தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : தாமோதரன்ஸ்ரீ |
| இடம் | : கோயமுத்தூர் (சின்னியம்பா |
| பிறந்த தேதி | : 07-Aug-1966 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 29-Jul-2017 |
| பார்த்தவர்கள் | : 4595 |
| புள்ளி | : 970 |
என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்
1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது
2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.
3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்
மாறவும் மாற்றிக்கொள்ள முடியாத எண்ணங்கள்
வெளியில் யாரோ வாயை “ஓர்கரித்து துப்பும்” சத்தம் கேட்டே விழிப்பு வந்தது திம்மைக்கு. எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். ஒரு நிமிடம் தான் இருப்பது அரபியா அல்லது இந்தியாவா? குழப்பமான மனநிலையில் இருந்தாள்.
சொந்த ஊருக்கு வந்து பதினைந்து நாட்கள் ஆகியும் இன்னும் சில நேரங்களில் இத்தகைய குழப்பங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. நான்கு வருடங்களாக அரபிக் குடும்பத்தில் வேலைக்காரியாய் வேலை கொண்டிருப்பதும், அப்படி இருக்கையில் காலையில் இது போல இப்படி உட்கார்ந்திருக்க முடியுமா? என்னும் மலைப்பும் அவளுடைய எண்ணங்களில் இத்தகைய குழப்பமான மனநிலையை காட்ட தொடங்கி விடுகி
நம்மை பற்றி நாமே கொஞ்சம் தெரிந்து கொள்வோமே
நீண்ட காலமாக நாம் இந்த வார்த்தைகளை பலரிடம் கேட்டிருக்கிறோம் “நாலுபேருகிட்ட கேளு”
என்னைய பத்தி தெரிஞ்சுக்கணும்னா நாலு பேருகிட்ட கேட்டு பாரு
நாலு பேர்கிட்ட கேட்டா அவரை பத்தி தெரிஞ்சு போவுது
இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்டிருக்கலாம். அது என்ன நாலு பேர், நாலு பேர்?
விபரீதமான சிந்தனை கூட ஒரு சமயம் வந்ததுண்டு, நம்முடைய இறுதியில் தூக்கி செல்லும் நாலு பேரை சொல்வதற்காக இந்த வார்த்தையை உபயோகப்படுத்துகிறோமா?
நேற்று இறையன்பு, அவர்கள் “நான்” என்னும் எண்ணம் உள்ளவனை பற்றி பேசும் போது இதை பற்றி ஒரு சில விளக்கம் கொடுத்ததை மு
ஊரார் மனதிலிருந்து விலகிய பிள்ளையார்
நாகலிங்கம் அண்ணன் வர சொல்லுச்சு,
குடிசையின் உள்புறமாய் சோறு வடித்து கொண்டிருந்த சடையப்பன் வாசலில் நின்று சொன்ன ஞானபிரகாசத்திடம் வர்றேன்னு சொல்லு, சாதம் வடிச்சுட்டு வேலைக்கு கிளம்பும்போது அங்க வர்றேன்னு சொல்லு
சரி நான் சொல்லிடறேன், நானும் வேலைக்கு கிளம்போணும், ஞானப்பிரகாசம் நடையை கட்டினான்.
நாகலிங்கம் எதுக்கு கூப்பிடறாரு? மனதுக்குள் சடையப்பன் நினைத்துக் கொண்டே தட்டில் சாப்பாட்டை போட்டான், பக்கத்தில் இருந்த சட்டியில் இருந்து குழம்பை ஊற்றி அவசர அவசரமாக சாப்பிட்டான். எட்டு மணிக்கு கம்பெனிக்குள் இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் அங்கும் இ
வானம் ஒரு போதிமரம்
உலகம் பிறந்தது முதல் பாரவையாளனாக இருந்து கொண்டிருப்பது இந்த வானம் மட்டும்தான். வானம் என்பது நாம் வசிக்கும் பூமியின் மேல் நீல வண்ணத்தில் காட்சி அளிப்பது மட்டுமன்று.
நம் பூமியை போல பல்லாயிரக்கணக்கான கோள்கள், அதில் உயிர்கள் வாழ்கிறதோ இல்லையோ அது நமக்கு தெரியாது, ஆனால் அவைகளுக்கும் இந்த வானம் ஒன்றுதான்.
நாம் மேலிருக்கும் ஆகாயத்தை வானம் என்று அழைப்பது போல நம் கீழ்புறமும் இருப்பது ஆகாயம்தான். ஆனால் அவைகள் நம் பார்வைக்கு தெரியாது. காரணம் நாம் வாழும் பூமி என்பது ஒரு கோள் என்று ஒப்புக்கொள்வீர்களானால் நாம் வசிக்கும் இந்த பூமி அதாவது நிலம் கீழ்ப்புறமாய் ஒரு இடத்தில் ம
நெருப்பின் நடனம் மக்களின் கோபம்
பற்றி எரியும்
நெருப்பு
விசிறி விடும்
காற்று
ஆனந்த நடனமோ
இல்லை
ஆவேச நடனமோ?
பார்த்து கொண்டிருக்கும்
மனிதர்களின் முகங்களில்
பயம் பயம்
தள்ளி செல்ல
நினைக்கும்
எல்லாம் தொட்டு
அணைத்து பற்றி
நடனத்தை ஆடி
காட்டுகிறாள்
அவளின் ஆவேசம்
தணிக்க
சுற்றி சுற்றி
வீசும் தண்ணீர்
கடைசியில் அவளே
ஆடி களைத்து
அடங்கி போனாள்
அவள் காலடி வைத்து
ஆடிய இடமெல்லாம்
கருகிய மெருக்கு
வீசிய நாற்றம்
இழந்தைவைகளுக்காக
அழுகுரல் அழுகுரல்
மனிதர்களின் அழுகுரல்
எல்லாம் முடிந்து
தீர்ந்த பின்னால்
திடீரென பெய்த
பெரு மழை
மக்களின் கோபம்
ஆடிய நெருப்பின்
மீதல
உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !
நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !
நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !
ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !
உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !
நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !
நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !
ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !
வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை
நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை
புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை
திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை
மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண
ந
நிலவு ஏனோ இன்னும் வரவில்லை
சூரியன் வானத்தை
கை விட்டு
போய் விட்டான்
இருளின் பிடியில்
இறுக்கி இருக்கும்
இந்த பூமி
எதிர்பார்த்து காத்திருக்கிறது
நிலவின் வெளிச்சத்துக்கு
பூமிக்கு தெரியாது
கருமேகங்கள்
நிலவை சிறை
வைத்திருப்பதை
கதாநாயகனாய்
காற்று வந்து
காப்பாற்றுவான்
என்று காத்திருக்கிறது
இந்த நிலவும்
எங்கு போனாய் நண்பா !
நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே
==================================
அரவணைக்க அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..
வலிகள் சொல்ல வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..
சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..
வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..
ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..
உணவுக்காகப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...
இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?
சிந்திப்பீர் மானிடரே!
உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..
ஆதலால்..
வேண்டுகின்றோம் உங்களிடம்..
இ