மு ஏழுமலை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு ஏழுமலை
இடம்:  திருக்கோவிலூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2019
பார்த்தவர்கள்:  505
புள்ளி:  95

என்னைப் பற்றி...

ஆங்கில ஆசிரியர். தற்போது துணை முதல்வராக ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிகிறேன்.. தமிழறி தமிழனே என்ற கவிதை நூல் வெளியிட்டு உள்ளேன் (2014 கவிதை எழுதுவதில் மிக ஆர்வம்.

என் படைப்புகள்
மு ஏழுமலை செய்திகள்
மு ஏழுமலை - எண்ணம் (public)
20-Apr-2024 2:20 pm

ஹைக்கூ கவிதைகள்  :  மழை; கோபம் கொண்ட அவளை கட்டியணைக்க நினைத்தேன் 
கொட்டி அழித்தாள் பெரும் வெள்ளமாய்

மணமில்லா மலரானாள் மனமிருந்தும் கைம்பெண்

நானும் நாயும் தெருவோரம் 
பட்டினியில் 

படித்துக்கொண்டும் ருசித்துக்கொண்டும் இருக்கிறேன் திகட்டவில்லை
இதழ்கள்.

பழுக்கா கனி 
சுதந்திரமும் 
உரிமையும் சேரிகளுக்கு மட்டும்.

சமத்துவம் உண்டு மகத்துவம் உண்டு சாதித்துவத்திற்கே முதலிடம்.


சேரியும் ஊரும் ஒன்றே 
பாகுபாடுமில்லை வேறுபாடுமில்லை
ஒட்டுச்சாவடி வரை.

கண்டிட ஏங்கினேன்
கண்முன் வந்தாய்
வறுமை போக்கும் மாயக்காரியோ


தீக்குச்சி எரித்தது குடிசையையும் குடும்பத்தையும்
சாதியை அல்ல!

ஆடை கட்டி  அழகாய் நெளிந்தாள் ஆசையைக் கூட்டினாள்  ஏங்கின  சாலையோர குழந்தைகள் ஆடையின்றி!

நிலவுக்கு சக்களத்தி
நின்னக்காலில் தெருவினில் 
மின்விளக்கு


மணம் சூடவில்லையே என்ற ஏக்கத்தில் முதிர்கன்னிகளாய்
சாலையோரப் பூக்கள்!

[4/16, 3:47 PM] eks msh: ஹைக்கூ : 
உன்னிடம் எதிர்ப்பார்க்கிறேன் காதலை அல்ல கருணையை 
பிச்சைக்காரன் 

உன் கோடை விழியில் பற்றியது தேகம் மட்டுமல்ல மோகமுந்தான்.

முதிரா  இரவானது 
என் வானம் 
முதிர்கன்னிகளை கண்ட முதல்

 தொட்டால் மலருமாம் பூக்கள் தொடவேயில்லை பூக்கின்றாய்..
ஓ... நீ தொட்டாஞ் சிணுங்கியோ

 


மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2020 2:47 pm

பிடிப்பது யார்..
கொரோனா யுத்தம்
அவளின் கண்களுக்கும் கரங்களுக்கும்
என்னை பிடிப்பது முதலில் யார்.

இவன் மு. ஏழுமலை

மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2020 3:00 pm

காதலனே. .
விழிகள் உருட்டி
வீழ்த்திவிட்டாய்
என்னை காதலால்
ஊடலில் உன் கோபமும்
கூடலில் உன் காமமும் கண்டேன்
அப்பப்பா. ..
கூடலில் ஊடுகின்றாய்
உச்சம் வரை
மிச்சம் வை நிச்சயம்
நாளையும் வேண்டும் .

இவன் மு. ஏழுமலை

மேலும்

மு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2020 3:00 pm

காதலனே. .
விழிகள் உருட்டி
வீழ்த்திவிட்டாய்
என்னை காதலால்
ஊடலில் உன் கோபமும்
கூடலில் உன் காமமும் கண்டேன்
அப்பப்பா. ..
கூடலில் ஊடுகின்றாய்
உச்சம் வரை
மிச்சம் வை நிச்சயம்
நாளையும் வேண்டும் .

