ப செந்தில்பிரபு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ப செந்தில்பிரபு |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 24-May-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 2391 |
புள்ளி | : 120 |
எனக்குள் ஒரு கவிஞன்
ஏமாளிக்கு ஏமாற்றம்
ஒன்று தான்
மாற்றம் இல்லாமல்.....
அவளுக்கு
தயாரானது மேடை
எனக்கோ பாடை
அவள் மணவறையில்
நானோ பிணவறையில்
மலர்கள்
இருவர் மீதும்
விழுந்தன
மாலை
இருவர் கழுத்திலும்
மேளம்
இருவருக்கும் முழங்கியது
கூட்டம்
இருவருக்கும் கூடியது
ஊர்வலம்
இருவருக்கும்
நடனம்
இருவர் முன்பும்
ஆடினார்கள்
அவள் முன்
தீப்பொறி தூண்டினார்கள்
என் முன்
பொறியை தூவினார்கள்
அவளுக்கு மகுடம்
ஏறியது
என் மண்குடம்
ஊறியது
கூறையோடு அவள்
தாரை யோடு நான்
அவள் காலில் மெட்டி
ஏறியது
என் தோளில் வரட்டி
ஏறியது
அவள் விளக்கு ஏற்றினால்
என்னையே விளக்காக ஏற்றினார்கள்
அவளின் அறையில்
மின் விளக்குகள் எரியவில்லை
நான் எரிந்து கொண்டு இரு
வியர்வைத் துளியையும்
கண்ணீர்த் துளியையும்
தனக்குள் வைத்துக் கொண்டு
தன் பிள்ளைகளுக்கு
பன்னீர்துளிகளை
தெளித்து வளர்ப்பவர் அப்பா...
====================
அறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்
செறிவுள்ள தாக்கிச் சிற.71
*
சிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி
வறட்சியில் வாடும் பொழுது.72
*
பொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்
தொழுமியற்கை நீக்கும் துயர்.73
*
துயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ
பயனுள்ள வற்றைப் படை.74
*
படைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்
துடைத்திடு வான்கொண்ட மாசு.75
*
மாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே
நாசங்கள் இல்லை நமக்கு.76
*
நமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை
அவமதித் தலில்லை அறம்.77
*
அறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே
மரமீ யுதிங்கு மகிழ்ந்து.78
*
மகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண
கனவு தூங்கும் நேரம்
ஒரு கவிதை எழுதிவைத்தேன்
அந்தக் கவிதை வரியைப் படிக்க
ஒரு காதல் தேவதை வந்தாள்
**
படித்துப் பார்த்த அவளோ அது
பிடித்துப் போன தென்றாள்
பிடித்துப் போன தாலே கைப்
பிடித்துக் கூடிச் சென்றாள்
கூட்டிச் சென்ற அவளோ நெஞ்சக்
கூட்டி லடைத்து வைத்தாள்
கூட்டி லடைந்த கவிதை என்
கோவில் தெய்வம் என்றாள்
**
தெய்வ மான கவிதை ஒரு
தேரில் ஏறக் கண்டேன்
தேரில் ஏறி நின்ற அதன்
திருவிழாவும் கண்டேன்
கண்ட காட்சி சொல்ல நான்
கனவை எழுப்பிப் பார்த்தேன்
கனவும் தூக்கம் கலைந்து அதை
கனவு காண கண்டேன்.
**
*சும்மா ஒரு பாடல்போல..
கண்டிப்பாக இது தான் என்னுடைய கடைசி ஜென்மாமாய் இருக்கும் போல..
முற்பிறவி குற்றங்கள் எல்லாவற்றிக்கும் சேர்த்து கூட தண்டணை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஜென்மத்தில்...
மெல்ல நகர்கிறது
என் வாழ்க்கை
மரணமே உன்னை நோக்கி..
காந்தம் போல் இழுத்து கொள்கிறாய்
சில சமயங்களில் விலக்கியும் விடுகிறாய்
எந்தன் பிறவி பயன் முடிந்து விட்டதோ இல்லையோ
என் இலக்குகள் பல இன்னும் துவங்க கூட இல்லை..
தைரியம் கொடு
தற்கொலைக்கு அல்ல இயற்கை மரணித்தகிற்கு
ஆசையாய் நெருங்குவதலோ என்னவோ என் கனவுகள் நிராசை ஆகி விடுகிறது
முயற்சிக்கிறேன் தோல்வி முந்திக் கொள்கிறது
அடுத்த வாய்ப்பு கிட்டவில்லை மீண்டும் முயற்சி செய்ய
அயற்சிகள் ஒருபுறம்
பயிற்சியாளர்கள் மறுபுறம்
என்ன செய்ய
வழி கேட்டேன் வலி கொடுத்தாய்
பழி போட முடியும்
இழிவு என்று விட்டேன்
அழிவு ஆரம்பித்தது
மரணமே உ
சொர்க்கத்தில் நிச்சயித்து
இருந்தும் கூட
இரு மனம் இணைய
தரகர் மனம் திறக்கவில்லை
கமிஷன் கட்டுப்படியாகததால்
தென்னையின் கீற்றுகள்
அடக்கி ஒடுக்கப்பட்டு
தலை சாய்க்கபட்டது
மின்கம்பம் தலை நிமிர
பல மனிதர்களும் அப்படித்தான்...
தென்னையின் கீற்றுகள்
அடக்கி ஒடுக்கப்பட்டு
தலை சாய்க்கபட்டது
மின்கம்பம் தலை நிமிர
பல மனிதர்களும் அப்படித்தான்...
நிலத்தை உழுது
விதை விதைத்து
நீர் பாய்ச்சி களை எடுத்து
உரம் இட்டு
விளைந்ததை
அறுவடை செய்து
லாபம் நஷ்டம் எது என்றாலும்
தை திருநாளை கொண்டாடுகிறோம்
தாய் போன்ற நிலத்திற்கு நன்றி கடனாக ...
படையல் இடுகிறோம்
உழைப்பின் களைப்போ மூடுபனியின் விறைப்போ
கதிரவன்
துள்ளி எழுந்து வர
படையல் இடுகிறோம்
எங்களின் உயிர் நாடியான
கால்நடைகளை குளிப்பாட்டி
வண்ணங்களை
வானவில்லாக மாலையிட்டு
கரும்பு மாவிலை தோரணம் கட்டி
அதன் இடத்தில் பொங்கலிட்டு
அன்னம் இட்டு
தமிழ்ப் பாரம்பரியம் போற்றி
எங்கள் கடவுளே உன்னை வணங்குகிறோம் தை திருநாளில்..
சந்தோஷம்
என்ன தோஷம் என்று
தெரியவில்லை
என் வாழ்வில் கிட்டவில்லை இன்றுவரை
எத்தனை பெயர்ச்சிகள்
வந்தாலும்
தோஷம் மட்டும் விலகுவது இல்லை.