தங்கதுரை - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தங்கதுரை |
இடம் | : பாசார் , ரிஷிவந்தியம் |
பிறந்த தேதி | : 20-Jul-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 731 |
புள்ளி | : 211 |
மேகக்கூட்டங்களின் இடையில் நகர்ந்து தெரிந்தும் தெரியாமலும் தோன்றும் வளர்பிறை நிலவாய் வாழ்வின் பிரகாசம்,,,,, முடிவில்லாது முடிவில் தேய்பிறையாய் முடிந்தே விடுகிறது வாழ்வும்,,,,, ! இடைப்பட்ட நாட்களும் ஏனெதற்கு என்றே தெரியாத கோபத்துடனும், மிக அதிக அன்புடனும், சில பல பிரிவுகளுடனும் , வீண் விவாதங்களிலும் கழிந்து ஓடி விடும். கண்களில் தெரியும் பரிதவிப்பும், அன்பின் ஏக்கமும் முழுதாய் புரியாது முற்றாய் பழகிய நட்புள்ளம்! முழுதும் வெளிப்படாமல் இவன் இப்படித்தான், இனி இவ்வளவு தான் இவன், இவனிடம் ஒன்றும் இல்லை என்ற பரிகசிப்பும் , இளக்கார பேச்சுகளும், பாவமான பார்வைகளும், கண்ணீரின் வெளிப்பாடுகளும் , கணநேர சுற்றம் மறத்தலும் , உலகம் மறத்தலும் , யாவும் அற்ற வெட்ட வெளியில் கண்ணீர் விட்டு கதறி அழும் ஓர் அனாதையாய் என் உணர்வுகள்,,,,
கண்ணீரும் மறந்து, கனவுகளும் வெறுத்து, அன்பும் இழந்து ஒன்றுமற்ற ஜடமாய் எலும்பும் சதையும் சேர்ந்த ஓர் உயிராய் நான்,,,,!
வாழும் வாழ்க்கை
கனவு தான் போல
சிரித்து பார்த்தாலும்
முடிவில்
உப்பு கரிக்கிறது
கண்ணீர்,,,,,!
--------------------------
பிறப்பு
இறப்பு
நடுவில்
வாழ்க்கை
வாழ்ந்து விடுகிறது
கனவு,,,!
-------------------------
நம்பிக்கை
கண்ணுக்கு தெரியும்
கானல் நீர் போல
முடிவில்
ஏமாற்றம் தான்
மிச்சம்,,,,!
----------------------------
மனிதன் படைத்த
ஒன்று
மனிதனை ஆள்கிறது
பணம்,,,!
-----------------------
அன்பு மகனே...
உன் பால்பற்களால் நீ தினம்
கடித்து வைக்கும் தக்காளிபழம்... நம் வீட்டு சமையல் அறையில்...
ரசமாகவும் சாம்பாராகவும் தினம் கொதிக்கிறது... உன் அன்னையும் தாத்தா பாட்டியும்... உன் எச்சில் ருசியை ருசிக்கிறார்கள்... தினம் சுவையான சமையல் என்று... உன் பால்பற்களால் கடிபட முடியாத தந்தை நான்... இனிப்பு டப்பாவில் கூட எனக்கு பிடித்த இனிப்புகளையே... நீயும் தேடி தேடி
ருசிக்கிறாயாம் என் செல்லமே... இரண்டு பற்கள் நான்காகி எட்டாகி நிற்கிறது... உன் பால்பற்களால் உன் தந்தை கன்னத்தை எப்போது பதம்பார்ப்பாய்... எனக்கு
பப்பாளி பிடிப்பதில்லை... நேற்று நீயும் பப்பாளி ருசிக்கவில்லை... தன்னை மறந்து நீ தூங்கும
அன்பு மகனே...
உன் பால்பற்களால் நீ தினம்
கடித்து வைக்கும் தக்காளிபழம்... நம் வீட்டு சமையல் அறையில்...
ரசமாகவும் சாம்பாராகவும் தினம் கொதிக்கிறது... உன் அன்னையும் தாத்தா பாட்டியும்... உன் எச்சில் ருசியை ருசிக்கிறார்கள்... தினம் சுவையான சமையல் என்று... உன் பால்பற்களால் கடிபட முடியாத தந்தை நான்... இனிப்பு டப்பாவில் கூட எனக்கு பிடித்த இனிப்புகளையே... நீயும் தேடி தேடி
ருசிக்கிறாயாம் என் செல்லமே... இரண்டு பற்கள் நான்காகி எட்டாகி நிற்கிறது... உன் பால்பற்களால் உன் தந்தை கன்னத்தை எப்போது பதம்பார்ப்பாய்... எனக்கு
பப்பாளி பிடிப்பதில்லை... நேற்று நீயும் பப்பாளி ருசிக்கவில்லை... தன்னை மறந்து நீ தூங்கும
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
வளர்பிறை மட்டும் தான்
எந்தன் நிலவுக்கு,,,,
நாளுக்கு நாள்
வளர்கிறது
காதல் நிலா,,,,,!
கவிதை வரிகள்
தோன்றவில்லை,,,, மாறாக
காதல் வரிகள்
உதிக்கிறது
இதய தோட்டத்தில்,,,
லப் டப் ஓசை
குறைந்து
திருமண ஓசை
கேட்கிறது
இதய கூட்டில்,,,,
சூரியன் உதிக்க
வெள்ளி முளைக்க
மாலை மயங்க
நிலவும் ஒளிர
காலம் கடக்க
நாளும் முடிய
கண்கள் பணிக்கிறது,,
நீ வரும்
வழியெல்லாம்
அடைபடுவதை பார்த்து,,,!
