தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தாமோதரன்ஸ்ரீ |
இடம் | : கோயமுத்தூர் (சின்னியம்பா |
பிறந்த தேதி | : 07-Aug-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 4416 |
புள்ளி | : 876 |
என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்
1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது
2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.
3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்
நால்வர்- காவல் விசாரணை- கதை சொல்லி
இந்த கதையின் கரு எனது சொந்த கற்பனை அல்ல. “ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை” என்னும் தலைப்பில் சிறு கதை தொகுப்பு ஒன்றில் படைத்திருந்த எழுத்தாளர் எழில் வரதன் அவர்களுடையது. சந்தியா பதிப்பகம், சென்னை-83, முதல் பதிப்பு-2008
நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று வைத்து கொள்ளுங்கள். அந்த காலகட்டத்தில் ஓரளவு நகர நாகரிகம் வளர்ந்து வந்து கொண்டிருந்த அந்த ஊரின் காவல்துறை துணிச்சலாக ஒரு நடவடிக்கை எடுத்திருந்தது. அன்றும் சரி இன்றும் சரி, அப்படிபட்ட துணிச்சலான நடவடிக்கை எடுப்பது என்பது சாதாரண விசயமல்ல.
மறு நாள் செய
நிலவு ஒன்றுதான்
பால் நிலவின்
வெளிச்சம் இந்த
கள்ளனுக்கு
தொல்லையாய் தெரிய
சலித்து போய்
தன் குடிசைக்கு
திரும்பினான்
மின்சாரம் இல்லாமல்
இருளாய் இருந்த
அந்த குடிசையின்
வாசலில்
நிலவின் வெளிச்சத்தில்
ஆர்வமாய் படித்து
கொண்டிருந்தான்
அவனின்
செல்ல மகன்
என் கனவு இது ஆனால்..!
புன்னகையாய் முகம்
விரித்து சிரிக்கும்
பூக்களுடன்
பயணிக்கவும் பேசவும்
விரும்புகிறேன்
நடத்துனரின்
விசில் சத்தம்
கனவு கலைந்து
விழித்து பார்த்து
அலுத்து சலித்த
முகங்களாய்
என் முகமும்
கீழே இறங்கி
பரிதாபத்துக்குரிய
மனிதனாய்
அலுவலகம் சென்று
கொண்டிருக்கிறேன்
மனித மனம்
ஏனோ தன்னை
துன்பத்துக்குள்ளேயே
ஒடுக்கி கொள்கிறது
அவ்வப்போது எழும்
இன்பத்து சிதறல்களை
கூட இரகசியமாய்
பொத்தி வைத்து
நினைவில் மட்டும்
நிறுத்தி வைத்து
கொள்கிறது
வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை
நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை
புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை
திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை
மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண
ந
நிலவு ஏனோ இன்னும் வரவில்லை
சூரியன் வானத்தை
கை விட்டு
போய் விட்டான்
இருளின் பிடியில்
இறுக்கி இருக்கும்
இந்த பூமி
எதிர்பார்த்து காத்திருக்கிறது
நிலவின் வெளிச்சத்துக்கு
பூமிக்கு தெரியாது
கருமேகங்கள்
நிலவை சிறை
வைத்திருப்பதை
கதாநாயகனாய்
காற்று வந்து
காப்பாற்றுவான்
என்று காத்திருக்கிறது
இந்த நிலவும்
Writing - the act of one person giving a piece of their soul to another.
J. Spredemann.
*************
வணக்கம்.
நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் என்றால் அது இன்னும் நான் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுத வைத்து கொண்டிருக்கும் “மினர்வா”வை பற்றியதாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள நாம் அடுத்த இலக்கை நோக்கி இணைந்து பயணப்படுகிறோம் என்று ஆகிவிடும்.
நான் விரும்புவதும் அதுவே.
மாசற்ற எனது அன்பிற்குரிய வாசக அன்பர்களுக்கும் சலிப்பறியாத fake id களுக்கும் இனிய மாலை வணக்கம்.
மினர்வா நான் எழுத திட்டமிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிற
காலைத் தேநீரும் சிதறிய சிந்தனையும்
கேரளாவில் நீங்கள் சாலைவழி பயணம் மேற்கொண்டால் அதில் உள்ள சுகமே தனியானது. பயணம் செய்யும் எல்லா சாலைகளுக்கு பக்கங்களில் பச்சைப்பசேல் என பயிர்களும் மரங்களும் இருக்கும். இயற்கை தன் அழகை விரித்து தலையாட்டும் காட்சி கண்களுக்குக் குளுமையானது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம் மாறுவது தெரியாமல் சாலைகள் செல்லும். நாம் எல்லையை கடப்பதை மைல் கல்லுகளால் தான் அறிவோம். மற்றும் ஒரு அடையாளம் அந்த எல்லைக் கல்லின் அடுத்து வரும் டீக் கடையைக் கூறலாம்.ஆம் எந்த நேரமும் தேநீர் கிடைப்பது இந்த நெடுஞ்சாலைகளில் தான். இந்தக் கடைகள் பயணம் செய்ப
எங்கு போனாய் நண்பா !
நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே
==================================
அரவணைக்க அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..
வலிகள் சொல்ல வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..
சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..
வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..
ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..
உணவுக்காகப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...
இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?
சிந்திப்பீர் மானிடரே!
உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..
ஆதலால்..
வேண்டுகின்றோம் உங்களிடம்..
இ
நண்பர்கள் (12)

நா முரளிதரன்
Salem

மோ ஹெட்ரிக் லெவின்
திருப்பூர்

பூ சுப்ரமணியன்
பள்ளிக்கரணை , சென்னை

சு அப்துல் கரீம்
India