இவன் மு. ஏழுமலை

மேலும்

மு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2020 2:47 pm

பிடிப்பது யார்..
கொரோனா யுத்தம்
அவளின் கண்களுக்கும் கரங்களுக்கும்
என்னை பிடிப்பது முதலில் யார்.

இவன் மு. ஏழுமலை

மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2020 12:33 pm

கொல்லும் கொரோனா ...
உகானில் உக்கிரம் கொண்டாய்
உயிர்வதை செய்து மகிழ்ந்தாய்
உலகையே ஆட்டிப்படைகின்றாய்
உன் கட்டுப்பாட்டுக்குள்
சாதிவெறி மனிதரைகளை போல்!
புதிது புதிதாய் வரும் நோய்களுக்கு
தினுசு தினுசாய் உடன் பெயர் சூட்டும்
என் ஆராச்சியாளர்கள்
திக்கற்று திகைக்கின்றனர்
தீர்க்கும் மருந்து காணமுடியாமல்
குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர்
இரக்கமின்றி
மக்களோ பரிதவிக்கின்றனர்
உறக்கமின்றி - ஈரேழு திங்களாய்
வாழமுடியவில்லை அச்சமின்றி !
அவசரகோலமாய் அரசின்
உத்திரவுகளும் அகிலவாழ் மக்கட்கு
தருகிறது பெரும் வேதனை
போர்களமாய் எங்கள் வாழ்க்கை !
நிம்மதி இழந்தோம்
நீள்துயில் மறந்தோம்

மேலும்

மு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2020 12:33 pm

கொல்லும் கொரோனா ...
உகானில் உக்கிரம் கொண்டாய்
உயிர்வதை செய்து மகிழ்ந்தாய்
உலகையே ஆட்டிப்படைகின்றாய்
உன் கட்டுப்பாட்டுக்குள்
சாதிவெறி மனிதரைகளை போல்!
புதிது புதிதாய் வரும் நோய்களுக்கு
தினுசு தினுசாய் உடன் பெயர் சூட்டும்
என் ஆராச்சியாளர்கள்
திக்கற்று திகைக்கின்றனர்
தீர்க்கும் மருந்து காணமுடியாமல்
குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர்
இரக்கமின்றி
மக்களோ பரிதவிக்கின்றனர்
உறக்கமின்றி - ஈரேழு திங்களாய்
வாழமுடியவில்லை அச்சமின்றி !
அவசரகோலமாய் அரசின்
உத்திரவுகளும் அகிலவாழ் மக்கட்கு
தருகிறது பெரும் வேதனை
போர்களமாய் எங்கள் வாழ்க்கை !
நிம்மதி இழந்தோம்
நீள்துயில் மறந்தோம்

மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2020 3:25 pm

தேவை இல்லை பாஷைகள் ..
இளவேனில் காலம்
இதமான நேரம்
இதழ் தரும் மகரந்தம்
எழுகிறதே பேரானந்தம்!
முத்துக்கள் சிரிப்பினிலே
மொட்டுக்கள் விரிப்பினிலே
மெட்டுக்கள் இசைத்திடவே
உள்ளத்தில் ஆசைகள் !
குளிரின் கம்பளியில்
குதூகலமாய் ஜோடி பூக்கள்
தலைகளை அசைத்து
தசைகளை பிணைத்து
தடைகளை உடைத்து
தாண்டவக்கூத்தாட்டம்
அது அழகின் களியாட்டம் !
சுரக்கின்ற அமுதுதனை
சுகமாக தான் ருசித்து
சுபராகம் படுகிறது
சொக்கிக்கிப்போன இதயங்கள்
மௌனக்குடை
மெல்லத்தான் விரிகிறது
மயக்கராகம் இசைக்கிறது !
துளிர்விட்ட மலராய்
துடிக்கிறது ஆசைகள்
மோகத்தில் பேசிடத்தான்
தேவையில்லை பாஷைகள்!
இவன் மு. ஏழுமல

