இஷான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இஷான்
இடம்:  இலங்கை (காத்தான்குடி-03)
பிறந்த தேதி :  29-Sep-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-May-2019
பார்த்தவர்கள்:  423
புள்ளி:  66

என்னைப் பற்றி...

கவிதையோடு உறவாட பிறந்தவன் நான்...❤

என் படைப்புகள்
இஷான் செய்திகள்
இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2020 7:05 pm

கன்னக்குழி களத்துல
கப்பல் கட்டி கடத்தையில
கச்சையா இழுக்குதடி
காட்டுக்குழிக் கள்ளி...

சிரிப்பு மடக்கையில
சிக்கல் தெரிகையில
சிலந்தி வலையில
சிறப்பா சிதறயில
சிலம்பாட்டம் ஆகுதடி
சின்ன நெல்லி...

அத்தி அழகுல
நிரப்பு குணத்துல
திறப்பா, விரிகையில
உறக்கம் உறுமுதடி
உப்பா கிள்ளி....

நீ நிமிர்த்தி பேசயில
நிதானம் நிலைக்கயில்ல
மனசும் படர்கையில கிடக்குதடி
பாவம் அந்தப் பல்லி..

மப்புக் குறும்புல
மடக்கென்னு சொடக்கு போடயில
மத்தது எல்லாம்
மல்லாக்காகுதடி பசப்பி...

கொள்ளி வைக்காம
கொஞ்சமா அள்ளி
உயிரோட புள்ளிய
நீ உருட்டையில
உத்தமம் உலறுதடி இதச் சொல்லி...

வெள்ளியென்னு கவி சொ

மேலும்

இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2020 3:51 pm

குடும்பத்தின் நாட்காட்டியை
புரட்டித் திரிந்த கால்கள்
காது கேட்காமல்
கட்டிலோரம் ஒதுங்கிக்
கொள்ளும்...

வலியின் வாய்கள்
வயிற்றை
மெல்ல மெல்ல
கடித்து உண்ண....
குட்டிப் பிரசவம் ஒன்று
பிதுங்க வைக்கும்...

இரத்தப் புழுதியோடு
கடக்கும் கணங்கள்
குளிரான குடத்தையும்
குறுகுறுக்க வைத்துவிடும்...

கீறி,கிளப்பும் உணர்வுகள்
கிரங்கவைத்து,
கிச்சிலாட்டத்தையும்
தொடரவைத்துவிடும்...

எரிச்சலும்,
கோபமும்,
கொத்துக் கணக்கில்
கொட்டப்பட்டுவிடும்...

சபைகளில்
சலசலப்பாக இருக்க
மனம் மடங்கின்
தொடராகக் கேள்வி கேட்கும்...

தேகத்தின் வேர்களில்
உறங்கும் அன்பின் தாகங்கள்
முகக் கண்ணாடியில்
வெ

மேலும்

இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2020 7:39 pm

ஓங்கும் என்ணங்களுக்கு
பாங்கு ஒளிக்கவில்லை என்றால்
தூங்கும் கருக்களுக்கு
தும்பிக்கை முளைக்காது...

ஓடும் சொற்களுக்கு
சிந்தனைகள் பாசியாகாவிட்டால்
கவியின் துடிப்பும்
கூறான உயிர்ப்பாகாது...

தட்டும் நவீனங்களுக்கு
குத்த கொம்பு இல்லை என்றால்
சிட்டு வாசகனுக்கும்
பட்டு படறாது...

வரையும் மொழிநடையின்
கட்டான மொட்டுக்குள்
புதுமை சொட்டாமல் விட்டால்
காலமும் கணக்கெடுக்காது...

வற்றாமல் கவி பாட
உணர்வுகளை வட்டியாக்கிவிடு
குன்றாத கவிஞன்
உனக்குள் என்றும் குந்தி இருப்பான்...(இஷான்)

மேலும்

இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2020 9:01 pm

கோடிகள நீ
கொக்கரிக்க விட்டாலும்
எங்களோட தன்மானம்
தரைக்கி இறங்கிடாதுயா...

