புதுவைக் குமார் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  புதுவைக் குமார்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  22-Jun-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2015
பார்த்தவர்கள்:  4195
புள்ளி:  1162

என்னைப் பற்றி...

விஜய் டிவி ல் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
வாங்குதே தற்போதைய லட்சியம்

கல்வி நேர்மை முயற்சி தூயமனம் புறம்பேசாமை
பிறருக்கு உதவுவது இவை மனிதனுக்கு அவசியம்
என்று நினைப்பவன்
தொடர்புக்கு - 9942994112



என் படைப்புகள்
புதுவைக் குமார் செய்திகள்
புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2024 12:04 am

27.8.24 அன்று பிறந்தநாள்
காணும்
அன்பு அண்ணன் சமூக சேவகர் ஆர் கே டி ராஜகோபால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

வெள்ளை மனம்
கொண்ட பால்
ஆவின் பாலா இல்லை
பூவின் பாலா இல்லை
கால் தடமே பதியாத ஒரு தீவின் பாலா
பான்லே பாலா இல்லவே இல்லை

வெள்ளை மனம்
கொண்ட பால்
பிள்ளை மனம்
கொண்ட பால்
கிள்ளை மனம்
கொண்ட பால்
தில்லை மனம்
கொண்ட பால்
அவர்தான்
அண்ணன் ராஜகோபால்

அவர் வாழ்க்கை மளிகையில் தொடங்கி மாளிகையைத் தொட்டது

ஆரம்பத்தில் அவர் வாழ்க்கை இருந்தது மங்களா
தன்னம்பிக்கையோடு கடினமாய் உழைத்தார் சிங்கிளா
இன்றோ அவருக்கு இருக்கிறது
பல இடத்தில் பங்களா

இவர

மேலும்

புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2024 9:46 pm

மக்கள் முதல்வர் திரு ந. ரங்கசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவி

மக்கள் துயர துடைக்க உருவாக்கப்பட்ட எல்லா சாமிகளும் கருவறையிலேயே நிற்கின்றன.

கருவறையைத் தாண்டி வந்து மக்களின் துயர் துடைத்த ஒரே சாமி
அவர்தான் ரங்கசாமி


கந்தசாமி யாருக்கும் கொடுக்காமல் தன் கையில் வைத்திருந்தார் வேலை

ரங்கசாமி மக்களுக்குக் கொடுத்தார் தன்னால் முடிந்த அளவு வேலை

அதனால் மக்கள் இவர் கையில் கொடுத்தனர் செங்கோலை
இவர்தான் பாளையாய் கிடந்த புதுவையின் வயிற்றில் வார்த்தார் பாலை
அதனால் புதுவை ஆனது சோலை

இவர் காமராஜரின் நகல்
கர்ணனிடமிருந்து தெறித்த துகள்
இவர் விழி திறக்கும் போதெல்லாம்
இருண்ட ஏழை

மேலும்

புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2024 9:39 am

அன்பே

அழகிகள் மாநாட்டிற்கு
ஐ நா அழைத்தும் செல்லாதவள் நீ

தன் பெயரை
தேவதை என்று
யாரிடமும் வெளியே
சொல்லாதவள்
நீ

தன் அழகால் இளைஞர்களை கவர்ந்து கொல்லாதவள் நீ

காதலெனும் பாடத்தை பூப்பெய்தும்
கல்லாதவள் நீ

வீதியில் நடக்கையில் யாருக்காகவும் நில்லாதவள் நீ

காதல் என்னும்
வலையில் இளைஞர்களைத் தள்ளாதவள் நீ

பிரம்மனே வியக்கும் அழகு இருந்தும் மமதையில் துள்ளாதவள் நீ

ஊர் கதைகளை வாயில் போட்டு மெல்லாதவள் நீ

ஆண்களின்
இள நெஞ்சை வேல்விழியால்
கிள்ளாதவள்
நீ

தான் நயன்தாராவின் தங்கை என்ற கர்வம் கொஞ்சமும்
இல்லாதவள் நீ

பொறுக்கிகளுக்கு
மட்டும் பொல்லாதவள் நீ


உலக அழ

மேலும்

புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2024 11:20 pm

பிறந்தநாள் வாழ்த்துக்கவி

உங்களுக்கு இன்று பிறந்தநாள்
எங்களுக்கு
அது சிறந்த நாள்

மக்களெல்லாம்
கவலை மறந்த நாள்
பறவைகள்
மகிழ்ச்சியில் பறந்த நாள்
எளியோர்கள்
துக்கம் துறந்த நாள்

அவர்களுக்கு தூக்கம் பிறந்தநாள்
ஏழைகள் தட்டிய கதவு திறந்த நாள்
அவர்களின் கண்ணீர் துளி இறந்த நாள்

உன்னை படைத்ததால்
பிரம்மனே இன்பத்தில் உறைந்த நாள்
வரியோர்களின் ஏழ்மை மறைந்த நாள்

துன்பம் இன்பத்திற்குள் கரைந்த நாள்
உங்கள் தாய் தந்தையரால் ரவிவர்மனை விட அழகான ஓவியம்
வரைந்த நாள்

பாட்டாளி மக்களின் பணிச்சுமை
குறைந்த நாள்
அவர்கள் வாழ்வில் கனிச்சுவை
நிறைந்த நாள்


எல்லோரும் தொப்புள் கொ

மேலும்

புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2021 10:47 pm

அழகோவியம்

இவள்
நிச்சயம்
ஒரு கன்னிக்குப்
பிறந்தவள் அல்ல
கனிக்கு பிறந்தவள்
அல்லது
கணினிக்கு பிறந்தவள்
பல இளைஞர்களின்
எதிர்காலத்தை கணிக்கப்
பிறந்தவள்

இவள்
வெள்ளை மல்லிகையை அல்ல வெள்ளை மாளிகையைத் தன் தலையில் சூடுகின்றவள்

கவிஞர்கள்
அனைவரும் நிலவைப் பார்த்து வியந்து கொண்டிருக்க
அந்த நிலவு மட்டும்
இவள் நிழலைப் பார்த்து
அயர்ந்து கொண்டிருந்தது

அனைவரின்
உடம்பிலும் இரத்தம்
ஓடிக்கொண்டிருக்க
மாறாய்
இவள் உடலில் மட்டும்
ரதம் ஓடுகிறது..

புத்தகத்தில் உள்ள மயிலிறகை பார்த்து குட்டி போட காத்துக் கொண்டிருந்தாள்
பிரதமர் இவளை தோகையில்லா
தேசியப்பறவையாக அறிவிக்கக் காத்துக்

மேலும்

புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2021 11:42 pm

நீ எனக்காக
பிறந்த புதிய சூரியன்
நான் கண்விழிக்க
உதித்த உதயசூரியன்
என் வாழ்வை ஒளியாக்க
வந்த மதிய சூரியன்
அழகில் முதிர்ந்த
முதிய சூரியன்

நீ கோவையில்
பிறந்தவள்
ஒரு கோவைக்குப்
பிறந்தவள்

உன் மீது படும்
ரணங்கள் கூட
ஆபரணங்கள் ஆகிறது

உன் கண் மையை
எடுத்து
வெற்றிலையில் தடவிப்பார்
காணாமல் போன பொருள் தெரியாது
என் இதயத்தின் இருள் தெரியும்

திரியனையில்
சுடர் அமர்ந்து ஒளி தருவதைப் போல
என் மனமெனும் அரியணையில்
நீ அமர்ந்தாய்
என் வாழ்க்கை ஒளி பெற்றது

நீ பொடி வைத்துப்
பேசும் போதெல்லாம்
என் இதயம் பொடிப் பொடியானது

நீ ஊற்று நீர்
நான் ஆற்றுநீர்
நம் காதல்
கானல் எனும் வேற்று

மேலும்

புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2020 10:49 pm

கவிதைக்கு
எதுகை இருக்கும்
கவிதாவுக்கு
இரு கை இருக்கும்

கவிதையில்
சந்தம் இருக்கும்
கவிதாவிடம்
சாந்தம் இருக்கும்

அது
கவிதை
அவளும்
கவிதைதான்

கவிதையில்
தலை வரி
இருக்கும்
கவிதா
தலை வாரி இருப்பாள்

கவிதையில்
அடி சீர் இருக்கும்
கவிதாவிடம் சீர்கேட்டால்
அடி இருக்கும்

ஆங்கிலப் பெண்ணின்
வயிற்றில் கவிதையின் பிறப்பு
அழகான பெண்ணின் வயிற்றில் கவிதாவின் பிறப்பு

கவிதையை
பா எனலாம்
கவிதாவை
பாவை எனலாம்

கவிதையை புத்தகம்
கொண்டிருக்கும்
கவிதா
புத்தான அகம் கொண்டிருப்பாள்

அதில்
மை உருவில் பொய் இருக்கும்
அவள் மெய் உருவில்
மை இருக்கும்

கவிதையின் அழகை
வெள்ளைத் தாள் சுமந்திருக்கும்
கவிதாவின் அழகை
வெள்ளைத் தோ

மேலும்

புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2019 8:05 pm

கவிஞர்கள் சங்கமம்

கனவில் வந்த
காந்தமலர்

நீ மழை
நான் மயில்
நீ வரும்
நேரம் நான் அறிவேன்
மகிழ்வில் நடனம் புரிவேன்

நீ தேர்
நான் கொடி
பாரி வந்தால்
படர்வேன்
அவன் வரும்வரை
உன்னைப் பின்தொடர்வேன்

நீ சூரியன்
நான் பூமி
சுற்றிவருகிறேன்
உன் அண்ணன்
என்ன நிலாவா
என்னை ஏன் சுற்றி வருகிறான்

