீரானால்
பச்சையப்பனைக் கேளுங்கள்;
எங்கள் நெய்தலின் தலைவனே வருக!
எங்கள் பஞ்சத்தைப் போக்கும்
காரணியான நீரைத்தருக!;
மயக்கும் நீரை நீரே உறிக!
மணக்கும் ஆரோக்கிய
நல்லமுதாய் மாற்றித் தருக.......

−−

மேலும்

பவீரக்குமார் - பவீரக்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2021 6:57 pm





நோட்டா
−−−−−−−−
ஆறறிவு நாய்களுக்குப் போடும்
எலும்புத் துண்டு தான்
நோட்டா!
வாய் பேச விடாது
சங்கிலியில் கட்டப்பட்ட
மனிதனின் வாய்மூடும்
நோட்டா!
குவாட்டரும் பிரியாணியும்
வாங்கர் தரும்
நோட்டா!
கூட்டத்திற்குக் கூட்டம் 
ஏற்றிச் செல்லும் 
விலங்குக்குத் தருமந்த
நோட்டா!
விடியாத இருட்டு
நேரத்தில் − பேயாய்
அலைந்து கட்டுக்கட்டாய்
மஞ்சள் பையில் திணித்து
விநியோகிக்கும்
நோட்டா!
ஐந்து வருட குத்தகைக்கு
கையூட்டுக் கொடுக்கும்
நோட்டா!
அஞ்ஞான மனிதரை
அரற்றி மிரட்டிப்
புடுங்கும் − அந்த
நோட்டா!
கமிசன் தொகை கேட்டு
கரண்ட் போல ஷாக்கடிக்கும்
கத்தை கத்தை
நோட்டா!
தோண்டாத கிணறுக்கு
வேண்டாத வேலியிட்டு
காணாமல் போன கணக்கு
அதிலுனக்கு வந்த
நோட்டா!
முடியாட்சி மன்னரெல்லாம்
பிடி சாம்பல் ஆனபின்பும்
குடியாட்சி முடியானதோ!
அதற்கும் மாறும்
நோட்டா!
அள்ளிக் கொடுத்த
அரசன் போயி − இன்று
கிள்ளிக் கொடுத்த ஆட்சியும் போயி
இரும்புப் பெட்டியில்
கருப்பாய் அடைந்தது
நோட்டா!
ஆண்டவனையும் மயக்கி
அமெரிக்காவிற்கு அனுப்பி
அவர் தந்த பிச்சையில் வந்த
நோட்டா!
காட்டை அழித்து
கள்ளத்தன விற்பனையில்
பழம் போயி , புதிதாக வந்த
நோட்டா!
நீங்க வாங்கின
கடனுக்கு − எங்க 
தலைமேலேயும் கடன்
நோட்டா!
5 ரூபாய் டாக்டர் எங்கே?
வசனம் பேசியபின், ஊதியம்
கோடி கோடி 
நோட்டா!
மனமாற்றமும் 
மதமாற்றமும்
கடலலையாய் திரளும்
நோட்டா!
காசு வாங்கி
ஓட்டுப் போடும்
மண்டுக்குத் தெரியாது?
ஓட்டின் மதிப்பு;
தெரிந்ததெல்லாம், எனக்கு
இந்த கவரிலுள்ள
நோட்டா!
குனிந்து கிடந்தவன்
நிமிர்ந்து நடந்தான்
கீழே கிடந்தது
நோட்டா!
ஊழல் ஊழலெனக்
கத்துவோம் − இடையில்
உருவுவோம் அதுவும் பச்சையான
நோட்டா!
பாசமெல்லாம் ஓடி வரும்
பந்தமெல்லாம் தேடி வரும்
ஆட்டம் முடிந்தால்
ஓட்டங் காணும் பாசமெல்லாம்
இனி வரும் − எங்களுக்குப்
பை நிறைய 
நோட்டா!........
        −−−− ப.வீரக்குமார், திருச்சுழி

