தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தாமோதரன்ஸ்ரீ |
இடம் | : கோயமுத்தூர் (சின்னியம்பா |
பிறந்த தேதி | : 07-Aug-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 4562 |
புள்ளி | : 946 |
என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்
1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது
2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.
3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்
நிறைந்து செல்லும் ஆற்றின் மாயதோற்றம்
கரையை தொட்டு
செல்லும் ஆறு
ஆடாமல் அசையாமல்
நிற்கிறதோ?
எனும் மாய தோற்றம்
உற்று பார்க்க
சிறு நகர்வாய் தெரிகிறது
தொட்டு பார்த்தும்
காலை உள்ளே
வைத்து பார்த்த
பின்புதான் தெரிகிறது
யானையை கூட
அசராமல் இழுத்து
சென்று விடும்
என்பது புரிகிறது
ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணங்கள்
எண்ணங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. அதிலும் மனித உயிர்களில், ஆணோ, பெண்ணோ, சிறியவர்களோ, பெரியவர்களோ, ஒவ்வொருவருக்கும் ஒரு மன நிலை அல்லது எண்ணங்கள் கொண்டதாக இருக்கிறது.
ஆனாலும் ஆச்சர்யம் பாருங்கள் லட்சக்கணக்கான மக்கள் வாழும் ஒரு நகரில் சமுதாயத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் ஒரே மாதிரியாக நடக்கின்றன. ஒரு சில நிகழ்வுகளை தவிர்த்து. ஒரு காரியத்தை பல வழிகளில் செய்ய நினைக்கும் மனித மனம் அல்லது எண்ணங்கள் எப்படி இந்த ஒற்றுமையை சாதிக்கின்றன?
இந்த கேள்விக்கு கிடைக்கும் பதில் கட்டுப்பாடு, அல்லது “கடுமையான சட்டம்” என்று சொல்லலாம். இந்த வார்த்த
அரசியலில் சினிமா
குறிப்புக்களை எடுத்துக்கொண்ட நூல்:
தலைப்பு: “மீதி வெள்ளித்திரையில்” கட்டுரை தொகுப்பு நூல் எழுதியவர் சு.தியோடர் பாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு.2009,
சுதந்திர போராட்டம் தீவிரமான நிலையில் இந்தியர்களுக்கு சுய உரிமை அளிக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டம் 1935 ம் ஆண்டு பொதுத் தேர்தலை கொண்டு வந்தது.
காங்கிரசை ஆதரித்து அன்றை கால கட்ட சினிமா தயாரிப்பாளர்கள் நடிகர்கள் பிரச்சாரம் செய்தனர். இவர்களில் நாகையாவும், சுந்தராம்பாளும் முக்கியமானவர்கள்
தமிழ்நாட்டில் திரைப்படத்தையும், நடிகர்களையும் தன் கொள்கைகளை பரப்பவும் மக்களின் ஆதரவை திரட
இரவு நேரம்
வானத்தில் இருந்து
குளத்துக்கு
குடிவந்த நிலா
இலவசமாய் வெளிச்சத்தை
நீருக்குள் காட்டி
கொண்டிருக்கிறது
அதுவரை இருளுக்குள்
ஒன்றை ஒன்று
உரசியும் உரசாமலும்
சென்று கொண்டிருந்த
மீன்களும் மற்றவைகளும்
இதை
வெளிச்சமான
உணவு என்று
நினைத்து
சுற்றி வந்து
சுவைக்க முயற்சி
செய்து கொண்டே இருந்தன
விலகிய இருளுக்கு
பின் குளத்து
நீரில் மறைந்து
விட்ட நிலவு
தாங்கள் சுவைத்தே
நிலவை தீர்த்து
விட்ட திருப்தியில்
அங்கும் இங்கும்
நகர்ந்து கொண்டே
இருந்தது அத்தனையும்
நெருப்பின் நடனம் மக்களின் கோபம்
பற்றி எரியும்
நெருப்பு
விசிறி விடும்
காற்று
ஆனந்த நடனமோ
இல்லை
ஆவேச நடனமோ?
பார்த்து கொண்டிருக்கும்
மனிதர்களின் முகங்களில்
பயம் பயம்
தள்ளி செல்ல
நினைக்கும்
எல்லாம் தொட்டு
அணைத்து பற்றி
நடனத்தை ஆடி
காட்டுகிறாள்
அவளின் ஆவேசம்
தணிக்க
சுற்றி சுற்றி
வீசும் தண்ணீர்
கடைசியில் அவளே
ஆடி களைத்து
அடங்கி போனாள்
அவள் காலடி வைத்து
ஆடிய இடமெல்லாம்
கருகிய மெருக்கு
வீசிய நாற்றம்
இழந்தைவைகளுக்காக
அழுகுரல் அழுகுரல்
மனிதர்களின் அழுகுரல்
எல்லாம் முடிந்து
தீர்ந்த பின்னால்
திடீரென பெய்த
பெரு மழை
மக்களின் கோபம்
ஆடிய நெருப்பின்
மீதல
உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !
நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !
நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !
ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !
உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !
நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !
நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !
ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !
வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை
நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை
புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை
திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை
மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண
ந
நிலவு ஏனோ இன்னும் வரவில்லை
சூரியன் வானத்தை
கை விட்டு
போய் விட்டான்
இருளின் பிடியில்
இறுக்கி இருக்கும்
இந்த பூமி
எதிர்பார்த்து காத்திருக்கிறது
நிலவின் வெளிச்சத்துக்கு
பூமிக்கு தெரியாது
கருமேகங்கள்
நிலவை சிறை
வைத்திருப்பதை
கதாநாயகனாய்
காற்று வந்து
காப்பாற்றுவான்
என்று காத்திருக்கிறது
இந்த நிலவும்
எங்கு போனாய் நண்பா !
நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே
==================================
அரவணைக்க அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..
வலிகள் சொல்ல வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..
சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..
வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..
ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..
உணவுக்காகப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...
இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?
சிந்திப்பீர் மானிடரே!
உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..
ஆதலால்..
வேண்டுகின்றோம் உங்களிடம்..
இ
நண்பர்கள் (12)

நா முரளிதரன்
Salem

மோ ஹெட்ரிக் லெவின்
திருப்பூர்

பூ சுப்ரமணியன்
பள்ளிக்கரணை , சென்னை

சு அப்துல் கரீம்
India
