நான்மகிழ்ந்தேன் நெஞ்சினிக்க நன்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சென்றுவந்தேன் இன்றுநான் செந்தமிழ்க் கல்லூரி;
நன்றெனவே பேசிவந்தேன் நற்குண - இன்னமுதத்
தேன்தமிழ் கற்கின்ற தெய்வமெனப் பிள்ளைகளை;
நான்மகிழ்ந்தேன் நெஞ்சினிக்க நன்று!
- வ.க.கன்னியப்பன்