மேலும்





நோட்டா
−−−−−−−−
ஆறறிவு நாய்களுக்குப் போடும்
எலும்புத் துண்டு தான்
நோட்டா!
வாய் பேச விடாது
சங்கிலியில் கட்டப்பட்ட
மனிதனின் வாய்மூடும்
நோட்டா!
குவாட்டரும் பிரியாணியும்
வாங்கர் தரும்
நோட்டா!
கூட்டத்திற்குக் கூட்டம் 
ஏற்றிச் செல்லும் 
விலங்குக்குத் தருமந்த
நோட்டா!
விடியாத இருட்டு
நேரத்தில் − பேயாய்
அலைந்து கட்டுக்கட்டாய்
மஞ்சள் பையில் திணித்து
விநியோகிக்கும்
நோட்டா!
ஐந்து வருட குத்தகைக்கு
கையூட்டுக் கொடுக்கும்
நோட்டா!
அஞ்ஞான மனிதரை
அரற்றி மிரட்டிப்
புடுங்கும் − அந்த
நோட்டா!
கமிசன் தொகை கேட்டு
கரண்ட் போல ஷாக்கடிக்கும்
கத்தை கத்தை
நோட்டா!
தோண்டாத கிணறுக்கு
வேண்டாத வேலியிட்டு
காணாமல் போன கணக்கு
அதிலுனக்கு வந்த
நோட்டா!
முடியாட்சி மன்னரெல்லாம்
பிடி சாம்பல் ஆனபின்பும்
குடியாட்சி முடியானதோ!
அதற்கும் மாறும்
நோட்டா!
அள்ளிக் கொடுத்த
அரசன் போயி − இன்று
கிள்ளிக் கொடுத்த ஆட்சியும் போயி
இரும்புப் பெட்டியில்
கருப்பாய் அடைந்தது
நோட்டா!
ஆண்டவனையும் மயக்கி
அமெரிக்காவிற்கு அனுப்பி
அவர் தந்த பிச்சையில் வந்த
நோட்டா!
காட்டை அழித்து
கள்ளத்தன விற்பனையில்
பழம் போயி , புதிதாக வந்த
நோட்டா!
நீங்க வாங்கின
கடனுக்கு − எங்க 
தலைமேலேயும் கடன்
நோட்டா!
5 ரூபாய் டாக்டர் எங்கே?
வசனம் பேசியபின், ஊதியம்
கோடி கோடி 
நோட்டா!
மனமாற்றமும் 
மதமாற்றமும்
கடலலையாய் திரளும்
நோட்டா!
காசு வாங்கி
ஓட்டுப் போடும்
மண்டுக்குத் தெரியாது?
ஓட்டின் மதிப்பு;
தெரிந்ததெல்லாம், எனக்கு
இந்த கவரிலுள்ள
நோட்டா!
குனிந்து கிடந்தவன்
நிமிர்ந்து நடந்தான்
கீழே கிடந்தது
நோட்டா!
ஊழல் ஊழலெனக்
கத்துவோம் − இடையில்
உருவுவோம் அதுவும் பச்சையான
நோட்டா!
பாசமெல்லாம் ஓடி வரும்
பந்தமெல்லாம் தேடி வரும்
ஆட்டம் முடிந்தால்
ஓட்டங் காணும் பாசமெல்லாம்
இனி வரும் − எங்களுக்குப்
பை நிறைய 
நோட்டா!........
        −−−− ப.வீரக்குமார், திருச்சுழி

மேலும்

பவீரக்குமார் - பவீரக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2019 9:56 pm

சொட்டுச் சொட்டாய் விழும்
வானத்துப் பாதரசம்
பூமிக்குத் தரும் தேன்ரசம்
பூக்கள் நனைந்தாலும்
காய்ச்சல் இல்லை
என் பாக்களை நனைக்க
இதுதான் பேரருவி
காதலிக் கண்களின் சிமிட்டல்
ஒளிருமோ மின்னல் என்று;
இமைக்கும் ஒலிதான்
இடியின் குரலோ
மடியில் விழுந்த துளிகளைப்போல்
மனதில் விழுந்தாய் தூளியைப்போல்
அரும்பிய பருவங்கள்
அலையாய் அலையும்
ஆசை வெள்ளம்
மரையாய் ஓடும்
எப்படி சொல்வது
உந்தன் உருவை
உலக மொழிகள்
தராத சொற்கள்
ஆயிரம் வாசல் இதயமாம்
வெளியேற வழியிலாமல் துடிக்கிறேன்;
இறைவனின் உருவைப்
பார்த்தது யார்?
பெண்ணின் மனதில் இருப்பவர் யார்?
ஆழ்கடலின் ஆழங்காண வழியுண்டு
இவள் கண்களின் வழியாய்
மொழி காண்ப தெப்படி?
மறதி கொடு ஆண்ட

