தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தாமோதரன்ஸ்ரீ |
இடம் | : கோயமுத்தூர் (சின்னியம்பா |
பிறந்த தேதி | : 07-Aug-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 2460 |
புள்ளி | : 426 |
இரண்டாயிரத்து பதினாலில் சிறுகதைகள்.காம் ல் எழுத ஆரம்பித்தவன்,தொடர்ந்து வலைத்தமிழ்,பனிப்பூக்கள்,தமிழ் பிரதிலிபி,மின்சுவடி,இவைகளில் சிறு கதைகள்,கவிதைகள்( கவிதை என்று நினைத்துக்கொள்கிறேன்) கட்டுரைகள்,சிறுவர் கதைகள், மழலை பாட்டு இவைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.எனது கதை "கூச்சல்கள் கூட சுகமே", "வழி மாறிய சிந்தனை" இரு கதைகளை தின மலர் வார மலர் வெளியிட்டிருக்கிறது.
பாக்யா வார இதழ் "நான் என்னை அறியாமல்" என்னும் சிறு கதையை வெளியிட்டுள்ளது.
தினமலர் வாரமலர் "டீச்சர்" என்னும் கதையை ஆசிரியர் தின சிறப்பு என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது
பாசம்
அந்த குப்பைத்தொட்டிக்குள் விழப்போகும் இலைகளுக்காக நான்கைந்து நாய்கள் காத்திருந்தன. ஒன்றை ஒன்று நம்பிக்கையில்லாமல் யார் முதலில் பாய்வது என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தன. இலைகள் கட்டாயம் விழும் என்பது அவைகளின் அனுபவம்
அதே நேரத்தில் அவைகளை பங்கு பிரிப்பதில் வரும் பிரச்சினையே அதற்கு வாழ்க்கை பிரச்சினை ஆகி விடுகிறது. நல்ல பலசாலியாகவோ, அல்லது கொஞ்சம் இளமையாக இருக்கும் நாய்களுக்கு பங்கு அதிகமாக கிடைத்து விடுகிறது. நோஞ்சானாகவோ, வயது அதிகமானதாகவோ இருப்பவைகளுக்கு இதில் பங்கு கிடைப்பது என்பது பிரம்ம பிரயத்தனம்.
இருந்தாலும் அந்த தெருவில் இத்தனை நாய்களும் கிடைக்கும், இல்லை கிடைக்காது என்று எண்
பீதி ..!
முகத்தின் அழகு
இப்பொழுது
மூக்கிற்கு கீழ்
கட்டப்பட்ட துணியால்
மறைக்கப்பட்டு விட்டது
தன் மூச்சின்
வாசம் கூட
வெளியே போகாமல்
தானே சுவாசித்து
கொண்டிருக்கிறான்
தொட்டு பேசியே
பழகியவன்
பிறர் உரசி
சென்றால்
பதறி போகிறான்
வீட்டு உறுப்பினர்
வெளியே சென்று
வந்தால் உற்று
பார்த்து
சந்தேகம் கொள்கிறான்
மொத்தமாய்
மனித கூட்டம்
மதியை இழந்து
பயத்தில் மிரளுகிறது
போதா குறைக்கு
அரசுகள் மற்றும்
தனியார் ஒலிகள்
காதை துளைக்கிறது
கொரோனா கொரோனோ
என்று
ஒரு பக்கம்
தடுப்பு மருந்து
போடசொல்லும்
கூட்டம்
மறு
பக்கம் போட்டாலும்
வரும் என்று
அறை கூவல்
கதவடைப்பு, ஊரடைப்
மலர்கள் காத்திருக்கின்றன
இந்த மலர் செடியில்
மொட்டுக்கள்
விரிய தயாராய்
இருக்கின்றன
அதை சுற்றி
பறந்து கொண்டிருக்கின்றன
தேனீக்கள் கூட்டம்
விரிந்த மொட்டுக்குள்
நுழைந்து தேனை
யார் முதலில்
குடிப்பது
அவைகளுக்குள்
போட்டி
எங்கேயோ விரிய
போகும் மலர் கூட காத்திருக்கிறது
இந்த தேனீயில்
ஒட்டி வரும்
மகரந்தத்துக்காக
கி.பி.3000 ம் வருடத்தின் ஒரு சில நாள்
குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அரை நிரவாணமாய் படுத்துறங்கிய கதிர் 123
சட்டென சத்தம் கேட்டு கண் விழித்தவன், எதிரில் நாகரிகமாய் உடையணிந்து ஒருவன் நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சட்டென எழுந்து தன் அரை குறை ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு, “ஏய் ஹூ ஆர் யூ ? இங்கே எப்படி உள்ளே வந்தே? கொஞ்சம் கூட
மேனர்ஸ் இல்லாம அடுத்தவன் அறையிலே வந்து அரை குறையா படுத்திருக்கறவனை
வேடிக்கை பார்த்திட்டு? மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசினான்.
