Meena Somasundaram - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Meena Somasundaram |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 5667 |
புள்ளி | : 775 |
பூ பூக்குது
பூக்கப் போகிறேன்
என்று சொல்லிக் கொண்டு அல்ல.
பூத்த பின்
என்னைப பார்க்க வா
என்று அது அழைப்பதில்லை.
பார்த்து மகிழும்
நமக்கு அது எப்போதும்
செலவு வைப்பதில்லை .
உறிஞ்சும் வண்டுக்கு
தேனை அள்ளி கொடுத்து
விலை கேட்பதில்லை .
எந்த ஒரு விளம்பரம் இல்லை
எந்த ஒரு விளக்கம் இல்லை
எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை .
இலக்கியமும் அவ்வாறே
அமிர்தம் அதுனுள்ளே
கண்டெடுப்பது நமக்குள்ளே.
பொருள் பொதிந்துள்ள
நயம் பொருந்தியுள்ள
கவிதைக்கு தேவை இல்லை
ஒலி பெருக்கியும்,ஒளி வெள்ளமும்.
மழை தனைப் பார்த்து
கண்கள் பூத்து
வெய்யில் தனைக் கண்டு
விழிகள் சோர்ந்து
வற்றிய ஆற்றை நோக்கி
பார்வை தடுமாற
வறண்ட நிலத்தை நினைந்து
கண்ணீர் பெருக
வலம் வரும் தமிழனை
எண்ணிக் கசிந்துருகி
யாரை நிந்திக்க என்று புரியாமல்
மனம் நொந்து நிற்கிறேன்.
காத்திருந்தேன் காலம் காலமாக
விடியும் என்ற எண்ணத்தில்.
விடிவது தினம் தானே
என்ற போதும்
நல்ல காலத்துக்காக
பொறுத்திருந்தேன்.
நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு
அபாரமாக. நம்பினவனுக்கு
கை மேல் பலன் என்பது
சொல்லளவே.
மனம் பட்ட பாடு சொல்வொண்ணா
கண்ணில் வடிந்த நீரோ
கட்டுக்கடங்கா.
பதற்றம் எதிலும்
உடலோ ஓத்துழைக்க மறுக்க
உள்ளமோ துண்டுத துண்டாகச்
சிதற.
சுற்றமோ எள்ளி நகையாட
பிஞ்சுகளோ கரம் பிடிக்க
துணையோ வதங்கி வாட.
ஏதோ ஒரு மனதோடு
நின்று பிடித்தேன்
கிடைத்தது வரம்
நேரம் தவறி.
தண்ணீர் தண்ணீர்
என்று புலம்பி
தடியடி வன்முறை
எங்கும் பெருக.
வழக்குரைக்க
நீதிமன்றங்கள்
என்று தாண்டி ஓட.
தண்ணீரை ஓட விடாமல்
அடக்கி அணைகளில் தேக்கி
பறறாக்குறை என்று மனிதன்
ஓலமிட.
பயிரை வளர்த்து
நீர் வரத்து இல்லாமல்
அவை வாட..
மனமிழந்து
தன்னுயிரை விட்டு
கதறுகிறான் மனிதன்
இன்னொரு எல்லையில்.
.
உ யிர்ச் சேதம், பொருட் சேதம்
இழப்பு என்று மக்கள் திக்குமுக்காட
நினைத்துப் பார்த்தால்
தண்ணீருக்காகவா இவ்வளவு
என்று மயங்கி
துவள்கிறது நெஞ்சம்.
பாலும் கசக்கவில்லை
பிழிந்த துணியும் கசக்கவில்லை
என்று நயம்படச் சொன்னான்
புலவன்
சாகும் தருவாயில் கூட.
தமிழின் அழகே அதனின்
இயம்புதலில்.
அதன் சிறப்பே அதனின்
தனித்தன்மையில்.