நிலம் வச்சிருக்கிறோம்
நிம்மதியா விவசாயம் செஞ்சிடுவோம்
நிலைச்சி இருப்போம்
ஒன் நிழலயும் தொடமாட்டோம்யா...

தாய்ப்பாலால தழைச்சி
இருக்கிறோம்...
தமிழ் பண்பாட
விதைச்சி இருக்கிறோம்..
தாய்நாட்ட தலையா
தாங்கிடுவோம்
நீ பகச்சிடாம பறந்துடுயா...

மருத்துவம் சொல்லிக்
கொடுத்திருக்கிறோம்
மரபணுவுல வீரத்த
விளைச்சிருக்கிறோம்
மானரியக் கலையையும்
மனசோட புதச்சிவச்சிருக்கிறோம்
நீ நினப்புக் காட்டாம நீங்கிடுயா...

ஒரே இரைவன
ஒன்னா தொழுது
ஒற்றுமையா ஓடி
ஒழுக்கத்த நாடி
ஒரே கூடாகிடுவோம்
நீ கால் நீட்ட கனவுலயும்
நினைச்சிடா

மேலும்

இஷான் - சூரிய காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2020 10:38 pm

உடல்வலி இழந்தவன்
உறவுகள் தொலைத்தவன்

இறப்புக்கு அஞ்சி
இருக்க நினைப்பவன்

சுயத்தைக் கொன்று
கையேந்தும் தருணம்

உயிர் ஒளிந்துகொண்டு
உடலியங்கும் தருணம்

இ'ற'ப்புக்கு முன்
இ'ர'ப்பு மொழியில் வரலாம்
ஆனால்
வாழ்வின் வழியில் வரக்கூடாது

பிச்சை கேட்டால்
மனமிருந்தால் கொடுத்து விடுங்கள்
இல்லையெனில்
மரியாதையுடன் மறுத்துவிடுங்கள்

பதிலின்றி காக்க வைப்பது
இறந்தவனை மீண்டும்
கொல்வதாகும்

முதல் முறை
பிச்சை கேட்கும் போதே
அவன் இறந்து போயிருப்பான்

இறப்பவன் உடலினால் மட்டும்
தோற்றவன் அல்ல
உயிராலும் தோற்றவன்

பிச்சைக்காரர்களை
நாம் விரைவாக கடப்பதும்
கண்கள் நேருக்குநேர்
சந்தி

மேலும்

உங்கள் எண்ணத்திற்கு பாராட்டுக்கள் நண்பறே... 10-Apr-2020 3:45 am
இஷான் - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2020 1:21 pm

கவிதையும் தாய் தான்


கருத்துக்களையும்
கற்பனைகளையும்
கருவாய்
சுமப்பதனால்

மேலும்

அருமை 14-Mar-2020 1:59 pm
இஷான் - இஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2020 11:09 pm

பருவ முட்டையில்
ஆண் கோது உடைந்து
பெண்மை கரு மனதில்
குலுங்குவது எங்கள் குற்றமா?ஐயா!

வீட்டிற்கு வெளியே
எறிந்த காற்செருப்பாகி விட்டோம்...
சமூக ஊசிகள் குத்தி விளையாடும்
பொம்மைகளாகி விட்டோம்...

வயிற்றை நனைக்க
துளிகள் தேடி நாக்கு வெட்டப்பட்டோம்...
திசைகள் கூனி கருத்து நிற்க
சிவப்பு விளக்கிற்குள் வெளிச்சமாகிவிட்டோம்....

பச்சிளம் குழந்தை கண்ணீர்
கக்கினால் தாய்ப்பால் விருந்தாகும்...
சில வருடங்களே பிறந்த பச்சிளம்
உணர்வுகள் உண்மை மென்றால்
வாழ்வே ஊமை ஆகுது ஐயா!






