தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தாமோதரன்ஸ்ரீ |
இடம் | : கோயமுத்தூர் (சின்னியம்பா |
பிறந்த தேதி | : 07-Aug-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 4490 |
புள்ளி | : 907 |
என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்
1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது
2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.
3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்
அம்மா மரணித்து விட்டாள்
அந்த ஊருக்குள் என் குடிசையின் முன் பெஞ்சில அம்மா படுக்க வைக்கப்பட்டிருக்கிறாள். ஐந்தடி நீளமும், இரண்டடி அகலமுமே கொண்டதாக இருக்கிறது அந்த பெஞ்சு. அதில அம்மாவை படுக்க வைத்தும் பெஞ்சில இடமும் வலமும் கொஞ்சம் இடம் இருந்தது.
வாடி வதங்கிய சரீரம், வயதின் தளர்ச்சி நாலடியாக சுருங்கி நல்ல உணவை இத்தனை வருடங்களாக காணாத வயிறு, ஒரு கருமையான மூட்டையாகத்தான் எனக்கு தெரிந்தது. அவள் மேல் போர்த்தியிருந்த வெள்ளை துணிதான் அது ஒரு பிணம் என்று காட்டியது.
நான் இங்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்கள் இருக்கலாம், ஆறு மாதத்திற்கு முன்னால் இங்கு வந்திருக்கிறேன். என் மச்சினன் என்
உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !
நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !
நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !
ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !
உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !
நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !
நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !
ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !
நட்சத்திர விதைகளை காக்க
வானவெளி வயல்களில்
ஊன்றி விதைக்கப்பட்ட
நட்சத்திர விதைகள்
விளைந்து பயிராகும்
முன்
எவராலும் களவாட
படாமல் இருக்க
இரவும் பகலும்
சுற்றி வந்து
காவல் காக்க
சூரியனையும்
நிலவையும்
நியமித்தது ஏனோ?
உதிர்க்கும் நீர் திவலைகள்
மழை பெய்து
ஓய்ந்து விட்டது
பறவைகளும் விலங்குகளும்
உடம்பை சிலிர்த்து
உதிர்த்து விட்டன
தன் மேல்
தேங்கியிருந்த
நீர் துளிகளை
பச்சை தாவரங்கள்
மட்டும் தன்
மேல் இருந்த
நீர் திவலைகளை
உதிர்க்க
காத்திருக்கிறது
காற்றின் உரசலுக்கு
யாருக்குத்தான் போராட்டம் இல்லை?
சே…பாத்ரூம் கிடைக்கறதுக்கு பெரிய போராட்டமே நடத்த வேண்டி யிருக்கு, தலையை துவட்டியபடி அறைக்குள் வந்த மாணிக்கத்திடம் உள்ளே கட்டிலில் உட்கார்ந்திருந்த சோணங்கி “உங்க அம்மா கூப்பிட்டாங்க” அப்புறமா நான் பேசுனதா சொல்லுன்னு சொன்னாங்க,
அம்மா போன் பண்ணினாளா? சட்டென மனதுக்குள் ஒரு ‘திடுக்’ வந்தது, இதுக்காத்தான் இருக்கும் என்று மனசு சொன்னாலும், ஒரு பக்கம் வேற ஏதாச்சும் இருந்தா? என்னும் கேள்வியும் முளைத்தது.
ஏதாச்சும் சொல்லுச்சா? சோணங்கியிடம் கேட்டான்,
ஒண்ணும் சொல்லலை, போனை எடுத்தவுடன் அவனில்லையா? அப்படீன்னு கேட்டுச்சு, குளிக்க போயிருக்கான்னு சொன்னேன்
வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை
நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை
புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை
திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை
மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண
ந
நிலவு ஏனோ இன்னும் வரவில்லை
சூரியன் வானத்தை
கை விட்டு
போய் விட்டான்
இருளின் பிடியில்
இறுக்கி இருக்கும்
இந்த பூமி
எதிர்பார்த்து காத்திருக்கிறது
நிலவின் வெளிச்சத்துக்கு
பூமிக்கு தெரியாது
கருமேகங்கள்
நிலவை சிறை
வைத்திருப்பதை
கதாநாயகனாய்
காற்று வந்து
காப்பாற்றுவான்
என்று காத்திருக்கிறது
இந்த நிலவும்
Writing - the act of one person giving a piece of their soul to another.
J. Spredemann.
*************
வணக்கம்.
நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் என்றால் அது இன்னும் நான் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுத வைத்து கொண்டிருக்கும் “மினர்வா”வை பற்றியதாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள நாம் அடுத்த இலக்கை நோக்கி இணைந்து பயணப்படுகிறோம் என்று ஆகிவிடும்.
நான் விரும்புவதும் அதுவே.
மாசற்ற எனது அன்பிற்குரிய வாசக அன்பர்களுக்கும் சலிப்பறியாத fake id களுக்கும் இனிய மாலை வணக்கம்.
மினர்வா நான் எழுத திட்டமிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிற
எங்கு போனாய் நண்பா !
நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே
==================================
அரவணைக்க அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..
வலிகள் சொல்ல வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..
சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..
வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..
ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..
உணவுக்காகப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...
இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?
சிந்திப்பீர் மானிடரே!
உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..
ஆதலால்..
வேண்டுகின்றோம் உங்களிடம்..
இ
நண்பர்கள் (12)

நா முரளிதரன்
Salem

மோ ஹெட்ரிக் லெவின்
திருப்பூர்

பூ சுப்ரமணியன்
பள்ளிக்கரணை , சென்னை

சு அப்துல் கரீம்
India
