தான்ய ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தான்ய ஸ்ரீ
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Mar-2020
பார்த்தவர்கள்:  1116
புள்ளி:  70

என் படைப்புகள்
தான்ய ஸ்ரீ செய்திகள்
தான்ய ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2020 1:00 pm

வயிற்றை கிழிக்க காத்திருந்த
கத்திகளுக்கு வேலை வைக்காமல்
முட்டி மோதி
எட்டி உதைத்து
வெளிவந்த என் மகவே !
ஏன் இந்த அழுகை
காற்று புகா கருவறைக்குள்ளே
இத்தனை போராட்டம் என்றால் -இனி
இந்த உலகில் எத்தனையோ !
என்று எண்ணி எண்ணி அழுகிறாயோ..-இல்லை
என்னை பிரிந்த சோகமா..
இன்னும் ஆயிரம் ஆயிரம் கதை சொல்லலாம் இந்த அழுகைக்கு..
ஆனாலும்
இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.. .

பத்துமாதம் சுமந்து பத்திரமாய் நீ வந்ததும்
பத்துவிரல் சேர்த்து பக்குவமாய் உனை வாங்கி
பார்க்கும்போது நானும் பிறவி பயன்
அடைஞ்சேனே
வெயிலோடு மழை போல்
என் சிரிப்போடு கண்ணீர் கண்டேன்...
தாயென்ற பட்டம் தந்தாயே -என்
பெண்மையை முழுமை

மேலும்

தான்ய ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2020 3:24 pm

அவள் கண்ணுக்கு 👀
இமையாய் நானிருந்தேன்..

அதனால்தான் என்னவோ !

அவள் கண்ணுக்கு -நான். தெரியாமலே போய்விட்டேன்... 🗿

மேலும்

தான்ய ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2020 3:04 pm

அன்பே !!!!
நீ என்ன அனுமின் நிலையமா?
அனல்மின் நிலையமா?

உன்னைகாணும் போதெல்லாம்
எனக்குள் காதல் மின்சாரம்... 💓

மேலும்

தான்ய ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2020 10:39 am

பசி 👳‍♂️

பசி தீ மூட்டிய நெருப்பில்
பற்றி எரிகிறது
----வயிறு

மேலும்

ஹைகூவிற்கு தலைப்பு இல்லை அதன் இலக்கணம் அதுவே ஹைக்கூ இரண்டு வேறுபட்ட உருவகங்கள் நிறுத்தி இணைப்பது …… நேர்முகமாக அல்ல suggestive நல்ல கருத்து இப்போ ஹைக்கூ இதற்கு தாருங்கள் 31-Mar-2020 3:04 pm
தான்ய ஸ்ரீ - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2020 1:38 pm

கட்டழகு பெண்ணொருத்தி
இட்டு விட்டு போன கட்டளைகள் முன்னிறுத்தி....
கட்டவிழ்த்த காளையென கண்டபடி
சுற்றிரிந்தேன் ---இன்றோ
மொட்டவிழ்த்த மலரென மெல்ல மெல்ல மலருறேனே...... 🌷

கண்கள் பட்டு விடாதோ....
நெஞ்சம் கெட்டு விடாதோ...

எட்டா கனியென விட்டுவிட போவதில்லை.....
தொட்டு விடும் தூரம் தானே....
மனம் விட்டுவிட தோணவில்லை....

தறிகெட்டு திரியுற மனசு -அட
விம்மிகிட்டு கிடக்கு தினமும்.. .

காதலை சொல்லிப்புட்டு போயேண்டி....
குத்தாட்டம் போடும் வயசு....
கும்மாளம் போடும் மனசு....
இடம் மாறுது மனசு....
தடுமாறுது வயசு... .
எனக்கானவள் நீ தான்....
உனக்கானவன் நான் தான்....

மேலும்

தான்ய ஸ்ரீ - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2020 10:58 am

மனநிலை என்பது வானிலை போல......
நிலையான சூழ்நிலை ஏதுமில்லை....
இன்று என்பது நிலையில்லை...
நாளை என்பது நிஜமில்லை.....
கேளடி என் கண்மணி.....
காகிதப்பூவாய் மனம் காத்துலஆடுது.....
கொஞ்சம் கூச்சலும் போடுது......
வாழ்க்கை என்பது கானல் நீரோ........

மேலும்

தான்ய ஸ்ரீ - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2020 4:08 pm

தெரு முழுவதும் ஓவியம்



என்னவளின் பாதச்சுவடுகள்

மேலும்

தான்ய ஸ்ரீ - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2020 4:18 pm

.......மேகங்கள்....


