தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தாமோதரன்ஸ்ரீ
இடம்:  கோயமுத்தூர் (சின்னியம்பா
பிறந்த தேதி :  07-Aug-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2017
பார்த்தவர்கள்:  3539
புள்ளி:  632

என்னைப் பற்றி...

என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்

1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது

2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.

3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்

என் படைப்புகள்
தாமோதரன்ஸ்ரீ செய்திகள்
தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2023 12:34 pm

இதுவும் கடந்து போகும்

ஏதோ பிரபலமானவர்கள் சொன்ன வார்த்தையாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், நாம் ஒவ்வொருவரும் பல்வேறு சிக்கல்களில் மாட்டி அதில் இருந்து தப்பிக்க விழி பிதுங்கி வெளியேற முற்படும்போது மனதுக்குள் சொல்லியிருப்போம். அப்படித்தான் பிரபலமானவர்களும் கூட இந்த வார்த்தையை உபயோகித்திருப்பார்கள், அதனால் இந்த வார்த்தை நம் மனதுக்கு பிரபலமானதாக தெரிகிறது.
சரி..! இதுவும் கடந்து போகும் ஒத்து கொள்ளலாம், கடந்து போன பிறகு ? இந்த கேள்வியை நீங்கள் கேட்டால் ஒரே பதில்தான், இயற்கை நம்மை தாய் மூலம் பெற்று போட்டு விட்டு, உன்னை இங்கு வரவழைத்து விட்டேன், இனி மேல் நீதான் வாழ்க்கையை வாழவேண்டும் என்ற

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2023 10:39 am

எங்கள் வாழ்க்கை..!

குடும்பத்துடன் நான்கைந்து மாதம் சுற்றுப்பயணம் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டோம். நடைப் பயணம் மட்டும் தான் எங்களுடையது. அதுவும் காடு, மலை, வனாந்திரம், என்று எல்லா இடங்களையும் கடந்துதான் செல்ல வேண்டும். இதற்காக நாங்கள் அஞ்சவில்லை. இப்படி அடிக்கடி பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் இந்த முறை அதிக பட்ச தூரம் பயணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம்.
குடும்பம் என்பது நீங்கள் நினைப்பது போல பெற்றவர்கள் மட்டும் கொண்டதல்ல. எங்கள் குடும்பங்கள்,கிட்டத்தட்ட மாமா, அத்தை சித்தி, சித்தப்பா, பங்காளி இவைகளின் வகைகளில் நூறு பேருக்கு மேல் சேருவோம். உங்களுக்கு பொறாமையாக கூட

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2023 3:10 pm

கிழக்கு வெளுக்கிறது

கிழக்கின் விடியலில்
கீற்றாய் தெரிகிறது
சிறு சிவப்பு வெளிச்சம்

காரிருளில் அந்த
கரையோர வெளிச்சம்
காட்டு குருவிகளை
எழுப்பி விட்டதோ?

