ரிதன்யா
ரிதன்யா !
—
சிறை மீண்ட பின்னும்
சீதைக்குத் தீக்குழி !
துகிலுரிந்த பின்னும்
துரௌபதிக்கு வனவாசம் !
இன்னும் ஐநூறு கோடி
ஆண்டுகள் கடந்தாலும்
ரிதன்யாக்களுக்குத்
தற்கொலையே
தாரக மந்திரம் - இது
மானுடத்தின்
மகத்தான அவமானம் !!
-யாதுமறியான் .