சையது சேக் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/howez_41353.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சையது சேக் |
இடம் | : achanpudur |
பிறந்த தேதி | : 08-Dec-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 988 |
புள்ளி | : 247 |
பேரன்பும் பெருங்காதலும் கொண்டவன்
உன்னை எண்ணி எண்ணி
நான் இருக்க
நீ என்னை எண்ணி இருக்க
ஏங்காதோ கண்கள்
கண்களே கண்களே எதற்கும்
கலங்காதே
கண்களை நம்பித்தான் காதல்
களத்தில் இறங்குகிறது
காதலின் துன்பமும் துயரமும்
கண்களுகே
கண்களே கண்களே உள்ளத்தில்
உண்மையின் ஊற்றாக இருந்துவிடு
அன்பினை அள்ளி கொடுத்துவிடு
ஆறுதல் நீதான் புரிந்துவிடு ,
காதலின் இருப்பிடம் உள்ளமே
அதுவே பாவம் என்ன செய்யும் /
நல்லது நினைப்பதும் உள்ளமே
நலிவில் சோர்வதும் உள்ளமே ,
கண்களை நம்பும் உள்ளத்தில்
கறைபடியாது காத்துக்கொள் கண்களே
கண்களே கண்களே காண்பதும் நீயே
காட்டிக் கொடுப்பதும் நீயே,
காதல் கொள்வதும் ந
அன்று நீ என் வயிற்றில்
சிசுவாய் உலாவிவந்தாய்
சிலபோது மகிழ்ச்சி பொங்க
உன் வளரும் சிறு கால்களால்
உதைத்தாய் அதில் நான்
பேரின்பம் கண்டேன் ,அந்த
அதே பேரின்பத்தை இன்று
நான் என்னுள் உணர்ந்தேனடி
ப
தேர்தலுக்கு முன்
நோட்டு வைப்பார்
தேர்தலுக்குப் பின்
வேட்டு வைப்பார்
அவரே வேட்பாளர்
இவன் ஒரு
ஓட்டிற்கு ஆயிரம் ரூபாய்
தருவான்
அதை அரசு ஒப்பந்ததாரரிடம்
பெறுவான்
இதில் தவறு
நம் மீதா அவன் மீதா?
சாலை சேலைபோல்
கிழிந்து கிடந்தது
தார் எங்கே என்றால்
அமைச்சருக்குக் கொடுத்தார்
அதிகாரிக்குக் கொடுத்தார்
மீதி உள்ள தாரில்
சாலை அமைத்தார்
சாலை முழுதும்
குழியாக ஆனது
சாலை போட்டவர்
குண்டாக ஆனார்
குண்டும் குழியும்
என்பது இதுதானோ ?
இவன் நம் முன்
காலில் விழுந்து
பின்
காலில் விழவைப்பவன்
திறமையின்மையினால்
இயங்கும்
நிறுவனங்களுக்கு
மூடு விழாவைப்பவன்
தேர்தலுக்கு முன்
இவன
பொள்ளாச்சியில் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்து போனது ஆகாயத்திலே,
பொல்லாத ஆட்சியில் சில பேரரக்கன்கள் மானிட வேஷமிட்டு
மலர் செண்டுகளில் மயக்க மருந்தொளித்து
மணங்கமிழ மனங்கவர்ந்து
தனிமை படுத்தி கடத்தி சென்றான்
கானகத்தை விட்டு,.
சில பட்டாம்பூச்சியின் சிறகை கொய்து
சதையை தின்று சிதையில் போட்டான்
பெரும் பேய்பசி கொண்ட கயவனவன்.
அண்ணே அண்ணே பெல்டால் அடிக்காதிங்க பேன்டை கழட்டுறேன் என
பெருங்குரலெடுத்து கெஞ்சி கதறி பதறி
மாரில் இருகை மாராப்பிட்டு துடித்தது
சிறு வண்ணத்து பூச்சியொன்று.
ஆடை அவின்று
அந்தரங்கங்கள் அகப்பட்டது புகைபடத்துடன்.
ஒலியும் ஒளியும் உடலை படமெடுத்து
நகலெடு
ஊருக்கு ஒதுக்கு புறமாக
ஒற்றை வீடு.
உறவென்று யாருமில்லா
ஒட்டுக்குடித்தன வாழ்க்கை.
ஒற்றை சூரியனும்
ஒற்றை சந்திரனும்
அழையா விருந்தாளி போல
அனுதினமும் ஓட்டை உடைசல் வழியாக
எட்டி பார்க்கின்றனர்..
ஒரு வயோதிகன்
ஒற்றை கயிற்று கட்டிலில்
உடல் சோர்ந்து
கூனி குறுகி குற்றுயிராய் கிடக்கிறான்.
பழைய கஞ்சியும் வெஞ்சனமும்
குவளை நிறைய தண்ணீரும்
சில கிளிஞ்சல் உடுமானமும்
ஆங்காங்கே சிதறி கிடக்கிறது ..
ஈயும் எறும்பும் பகலில் மொய்க்க
கொசுவும் மூட்டை பூச்சியும் இரவில் கடிக்க
மூத்திர வாடையும் புழுங்கல் வாடையும்
நாசியின் மேல் கப்பென்று ஏறி கிறங்கடிக்க
ஊசலாடும் உயிரின் மூச்சு
உறக்கமில்லாம
கருவிழியால் கன்னியை கவன்று
இதயத்தின் இடப்புறம் இடறி
மனதோடு மணம் மகிழ்வுற்று
பிடிக்காமலோ பிரிந்தோ பிரிக்கப்பட்டோ
சவப்பெட்டியில் சறுக்கி சாதலே
காதல்.
சாத்தானெனும் யாத்ரீகன்
இவ்வளவு நாளாய் கலகலப்பாய் இருந்த அந்த வீடு,
இன்று என்னவோ கவலை ரேகையை முகத்தில் வரைந்திருந்தது..
உள்ளே எட்டி பார்த்தேன்.
ஒரு வாலிபன் தன் மனைவியிடம் பிரிய மனமில்லாமல் பிரியாவிடை பெற உரையாடி கொண்டிருந்தான்..
அழாத செல்லம் ஒரு இரண்டு வருடத்தில் உன்னை பார்க்க ஓடி வந்துருவேன்.
இந்த ஊரில் நாமும் காசு பணத்துடன் கடன் இல்லாமல் கௌரவமாக வாழ வேண்டாமா..
கடனை அடைத்து விட்டு என் ஆருயிர் மனைவிக்கு
என் கையால ஒரு தங்க தாலி செயினாச்சும் வாங்கி போட்டு அழகு பார்க்க வேண்டும்..
புன்னகையோடு என்னை அனுப்பி வை என்று தன் கண்ணீரை லாகவமாய் மறைத்து கொண்டான்.
அம்மாவின் நெற்றி முத்தத்தில்
நேற்றுவரை நீ நின்றிருந்த
இடங்களிளெல்லாம்.....
இன்று உன் நினைவுகள் மட்டுமே.....!
உனக்கென்று வானம் உறங்காமல்
விழித்துக்கொண்டு இருப்பதை
ஏன் மறந்தாய் நண்பா.
சிறு தூறல் நடுவே நாணலாய்
வளைந்துவிட்ட வானவில்லை ஏன்
ரசிக்க மறந்தாய் நண்பா.
உன் உடலோடு அனுதினமும் வருடி செல்லும் நல் பூங்காற்றை நீ உணர
ஏன் மறந்தாய் நண்பா.
கால் கடுக்க காத்திருக்கும் சுவற்றின்
குவியாடியை கவனிக்காமல் ஏன்
முகம் மறந்தாய் நண்பா.
வார்த்தைக்கு வார்த்தை உனையே
அழைக்கும் நன்றியுள்ள குரலை கடந்து
ஏன் மறந்து போனாய் நண்பா.
புள்ளிகள் வைத்த விழிகளாய் அவள்
காத்திருக்க கோலமாய் கவிமடல் நீ ஏன் வரைய மறந்தாய் நண்பா.
எல்லாவற்றையும் மறந்த நண்பா
நட்பை மட்டும் எனாட உன் கைவசம் வைத்திருந்தாய்,உன் அன்பில