தேவை இல்லை பாஷைகள்

தேவை இல்லை பாஷைகள் ..
இளவேனில் காலம்
இதமான நேரம்
இதழ் தரும் மகரந்தம்
எழுகிறதே பேரானந்தம்!
முத்துக்கள் சிரிப்பினிலே
மொட்டுக்கள் விரிப்பினிலே
மெட்டுக்கள் இசைத்திடவே
உள்ளத்தில் ஆசைகள் !
குளிரின் கம்பளியில்
குதூகலமாய் ஜோடி பூக்கள்
தலைகளை அசைத்து
தசைகளை பிணைத்து
தடைகளை உடைத்து
தாண்டவக்கூத்தாட்டம்
அது அழகின் களியாட்டம் !
சுரக்கின்ற அமுதுதனை
சுகமாக தான் ருசித்து
சுபராகம் படுகிறது
சொக்கிக்கிப்போன இதயங்கள்
மௌனக்குடை
மெல்லத்தான் விரிகிறது
மயக்கராகம் இசைக்கிறது !
துளிர்விட்ட மலராய்
துடிக்கிறது ஆசைகள்
மோகத்தில் பேசிடத்தான்
தேவையில்லை பாஷைகள்!
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (18-Mar-20, 3:25 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 206

மேலே