ஒரு தாயின் மகிழ்ச்சி

அன்று நீ என் வயிற்றில்
சிசுவாய் உலாவிவந்தாய்
சிலபோது மகிழ்ச்சி பொங்க
உன் வளரும் சிறு கால்களால்
உதைத்தாய் அதில் நான்
பேரின்பம் கண்டேன் ,அந்த
அதே பேரின்பத்தை இன்று
நான் என்னுள் உணர்ந்தேனடி
பெண்ணே எந்தன் ஆருயிர் மகளே
நீ வளர்ந்து ஆளாகி உந்தன்
நன்நடத்தை ஆற்றல் சாதனைகள்
அனைத்தும் கண்டு மகிழ்ந்த நான்
இன்று நீ மணம் முடிந்தபின்
மருமகளாய் புகுந்த வீட்டிற்கு
புகளைத்தேடி தர செல்கின்றாயே
அதைப் பார்த்து மகிழ்ந்து
உன் பிரிவில் வலி இருந்தாலும்
மகளே அதில் இன்பம் சேர்த்தாய் நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Mar-19, 1:18 pm)
பார்வை : 210

மேலே