தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தாமோதரன்ஸ்ரீ |
இடம் | : கோயமுத்தூர் (சின்னியம்பா |
பிறந்த தேதி | : 07-Aug-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 3855 |
புள்ளி | : 632 |
என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்
1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது
2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.
3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்
கணக்குல எழுதிக்குங்க..!
இந்த வார்த்தையை சோமேஸ்வர் மெஸ் முதலாளியிடம் இப்பொழுது எப்படி சொல்வது என்னும் மன குழப்பத்தில் இருக்கிறான் இராமன்.
ஒரு காலத்தில், காலம் என்ன காலம்? கொரோனோவுக்கு முன் என்று சொல்லலாம், மெஸ்சுக்கு வருவான் வேண்டியதை ஆர்டர் செய்வான், தினம் ஒரு அசைவம் தேவைப்படும். குறைந்த பட்சம் “ஆம்லெட்டாவது” வேண்டும். சாப்பிட்டு விட்டு முதலாளி மேசையின் மேல் வைத்திருக்கும் கணக்கு நோட்டில் எழுதி விட்டு கிளம்பி விடுவான். மாசம் பிறந்தால் யார் தவறுகிறார்களோ இல்லையோ இவன் எண்ணி பணத்தை மெஸ் முதலாளி கையில் கொடுத்து விடுவான். இதற்காக “ஸ்பெசல்” ஏதாவது ஒன்றை அவனுக்கு சாப்பிடும்போது கொடு
முதலாளி
என்னடா முதலாளி வந்துட்டாவளா? கிண்டலாய் கேட்டது போல் இருந்தது எனக்கு
இல்லீங்க, பயத்துடன் பதிலளித்தேன்
அந்த ஆளு எப்பவும் இப்படித்தான், சொன்ன நேரத்து வரோணும்னு நினைச்சதே இல்லை, தானும் உருப்படாம மத்தவனையும் உருப்படவிடமாட்டான் சத்தமாய் சலித்தபடி கல்லா பெட்டியில் போய் உட்கார்ந்தார் முதலாளி
என்னடா சல சலன்னு பாத்துட்டு, பாரு சாமான் கேட்டு நிக்கறாங்க பாரு விரசலா போட்டு அனுப்பு விரட்டினார்.
அதுவரை அவரையே பார்த்தபடி நின்றிருந்தவன் வேகமாக பொட்டலம் கட்டி கொடுக்கும் பையனுடன் போய் இணைந்து கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கடையில் கூட்டம் கலகலக்கும். முதலாளி என்று நக்கலாய் கூப்
யார் அந்த தாய்மார்கள்?
(கதையின் கரு மட்டும் “கார்த்திகா ராஜ்குமாரின் சிறு கதை ஒன்றில் எடுத்தது. ராஜராஜன் பதிப்பகம், சென்னை-7)
கிட்டத்தட்ட முப்பது, நாற்பது பேர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தோம். நல்ல அடர்ந்த காடு, எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை, நாங்கள் சென்று கொண்டிருந்த ஜீப்பை சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். ஒவ்வொருவரின் கையிலும் கருமை நிறத்துடன் நீண்ட குழாயை முனையாக நீட்டியபடி துப்பாக்கிகள் எங்கள் உருவங்களுக்கு நேராய் பிடிக்கப்பட்டிருந்தது.
எங்கள் பாதுகாப்புக்காக முன்னும் பின்னும் வந்து கொண்டிருந்த ஜீப்பில் இருந்த இராணுவ வீரர்கள் கண் மூடி திறப்பதற்குள் இவர்க
நிழல் தேடி
நிழல் தேடி
அலையும்
நிழல் நான்
நிழலுக்குள்
இருந்த
எல்லாமே
இன்று நிர்வாண
வெளிச்சமாய்
வெட்டி சாய்த்து
மொட்டையாக்கி
படுத்து கிடக்கும்
ஜீவன்களாய்
பல்லாயிரம் மரங்கள்
அடை மழை
முடிந்த பின்னும்
கிளையில்
சேர்த்து வைத்து
குலுங்க சிரித்து
சாரலில் நம்மை
சிலிர்க்க
வைக்கவோ
வெயிலின் தகிப்பை
தன்னுள் தாங்கி
குளுமையின்
சுகத்தை நிழலில்
தரும் சுகமோ
பூத்து குலுங்கி
புன்னகை
தரும் புன்சிரிப்போ
இனி
காண கிடைக்க
பல நூற்றாண்டுகள்
தேவை
படுத்து கிடந்த
மரங்களின்
சாவுக்கு
மெளனமாய்
கண்ணீர் சிந்தும்
மர நிழல்களின்
நிசம் நான்
Writing - the act of one person giving a piece of their soul to another.
J. Spredemann.
*************
வணக்கம்.
நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் என்றால் அது இன்னும் நான் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுத வைத்து கொண்டிருக்கும் “மினர்வா”வை பற்றியதாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள நாம் அடுத்த இலக்கை நோக்கி இணைந்து பயணப்படுகிறோம் என்று ஆகிவிடும்.
நான் விரும்புவதும் அதுவே.
மாசற்ற எனது அன்பிற்குரிய வாசக அன்பர்களுக்கும் சலிப்பறியாத fake id களுக்கும் இனிய மாலை வணக்கம்.
மினர்வா நான் எழுத திட்டமிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிற
காலைத் தேநீரும் சிதறிய சிந்தனையும்
கேரளாவில் நீங்கள் சாலைவழி பயணம் மேற்கொண்டால் அதில் உள்ள சுகமே தனியானது. பயணம் செய்யும் எல்லா சாலைகளுக்கு பக்கங்களில் பச்சைப்பசேல் என பயிர்களும் மரங்களும் இருக்கும். இயற்கை தன் அழகை விரித்து தலையாட்டும் காட்சி கண்களுக்குக் குளுமையானது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம் மாறுவது தெரியாமல் சாலைகள் செல்லும். நாம் எல்லையை கடப்பதை மைல் கல்லுகளால் தான் அறிவோம். மற்றும் ஒரு அடையாளம் அந்த எல்லைக் கல்லின் அடுத்து வரும் டீக் கடையைக் கூறலாம்.ஆம் எந்த நேரமும் தேநீர் கிடைப்பது இந்த நெடுஞ்சாலைகளில் தான். இந்தக் கடைகள் பயணம் செய்ப
மெனுகார்டில் இல்லாத உணவு
நகரை விட்டு சற்று ஒதுங்கியிருந்த பிரமாண்டமான ஓட்டல், அருகில் “கார் பார்க்கில்” காரை நிறுத்தி விட்டு இறங்கினார்கள் ராமமூர்த்தியும், சிவசங்கரனும்.
ஏதாவது சாப்பிட்டுட்டு போவோம் சிவசங்கரன் ராம மூர்த்தியிடம் சொல்ல, அவரும் டிரைவரிடம் காரை இந்த ஓட்டலில் நிறுத்த சொல்லி இருந்தார்.
இருவரும் இறங்கிய பின், ராமமூர்த்தி டிரைவரிடம் நீ காத்திரு என்று சொல்லி விட்டு சிவசங்கரனுடன் ஓட்டலை நோக்கி நடந்தார்.
டிரைவருக்கு தெரியும் அவர்கள் இருவரும் திரும்பி வர இன்னும் மூன்று மணி நேரம் மேல் ஆகும். அதுவரை காத்திருக்க வேண்டும் மனதுக்குள் நினைத்து கொண்டாலும், வெளியில் “சரிங்க சார்” தல
நகர பேருந்து
பெயர் என்னவோ
நகர பேருந்து
நகரத்திற்குள்ளாக
நகர்ந்துதான் செல்கிறது
என்றாலும்
நிற்கா பேருந்து
என்று அழைத்தாலும்
தகும்
அதுவும்
நிறுத்தம் நிறுத்தா
பேருந்து
என்பதுதான் பொருத்தம்
காலத்தின் ஓட்டத்தை
கை கெடிகாரத்தில்
பார்த்தபடி
கைவிரல் நகத்தை கடித்து
பேருந்தை எதிர்பார்த்து
சிலர் பலர்
பாவம் அவர்களுக்கு
பணி நேரம்
அங்கு இருக்கவேண்டும்
வட்டு பிடித்த
கையும்
கனவுகள் கொண்ட
முகமாய் ஓட்டுனரும்
வாயில் வைத்த
விசிலும்
பயண சீட்டை
கிழித்து கிழித்து
கொடுத்து ஓய்ந்த
கையும்
இருவரின் மன நிலையும்
காலை எரிச்சலில்
காந்தலாய் எரிய
காத்து நிற்பவர்களை
கண்டால்
எங்கு போனாய் நண்பா !
நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே
==================================
அரவணைக்க அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..
வலிகள் சொல்ல வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..
சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..
வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..
ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..
உணவுக்காகப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...
இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?
சிந்திப்பீர் மானிடரே!
உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..
ஆதலால்..
வேண்டுகின்றோம் உங்களிடம்..
இ
நண்பர்கள் (12)

நா முரளிதரன்
Salem

மோ ஹெட்ரிக் லெவின்
திருப்பூர்

பூ சுப்ரமணியன்
பள்ளிக்கரணை , சென்னை

சு அப்துல் கரீம்
India
