கவிதைக்காரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிதைக்காரன் |
இடம் | : namakkal |
பிறந்த தேதி | : 07-Mar-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jan-2020 |
பார்த்தவர்கள் | : 660 |
புள்ளி | : 213 |
சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.
என் பெயர் தினேஷ்
தொடர்புக்கு
6382052366
அவளைப் பார்த்த
அந்த கணமே...
ஏதோ நடக்கப்போகிறதென
மனசு பயந்தது
அல்லது மகிழ்ந்தது…
அவன் தந்த பார்வையே
கண்ணில்
களிப்பாகிப் போனது,
மனதில்
மலையாகிப் போனது,
நெஞ்சில்
நிலையாகிப் போனது,
உணர்வில்
உயிராகிப் போனது.
அவள் மொழியில்
மழை கிளியாய்
பேசினாள்,
ஒரு புன்னகையில்
மனதை புத்திகமாய்
மடித்தாள்
இதழில்
நான் பேச,
அவள் பேசாமல்
போனாள்.
அமைதி கூட
அன்புதான்
என்றாள்.
மவுனம் கூட
மயக்கத்தான்
சொன்னாள்.
சில சொற்கள்
சின்னதாகத் தோன்றினாலும்,
அதில் ஒளிந்தது
பகிழ்வான மகிழ்வு.
“நண்பா”
என்றழைத்ததாள்
நெஞ்சம் தடுமாறிப் போனது,
கொஞ்சம் தடம் மாறிப் போனது
அவளுடன் பேசுவது
முழு நாளின்
யாருக்கு வேண்டுமானாலும்,சொந்தமாகிப் போ...எனக்குள் மூட்டியதீயை அணைத்து விடாமல்.நீ மூட்டிய தீயில்,நான்இளைத்துசிறுத்துகருகிவெந்துகாணாமல் போகிறபோது,யாராவதுஎன் ஒருபிடி சாம்பலைஉன்னிடம் தந்தால்,போனால் போகிறதென,சுட்டு விரல் தொட்டு,உன் அழகிய நெற்றியில்மெல்லிய கீற்றாக்கினால்....சந்தோஷிப்பேன்,வாழ்ந்து விட்டேன்என்று.✍️கவிதைக்காரன்வீடியோ வடிவில் பார்க்க 👇
https://youtu.be/ONBXrG1YMfY
.
.
.
சில நேரங்களில்
சிரிக்கிறாய்...
பல நேரங்களில்
முறைக்கிறாய்...
ஆனால்,
என் மனதில்
எப்போதும்
நேசம் மட்டும் தான்.
அன்பின் கனவாய்
நான் தொடர்ந்தேன்,
அழகின் கனவாய்
நீ வந்தாய்...
அமைதியான பார்வையில்
அடிமனதைத் திறந்தாய்...
மலரும் தருணத்தில்
முகம் தர மறுக்கிறாய்,
காதலின் உண்மையை
மௌனத்தில் மறைக்கிறாய்...
நாம் பேசும் மொழி மாறி,
நான் தவிக்கும் நாட்கள் நீள,
நீ ஒரு கொடிய
பார்வை பார்த்து,
நான் அதைப்பார்த்து,
மனதுக்குள் மலைத்து நிற்கிறேன்...
தூரத்தில் நின்றாலும்
உன் நிழலை
நான் தொட்டுப் வைக்கிறேன்,
சென்ற பாதையில்
ஒரு நினைவை
நீ விட்டு வைக்கிறாய்..
நாளைக்கு வருவாயா,
நான் மட
ஒரு புள்ளி விவரம்,
புதிதாய் இருந்தது,
காதலித்து ஏமாற்றும்
பெண்களின் எண்ணிக்கை
குறைந்திருக்கிறதாம்..
வாழ்க்கையில்
நல்லது நடக்க
எல்லா வாய்ப்புகளும்
இருந்தாலும்
எதுவும்
நடப்பதில்லை
கெட்டது நடக்க
எந்த வாய்ப்பும்
இல்லாவிட்டாலும்
ஏதாவது
நடந்தே தீரும்...
முதல் வரியில்
வந்த புள்ளி விவரம்
எனக்கு
கை கொடுக்கவில்லை.
சரி...
போனா போவுது,
நானும் உன்னை
காதலிக்கிறேன்
என்று அவள்
சொன்ன போது,
எனக்குத் தோன்றியது.
"ஹை ஜாலி"
அடுத்த வாரமே,
எனக்கு
சிங்கப்பூர் ல
வேலை கிடைச்சிருக்கு
என்று அவள்
எனக்கு மட்டும்
சொல்லவில்லை.
