புதுவைக் குமார் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : புதுவைக் குமார் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 22-Jun-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 4206 |
புள்ளி | : 1165 |
விஜய் டிவி ல் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
வாங்குதே தற்போதைய லட்சியம்
கல்வி நேர்மை முயற்சி தூயமனம் புறம்பேசாமை
பிறருக்கு உதவுவது இவை மனிதனுக்கு அவசியம்
என்று நினைப்பவன்
தொடர்புக்கு - 9942994112
அன்னையும்
தமிழ் அன்னையும்
இருவருமே எனக்கு உயிரையும் மெய்யையும் கொடுத்தவர்கள்
இருவருக்குமே மேலாடை அது நூலாடை
அன்னை தன் குரலால்
நன்னெறிகளை சொல்லி வளர்த்தாள்
தமிழன்னை தன்
குரளால் நன்னெறிகளை சொல்லி வளர்த்தாள்
என் அன்னையின் குரல் கழுத்தில் இருந்து பிறக்கிறது
தமிழன்னையின் குரள் எழுத்தில் இருந்து பிறந்தது
அன்னை தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால்
தமிழன் அன்னை முப்பாலை ஊட்டி வளர்த்தாள்
இருவருமே சொல்லிக் கொடுத்த எழுத்து அ
அன்னை நான் தப்பு செய்யும் போதெல்லாம் அடிக்கச் செய்தாள்
தமிழன்னை நான் தப்பு செய்யும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தாள்
என
கவிராஜன் பாரதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கவி
ரஜினி என்கிற
மூன்றெழுத்து
திரை உலகின்
சூப்பர் ஸ்டார்
பாரதி என்கின்ற
மூன்றெழுத்து
கலை உலகின்
ரியல் சூப்பர் ஸ்டார்
பெண் வயிற்றில் பிறந்த
பாரதியே
உன்னைப் போன்ற ஒரு தீயை
தன் வயிற்றில் சுமக்காது மண் வயிற்றில் சுமக்க வைத்த இறைவன் மீது கோபமுற்று இருக்கிறாள் பார்வதியே
பார்வதிக்குப் பிறந்த சுப்பிரமணியோ
கடவுளாய்த் தோன்றி
கருவறையில் இருப்பவர்
லட்சுமிக்குப் பிறந்த சுப்பிரமணியோ
கருவறையில் தோன்றி
சொல்லறை இருந்தும்
சில்லறை இல்லாது
செல்லறையில்
கல்லறையில் எங்கள் கடவுளாய் இருப்பவர்.
பாரதியே
பா ரதியே
திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை
அடித்தட்டு மக்களின் வாழ்வு வளம் பெறுமா ?
ஏழைக் குடிசைக்குள் வெள்ளி நிலா வலம் வருமா ?
அங்கே
அடுப்பில் உறங்கும் பூனையை விரட்டி அரிசிப் பானையினைத் தருமா ?
இறைவா இதுதான் இவர்களின் கருமா..
