மனைவி

#மனைவிக்கு*
*ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

தாய்க்குப் பின்
தாரம்.......
ஆனால்
தாயை விட
தாரத்திற்கு
கொஞ்சம்
அதிகம் தான் பாரம்.....

காட்டாறாக
இருப்பவர்களுக்கு
இவள் கரையாகிறாள்...

கோயில் காளையாக
இருப்பவர்களுக்கு
இவள்
மூக்கணாங்கயிறாகிறாள்...

இல்வாழ்க்கை கோவிலில்
இவளே தெய்வம்....!!!

இவளின்
'தலையணை மந்திரத்திற்கு முன்னால்
எந்தத் தாரக மந்திரமும்
தோற்று போகும்....

மனைவியை
மனைவியாக பார்த்தவன்
மனிதனாகிறான்....
காதலியாக பார்த்தவன்
கவிஞனாகிறான்.....
பெண்ணாக பார்த்தவன்
பெருமை அடைகிறான்....
வேசியாக பார்த்தான்
வாடிக்கையாளராகிறான்...
வேலைக்காரியாக பார்த்தவன்
முதலாளியாகிறான்....

மனைவி
ஒரு வீணை
வாசிக்க தெரிந்தவன்
இசையை மீட்டெடுக்கிறான்... வாசிக்கத் தெரியாதவன்
உடைத்து அடுப்பெரிக்கிறான்....

இல்வாழ்க்கை கப்பலை
வழிநடத்திச் செல்லும்
மாலுமி......

ஆண்களின்
உடலில் வலது கை...
உள்ளத்தின் தன்னம்பிக்கை...

இரவில்
சொர்க்கத்திற்கு
அழைத்துச் சென்று
இன்பத்தை மட்டும்
கொடுப்பவள் அல்லர்.....
பகலில்
நரகத்திற்கு
அழைத்துச் சென்று
பாடம் எடுப்பவளும்
இவள்தான் ......

மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த வரம் என்று
சொல்வார்கள்
அது பொய்
"மனைவி அமைவதெல்லாம்
கட்டியவன் அவளைக்
கையாளும் விதம்.....!!"

குப்பைக் காகிதத்தை
பட்டமாகவும்...
பட்டத்தைக்
குப்பைக்காகிதமாகவும்
மாற்றுவது
இவளுக்குக் கைவந்தக் கலையாகும்...

இவர்களில்
எத்தனையோ பேர்
வீட்டு சமையலறையில்
வேலைக்காரியாகவும்....

படுக்கையறையில்
வேசியாகவும் ஆகின்றனர்....

எத்தனை பேர் தான்
ஆனார்களோ மனைவியாக......??????

*கவிதை ரசிகன்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-May-25, 10:07 pm)
Tanglish : manaivi
பார்வை : 34

மேலே