மேலும்

கீழடி தொன்மை −−−−−−−−−−−−−−−− பண்டையர் குலமாகப் பாரினில் தோன்றி// பண்புள்ள குலமாகப் பாரினை உயர்த்தி// எங்கெங்கும் எச்சத்தை மிச்சமாகத் தூவி// எதிரிகள் இல்லாத நல்வழி புகுத்தி// உலகின் முதலாய் மூலத்தின் வடிவாய்// வாழ்ந்த குலமே எங்கள் குலம்// எண்ணாயிர ஆண்டுக்கு முன்னேக் கல்வியிலுயர்ந்து// சங்கங்கள் வைத்து தமிழைப் போற்றியகுடி// செம்பினில் கலங்களைச் செய்து வாழ்ந்தகுடி// பெண்ணுக்கு சரிநிகர் பகன்றப்பண் ணேற்றுக்குடி// மட்கலத்துள் மக்காத்தன்மை அறிந்த மங்களக்குடி// இறைவனால் ஆண்டு, இறைவனைச் சமைத்தகுடி// நாகரீகத்தின் உண்மை எதுவெனச் சொன்னகுடி// வைத்திய, தத்துவ, அறிவியலை அறிந்தகுடி// சாட்சியாய் உலகுதரும் தொல்லியல் ஆய்வின்வழி// கீழடிபோல் உலகம் முழுதும் வாழ்ந்தகுடி...... −−− ப.வீரக்குமார், திருச்சுழி. 25-Aug-2020 5:19 pm
பவீரக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2020 8:22 pm

எனக்குள் நீ
−−−−−−−−−−−−
தாய் தந்த அன்பில் வளர்ந்து//
தந்தையின் சொற்படி எழுந்து நின்று//
குருவின் கருணையால் பூவாய் மலர்ந்து//
தெய்வத்தைத் தேடும் முன்னே வந்தாள்//
தேவதை போலொரு வடிவாய்ச் சென்றாள்//
மனம் ரசித்தது பின் மறந்தது//
கானல் அலையாய் அவளின் நினைவு//
காதல் இணைகளை நான் காணும்போது//
சிலகணப் பார்வைக்குள் எப்படி நுழைந்தாள்//
எனக்குள் புகுந்து உணர்வினை வடித்தாள்......
−−− ப.வீரக்குமார்

மேலும்

பவீரக்குமார் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2019 9:16 am

க . கார்முகில்

௨ . போர்மேகம்

௩. தேரோட்டம்

௪ . பூந்தமிழ்

௬ .கயல்விழி

௭.கயற்கன்னி

௮.முத்திதழ்

௯.முத்தயிதழ்

௧௦.அரசியல்

குறைந்தது மூன்று சொல்லையாவது பிரித்தெழுதியவர்கள்
ஓரளவு தமிழ் தெரிந்தவர். பத்தையும் பிரித்தெழுதுபவர்கள்
தொல்காப்பியர்
ஒன்றைக் கூட பிரித்தெழுதாதவர்கள் சொல்லில் கூட
பிரிவு கூடாது என்று எண்ணும் உன்னதக் காதலர்கள் !

மேலும்

அருமை சிறப்பாக பிரித்து எழுதியிருக்கிறீர்கள் . ஆம் ஒன்பதுதான் உள்ளது அது தமிழ் எண்ணை எழுதுவதில் எனக்கேற்பட்ட குழப்பம் . பத்தாவதை லீலா லோகிசௌமி பிரித்தெழுதி காட்டியிருக்கிறார் . அதை நன்னூல் சூத்திர வழியில் முடியுமானால் சொல்லுங்கள் . உங்கள் ஆர்வத்தில் மகிழ்ச்சி .மிக்க நன்றி கவிப்பிரிய பவீரக்குமார் 30-Oct-2019 2:44 pm
கார்+ முகில், போர்+மேகம், தேர்+ ஓட்டம், பூ+ தமிழ், கயல்+ விழி, கயல் + கன்னி, முத்து+ இதழ், முத்தம்+ இதழ், அரசு+இயல். மொத்தம் ஒன்பது சொற்கள் மட்டுமே உள்ளன. 30-Oct-2019 12:44 pm
இலக்கண விதியுடன் விளக்கிச் சொல்லுங்கள் ஆனால்தானே சிறப்பாக புரிந்து கொள்ளமுடியும் ! 24-Oct-2019 3:38 pm
கார்க்காலம் மழைக்காலம் எனவே மழைக் கால கரு மேகம் கார்மேகம் என்ற பெயர் பெற்றது . மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே என்று ராமனின் நிறத்தைச் சொல்லுவார் கம்பர் . மழை கருமையா ? சிறப்பாக மழை மேகத்தின் கருமையை சொல்கிறார் கார் + வண்ணன் = கார் வண்ணன் கார் + முகில் = கார் முகில் இயல்பு புணர்ச்சி ஆதி நீடல் எங்கு எப்படிப் பொருந்தும் ? நன்னூல் சூத்திர விளக்கத்துடன் சொல்லுங்கள் . ஏற்கிறேன் . உங்கள் இலக்கண ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் சொற்பிரிய குமரன் . 24-Oct-2019 3:34 pm
பவீரக்குமார் - Jesi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2019 9:53 am

எலி பொந்திற்க்குள் ஒலிந்ததாம்.இதில் வரும் 'லி' சரியானதா இல்லை இந்த 'ளி' சரியானதா என்று தெரிந்திருந்தும்.

