கொரோனா🤬👿

நீ எவனாக இருந்தால் எனக்கென்ன??
-------_-------_--------_---------_-------_-------_----------_

#கொரோனா👿 இந்த ஒற்றைச் சொல் ஏற்படுத்தும் மாற்றம் இன்று உலகில் ஏராளம் ஏராளம்...🌐

சீனாவில் பிறந்து 🈵
பாகுபாடு ஏதும் இன்றி
உலகம் முழுவதும் சுற்றி
கற்று தருகிறது பல பாடம்
நம் மனித குலத்திற்கு...🎎

ஏழை, பணக்காரன்...
உயர்ந்தவன் தாழ்ந்தவன்..
ஆன்மீகவாதி, நாத்திகவாதி..
ஏன்..!!!
மதம் இனம் கூட
பார்க்கவில்லை...🕋⛪⛩️🏛️

காற்றுக்கும், நீருக்கும், இயற்கைக்கும் கூட உரிமை கொண்டாடிய மனிதனை நான்கு சுவற்றுக்குள் முடங்கச் செய்துள்ளது..🧖

நான் நான் என்றும்👈
எனது எனது என்றும்👈
மார்தட்டிக் கொண்டிருந்தவர்களை-
#கொரோனா
அலட்டிக்கொள்ளாமல்
அலரடிக்கச்செய்கிறது...👍

பணமாவது ... பதவியாவது
மரணத்திற்கு முன் எல்லாம் சமம்
என நமக்கு மரணப் பயம் காட்டி புரியவைத்துக் கொண்டிருக்கிறது...👍

கோடி கோடி பணம் இருந்தும்,
நாட்டை ஆளும் பதவி இருந்தும், விண்ணை எட்டும் புகழ் இருந்தும்,
கண்ணுக்குத் தெரியாத இந்த கிருமியின் முன் நாம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறோம்..😷😤😱

பணமோ.. பதவியோ.. புகழோ.. என்றும் நம்மைக் காக்காது என இனியாவது உணர்வோமா??..😞😨

நடக்கும் வரை நல்லது செய்வோம்..🤝
இருக்கும் வரை அன்பைப்பகிர்வோம் இறக்கும் வரை பிறர் நலன்காப்போம்
இறப்பின் பின் இறவாமல் வாழ்வோம்.

நீ எவனாக இருந்தால் எனக்கு என்ன?? என மரணம் கேட்குமுன் 🙄
#விழித்துக்கொள்வோம்
நாம் யார் என உணர்ந்து அர்த்தமுள்ள வாழ்வைத் தொடங்குவோம்...✨

என்றும்... என்றென்றும்...
ஜீவன்💪💪

எழுதியவர் : ஜீவன்.. (18-Mar-20, 2:04 pm)
பார்வை : 289

மேலே