நீ ஆறு
நான் விவசாய
நிலத்தின் சேறு

உன்னிடம் இருந்து
எப்போது வரும்
காதல் எனும் நீரு
இந்த
ஏழைக்குக்
கிடைக்குமா சோறு

அன்பே நீ கூறு
எதையும் பேசாமல்
என் இதயத்தைப்
போடாதே கூறு

கடைக்கண்ணால்
ஒரு முறை பாரு
நீ மறுத்தால்
நடக்கும்
மூன்றாம் உலகப் போரு

நான் உன் உயிரின்
வேரு
இதை

மேலும்

கலக்கல் கவிதை தலைவா... சிறப்பான சொல்லாடல் அழகு... 22-May-2019 3:29 pm
புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2019 5:30 pm

நீ
நிலா
நான் உன்னைத்
தொட நினைக்கும்
ஆம்ஸ்ட்ராங்

நீ
முல்லை
நான் உனக்கு
தேரை வழங்கக்
காத்திருக்கும் பாரி

நீ
தேன்
உன்னச் சுற்றிப்
பார் ஈ

நீ
சந்தனம்
நான் உன்னை
கடத்தத் துடிக்கும்
வீரப்பன்

நீ
பார்வையால் அடிக்கிறாய்
ஏனென்றால்
உன் அப்பன்
வீர அப்பன்

நீ
தாமரை
நான் உன்னை
ஆள விரும்பும் மோடி

அதற்காக
நான் விற்கவும்
தயார் டீ

நீ
காஷ்மீர்
நான் உன்னுள்
ஊடுருவ நினைக்கும்
தீவிரவாதி

உன்னால்
எனக்குக் காதல் வியாதி

அன்பே
பக்கிஸ்தானாய்
எனக்கு அன்பைக்கொடு

தயவு செய்து
இந்தியாவாய்
என்னை அழித்துவிடாதே

மேலும்

நன்றி நண்பரே 11-Mar-2019 7:05 pm
எதிர் எதிர் சிந்தனையில் காதல் கவிதை செம்மை 04-Mar-2019 7:59 pm
புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) Nishazam மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2019 10:35 am

அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்

அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று

அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது

அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு

மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்

அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்

அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்

சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு

மேலும்

சிறப்பான வரிகள் 28-Jun-2020 1:35 pm
நன்றி 17-Jan-2019 9:02 pm
நன்றி 17-Jan-2019 9:02 pm
ஒவ்வொரு பத்தியையும் செதுக்கி இருக்கீங்க ... மாஸ் 17-Jan-2019 5:49 pm
புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2018 5:14 pm

அழகிய தீவின் மண்
பாரதியின் பண்
நாரதியின் கண்
அந்தி நேரத்து விண்
அக்ரகாரத்தில் செய்த பன்
ராமானுஜன் காணாத எண்
நெய்வேலியில் தயாரிக்காது
நெய்யில் தயாரித்த மின்
செப்பு கலக்காத பொன்
இவள் இவை அனைத்தும்
கலந்து செய்த பெண்

யானை பயிரை சேதப்படுத்தியது போல்
இவளின் முந்தானை
என் உயிரையல்லவா சேதப்படுத்துகிறது

மானை வீட்டில் வளர்க்கும்
குற்றத்திற்காக அவள் தந்தையை
கைது செய்யாத அரசைக்
கண்டிக்காமல் கண்ணடிக்கச்
சொல்கின்றது என் மனது

அவளிடம் மயிலைப்போல்
அழகைக்காட்ட என்னிடம் இல்லை தோகை
அந்த சோகத்தால் வந்தது சோகை

அவள் வீட்டில் மூலிகைச் செடிகூட
மல்லிகையைப் பூத்தது

அவளின் கூந்தல்
காதலன

மேலும்

Nandri nanbare 29-Dec-2018 2:02 pm
கவிதை படிக்கும்போதே கவிஞர் யாரென்று அடையாளம் காட்டிவிடுகிறது... வாழ்த்துக்கள் கவிஞர் புதுவை குமார் அவர்களே... அழகான காதல் வரிகள்... 29-Dec-2018 6:12 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2018 12:44 pm

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (107)

user photo

வீரா

சேலம்
தொங்கலை தொலைத்தவன்

தொங்கலை தொலைத்தவன்

நெட்டலக்குறிச்சி/ அரியலூ
user photo

panneer karky

பாண்டிச்சேரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (108)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (107)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஹஸீனா அப்துல்

ஹஸீனா அப்துல்

தென்காசி
தீனா

தீனா

மதுரை
மேலே