ஏன் கண்களால் வேடிக்கை ஊதுகிறீர்
ஏன் செவிக்குள் சாய்ந்து கொள்கிறீர்
ஏன் இழிப்பால் சுடுகல் கொட்டுகிறீர்
நாங்

மேலும்

நன்றி உறவே.. 18-Feb-2020 11:48 pm
அருமை! 18-Feb-2020 3:52 pm
இஷான் - இஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2020 1:46 pm

தேநீரின் மடியில்
இரவு இசைக்கப்படுகிறது..
உறங்கும் உணர்வுகள்
கிள்ளி எழுப்பப்படுகிறது...

இஞ்சியின் இதழ்கள்
என்னை கொஞ்ச...
சுவாச பலகைகள்
துண்டு துண்டாக உடைகிறது...

புகைகள் எல்லாம் என்னில்
புன்னகை வாசமாக மேய..
நினைவின் பண்டங்களை
உள்ளம் உண்ண தயாராகிறது...

(ஆஹா... )
ஒவ்வொரு சொட்டும்
இரத்தத்தின் மயிர்களை வருடிவிட்டு
இயற்கையை சுழலவிட்டு
தாலாட்டி விடுகிறது....
(இஷான்)

மேலும்

தயவு செய்து பிழைகளை சுட்டிக் காட்டவும் நண்பரே என் கண்களுக்கு புலப்படவில்லை 09-Jan-2020 10:24 am
இஷான் ! கவித நல்லா இரிக்கி ,,ஒழுப்பம் எழுத்து பொழயயும் வெளிசாக்கி வெட்டை யாக்கி உடுங்க 08-Jan-2020 2:39 pm
இஷான் - இஷான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2019 1:17 pm

"கற்பனை காட்டிலே என் உள்ளம் தேடல் மரமாக கிடக்க
வேருக்கு நீர் ஊற்ற தயாராகிறது சிந்தனைகள்...."
"கற்பனை காட்டிலே அணிகளும்,மொழிவளங்களும்
புதைந்து கிடக்க
பிடுங்கி எடுத்து கொண்டு வந்து இதோ! நடுகிறது எண்ணங்கள்"
"கற்பனை காட்டிலே பழங்களாக பழுத்து குலுங்கும் ஓசைநயத்தையும்,இலக்கண வளத்தையும் பறித்து கொண்டு வருகிறது உணர்வுகள்"
"கற்பனை காட்டிலே சிரு கிளைகளாக வளர்ந்து கிடக்கும் பொய்களையும்,மெய்களையும் வெட்டி கொண்டு வந்து சேர்கிறது அனுபவங்கள்"
"கற்பனை காட்டிலே ஆழமரமாக வளர்ந்து
கிடக்கும் உலக நடப்பை அண்ணார்ந்து பார்த்து விட்டு நடக்கிறது அனுதாபங்கள்.."

மேலும்

நன்றி உறவே... 06-May-2019 3:43 pm
அடடா அழகு! கற்பனைக்காடு இன்னும் பறந்து விரியட்டும்! 06-May-2019 1:42 pm
இஷான் - இஷான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2019 11:57 am

"தீர்ந்து போன பொழுதுகளும்
தீராத நினைவுகளும்"
"தொலைந்து போன இரவுகளும்
வரண்டு போன காலங்களும்"
"மருகிப் போன எண்ணங்களும்
கனவாகிப் போன நிதர்சனங்களும்"
"உதடு பூமியில் போடும் நாடகமும்
வெளிவராத வார்த்தைகளும்"
ஆன்மாவை ஆட்டம் காட்டும் துன்பங்களும்
ஆன்மாவை நகர்த்திடும் இன்பங்களும்"
"கருக்கொள்ளாத வாழ்க்கையும் களைய துடிக்கும் உயிரும்..."

மேலும்

எல்லாமும் நகர்ந்து போகும்! 06-May-2019 1:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

Roshni Abi

Roshni Abi

SriLanka
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
Roshni Abi

Roshni Abi

SriLanka
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
Roshni Abi

Roshni Abi

SriLanka
மேலே