வாழ வேண்டுமா

கண்ணிலே நீர் எதற்கு?
காலமெல்லாம் அழுவதற்கு.

மனதினில் நினைவு எதற்கு?
என்றைக்கும் நினைப்பதற்கு.

உடலிலே தெம்பு எதற்கு?
வாழ்க்கையிலே போராடுவதற்கு .

அழுவதும் நினைப்பதும்
போராடுவதும் வாழ்வு என்றால்

வாழ வேண்டுமா என்ற எண்ணம்
மேலோங்க மேலோட்டமாக
முறுவல் அரும்பி மறைகிறது

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (2-Feb-25, 9:01 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : vaazha vendumaa
பார்வை : 2

மேலே