பூ பூக்குது

பூ பூக்குது
பூக்கப் போகிறேன்
என்று சொல்லிக் கொண்டு அல்ல.

பூத்த பின்
என்னைப பார்க்க வா
என்று அது அழைப்பதில்லை.

பார்த்து மகிழும்
நமக்கு அது எப்போதும்
செலவு வைப்பதில்லை .

உறிஞ்சும் வண்டுக்கு
தேனை அள்ளி கொடுத்து
விலை கேட்பதில்லை .

எந்த ஒரு விளம்பரம் இல்லை
எந்த ஒரு விளக்கம் இல்லை
எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை .

இலக்கியமும் அவ்வாறே
அமிர்தம் அதுனுள்ளே
கண்டெடுப்பது நமக்குள்ளே.


பொருள் பொதிந்துள்ள
நயம் பொருந்தியுள்ள
கவிதைக்கு தேவை இல்லை
ஒலி பெருக்கியும்,ஒளி வெள்ளமும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (31-Jan-14, 4:02 pm)
பார்வை : 923

மேலே