இப்படி ஏங்கிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள்
தன்நெஞ்சை நிமிர்த்தி நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுகிறான் மட்டன் குருமா
அதற்கு முதல் காரணம் தலைவர் திருமா
லட்சங்களை விதைத்து ஆடி காரில் (மகிழுந்தில்)செல்பவர் அல்ல நீங்கள்
லட்சியங்களை விதைத்து அம்பேத்காரோடு செல்பவர் நீங்கள் ஆம்
மக்களை வெள்ளத்தில் நீந்த வைக்கும் தலைவர் அல்ல நீங்கள்
27.8.24 அன்று பிறந்தநாள்
காணும்
அன்பு அண்ணன் சமூக சேவகர் ஆர் கே டி ராஜகோபால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை
வெள்ளை மனம்
கொண்ட பால்
ஆவின் பாலா இல்லை
பூவின் பாலா இல்லை
கால் தடமே பதியாத ஒரு தீவின் பாலா
பான்லே பாலா இல்லவே இல்லை
வெள்ளை மனம்
கொண்ட பால்
பிள்ளை மனம்
கொண்ட பால்
கிள்ளை மனம்
கொண்ட பால்
தில்லை மனம்
கொண்ட பால்
அவர்தான்
அண்ணன் ராஜகோபால்
அவர் வாழ்க்கை மளிகையில் தொடங்கி மாளிகையைத் தொட்டது
ஆரம்பத்தில் அவர் வாழ்க்கை இருந்தது மங்களா
தன்னம்பிக்கையோடு கடினமாய் உழைத்தார் சிங்கிளா
இன்றோ அவருக்கு இருக்கிறது
பல இடத்தில் பங்களா
இவர
அழகோவியம்
இவள்
நிச்சயம்
ஒரு கன்னிக்குப்
பிறந்தவள் அல்ல
கனிக்கு பிறந்தவள்
அல்லது
கணினிக்கு பிறந்தவள்
பல இளைஞர்களின்
எதிர்காலத்தை கணிக்கப்
பிறந்தவள்
இவள்
வெள்ளை மல்லிகையை அல்ல வெள்ளை மாளிகையைத் தன் தலையில் சூடுகின்றவள்
கவிஞர்கள்
அனைவரும் நிலவைப் பார்த்து வியந்து கொண்டிருக்க
அந்த நிலவு மட்டும்
இவள் நிழலைப் பார்த்து
அயர்ந்து கொண்டிருந்தது
அனைவரின்
உடம்பிலும் இரத்தம்
ஓடிக்கொண்டிருக்க
மாறாய்
இவள் உடலில் மட்டும்
ரதம் ஓடுகிறது..
புத்தகத்தில் உள்ள மயிலிறகை பார்த்து குட்டி போட காத்துக் கொண்டிருந்தாள்
பிரதமர் இவளை தோகையில்லா
தேசியப்பறவையாக அறிவிக்கக் காத்துக்
நீ எனக்காக
பிறந்த புதிய சூரியன்
நான் கண்விழிக்க
உதித்த உதயசூரியன்
என் வாழ்வை ஒளியாக்க
வந்த மதிய சூரியன்
அழகில் முதிர்ந்த
முதிய சூரியன்
நீ கோவையில்
பிறந்தவள்
ஒரு கோவைக்குப்
பிறந்தவள்
உன் மீது படும்
ரணங்கள் கூட
ஆபரணங்கள் ஆகிறது
உன் கண் மையை
எடுத்து
வெற்றிலையில் தடவிப்பார்
காணாமல் போன பொருள் தெரியாது
என் இதயத்தின் இருள் தெரியும்
திரியனையில்
சுடர் அமர்ந்து ஒளி தருவதைப் போல
என் மனமெனும் அரியணையில்
நீ அமர்ந்தாய்
என் வாழ்க்கை ஒளி பெற்றது
நீ பொடி வைத்துப்
பேசும் போதெல்லாம்
என் இதயம் பொடிப் பொடியானது
நீ ஊற்று நீர்
நான் ஆற்றுநீர்
நம் காதல்
கானல் எனும் வேற்று
கவிதைக்கு
எதுகை இருக்கும்
கவிதாவுக்கு
இரு கை இருக்கும்
கவிதையில்
சந்தம் இருக்கும்
கவிதாவிடம்
சாந்தம் இருக்கும்
அது
கவிதை
அவளும்
கவிதைதான்
கவிதையில்
தலை வரி
இருக்கும்
கவிதா
தலை வாரி இருப்பாள்
கவிதையில்
அடி சீர் இருக்கும்
கவிதாவிடம் சீர்கேட்டால்
அடி இருக்கும்
ஆங்கிலப் பெண்ணின்
வயிற்றில் கவிதையின் பிறப்பு
அழகான பெண்ணின் வயிற்றில் கவிதாவின் பிறப்பு
கவிதையை
பா எனலாம்
கவிதாவை
பாவை எனலாம்
கவிதையை புத்தகம்
கொண்டிருக்கும்
கவிதா
புத்தான அகம் கொண்டிருப்பாள்
அதில்
மை உருவில் பொய் இருக்கும்
அவள் மெய் உருவில்
மை இருக்கும்
கவிதையின் அழகை
வெள்ளைத் தாள் சுமந்திருக்கும்
கவிதாவின் அழகை
வெள்ளைத் தோ
கவிஞர்கள் சங்கமம்
கனவில் வந்த
காந்தமலர்
நீ மழை
நான் மயில்
நீ வரும்
நேரம் நான் அறிவேன்
மகிழ்வில் நடனம் புரிவேன்
நீ தேர்
நான் கொடி
பாரி வந்தால்
படர்வேன்
அவன் வரும்வரை
உன்னைப் பின்தொடர்வேன்
நீ சூரியன்
நான் பூமி
சுற்றிவருகிறேன்
உன் அண்ணன்
என்ன நிலாவா
என்னை ஏன் சுற்றி வருகிறான்
நீ ஆறு
நான் விவசாய
நிலத்தின் சேறு
உன்னிடம் இருந்து
எப்போது வரும்
காதல் எனும் நீரு
இந்த
ஏழைக்குக்
கிடைக்குமா சோறு
அன்பே நீ கூறு
எதையும் பேசாமல்
என் இதயத்தைப்
போடாதே கூறு
கடைக்கண்ணால்
ஒரு முறை பாரு
நீ மறுத்தால்
நடக்கும்
மூன்றாம் உலகப் போரு
நான் உன் உயிரின்
வேரு
இதை
நீ
நிலா
நான் உன்னைத்
தொட நினைக்கும்
ஆம்ஸ்ட்ராங்
நீ
முல்லை
நான் உனக்கு
தேரை வழங்கக்
காத்திருக்கும் பாரி
நீ
தேன்
உன்னச் சுற்றிப்
பார் ஈ
நீ
சந்தனம்
நான் உன்னை
கடத்தத் துடிக்கும்
வீரப்பன்
நீ
பார்வையால் அடிக்கிறாய்
ஏனென்றால்
உன் அப்பன்
வீர அப்பன்
நீ
தாமரை
நான் உன்னை
ஆள விரும்பும் மோடி
அதற்காக
நான் விற்கவும்
தயார் டீ
நீ
காஷ்மீர்
நான் உன்னுள்
ஊடுருவ நினைக்கும்
தீவிரவாதி
உன்னால்
எனக்குக் காதல் வியாதி
அன்பே
பக்கிஸ்தானாய்
எனக்கு அன்பைக்கொடு
தயவு செய்து
இந்தியாவாய்
என்னை அழித்துவிடாதே
அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்
அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று
அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது
அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு
மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்
அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்
அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்
சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு
அழகிய தீவின் மண்
பாரதியின் பண்
நாரதியின் கண்
அந்தி நேரத்து விண்
அக்ரகாரத்தில் செய்த பன்
ராமானுஜன் காணாத எண்
நெய்வேலியில் தயாரிக்காது
நெய்யில் தயாரித்த மின்
செப்பு கலக்காத பொன்
இவள் இவை அனைத்தும்
கலந்து செய்த பெண்
யானை பயிரை சேதப்படுத்தியது போல்
இவளின் முந்தானை
என் உயிரையல்லவா சேதப்படுத்துகிறது
மானை வீட்டில் வளர்க்கும்
குற்றத்திற்காக அவள் தந்தையை
கைது செய்யாத அரசைக்
கண்டிக்காமல் கண்ணடிக்கச்
சொல்கின்றது என் மனது
அவளிடம் மயிலைப்போல்
அழகைக்காட்ட என்னிடம் இல்லை தோகை
அந்த சோகத்தால் வந்தது சோகை
அவள் வீட்டில் மூலிகைச் செடிகூட
மல்லிகையைப் பூத்தது
அவளின் கூந்தல்
காதலன
தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த