மண்ணில் பசுமை புரட்சி ஏற்பட
விண்ணில் போர் நடத்தும்
புரட்சிக்காரர்கள்

மேகங்கள்....


போர் முரசு -இடி முழக்கம்

உயிர் கொடுக்கும் படைவீரர்கள் - மழைத்துளிகள்..

மேலும்

ஆணோடு மட்டுமல்ல தனக்கு இயற்கையோடும் காதல் பிறக்கும் என்பதற்கு இந்த கவி ஒரு சான்று . வளர்க மு. ஏழுமலை 11-Mar-2020 2:17 pm
தான்ய ஸ்ரீ - anitha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2020 10:23 am

நன்றன்று பிரித்து எழதுக

மேலும்

நன்றன்று= நன்று+ அன்று எவ்வாறெனின், நன்று என்ற நிலைமொழி ஈற்றேழுத்து று என்பது, இதனைப் பிரித்தால் ற்+ உ என்று பிரியும் இங்கு 'உ' என்பது உயிர் எழுத்து. வருமொழி முதல் எழுத்து 'அ 'என்பது இதுவும் உயிர் எழுத்தாகும். இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே "உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்" (அதாவது, வருமொழியில் உயிர் எழுத்து வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள 'உ' என்ற குறில் எழுத்து தன்னுடன் இணைன்துள்ள மெய்யெழுத்தை விட்டு மறையும். அந்த அடிப்படையில் 'உ' என்ற எழுத்து மறைந்த நிலையில், நன்ற்+அன்று என்று இருக்கும். அடுத்து "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி நிலைமொழி ஈற்று 'ற்' என்ற எழுதுடன் வருமொழி 'அ' சேர்ந்து ற்+அ=ற என்று ஆகியமையால் நன்றன்று என்று புணர்ந்துள்ளது. 23-Jan-2021 9:11 pm
நன்று +அன்று 09-Mar-2020 10:48 am
வணக்கம் எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்... எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்.... பதிவேற்றம் செய்த எண்ணங்களை நீக்க முடியவில்லை.... 100புள்ளி என்றால் என்ன அதை எப்படி பெறுவது.... கவிதை சமர்ப்பிப்பது எங்கே.... எழுது மேலே எங்க இருக்கிறது காணும் 09-Mar-2020 10:47 am
நன்று அன்று 07-Mar-2020 2:56 pm
தான்ய ஸ்ரீ - Hemadevi Mani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2020 7:19 am

நீ ஒரு விமானம் என்றால், நான் அதன் அடிதளமாக இருக்க விரும்புகிறேன்! நீ நெருப்பாக இருந்தால், நான் அதன் மெழுகுவர்த்தியாக இருக்க விரும்புகிறேன்! நீ என் வாழ்க்கையாக இருந்தால், நான் உன் உயிராக இருப்பேன்.💙

மேலும்

100புள்ளி என்றால் நாம் எழுதும் கவிதைகான புள்ளிகள் நண்பரே. உங்களின் இடது புறம் கீழே எழுது என்ற பிரிவுக்குகீழ் இருக்கிறது. கவிதை,எண்ணம், அனைத்தும் 09-Mar-2020 12:04 pm
வணக்கம் - Karikayal கருத்து எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்... எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்.... Karikayal சுய விவரம் - Karikayal கருத்து பதிவேற்றம் செய்த எண்ணங்களை நீக்க முடியவில்லை.... 100புள்ளி என்றால் என்ன அதை எப்படி பெறுவது.... கவிதை சமர்ப்பிப்பது எங்கே.... Karikayal சுய விவரம் - Karikayal கருத்து எழுது மேலே எங்க இருக்கிறது காணும் 09-Mar-2020 10:41 am
தான்ய ஸ்ரீ - முஹம்மது உதுமான் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2019 5:03 pm

கவிதை, கதைகளை எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்

மேலும்

எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்... எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்.... 09-Mar-2020 10:30 am
எழுது என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்து, அதற்குக் கீழே வரும் பிரிவுகளில் தாங்கள் எழுதப் போவது கதையா, கவிதையா போன்றவற்றை தேர்வு செய்து அதற்கான தலைப்பினை இடுகை செய்தபின் இறுதியில் அது எந்த பிரிவின் கீழ் வருகிறது (எ.டு. தமிழ் ) பின்னர் தங்கள் பெயர் வரவேண்டிய இடத்தில் பெயரைப் பதிவு செய்துவிட்டு, இறுதியாக நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டபின்னர் சமர்ப்பி என்பதனை பதிவுசெய்தால் தங்கள் கதையோ கவிதையோ பிரசுரிக்கப்படும். வெளியிட வாழ்த்துக்கள். 28-Nov-2019 8:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே