நீரின்றி அமையாது

நீரின்றி அமையாது
−−−−−−−−−−−−−−−−−
நீரின்றி அமையாது உலகு− அட
நீ இன்றியும் அமையாது உலகு
பருவ கால மாற்றங் காரணமோ , இல்லை உன்
பட்டோடோப வாழ்வின் காரணமோ;
முல்லைக்குத் தேர் கொடுத்தான் தமிழன்
பிள்ளைக்கு பீர் கொடுப்பவனும் தமிழன்;
நாட்டின் வளர்ச்சி தண்ணியால் உயருது
மக்கள் வளர்ச்சி தண்ணீரால் சரியுது;
குப்பைக்குள்ளே குண்டுமணி கிடைக்குமாம்;
தமிழகத்துள்ளே தறுதலைகள் கிடைக்குமாம்;
சொன்னதை மறுப்பீரானால்
பச்சையப்பனைக் கேளுங்கள்;
எங்கள் நெய்தலின் தலைவனே வருக!
எங்கள் பஞ்சத்தைப் போக்கும்
காரணியான நீரைத்தருக!;
மயக்கும் நீரை நீரே உறிக!
மணக்கும் ஆரோக்கிய
நல்லமுதாய் மாற்றித் தருக.......

−−−− ப.வீரக்குமார், திருச்சுழி

எழுதியவர் : ப.வீரக்குமார் (3-Sep-19, 2:49 pm)
சேர்த்தது : பவீரக்குமார்
Tanglish : neerindri amaiyathu
பார்வை : 108

மேலே