வளர்பிறை மட்டும் தான்
எந்தன் நிலவுக்கு,,,,
நாளுக்கு நாள்
வளர்கிறது
காதல் நிலா,,,,,!
கவிதை வரிகள்
தோன்றவில்லை,,,, மாறாக
காதல் வரிகள்
உதிக்கிறது
இதய தோட்டத்தில்,,,
லப் டப் ஓசை
குறைந்து
திருமண ஓசை
கேட்கிறது
இதய கூட்டில்,,,,
சூரியன் உதிக்க
வெள்ளி முளைக்க
மாலை மயங்க
நிலவும் ஒளிர
காலம் கடக்க
நாளும் முடிய
கண்கள் பணிக்கிறது,,
நீ வரும்
வழியெல்லாம்
அடைபடுவதை பார்த்து,,,!
பிரபஞ்சம் அறியா
பிஞ்சுக்குழந்தையின்
பிறப்புறுப்பையே
பிழிந்து புசிப்பவர்களின்
பிறப்புறுப்பில் தூக்கிலிடுங்கள்
பால் வாடையே
மறையா அவளிடம்
பாலியல் பேசும்
பாவிகள் நாக்குகளை நடுச்சந்தியில்
நறுக்கியெறியுங்கள்
உடைகளைத்தாண்டி
ஊடுருவும் ஊளைப்பார்வை கண்டால்
உயிர் நாடியின் நரம்புகள் உருகிட நெருப்பு வையுங்கள்
விலகி நில்லுங்கள்
அணைக்கும் கைகளில்
அமிலம் கசியக்கூடும்
அய்யோ!
எவரேனும் என்னை
கௌதமனாக சபியுங்களேன்..!
உயிரானவளே...
உன் விழிகளை பார்த்து
என் காதலை சொல்ல ஆசைதான்...
ஆசைகளும் வாய்ப்புகளும்
எனக்கு ஆயிரம் இருந்தும்...
சொல்லாமலே நான்
தவிக்கிறேனடி சுகமாக...
உன் விரல் பிடித்து காதல்
வலம்வர ஆசை இல்லையடி...
உன் பார்வை படும்
தூரத்தில் நின்று கொண்டு...
காதல் செய்ய
ஆசையடி கண்ணே...
நான் சொல்லி நீ
மறுத்துவிட்டாள்...
அந்த நிமிடம் முதல்...
உன் பார்வை என்மேல்
படாமல் போய்விடுமடி...
சொல்லாத காதல்
எனக்குள் சுகமாக.....
எதிர்பாரா தருணத்தில்
எதிர்பட்டாள்
மங்கையவள்,,,,,,
கண்கள் மோதிய
சிறு இடைவெளியில்
சிறகிழந்த
மனதுக்கு
காதல் சிறகு
முளைத்தது,,,,
நீண்ட கால
தண்டனை காலம்
முடிந்தது என்று
மனம்
கொக்கரித்தது,,,,,
சில பல
சந்திப்பில்
காதல்
உறுதியானது,,,,
காலை நேர
இளம் தென்றலாய்
காலங்கள்
கடந்தோட
செல்ல சண்டைகள்
ஊடல் பொழுதுகள்
சின்ன பிரிவுகள்
காதல் பறவையாய்
சுற்றி திரிந்த
சோலைகள்,,,,,
இழந்த
அனைத்தும்
கிடைத்த
மகிழ்ச்சியில்
இன்புற்று
கிடந்தது
காதல் மனம்,,,,
சிறு இடைவெளியில்
காலம் விளையாட
எழுதப்பட்ட
ஒன்றாய்
என் காதல்
மீண்டும்
த
எதிர்பாரா தருணத்தில்
எதிர்பட்டாள்
மங்கையவள்,,,,,,
கண்கள் மோதிய
சிறு இடைவெளியில்
சிறகிழந்த
மனதுக்கு
காதல் சிறகு
முளைத்தது,,,,
நீண்ட கால
தண்டனை காலம்
முடிந்தது என்று
மனம்
கொக்கரித்தது,,,,,
சில பல
சந்திப்பில்
காதல்
உறுதியானது,,,,
காலை நேர
இளம் தென்றலாய்
காலங்கள்
கடந்தோட
செல்ல சண்டைகள்
ஊடல் பொழுதுகள்
சின்ன பிரிவுகள்
காதல் பறவையாய்
சுற்றி திரிந்த
சோலைகள்,,,,,
இழந்த
அனைத்தும்
கிடைத்த
மகிழ்ச்சியில்
இன்புற்று
கிடந்தது
காதல் மனம்,,,,
சிறு இடைவெளியில்
காலம் விளையாட
எழுதப்பட்ட
ஒன்றாய்
என் காதல்
மீண்டும்
த
உன்னோடு
கைகோர்த்து
ஓர்
நீண்ட
நடைபயணம் ,,,,,,
இடறிவிட்டது
நிஜம் ,,,,!
----------------------------
ஓரவிழி
பார்வையால்
என் இதயம்
பறித்து
சென்றவள் ,,,
ஓர வஞ்சனை செய்கிறாள்
அவள் இதயத்தை தராமல் ,,,,
----------------------------
உன்னோடு
கைகோர்த்து
ஓர்
நீண்ட
நடைபயணம் ,,,,,,
இடறிவிட்டது
நிஜம் ,,,,!
----------------------------
ஓரவிழி
பார்வையால்
என் இதயம்
பறித்து
சென்றவள் ,,,
ஓர வஞ்சனை செய்கிறாள்
அவள் இதயத்தை தராமல் ,,,,
----------------------------