கீச் கீச் என
உற்சாகமாய்
கூச்சலிட்டு
சுற்றி சுற்றி
பறக்கின்றன

இதனின் கூச்சல்
கேட்ட பின்னேதான்
மனித இருப்புகளின்
அசைவுகளும்
நகர்தலும்

கிழக்கு கரையோரம்
கீற்றாய் இருந்த
வெளிச்சம் மெல்ல
மெல்ல பரவி

இரவின் அழுக்கு
நீக்க பட்டபோது

முகம் மலர
புன்னகையுடன்
வெளியே வருகிறான்
சிவப்பு கதிருடன்
சூரியன்

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2023 9:31 am

சராசரி இந்திய மகளிர்

மட மடவென
தலையில்
தண்ணீர் ஊற்றி
வெளியே வந்தவள்

காத்திருந்த
மகளை இழுத்து
தலை மயிரை
இறுக்கி முடித்து

தொங்கிய சீருடையை
அவசரமாய்
மாட்டி

சமையலறைக்குள்
வேகமாய் ஓடி
ஆனதை தட்டில்
போட்டு

மகள் ஒரு
வாய்
இவள் ஒரு
வாய்

சாப்பிட்டதாய் பேர்
பண்ணி

மகள் காலணி
தட்டி
காலில் போட்டு
இவளும்
கிழிந்த செருப்பை
இழுத்து மாட்டி

வேகமாய் வெயிலில்
நடக்கிறாள்

பள்ளியில் மகளை
உள்ளுக்குள் அனுப்பியவள்

விறு விறு
நடை நடந்து
பணிக்கு வந்தவள்
வருகையை
பதிவு செய்து

அப்பா..!
பெருமூச்சுடன்
சீருடை போட்டு

இயக்கும் இயந்திரம்
முன் நின்று
பணியை ஆரம்பிக்கிறா

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2023 4:06 pm

நகர பேருந்து

பெயர் என்னவோ
நகர பேருந்து
நகரத்திற்குள்ளாக
நகர்ந்துதான் செல்கிறது
என்றாலும்

நிற்கா பேருந்து
என்று அழைத்தாலும்
தகும்

அதுவும்
நிறுத்தம் நிறுத்தா
பேருந்து
என்பதுதான் பொருத்தம்

காலத்தின் ஓட்டத்தை
கை கெடிகாரத்தில்
பார்த்தபடி
கைவிரல் நகத்தை கடித்து
பேருந்தை எதிர்பார்த்து
சிலர் பலர்
பாவம் அவர்களுக்கு
பணி நேரம்
அங்கு இருக்கவேண்டும்

வட்டு பிடித்த
கையும்
கனவுகள் கொண்ட
முகமாய் ஓட்டுனரும்
வாயில் வைத்த
விசிலும்
பயண சீட்டை
கிழித்து கிழித்து
கொடுத்து ஓய்ந்த
கையும்

இருவரின் மன நிலையும்
காலை எரிச்சலில்
காந்தலாய் எரிய

காத்து நிற்பவர்களை
கண்டால்

மேலும்

நன்றி ..! 23-Feb-2023 9:36 am
தினந்தோறும் இயல்பாய் நடக்கும் நிகழ்வில் இப்படி ஒரு பார்வை வியக்க வைக்கிறது உங்களின் பதிவு நன்றாக இருக்கிறது வழக்கம் போல 22-Feb-2023 10:45 pm
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2022 11:09 am

காற்றும் மரமும்

மோத வரும்
காற்று
எதிர்த்து நிற்கும்
மரம்
இருவருக்கும்
தள்ளு முள்ளு

வேகத்தை காட்டும்
காற்று

கடைசியில்
வெற்றி என்னவோ
காற்றுக்குத்தான்

என்றாலும்
மரம்

இது வரை
எதிர்த்து சண்டையிடுவதை
நிறுத்தவே இல்லை.

மேலும்

நன்றி நன்றி , தங்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். அழகாக கவிதையை தொடுத்து கொடுத்துள்ளீர்கள் 30-Nov-2022 1:32 pm
தாமோதரன் ஶ்ரீ அவர்களே தாங்கள் மிகவும் திறமை சாலி என்பது உங்கள் பற்றிய குறிப்பில் அறிந்தென். மேலும் எல்லா நூல்களும் உங்கள் கையிலிருக்க நீங்களும் மற்றவர்போல தொங்கல் எழுதி அதை வெளிவிடல் கவிதையாமோ. சொற்ப இலக்கண முள்ள ஆசிரியப்பாவில் உங்களுடைய நல்லக் கருத்தான மரமும் காற்றும் எழுதினால் பலருக்கும் தூண்டி கோலாய் அமையும் முயன்று பாருங்கள் நேரிசை ஆசிரியபபா மோத வந்த காற்றை நின்று எதிர்த்திடு மரமும் தள்ளு முள்ளு இருவர்க் குந்தான் வேகம் காட்டும் காற்று வெற்றி பெற்றாலும் மரமின்னும் எதிர்ப்பை நிறுத்த வில்லையே பாராட்டுக்கள் 30-Nov-2022 1:06 pm
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2022 4:00 pm