மேலும்

எலி பொந்திற்குள் ஒளிந்ததாம்... 16-Sep-2019 9:09 am
எலி சரி ஆயின் ஒலி தவறு ஒ"ழி"த்தான் சரி..... 16-Sep-2019 4:55 am
லி சரிதான் 15-Sep-2019 9:08 am
பாடம் முழுக்க சொல்லிக் கொடுத்த வாத்தியார் எல்லாம் நல்ல நுழைஞ்சதா பிள்ளைகளே ன்னு கேட்டாரு . எல்லாம் நுளைஞ்சிடுத்து ஆனா வால் மட்டும்தான் நுளையல சார் ன்னான் ஒரு பையன் ஏலே என்னலே சொல்லுதே ன்னு கேட்டார் வாத்தியார் பையன் பொந்தைக்காட்டினான் ஒளிய லிகரமா ளிகரமான்னு சந்தேகம் வந்த எலி புத்திசாலித்தனமா பொந்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது வால் மட்டும் பாக்கி. மற்ற பிள்ளைகள் பார்த்தார்கள் வாத்தியாரும் பார்த்தார் . சிறுகச் சிறுக வாலும் நுழைந்து விட்டது. வாத்தியார் உட்பட எல்லோரும் ஜோராகக் கைதட்டினார் ? இந்தக் கதையின் நீதி என்ன ? ஜெசி அண்ணா / அக்கா நீங்கதான் சொல்லணும் . 13-Sep-2019 4:15 pm
பவீரக்குமார் - san அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2019 1:05 pm

பாகற்காய்

மேலும்

பாகு +அல்+காய் 06-Sep-2019 5:57 pm
பாகற்காய்! பாகு+அல்+காய் இதோட சிறப்பு பாகு =இனிப்பு அல்=அல்லாத காய்=காய் இனிப்பு அ(இ)ல்லாத காய் 06-Sep-2019 11:30 am
பாகு+அல்+காய் 03-Sep-2019 2:50 pm
பவீரக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2019 2:49 pm

நீரின்றி அமையாது
−−−−−−−−−−−−−−−−−
நீரின்றி அமையாது உலகு− அட
நீ இன்றியும் அமையாது உலகு
பருவ கால மாற்றங் காரணமோ , இல்லை உன்
பட்டோடோப வாழ்வின் காரணமோ;
முல்லைக்குத் தேர் கொடுத்தான் தமிழன்
பிள்ளைக்கு பீர் கொடுப்பவனும் தமிழன்;
நாட்டின் வளர்ச்சி தண்ணியால் உயருது
மக்கள் வளர்ச்சி தண்ணீரால் சரியுது;
குப்பைக்குள்ளே குண்டுமணி கிடைக்குமாம்;
தமிழகத்துள்ளே தறுதலைகள் கிடைக்குமாம்;
சொன்னதை மறுப்பீரானால்
பச்சையப்பனைக் கேளுங்கள்;
எங்கள் நெய்தலின் தலைவனே வருக!
எங்கள் பஞ்சத்தைப் போக்கும்
காரணியான நீரைத்தருக!;
மயக்கும் நீரை நீரே உறிக!
மணக்கும் ஆரோக்கிய
நல்லமுதாய் மாற்றித் தருக.......

−−

மேலும்

பவீரக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2019 2:44 pm

சுய தரிசனம்
−−−−−−−−−−−−−
ஓங்கிய மனத்தை
தாங்கிய உடலால்
தொண்டு செய்
நன்றாய் செய்
ஏழையை உயர்த்திட
ஏகாந்த பரம்பொருள் மகிழ்ந்திட
நாயன்மார் அவதாரம்
நீயும் எடுத்துப்பார்
துன்பக் கசப்பும்
தேன் கரும்பாய் இனிக்கும்
அப்போது புரிவாய்
மானிட தத்துவம்
உனதின் உள் தரிசனம்.......
--- ப.வீரக்குமார்,

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே