Roshni Abi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Roshni Abi
இடம்:  SriLanka
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Nov-2017
பார்த்தவர்கள்:  1662
புள்ளி:  293

என்னைப் பற்றி...

கடந்து வந்த பாதையில் இழந்தவை ஏராளம், நினைவுகளாகி விட்ட நிஜங்கள் பல, விதி என்ற வட்டத்தில் சுழல்கி்ன்ற சக்கரம் தான் வாழ்க்கை, எல்லையற்ற கனவுகளுடன் எண்ணங்களை உங்களுடன் பகிரும் உங்கள் அபி.

என் படைப்புகள்
Roshni Abi செய்திகள்
Roshni Abi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2022 10:59 am

ஏதேதோ எழுதிக் கிறுக்கிய என் பேனா
எதை எழுதுவது என்று பக்கங்களைப் புரட்டியது,
அன்புடன் அப்பா என்று ஆரம்பித்த என் விரல்கள்
தடுமாறி நிற்கும் கணம்……
என் அன்பின் ஆதாரமே….
என் இதயத்தின் உயிர் துடிப்பே….
என் கண் கண்ட முதல் தெய்வமே…
அப்பா…..
கை பிடித்து ஏடெழுத கற்றுத் தந்தாய்
அறிவு என்னும் பெருங் கடலை
அன்போடு புரிய வைத்தாய்…
பிஞ்சுப் பாதங்கள் மண்படாமல் தோள் சுமந்தாய்…
காலெடுத்து நான் நடக்க கை பற்றி துணை நின்றாய்
ஒழுக்கம் என்றும் தவறாமல் கண் காத்த தெய்வமானாய்
ஒப்புரவும், ஒற்றுமையும் பலமென்றே தினமுரைத்தாய்
சிந்தாமல் சிதறாமல் பகிர்தலில் முன் நின்றாய்
சின்னச் சின்ன ஆசையெல்லாம்
சிக்கனமாய

மேலும்

Roshni Abi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2022 10:55 am

உலக வரைபடத்தில் தீவுகளால் சூழப்பட்ட அழகிய நாடு. இயற்கை வளங்களை அள்ளித்தெளித்து அழகொழிரும் திருநாடாம் இலங்கையில் செம்மொழியாம் தமிழ் பேசும் வீரம் நிறைந்த மண்ணில் மலர்ந்தவள் தான் அவள்.

ஐப்பசி திங்கள் சூரியனாய் வந்துதித்தவள், துடுக்குத்தனமும், துடியாட்டமும் நிறைந்த சின்னப்பாவையாய் துள்ளித்திரிந்தவள். அண்ணன். அக்காவிற்கு செல்லப்பிள்ளையிவள். விவசாயமே வாழ்வாதரமாகக் கொண்டிருந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. அயல் வீட்டு ஆச்சிமாருக்கு மிகவும் பிடித்தவள். ஆச்சிக்குத் தேவையான சின்ன சின்ன வேலைகளில் ஒத்தாசையாய் உடனிருப்பாள். கடைக்குப் போய் வெற்றிலை வாங்கிக் கொடுத்தால் ஒரு வட்ட அப்பம் வாங்

மேலும்

Roshni Abi - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2022 12:05 pm

கல்லூரியில் இருந்து புறப்பட்ட கார்த்திக் தனக்கான பேருந்தைப் பிடிப்பதற்காக வேகமாக நடந்தான். கைக் கடிகாரத்தைப் பார்த்தவன் பேருந்து வருவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்ததால் அருகிலிருந்த சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தான் "ஐயா ஒரு ரீ” என்றதும் மேசையில் கொண்டு வந்து வைத்த ஐயாவிடம் பணத்தைக் கொடுத்தான். சூடாக இருந்தாலும் அமரந்திருந்து பருகுவதற்கு நேரம் இருக்கவில்லை. கடிகாரத்தை பார்த்தபடி எழுந்து வீதியருகே நின்றான். பேருந்தும் வந்தது. ஜன்னலோரமாக அமர்ந்தவன் இரண்டு மணி நேரப் பயணத்தைக் கணக்கிட்டபடி, ஜன்னலூடாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். பேருந்தின் வேகத்திற்கேற்ப சுற்றமும் நகர்வது போலிருந்தது. காற்றின்

மேலும்

Roshni Abi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2022 11:52 am

எங்கே போகிறாய் மனிதா…
வாழ்க்கை என்னும் படகை விட்டு
பாதை மாறி நீயும் எங்கே போகிறாய்…
குடும்பம என்னும் கோயில் எங்கே
பெற்றவர் மனைவி பிள்ளைகளை
மறந்து நீ எங்கே தான் போகிறாய்..

வறுமையிலங்கு பிள்ளை அழுகிறாள்
பள்ளி செல்ல வழியின்றி
பையன் கூட வீதியிலே
மாற்று உடை கூட இல்லை
மாத்திரைக்குப் பணமுமில்லை
மாலை வேளை ஆனதும் நீ
மதி மயங்கி நிற்கின்றாய்…

ஆசை ஆசையாய் சேமித்ததெல்லாம்
அடகு வைத்து மீளவில்லை
கட்டிய தாலி வைத்து வருடங்களும் ஓடிற்று
மூன்று வேளை உணவுண்ட நாட்கள் கூட மறந்தாச்சு
கைக்குழந்தை மார்புதைத்து வயிறு காய்ந்து கதறுதடா
பெற்றவன் நீ அறியாயோ பெண்ணவளின் வேதனையை..

பசிதீர்க்க பணம்

மேலும்

Roshni Abi - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2019 1:17 pm

நித்யாவின நினைவுகளை மீட்டிய படி பேருந்தின் யன்னலாேரமாக அமர்ந்திருந்தான் ராகவ். சில்லென்ற காற்றின் குளிர்ச்சியில் உடம்பு புல்லரிப்பது பாேல் உணர்ந்தான். யன்னலை மெதுவாக இழுத்து மூடிவிட்டு ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தவன் தாெலைபேசியில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டிருந்தான். பாடல்களின் வரிகளாேடு அவன் மனம் அமைதியில் உறைந்து பாேனது. "காதலே காதலே தனிப் பெருந் துணையே, கூட வா, கூட வா பாேதும்"  என்ற பாடல் வரிகள் அவன் மனதுக்குள் பெரும் புயலடிப்பது பாேன்ற உணர்வைத் தூண்டியது. கண்களை மூடியபடி தலையை மெதுவாக சாய்த்துக் காெண்டான்.

உயிருக்கு உயிராய் நித்யாவைக் காதலித்து, உற

மேலும்

Thank you 04-Mar-2019 6:48 am
நீண்ட நாட்களின் பின் ஒரு ப்ரியமான எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மனம் நிறைகிறது. வாழ்க்கை ஒரு வகையான போர்க்களம் என்பார்கள்; அந்த போர்க்களத்தின் போராட்டமே அன்பு தான் என்று பலர் இங்கே அறிவது கிடையாது. தூய்மையான எண்ணங்கள் நிறைந்த இதயங்கள் விதியின் பாதையில் வெற்றிடமாய் கல்லடிகள் படுவது நிர்ப்பந்தமான நிதர்சனம் தான். ஒரு குழந்தையின் தொடக்க வாழ்வில் தாயும் தந்தையும் தான் அவனது எதிர்கால வாழ்க்கையை கட்டியெழுப்புகின்ற பெருந்துணை. அன்பின் வாழ்க்கை ஆயுள் வரை குழந்தை போல பிரிவைக் கூட ப்ரியங்களால் வீழ்த்தி விடுகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Mar-2019 11:42 am
Roshni Abi - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2019 1:29 pm

நித்யாவின நினைவுகளை மீட்டிய படி பேருந்தின் யன்னலாேரமாக அமர்ந்திருந்தான் ராகவ். சில்லென்ற காற்றின் குளிர்ச்சியில் உடம்பு புல்லரிப்பது பாேல் உணர்ந்தான். யன்னலை மெதுவாக இழுத்து மூடிவிட்டு ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தவன் தாெலைபேசியில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டிருந்தான். பாடல்களின் வரிகளாேடு அவன் மனம் அமைதியில் உறைந்து பாேனது. "காதலே காதலே தனிப் பெருந் துணையே, கூட வா, கூட வா பாேதும்" என்ற பாடல் வரிகள் அவன் மனதுக்குள் பெரும் புயலடிப்பது பாேன்ற உணர்வைத் தூண்டியது. கண்களை மூடியபடி தலையை மெதுவாக சாய்த்துக் காெண்டான்.

உயிருக்கு உயிராய் நித்யாவைக் காதலித்து, உறவு

மேலும்

Thank you 04-Feb-2019 11:52 am
சிறந்த ஒரு பதிவு.....அன்பின் அருமை பிரிவு உணர்த்துகிறது.... 03-Feb-2019 8:53 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2018 12:44 pm

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm
Roshni Abi - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2018 9:21 am

காலை ஆரம்பித்த மழை ஓயாமல் பாெழிந்து காெண்டிருந்தது. வீதியெங்கும் வெள்ளம் நிரம்பி குன்றும், குழியும் நிறைந்து பாேக்குவரத்து நெரிசலால் வீதியே தடைப்பட்டு விட்டது. மின்சாரமும் நின்று பாேக ஊரே இருள் மயமாய் காட்சியளித்தது.

அந்தக் கிராமத்தின் வீதியாேரமாய் இருந்த குடிசை வீட்டில் சிறிய விளக்கின் வெளிச்சத்தில் கூனியபடி குடையைப் பிடித்துக் காெண்டு வாசல் படலையை இழுத்துக் கட்டி விட்டு மீண்டும் வீட்டினுள் நுழைந்த சாரதா அம்மா கால் தடுக்கி விழுந்து விட்டாள். "ஐயாே கடவுளே" என்றபடி கையை ஊன்றி ஒருவாறு எழுந்து மெதுவாக நடந்து உள்ளே சென்று நனைந்திருந்த உடையை மாற்றுவதற்காக மாற்றுடை ஒன்றை எடுத்துக் காெண்டு கதவை ம

மேலும்

பொருத்தமான ஓவியம் கண்ணீர் காவியம் நவீன கலி யுகம் காணும் தாய் மகன் குடும்ப நிலை முதியோர் நலன் காப்போம் என நாம் உறுதி மொழி எடுப்போம் 16-Oct-2018 4:38 pm
Thank you 16-Oct-2018 12:12 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:----தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்துத் தளம் குடும்பத்தினர் அனைவருடைய சார்பில் பாராட்டுகிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் . தமிழ் அன்னை ஆசிகள் 16-Oct-2018 10:17 am
Roshni Abi - Roshni Abi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2018 9:22 am

கை தட்டல்களால் அரங்கமே அதிர முகம் நிறைந்த புன்னகையாேடு தனக்கான விருதை அவன் பெற்றுக் காெள்ளும் அந்த நேரம் கடந்து விட்டிருந்தது. அந்த சந்தாேசமான தருணத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை. அம்மாவின் கைகளைப் பற்றியபடி உயிருக்காகப் பாேராடிக் காெண்டு இருக்கும் அவளருகில் அவனைத் தவிர யாருமில்லை. எத்தனை கனவுகளாேடு படித்து பட்டம் பெற்று சாதனை படைக்கக் காத்திருந்தவனுக்கு விதி சந்தாேசங்களைப் பறித்து விட்டு சாேகங்களையே பரிசாகக் காெடுத்திருந்தது. ஒற்றைப் பிள்ளை, ஆணாகப் பிறந்து விட்டான். சாெந்த, பந்தம் யாரும் தெரியாத ஊரில் பெரிய பங்களாவில் எல்லா வசதியுடனும் வளர்ந்து வந்தவன். தரமான பாடசாலை, பராமரிப்பதற்கு இரண்டு

மேலும்

நன்றி சகாேதரனே 22-Jun-2018 7:58 pm
நன்றி 22-Jun-2018 7:58 pm
மிகச் சிறந்த எழுத்துக்கள். நிச்சயம் ஒரு நாள் பெயர் பெரும். எவ்வளவு நேர்த்தியாக கதையை நகர்த்தி இருக்கீங்க, முதலில் அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். இங்கே சில கிருமிகள் தங்கள் புகழை தக்க வைத்துக் கொள்ள பலரது குரல் வளையைக் கூட அறுக்க தயங்குவது கிடையாது. அம்மா போல் யாருண்டு; எத்தனை கொடுமைகளை சந்தித்த போதும் அவள் தன் பிள்ளையை என்றும் கை விடுவது கிடையாது. அன்பான உள்ளங்களை இறைவன் நிறைவாக தண்டிப்பான்; ஆனால் சுவர்க்கத்தில் கை பிடிப்பான். காசு செல்வம் பொருள் என்று ஆசைகள் குவிந்த யுகத்தில் இன்று கொலைகள் கூட சர்வசாதாரணம் தான். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jun-2018 12:02 pm
20 வயதில் இருந்த தாயின் நண்பன் அவளைவிட ஒன்றிரண்டு வயது பெரியவனாக இருப்பான். இப்பொழுது மகனுக்கு 25 வயது ஆகவே 45 லிருந்து 50 வயதுமிக்க ஒருவனால் கொலைசெய்யும் அளவிற்கு வலுவில்லாமல் இருக்க மாட்டான். ஏன் பெற்ற மக்களையே தன் ஜாதிக் கெளரவம் கெட்டுவிடக்கூடாது என்று கொலைசெய்த தந்தைகள் தனையன்கள் எத்தனைபேர் நம் ஊரில் உள்ளனர் அவர்களை எல்லாம் பார்த்துமா இந்த கேள்வியை கேட்க்கின்றிர்கள்...? 11-Jun-2018 2:07 pm
Roshni Abi - சையது சேக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2018 7:17 pm

எனக்குள்ளும் காதல் என்ற ஆச்சர்யம் படர துவங்கிய காலம்,.
ஏன் எனக்கு ஆச்சர்யம்,
நானும் சினிமாதனமான காதலை வெறுத்தவன்,
காமமே காதலை முன்னிருத்துகிறது என்பதே அதற்கு காரணம்,.
அது டீன் ஏஜ் பருவம்,
எனக்குள் இரண்டாவது இதயம் பூத்த நேரம்,
அவளால் எனக்குள் ஏகபட்ட மாற்றங்கள்,
அந்த பாதிப்புகளின் உணர்வு குவியலுக்கு காதல் என்று பெயரிட்டேன்..
அவளை சில நேரம் பார்க்காவிட்டால்,
அதையே நினைத்து பல நேரம் அவள் வரும் திசையையே பார்த்துக் கொன்டிருப்பேன்..
அவள் என் சந்தோஷத்திற்கும்,
தவிப்புகளுக்கும் இடையே ஒளிந்து கொண்டிருந்தாள்.
அவள் வரும் பாதையில்,
அவளுக்கு முன் காத்துகிடப்பேன்..
சில நிமிடங்கள் காண,
பல மணி ந

மேலும்

பிரிவின் வலிகளில் காதல் மீண்டும் பிறக்குமேயன்றி இறக்காது 22-Feb-2018 8:04 pm
மிக்க நன்றி நண்பரே தங்களின் தொடர் ஆதரவுக்கு எனது மகிழ்ச்சியும் நன்றியும்.. காதல் சேர்ந்தாலும் பிரிந்தாலும் அதன் புனிதம் உண்மை காதலால் ஒளி வீசி கொண்டிருக்கிறது.. 20-Feb-2018 5:09 pm
மிக்க நன்றி நண்பரே தங்களின் தொடர் ஆதரவுக்கு எனது மகிழ்ச்சியும் நன்றியும்.. காதலை கடந்து வந்த பின்னும் ,அதை யாபகப்படுத்தும் நிகழ்வுகள் கொஞ்சம் வலி கலந்த சுகம்தானே ... 20-Feb-2018 5:07 pm
காதல் புனிதமானது காதல் வாழ்வியல் மேலாண்மைக் கலை அறிந்து காதல் வாழ்வை அமைக்கவும் காதல் வாழ்க வளர்க 20-Feb-2018 2:01 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) ச செந்தில் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Feb-2018 11:22 am