சொல்லாத போதும்,
எனக்குத் தெரிந்து விட்டது,
"ஐயோ,
முடிந்தது ஜோலி..."
அவள் போன பிறகு,
சிறு புன்னக
அப்பா...
@@@@
என்ண்டா கண்ணு?
@@@@
தொலைக்காட்சி செய்தில அடிக்கடி
பாலியல், பாலியல்னு சொல்லறாங்களே,
ஏம்ப்பா? பால் குடிக்கிறதைப் பாலியல்னு
சொல்லறாங்களா?
@@@@@@
ஆமாண்டா கண்ணு பாலைத் திருடிக்
குடிக்கறவங்களைத் தான் பாலியல்
குற்றவாளின்னு சொல்லறாங்க.
@@@£
ஓ..... அப்பிடியா
@@@@@@@
நம்ம வீட்டில் நீங்க எப்பவாவது பாலியல்
குற்றம் செஞ்சீங்களா அப்பா?
@@@@@@@
அம்மாவத்தாண்டா கேட்கணும். எனக்கு
நினைவில்லை.
செக்மேட்
**********
வெகு நாட்களாக
எனக்குத் தெரியாது,
நம் ராஜா,
தப்பிக்க வழியின்றி
எதிரிகளிடம்
சரணடையும் நிலைதான்
செக்மேட் (checkmate)
என்பது...
நான் கல்லூரி பேராசிரியர்,
எனவே,
என்தோழி,
என்னை
புரஃபெசர்
என்றழைப்பாள்,
செல்லமாக
அல்லது
நக்கலாக...
அன்று
எங்களுக்குள்
சண்டை...
(அன்று மட்டும் தானா..)
இவளுக்கு செக் வைக்கனும்
என்று
நினைத்துக் கொண்டேன்.
ஈகோதான்,
இருந்தாலும்
இப்படி சொன்னேன்,
"இனிமே
நீயே கால் பண்றவரைக்கும்
நான் உன்கிட்ட பேசமாட்டேன்..."
"புரஃபெசர்...
என்கிட்ட
சவால் விடாதீங்க..
தோத்துருவீங்க..."
என்று சொன்னாள்
அல்லது
மிரட்டினாள்.
எத்
அன்பு செய்யுங்கள்...
*****
சில சமயங்களில்
தவறு செய்வோம்...
பல சமயங்களில்
அப்படி நினைத்துக் கொள்ளப்படுவோம்...
இரண்டு நாட்களுக்கு முன்பு
எங்கள் நண்பர்களுக்குள்
சிறிய அல்லது பெரிய சண்டை.
நான் உண்மையில்
தவறு செய்தேனா...
இல்லை,
அப்படி நினைத்துக் கொள்ளப்பட்டேனா...
தெரியவில்லை.
எனக்கு
ஒன்று மட்டும் தெரிந்தது...
சண்டைகள்
என்பவை
எதிர்கால இழப்புகள்...
இந்த சண்டையிலும்
எனக்கு தெரிந்தது,
நான் இழக்கப் போகிறேன்
அல்லது
நீ இழக்கப் போகிறாய்...
அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக
அப்படியெல்லாம்
எதுவும் நடக்கவில்லை...
வருத்தம் தெரிவித்தது
ஒர் உயிர், மறுநாள்..
மருந்துக்கும்
உண்மைக்கும்
ஒரே சுவைதான்...
அது கசப்பு...
நாம்
நினைத்துக் கொள்வதே
உண்மை
என்பது
மனித மனம்.
பார்கவி
நினைத்துக் கொண்டாள்,
அவளை எனக்கு
பிடிக்காதென.
அது தான்
உண்மை
என நம்பினாள்.
பேசவில்லை
என்னிடம்
ஏராள நாட்கள்...
திடீரென
ஒரு நாள்
இனிமே உன்கிட்ட
எப்பவுமே
பேசமாட்டேன், போ...
என்றாள்.
எத்தனையோ
சமாதானம்
சொன்னேன்...
அவள் கேட்கவில்லை.
பேச மாட்டேன்
என்பதை
பேசினாள்..
பேசினாள்...
பேசினாள்...
வெகு திடீரென
அவள்
முகம் நிமிர்த்தி,
சொன்னேன்
ஐ லவ் யூ..
அவள்
கோபப்படவும் இல்லை.
வெட்கப்படவும் இல்லை.
இத சொல்றதுக்கு
இவ்வளோ நாளா...?
என்