செல்வோமா என்பதை போவோமா
கிளம்புவோமா, பார்ப்போமா
என்று பல விதமாக
நேரம் காண்பதாக
உரைப்பது
என்னே அழகு.
இதே போல் எத்தனையோ
எடுத்தாள எண்ணம்
வியப்பு மேலிட பெருமிதம்
பொங்க மகிழ்வுறுகிறேன்
தாய்த் தமிழை
உணர்ந்து.
முகம் காட்டி சிரித்த அழகு
இன்று
முகம் திருப்பி அலக்கழிக்கும் கோலம்
நினைக்கையில்
இது உண்மையா? அது நிழலா?
என்று தோன்ற,
சற்று நிதானித்து நோக்கின்
இதுவம் அல்ல,
அதுவும் அல்ல.
என்று கொண்டு
நேர்மையான எண்ணம்
மனதில் எழும்ப
சற்றும்
அசராமல் செல்கிறேன்
என் வழியிலே!
பரத முனிவரின் நாட்டிய சாத்திரம்
பல்கி பெருகி விதம் விதமாக
செழிக்க
ப என்பது முக பாவத்துக்கும்
ர இராகத்தை மேற்கோளிட
த தாளத்துக்கு நிற்க
பரத நாட்டியம்
ஒரு சுகானுபவ மாகத் திகிழ
சுருதியும் ஜதியும்
ஒன்று கூட
ஆரணங்கு ஆனந்தம்
மேலிட குவிந்து மகிழ்
அதிகாரம் காட்ட
அடித்து உந்த.
வீரம் வெளிப்பட
குதித்து ஆர்ப்பரிக்க
வெகுண்டெழுந்து
கனல் கணக்ளில் தெறிக்க
ஆடுகிறாள்.
கனவும் கண்டு
வெட்கி நாணி
உயிர்ப்பித்தெழுகிறாள்
நாட்டிய பெண்மணி.
பரவசத்தில் தன்னை
அறியாது கண்ணீர் மல்க
இறைவனை நினைத்து
கூத்தாடுகிறாள்.
என்னே ஓர் நாட்டியம்
ஓர் அற்புதம்
கண்டேன
பாமரன் பரிணமிக்கிறான்
உலகிலே
பணத்துடன், ஆளுமையுடன்
ஒரு வழியில்
வசதி மிக்க குடும்பத்தில்
பிறந்ததாலே!
.
நல்வழியில் செல்லாமல்
கோணலாகப் போகிறான்
ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும்
அவனுக்குத் தெரிந்த
தடத்திலே!
பணம் ஒன்றே குறிக்கோளாக
பண்பை என்றும்
நாடாமலே
பயணிக்கிறான் வேகமாக
விளைவறியாமலே!
அழியும் செல்வம்
எத்தனை நாளைக்கு
என்று அறியாமலே
வாழ்கிறான் ஒரு
பதராகவே!
பூ ஒன்று கண்டேன்
ஒளி வெள்ளத்தில்
பொலிவுடன் நிமிர்ந்தது
என்னைப் பார்த்து.
புன்னகையுடன் குவிந்தது
அழகாக .
நெருங்கினேன் ஒலியெழுப்பாமல்
மெதுவாக.
மருண்டது அண்மையில்
என்னைக் கண்டு.
பறித்துப் பிரித்து ஒடித்து
விடுவேனோ என்றாகி
குனிந்தது அருண்டு
சற்று நேரம்.
மனிதனின் நோக்கம்
மலருக்குப் புரிந்தும் புரியாமல்
வன்மையின் துடிப்பை
மென்மை உணர
நல்லவனும் தீயவனாகிறான்
ஒட்டு மொத்தமாகவே!
நண்பர்கள் (41)

செல்வா பாரதி
விளாத்திகுளம்(பணி-சென்னை)

மோகனா இராஜராஜேந்திரன்
TAMILNADU

svshanmu
சென்னை

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்
முத்துலாபுரம் தேனிமாவட்
இவர் பின்தொடர்பவர்கள் (41)

க உதய்
Kadayanallur in NELLAI

பிரான்சிஸ் சேவியர்
கோவை