இந்த வார மித்திரன் வாரமலர் பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய சிறுகதை


குருட்டுப் பட்டாம்பூச்சியின் தோட்டத்திற்குள் என் கண்கள் தூங்கிக் கொண்டிருந்தது. குடைக் காளான்களுக்குள் ஒரு பூந்தோட்டம் அன்றைய வசீகர மாலைப் பொழுதை ஆவலாகக் காத்திருந்தது. செவ்வாய் ஒரு பாலைவனம் என்றால் நிகழ்கால உலகை தார்ச் சாலை எனலாம்.

இன்று யாருமில்லாத காட்டிற்குள் மெழுகு வர்த்திகள் கண்ணீர் அஞ்சலிக்காய் ஏற்றப்படுகிறது; அன்று கூரைகளில்லாத குடிசைக்குள் மலை போல் குவிந்த சடலங்களை சந்திரன் தான் அடையாளம் காட்டியது.

என்னால் அலைகளோடு நீந்த முடியும்; மான்களோடு துள்ளி விளையாட இயலும்; வானவில்லை ஓவியமாய் வரைய முடியும் ஆனால் முப்ப

மேலும்

காலங்கள் கடந்து போனது என்று பலர் சொல்லலாம். இன்று மாற்றம் என்று கூட அவர்கள் சொல்லக் கூடும். இலாபம் சீராக உள்ள வரை மக்களை பற்றி சிந்திக்காத அரசியல் காலம் முடிந்து போகும் தவணையில் மீதத்தில் ஒரு குளத்திலிருந்து தண்ணீரை இரு கைகளால் நனைத்து அதனை மழையாக வானில் தூவி விடுகிறார்கள். அது தான் மாற்றத்தின் மார்கழி என்று நிகழ்காலம் ஒவ்வொரு நொடியும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், உணர்ந்தவர்கள் தான் இங்கே பற்றாக்குறை 14-Feb-2018 11:32 pm
நீண்ட நாட்களின் பின் உங்கள் வருகை மனதிற்கு ஆனந்தம் தருகிறது. நேரம் எடுத்து வாசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் 14-Feb-2018 11:28 pm
ஈழத்தில் தமிழ்மொழியும் தமிழனும் செல்லக் குழந்தைகள் அவனைக் காட்டித்தான் கரைக்கடந்து அவர்கள் கொள்ளையடித்து வாழ்கிறார்கள். ஆனால், அவனை மட்டும் இன்றும் அந்தக் கல்லறைக்குள் புதைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சமத்துவம் என்ற சொல்லில் அடிமை எனும் கூண்டை விட்டு இன்று வரை சுதந்திரமாக வாழ பலரால் முடியாமல் தான் இருக்கிறது 14-Feb-2018 11:26 pm
பன்னீர் பூக்கள் அருமை தோழரே.. 14-Feb-2018 3:02 pm
Roshni Abi - Roshni Abi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2018 7:51 am

நீ தந்த நினைவு மாெட்டுக்கள்
நித்தமும் மலர்கிறது பூக்களாய்
வாசங்களை முகரந்த படி
உன் முகம் காண்கிறேன்
பூக்களாய் மலர்ந்த நினைவுகளை
மாலையாய் காேர்க்கின்றேன்
தேவதை உன் தடம் தேடி
காத்திருக்கின்றேன் காதலுடன்
வாசம் வீசிய தென்றலாய்
இதயம் நுழைந்த சிறு மலரே
என் சுவாசம் நீயாக வேண்டும்
வாழ்வின் வரமாய் நீ வேண்டும்
காதல் கை கூட வேண்டும்
பூவே பூ சூட வா

மேலும்

அருமை பா 08-Feb-2018 7:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

இஷான்

இஷான்

இலங்கை (காத்தான்குடி-03)
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (52)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (48)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மேலே