மேலும்

மு ஏழுமலை - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2020 2:21 am

============================
கருவூலத்திலிருந்தபடியே
வாசற்படியை வெறிக்க வெறிக்கப்
பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள்.
ஒருத்தரையும் காணவில்லை.
**
முக்கால் பாகம் நிரம்பிய உண்டியல்.
அர்ச்சகர்கூட இல்லாத
அந்தக் கோயிலின்பக்கம்
திருடர்களும் வரத் தயங்குகிறார்கள்.
**
யாரும் தொடப் பயந்த
விபூதித் தட்டு நிரம்பியபடியே
இருக்கிறது.
**
கோயில் வளாகத்து
பூச்செடிகள் பறிக்க ஆளின்றி
இப்போதுதான்
முதற்தடவையாக மண்ணில்
விழுகின்றன.
**
நெடுநாள் ஓய்வெடுத்துக் கொள்ளும்
கோயில் மணி மௌனத்தால்
இப்போது கடவுளுக்கு நன்றி
சொல்கிறது.
**
வாகனத் தரிப்பிடம்
விளையாட்டு முடிந்த மைதானமாய்
பொழிவ

மேலும்

மிகக் நன்றி 19-Mar-2020 9:59 pm
எவரேனும் இடுகின்ற பணத்தின் வழியே பரவக்கூடும் என்ற அச்சத்தில் யாசகர்களும். ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கவிதை . சொல்லியவண்ணம் அருமை. வாழ்த்துகள் இவன். மு. ஏழுமலை . 17-Mar-2020 2:28 pm
மு ஏழுமலை - Mauriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2020 7:50 pm

என்னவனின் பார்வையில்

தோன்றிட

நித்தமும் விழித்திருந்தேன்

கனவென அறியாமல்.....!

மேலும்

நன்றி 14-Mar-2020 4:09 pm
ரத்தினசுருக்கம் உங்களின் இந்த கவிதை. அருமை . தொடர்க கனவினை தமிழ் செழிக்க . இவன் மு. ஏழுமலை 12-Mar-2020 2:31 pm
மு ஏழுமலை - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2020 4:18 pm

.......மேகங்கள்....


மண்ணில் பசுமை புரட்சி ஏற்பட
விண்ணில் போர் நடத்தும்
புரட்சிக்காரர்கள்

மேகங்கள்....


போர் முரசு -இடி முழக்கம்

உயிர் கொடுக்கும் படைவீரர்கள் - மழைத்துளிகள்..

மேலும்

ஆணோடு மட்டுமல்ல தனக்கு இயற்கையோடும் காதல் பிறக்கும் என்பதற்கு இந்த கவி ஒரு சான்று . வளர்க மு. ஏழுமலை 11-Mar-2020 2:17 pm
மு ஏழுமலை - Mauriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2020 5:39 pm

நெற்றி முத்தம்
நெடுந்தூர பயணம்
நெஞ்சோர உறக்கம்
இவையாவும் வேண்டும்
"உன்னோடு ஒரு நாள்"

மேலும்

மிக அழகான வரிகள் அருமை 👍 13-Mar-2020 4:17 pm
நெஞ்சமும் நெகிழ்ந்தது உங்களின் படைப்பில்❤ . வாழ்த்துக்கள்👏 , அழாகான வரிகள் 😇 11-Mar-2020 3:54 pm
குறுக தரித்த குரலாய் சுருங்க சொல்லிவிட்டீர் உமது எண்ணங்களை. வார்த்தை பயன்பாடு அருமை. வாழ்த்துகள் மு. ஏழுமலை 11-Mar-2020 2:12 pm
மேலும்...
கருத்துகள்

மேலே