புதுவைக் குமார் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : புதுவைக் குமார் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 22-Jun-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 4150 |
புள்ளி | : 1144 |
விஜய் டிவி ல் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
வாங்குதே தற்போதைய லட்சியம்
கல்வி நேர்மை முயற்சி தூயமனம் புறம்பேசாமை
பிறருக்கு உதவுவது இவை மனிதனுக்கு அவசியம்
என்று நினைப்பவன்
தொடர்புக்கு - 9942994112
தாரா
இது என்ன பேரா
இல்லை
இல்லை
என் மனதின் வலியை எடுக்காது காதல் வலியை கொடுக்கும் பேரா ( மாத்திரை)
சேரா கிடந்த என் வாழ்க்கைச் சாலையில்
இவள் ஊற்றினாள் தாரா
அதன் பிறகு சோலையாய் மாறி என் வாழ்க்கை ஆனது ஜோரா
என் இதய வலியை அவள் நன்கு அறிவாள்
ஆயினும் அரிவாள் இன்றி அவள் அறிவால்
என் இதயத்தை அரிவாள்
கடலுக்கு எப்படி நீர் வந்தது
இவள்
அழுகையில் இவள் கண்ணழகை விட்டுப் பிரிந்த கண்ணீர்த் துளிகள்
வேதனையால் அழுது அழுது கடல் மட்டம் உயர்ந்து..
மண்ணில் நிலவை விட அழகாய் சந்திரா இருக்கையில்
இந்திய அரசு
ஏதோ விண்ணில் ஒரு சந்திரன் இருப்பதைப் போல
சந்திராயனை அனுப்பி பல கோடிகளை வீணடிக்கிறது.
குழந்தைகள் தினம்
கொண்டாடுகிறோம்
ஆனால் குழந்தைகள் மனம் கொண்டாட மறந்து விட்டோம்
சந்திரனைத் தேடி அலைகின்றோம்
உலகில்
எந்திரன் ஆகவே விளைகின்றோம்
இரும்புகளாகவே வளைகின்றோம்
இதயம் என்ற ஒன்றைக் கலைகின்றோம்
நிலவைத் தொட்டோம்
ஏழைகளின் நிழலைத்
தொட மறந்து விட்டோம்
கனவு காணச் சொன்னார்
ஜனாதிபதி அப்துல் கலாம்
அதற்காக கனவுகளை மட்டுமே கண்டு கொண்டிருக்கின்றோம்
சந்திராயன் நிலவைத் தொட்டது
சில மனிதர்களின் செயல்கள் தான் சந்தி சிரிக்கின்றது
செயற்கைக்கோளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதன் இயற்கைக் கோளுக்கும் தன் குறிக்கோளுக்கும் கொடுப்பதில்லை.
லட்சங்களுக்கு கொடுக்கும் மதிப்பை லட்சி
நண்பர் கர்ணனுக்கு
இரங்கல் கவி
இவன்
தன் நெஞ்சில்
முட்டுவதற்காகவே கன்றுகளை வளர்ப்பவன்
இவன் ஆறுதலாய் நினைத்து சாயும் நெஞ்சுகள் எல்லாம் நஞ்சுகளாகவே இருந்தது.
அனைவருக்கும் அழகைப் பார்க்கக் கண்களைப் படைத்திருந்த இறைவன் இவனுக்கு மட்டும் அழுகையைப் பார்க்க படைத்திருந்தேன்
இவன் வளர்த்தப் பூச்செடிகள் கூட வாசத்தைத்
தராமல் மோசத்தை மட்டுமே கொடுத்தது.
இவன் கா கா என்று கூவிக் கூவி சாதம் வைத்த காகங்கள் அனைத்தும் நாகங்களாய்
மாறியது.
இவனிடம் பிச்சை எடுத்தவர்கள் தான் இவன் மீது எச்சை தொடுதார்கள்
இவன் அன்பு காட்டியவர்கள் தான் இவன் மீது அம்பை எய்தார்கள்
அன்று
இவன்
சிலர் முன்னேற
கண் தானம்
வாழ்க்கையில் எப்பொழுதும் தேவை நிதானம்
நகைச்சுவை திரைத்துறைக்கு கொடுத்த தானம் சந்தானம்
கணித ஆசிரியர் கொடுக்கும் தானம் எண் தானம்
பாட்டு ஆசிரியர் கொடுக்கும் தானம் பண் தானம்
திருமணத்தில் பெற்றோர்கள் கொடுக்கும் தானம் பெண் தானம்
புலவனுக்கு வேந்தன் கொடுக்கும் தானம் பொன் தானம்
தன் வாரிசுக்கு தந்தை கொடுக்கும் தானம் மண் தானம்
வனஜா அம்மா மக்கள் அனைவரையும் செய்யச் சொல்வது கண்தானம்
தானம் செய்யாத கண்கள் மண்ணில் மக்கி போகிறது
தானம் செய்யும் போது உங்கள் மனதை எண்ணி கண்கள் மகிழ்ச்சியில் சொக்கிப் போகிறது
இறந்த பிறகு
இறந்து போகும் கண்களை பிறருக்கு இரந்து கொடுங்கள்
அழகோவியம்
இவள்
நிச்சயம்
ஒரு கன்னிக்குப்
பிறந்தவள் அல்ல
கனிக்கு பிறந்தவள்
அல்லது
கணினிக்கு பிறந்தவள்
பல இளைஞர்களின்
எதிர்காலத்தை கணிக்கப்
பிறந்தவள்
இவள்
வெள்ளை மல்லிகையை அல்ல வெள்ளை மாளிகையைத் தன் தலையில் சூடுகின்றவள்
கவிஞர்கள்
அனைவரும் நிலவைப் பார்த்து வியந்து கொண்டிருக்க
அந்த நிலவு மட்டும்
இவள் நிழலைப் பார்த்து
அயர்ந்து கொண்டிருந்தது
அனைவரின்
உடம்பிலும் இரத்தம்
ஓடிக்கொண்டிருக்க
மாறாய்
இவள் உடலில் மட்டும்
ரதம் ஓடுகிறது..
புத்தகத்தில் உள்ள மயிலிறகை பார்த்து குட்டி போட காத்துக் கொண்டிருந்தாள்
பிரதமர் இவளை தோகையில்லா
தேசியப்பறவையாக அறிவிக்கக் காத்துக்
நீ எனக்காக
பிறந்த புதிய சூரியன்
நான் கண்விழிக்க
உதித்த உதயசூரியன்
என் வாழ்வை ஒளியாக்க
வந்த மதிய சூரியன்
அழகில் முதிர்ந்த
முதிய சூரியன்
நீ கோவையில்
பிறந்தவள்
ஒரு கோவைக்குப்
பிறந்தவள்
உன் மீது படும்
ரணங்கள் கூட
ஆபரணங்கள் ஆகிறது
உன் கண் மையை
எடுத்து
வெற்றிலையில் தடவிப்பார்
காணாமல் போன பொருள் தெரியாது
என் இதயத்தின் இருள் தெரியும்
திரியனையில்
சுடர் அமர்ந்து ஒளி தருவதைப் போல
என் மனமெனும் அரியணையில்
நீ அமர்ந்தாய்
என் வாழ்க்கை ஒளி பெற்றது
நீ பொடி வைத்துப்
பேசும் போதெல்லாம்
என் இதயம் பொடிப் பொடியானது
நீ ஊற்று நீர்
நான் ஆற்றுநீர்
நம் காதல்
கானல் எனும் வேற்று
கவிதைக்கு
எதுகை இருக்கும்
கவிதாவுக்கு
இரு கை இருக்கும்
கவிதையில்
சந்தம் இருக்கும்
கவிதாவிடம்
சாந்தம் இருக்கும்
அது
கவிதை
அவளும்
கவிதைதான்
கவிதையில்
தலை வரி
இருக்கும்
கவிதா
தலை வாரி இருப்பாள்
கவிதையில்
அடி சீர் இருக்கும்
கவிதாவிடம் சீர்கேட்டால்
அடி இருக்கும்
ஆங்கிலப் பெண்ணின்
வயிற்றில் கவிதையின் பிறப்பு
அழகான பெண்ணின் வயிற்றில் கவிதாவின் பிறப்பு
கவிதையை
பா எனலாம்
கவிதாவை
பாவை எனலாம்
கவிதையை புத்தகம்
கொண்டிருக்கும்
கவிதா
புத்தான அகம் கொண்டிருப்பாள்
அதில்
மை உருவில் பொய் இருக்கும்
அவள் மெய் உருவில்
மை இருக்கும்
கவிதையின் அழகை
வெள்ளைத் தாள் சுமந்திருக்கும்
கவிதாவின் அழகை
வெள்ளைத் தோ
கவிஞர்கள் சங்கமம்
கனவில் வந்த
காந்தமலர்
நீ மழை
நான் மயில்
நீ வரும்
நேரம் நான் அறிவேன்
மகிழ்வில் நடனம் புரிவேன்
நீ தேர்
நான் கொடி
பாரி வந்தால்
படர்வேன்
அவன் வரும்வரை
உன்னைப் பின்தொடர்வேன்
நீ சூரியன்
நான் பூமி
சுற்றிவருகிறேன்
உன் அண்ணன்
என்ன நிலாவா
என்னை ஏன் சுற்றி வருகிறான்
நீ ஆறு
நான் விவசாய
நிலத்தின் சேறு
உன்னிடம் இருந்து
எப்போது வரும்
காதல் எனும் நீரு
இந்த
ஏழைக்குக்
கிடைக்குமா சோறு
அன்பே நீ கூறு
எதையும் பேசாமல்
என் இதயத்தைப்
போடாதே கூறு
கடைக்கண்ணால்
ஒரு முறை பாரு
நீ மறுத்தால்
நடக்கும்
மூன்றாம் உலகப் போரு
நான் உன் உயிரின்
வேரு
இதை
நீ
நிலா
நான் உன்னைத்
தொட நினைக்கும்
ஆம்ஸ்ட்ராங்
நீ
முல்லை
நான் உனக்கு
தேரை வழங்கக்
காத்திருக்கும் பாரி
நீ
தேன்
உன்னச் சுற்றிப்
பார் ஈ
நீ
சந்தனம்
நான் உன்னை
கடத்தத் துடிக்கும்
வீரப்பன்
நீ
பார்வையால் அடிக்கிறாய்
ஏனென்றால்
உன் அப்பன்
வீர அப்பன்
நீ
தாமரை
நான் உன்னை
ஆள விரும்பும் மோடி
அதற்காக
நான் விற்கவும்
தயார் டீ
நீ
காஷ்மீர்
நான் உன்னுள்
ஊடுருவ நினைக்கும்
தீவிரவாதி
உன்னால்
எனக்குக் காதல் வியாதி
அன்பே
பக்கிஸ்தானாய்
எனக்கு அன்பைக்கொடு
தயவு செய்து
இந்தியாவாய்
என்னை அழித்துவிடாதே
அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்
அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று
அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது
அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு
மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்
அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்
அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்
சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு
அழகிய தீவின் மண்
பாரதியின் பண்
நாரதியின் கண்
அந்தி நேரத்து விண்
அக்ரகாரத்தில் செய்த பன்
ராமானுஜன் காணாத எண்
நெய்வேலியில் தயாரிக்காது
நெய்யில் தயாரித்த மின்
செப்பு கலக்காத பொன்
இவள் இவை அனைத்தும்
கலந்து செய்த பெண்
யானை பயிரை சேதப்படுத்தியது போல்
இவளின் முந்தானை
என் உயிரையல்லவா சேதப்படுத்துகிறது
மானை வீட்டில் வளர்க்கும்
குற்றத்திற்காக அவள் தந்தையை
கைது செய்யாத அரசைக்
கண்டிக்காமல் கண்ணடிக்கச்
சொல்கின்றது என் மனது
அவளிடம் மயிலைப்போல்
அழகைக்காட்ட என்னிடம் இல்லை தோகை
அந்த சோகத்தால் வந்தது சோகை
அவள் வீட்டில் மூலிகைச் செடிகூட
மல்லிகையைப் பூத்தது
அவளின் கூந்தல்
காதலன
தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த
நண்பர்கள் (107)

வீரா
சேலம்

ப செந்தில்பிரபு
COIMBATORE

தொங்கலை தொலைத்தவன்
நெட்டலக்குறிச்சி/ அரியலூ

panneer karky
பாண்டிச்சேரி