வணக்கம் என் பெயர் “பெருந்தகையன்” நான் என்கிற என்னுடைய பணி இன்று காலை
4.30 மணியிலிருந்து தங்களுக்கு சேவை புரிவதற்காக அனுப்பி உள்ளார்கள்.என
==================================
அரவணைக்க அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..
வலிகள் சொல்ல வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..
சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..
வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..
ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..
உணவுக்காகப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...
இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?
சிந்திப்பீர் மானிடரே!
உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..
ஆதலால்..
வேண்டுகின்றோம் உங்களிடம்..
இ
அங்கே..
பூக்களின் வாசத்தை
ஆதிக்கம் செய்தது
வாசனைத் திரவியங்களின் நெடி!
அவை..
உண்மை மலர்கள்தானா, மாலைகள்தானா?
குழப்பமே மிஞ்சியது
அவனுக்கு..
சோர்வில்லாமல்
இருகரம் கூப்பி
இனிமையுடன் வரவேற்றது
இயந்திர பொம்மை!
செயற்கை சிரிப்புகளை
சுமந்துகொண்டு
இங்குமங்குமாய்
மனித இயந்திரங்கள்..
உள்ளதில் சிறந்ததென்று
தேர்ந்தணிந்த உடை
கந்தலாய் தோன்றியது
ஜொலிப்புகளின் கூட்டத்திலே..
வேற்றுகிரகவாசியாய்
ஊடுறுவும் கண்கள் கடந்து
கூச்சத்துடன் நுழைந்தான்
கறைபட குவித்த
கோடிகள் பலப்பல
ஊருக்கே வெட்டவெளிச்சம்..
கரை வேட்டி அமைச்சருக்கு அங்கே
இரத்தினக்கம்பள வரவேற்பு!
கிரீஸ் கறை விரல்களை
யாரும் பார்க்கா வண்ணம
ஜனவரி 23 -- இன்று வீர வரலாற்று நாயகன் நேதாஜி பிறந்த தினம்
உன் உதிரத்தை கொடு
உனக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிறேன்
என்று முழங்கினான்
தன் தாய் பூமியை விடுத்து அந்நிய மண் சென்று
ஆசாத் ஹிந்த் எனும் பெரும் படை திரட்டினான்
ஜப்பானிலிருந்து பர்மா எல்லை வரை வந்து
ஆங்கிலப் படையை அதிரத் தாக்கினான்
ஒரு விமான விபத்தில் வீர மரணம் அடைந்தான்
அவன் இருக்கிறான் இருக்கிறான் என்று எழுதிய கதைகள் எல்லாம்
சோம்பேறிகள் வரைந்த புனை வரலாறு
வங்க வேங்கை உயிருக்கு பயந்து பதுங்கி வாழ்ந்ததா !!!!!
யாருக்கடா வேண்டும் இந்த அபத்த வரலாறு ?
தலைவா உனக்கு வீரவணக்கம் !
***************************************************************
வண்ணத்துப் பூச்சியே
வண்ணத்துப் பூச்சியே
அருகினில் வாராயோ!
என் அருகினில் வாராயோ..!
உன் சிறகுகள்
வர்ணம் பூசிய தெப்படி
இரகசியம் கூறாயோ?
மெல்ல இரகசியம் கூறாயோ..!
வானவில்லில் கூடு கட்டி
வாழ்ந்து வந்தனையோ?
இல்லை
வாசல் தோறும்
வர்ணக் கோலம்
புரண்டு வந்தனையோ?
உன் காதலன்தான்
ஒவியனோ தீட்டிவிட்ட
வர்ணங்களோ?
இல்லைக்
காதலனைக்
கண்டு வர
நீ செய்த ஒப்பனையோ?
வண்ண வண்ண
மலர்த் தாவி
ஒட்டிக் கொண்ட வர்ணங்களோ?
இல்லை உன்
எண்ணங்களில் வாழுகின்ற
கவித்துவத்தின் காட்சிகளோ?
ஆயிரம் வண்ணப்
புடவைகளும்
உந்தன் அழகினுக்கு
நிகரில்லை!
உயிருள்ள ஓவி
பட்ட துயரங்கள் போதுமென்று
பாட்டாலே நான் சாடுகின்றேன்
கிட்டத்தில் எட்டுகின்ற புத்தாண்டில்
கொட்டட்டும் வளமை என்று
பாடுகின்றேன்
புவியில் இன்பம் சத்தியம் புரளும்,
நான் பறை சாற்றுகிறேன்.
கவிஞன் சொல் நிச்சயம் வெல்லும்
புத்தாண்டை போற்றுகிறேன்
வரும் புத்தாண்டே, நல்முத்தாண்டே,
வறுமை சிறுமை இவையொழித்து, நீ
பெருமை கொள்ள ஏங்குகிறேன்.
வற்றாத செல்வம் பல தந்து,எமை
முற்றாக மீட்டெடுக்க உனை
வணங்குகிறேன்.
வரும் ஆண்டு நல்லாண்டாய்
மிளிர்ந்திடவே,
வந்தீண்டு புத்தாண்டே
நீ ஒளிர்ந்திடுவாய்.
ச.தீபன்
94435 51706