கவிதை எனக்குள் நீ

எனக்குள் நீ
−−−−−−−−−−−−
தாய் தந்த அன்பில் வளர்ந்து//
தந்தையின் சொற்படி எழுந்து நின்று//
குருவின் கருணையால் பூவாய் மலர்ந்து//
தெய்வத்தைத் தேடும் முன்னே வந்தாள்//
தேவதை போலொரு வடிவாய்ச் சென்றாள்//
மனம் ரசித்தது பின் மறந்தது//
கானல் அலையாய் அவளின் நினைவு//
காதல் இணைகளை நான் காணும்போது//
சிலகணப் பார்வைக்குள் எப்படி நுழைந்தாள்//
எனக்குள் புகுந்து உணர்வினை வடித்தாள்......
−−− ப.வீரக்குமார்

எழுதியவர் : ப.வீரக்குமார் (23-Jan-20, 8:22 pm)
சேர்த்தது : பவீரக்குமார்
பார்வை : 510

மேலே