வீடு

இரவு மட்டுமே
தங்கி
படுக்கையில் உறங்கி

விடிந்தும் விடியா
பொழுதில்
அடித்து பிடித்து
குளித்து கிளம்பி
அவரவர் பணிக்கு
அரக்க பரக்க
சென்று

மீண்டும் இரவு
இருவரும்
திரும்பி படுக்கையில்
படுத்து உறங்கி

இதனால் கிடைக்கும்
வருவாய்
மூன்றில் இரண்டை

இதற்கே
தவணை மூலம்
கட்டி தொலைக்கும்

இந்த பொருளுக்கு
பெயர் என்னவோ
வீடு..!

மேலும்

நன்றி .! இதன் கரு என்னுடையதல்ல . இது ஒரு இலக்கிய கூட்டத்தில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது "வீடு " என்றொரு கவிதை வாசித்ததாக , அப்பொழுது எனக்கு தோன்றிய வார்த்தைகள், நானும் பணியின் இறுதி வரை "வீட்டுக்கு லோன் " கட்டியவன் என்பதால் இது தோன்றியிருக்கலாம் 12-Aug-2022 8:52 am
இந்த பொருளுக்கு பெயர் வீடு..! அடடடடா..... எளிமையாக வீட்டு கடன் மற்றும் அதன் வலி புரியுமாறு எழுதியுள்ள உங்களின் இந்த பதிவிற்கு எவ்வளவு முறை வாழ்த்து சொன்னாலும் பத்தாது, மிகவும் நன்றாக இருக்கு ; வாழ்த்துகள் 11-Aug-2022 5:18 pm
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2022 10:43 am

எங்கும் இசையாய்..!

ஆவேசமாய் வீசிய
காற்று
மூங்கில் குழலுக்குள்
நுழைந்த பின்
துளையின் வழியாய்
வெளியில் வந்து
இசையாய் காதை
வருடுகிறது

பக்கவாத்தியமாய்
நானிருக்கிறேன்
குளத்து நீரின்
அலைகள்
கரையில் மோதும்
சலக்.சலக்..
தாள லயத்துடன்

வாய்ப்பாட்டாய்
குயில் தன் குரலால்
இசையை
இசைத்து

விடியலை அறிவித்து
ஒற்றை ஆளாய்
ஓங்கி ஒலிக்கும்
சேவலின் சத்தம்
ஏழு கட்டையோ
எட்டு கட்டையோ?

இத்தனைக்கும்
சுருதியாய்
எங்கோ கேட்கும்
குழந்தையின்
அழு குரல்

எல்லாம்
எனக்குள் இசையாய்

மேலும்

எனக்கும் மகிழ்ச்சி, நன்றி .! 15-Jul-2022 12:31 pm
நல்லாருக்கு; உங்களின் இந்த பதிவு என்னுடைய "அந்த அபுர்வ சந்தங்கள்" என்ற பதிவை நினைவூட்டுகின்றது. பல நாள் கழித்து உங்களின் பதிவை படித்ததில் மகிழ்ச்சி 15-Jul-2022 11:29 am
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2022 10:23 am

எங்கு போனாய் நண்பா !

நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே

மேலும்

நீண்ட நாட்களாக தங்களின் உரையாடல்களை காணவில்லை , "Fair and Lovely" ல் ஸ்பரிசனோடு உரையாடினீர்கள் , தாங்கள், நன்னாடன் , ஸ்பரிசன், மற்றும் பலரின் உரையாடல்களை இரசித்து படிப்பவன் நான் 27-Jun-2022 1:40 pm
சிறப்பான கதை மனத்தைத் தொட்டது பாராட்டுக்கள் 26-Jun-2022 5:55 pm
தாமோதரன்ஸ்ரீ - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2021 1:14 pm

==================================

அரவணைக்க​ அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..

வலிகள் சொல்ல​ வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..

சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..

வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..

ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..


உணவுக்காக​ப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...

இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?

சிந்திப்பீர் மானிடரே!

உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..

ஆதலால்..

வேண்டுகின்றோம் உங்களிடம்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே