நா முரளிதரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நா முரளிதரன் |
இடம் | : Salem |
பிறந்த தேதி | : 07-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 463 |
புள்ளி | : 42 |
An Engineer working in a Private company at Chennai. Born in salem. Interested in writing from childhood but not so experienced. Started to post கவிதை in blog since Jan'22.
மௌனம்
கொலைகள் செய்ய
புறப்படும் முன்,
உண்மையே - நீ
பேசி விடு !
பல நாள்
சகித்த
எரிமலைகள்
வெடித்துச்
சிதறப் போகிறது,
கோபமே - உன்
எதிர்ப்பைக்
காட்டி விடு !
பொறுமையே - நீ
இன்னும் கொஞ்சம் உறங்கு
விடியலுக்கு நேரம் இருக்கு !
முயற்சியே
அதற்குள் என்ன ஓய்வு,
நீ அடைய வேண்டியது
மேகத்தை அல்ல
வானத்தின் எல்லையை !
சிரிப்பு - அது
மகிழ்வித்தவனுக்கு
கொடுக்கும் சன்மானம்,
செலவழித்து விடு !
சேமித்து வைத்தும்
கடனாளி ஆகாதே !
அழுகையே
உனக்கு அணை கட்டி
ஒரு பயனும் இல்லை - நீ
அமுத நீரா என்ன
அழுக்கு நீர் தானே,
பொழிந்து விடு !
- நா முரளிதரன்
மௌனம்
கொலைகள் செய்ய
புறப்படும் முன்,
உண்மையே - நீ
பேசி விடு !
பல நாள்
சகித்த
எரிமலைகள்
வெடித்துச்
சிதறப் போகிறது,
கோபமே - உன்
எதிர்ப்பைக்
காட்டி விடு !
பொறுமையே - நீ
இன்னும் கொஞ்சம் உறங்கு
விடியலுக்கு நேரம் இருக்கு !
முயற்சியே
அதற்குள் என்ன ஓய்வு,
நீ அடைய வேண்டியது
மேகத்தை அல்ல
வானத்தின் எல்லையை !
சிரிப்பு - அது
மகிழ்வித்தவனுக்கு
கொடுக்கும் சன்மானம்,
செலவழித்து விடு !
சேமித்து வைத்தும்
கடனாளி ஆகாதே !
அழுகையே
உனக்கு அணை கட்டி
ஒரு பயனும் இல்லை - நீ
அமுத நீரா என்ன
அழுக்கு நீர் தானே,
பொழிந்து விடு !
- நா முரளிதரன்
மழைக்கு முளைத்த
காளான் போக,
பல வண்ணங்களில்
நகர்ந்து கொண்டே
அனைவரின்
தலையில் முளைத்த
காளான்கள் !
வேலை நாளின்
காலை வேளையில்
மழை !
- நா முரளிதரன்
மழைக்கு முளைத்த
காளான் போக,
பல வண்ணங்களில்
நகர்ந்து கொண்டே
அனைவரின்
தலையில் முளைத்த
காளான்கள் !
வேலை நாளின்
காலை வேளையில்
மழை !
- நா முரளிதரன்
அறிவில் தெளிவு வேண்டும் - மனக்
குழப்பம் தெளிந்திட வேண்டும் !
ஏழ்மை ஒழிந்திட வேண்டும் - அது, இளைஞர்தம்
எழுச்சியில் நடந்திட வேண்டும் !
தீர்வு கிடைத்திட வேண்டும் - உழைக்க,
வேலை என்னும் நல்ல
தீர்வு கிடைத்திட வேண்டும் - அதனால்
சோர்வு மரித்திட வேண்டும் - தின்ற
சோறும் செரித்திட வேண்டும் !
தூக்கம் கலைக்கும் கனவுகள் வேண்டும் - எதிர்காலம்,
ஏக்கம் கொள்ளும் நிகழ்வுகள் வேண்டும் !
செல்வம் கிடைத்திட வேண்டும் - மலிவாய் கல்விச் செல்வம் கிடைத்திட வேண்டும் !
விதைகள் ஊன்றிட வேண்டும் - நல்ல
மேதைகள் கொண்டு
விதைகள் ஊன்றிட வேண்டும் !
ஆயிரம் ஆண்டுகள்
தாண்டியும் செழிக்க
இன்பமாய்
வண்ணக் கனவுகள்
கண்டது போதும்,
நம் கனவுக்கு நாமே
வண்ணம் தீட்டுவோம் வா !
நாம் எழுகையில்
மறைவது கனவல்ல,
விழுகையில்
துளிர்ப்பதுவே அது !
திரையில் ரசித்த
நாயகனாய் உனை
தினமும் கனவில்
காண்கிறாயே !
விழித்திரையின்
பின்னிருப்பவனை
சற்றே,
விடுதலை செய்து
வெளிக்கொணறு !
நம்
வயிற்றை நிரப்பிய
வயல்கள் எல்லாம்
அங்கே,
வறண்டு போய்
வாடிடுதே !
நம் சந்ததிக்கே
பந்தி பரிமாற,
இன்றே
பசுமை பூசும்
கனவைக் காணு !
சகிப்புத் தன்மை
எனும் பேரில்
சத்தியம் பல
தூங்கிக் கொண்டிருக்கும்
சடலக் கனவுக்கு,
ரத்தச் சிவப்பை
அழுத்திப் பாய்ச்சி
உயிர்த்தெழச்
சத்தம் கேட்டு
எட்டிப் பார்த்தது,
தொட்டு விடும் தூரத்தில்
கிட்டவே இப்போ !
மேகத்தில் மறைந்து
கண்ணாமூச்சி ஆடிய
மின்மினி பூச்சி,
கண்களை நிரப்பி
பிரம்மாண்டமாய் இங்கே !
நெடுநாள் ஆசை
நிறைவேறும் கணமா,
இல்லை
வென்மேகம் துளைத்து
விண் போகும் பயமா,
நெஞ்சம் துடிக்கிறது
கொஞ்சம் வேகமாய் !
உனக்குள் வரும் முன்
ஓய்வுக்குக் கிடைத்த
சில மணி நேரத்தில்
சாட்சிக்கு ஒரு செல்ஃபீ - ஊர்
காட்சிக்கு ஒரு ஸ்டேட்டஸ் என
முக்கால் வாசி கழிய,
கடைசி நிமிடங்கள்
துடிப்பைக் கூட்டின
படுவேகமாய் !
காவித் துண்டு
போட்டவர்
கந்தா கடம்பா என,
கருப்புத் துண்டு
போட்டவரும்
கடவுளே கடவுளே
வெள்ளைப் பனி கோர்த்து
காலை
வாசற்கோலம்
போட்டு வைப்பேன்,
ஒளி
பனியில் பட்டுத்
தெறிக்கும் அழகை
உனைத் தட்டி எழுப்பிக்
காட்டிடவே !
நீ நட்டு வைத்தப்
பூச்செடிகள்
பூத்திருக்கா என
பார்த்திருக்க,
பறித்த பூக்களை எல்லாம்
மீண்டும்
மலரச் சொல்லிக்
கேட்டிருந்தேன் !
ரோஜாச் செடியில், மாறி
மல்லிகைப் பூத்திருக்க,
நீ குலுங்கிச்
சிரித்ததிலே
உன் முகத்தில்
ரோஜா பூத்திருச்சே !
உதிர்ந்த இலைகள்
உலரும் முன்னே
ஊன்றி வைத்துக்
களைத்திடுவேன் !
இலை இசைந்தாடி
தரை வீழாதிருக்க
தரைக்காற்று வீசத்
தடைப் போட்டிருந்தேன் !
மரம் கண்டு ரசித்து, நீ
திரும்பும் வரை !
முப்பது நாளும் முழுமதி
வானில்
முடிச்சுப
வீறிட்டு அலறிய பூப்பந்தை
என் கையில் ஏந்தியபோது
வாழ்நாள் சாதனையாளன்
விருதை பூங்கொத்து கொடுத்து
போற்றுதல்போல்
பூரித்துப் போனேனே.
பத்துமாதம் சுமந்த பாரம்
இறக்கிவிட்டாள்....
அவள் இறக்கிய பாரம்
ஏறிவிட்டதடி... மகளே
என் நெஞ்சுக்குள்ளே...!
உன் பிஞ்சு விரலை - அந்த
பஞ்சு பாதத்தை தடவும் போது
சில்லென்று ஒரு பந்து
தொண்டைக்குழியிலிருந்து
உச்சிமண்டை வரை உருண்டு
குளிர்ந்து போகிறதடி.....!
போக்கை வாய் சிரிப்பிலும்
கெக்கபிக்க பேச்சிலும்
என்னை இழந்து
லேசாகிப்போகிறேனடி....
அந்த தேவ பாஷை
எனக்கும் கொஞ்சம்
புரிகிறதடி....
நீ புரண்டு படுக்கையில்
நானும் புரண்டு போகிறேனே..
எ
கதையையும்
கவிதையின் நடையையும்
சொல்லி
எனக்கு தமிழ் தந்தது நீ !
முதலும் கடைசியுமாய்
வண்ணம் பூசி
நடுவில் நிறைய
கருப்பைப்பூசிய
எம் வாழ்வின் பக்கங்களை
உணர்த்தியது
உன் பக்கங்கள் !
இமாலய வெற்றி
இந்தியா பெற்றதென,
நீ சொல்லிக்
கேட்கக் காத்திருந்த
இன்ப இரவுகள் தந்ததும் நீ !
எத்தனை மகான்கள்
சொல்லியும் ஏறாத
தத்துவம் பல,
உலகோடு சேர்ந்தும்
பெறாத அனுபவம் பல
திருப்பும் பக்கங்களில்
தெளிவாய்
சொன்னது நீ !
வல்லரசின் வலிமையையும்
எத்தியோப்பியா ஏழ்மையையும்
உலகப் பக்கத்தின்
அடுத்தடுத்த
பத்தியில் காட்டி
உலகின் பல முரண்கள்
சொன்னதும் நீ !
வரலாற்றைத் த
மரத்தடியில் வெளிச்சப் புள்ளிகள்
செங்கால் புறா நடை அங்கும் இங்கும்;
சோளம் கொரித்துக்கொண்டு ஒருவன்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
நான் புல்வெளி, என்னைக் காதலி
தோட்டத்தில் வாசகம் ;
மதியம் ஈக்களும் எறும்புகளும் புல் மேல்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
பின்னிரவில் பாடல்கள்
பலர் தூக்கத்தில் ;
ஒருவர் மட்டும் தூங்காமலிருக்க
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
முன் மாலை அருவியின் சாரல்
அதிலே, பற்பல வண்ணங்கள் ;
பிஞ்சுக் கைகளின் அழைப்பால் கவனிக்கப்படா
சுயம்.....
தானே சுயமாய் உருவாவது....
தானே சுயமாய் நினைப்பது.....
தானே சுயமாய் செயலாற்றுவது....
ஆம்.
இப்படித்தான்
என் படிப்பு சொல்லிக்கொடுத்தது.
என் அனுபவம் கற்றுத்தந்து.
என் வாழ்க்கை வாழ்ந்து காட்டியது.
ஆனால்
எனக்கொரு சந்தேகம்.
நாமே எப்படி
சுயமாக நினைப்பது?
சுயமாக உருவாக்குவது?
சுயமாக செயலாற்றுவது?
கண்ணுக்கு தெரியாத ஒருவனால்
நம் நினைவுகளில்
ஏற்கனவே விதைக்கப்பட்டதுதான்.
அது மட்டுமல்லாமல்
நம் பெற்றோர்...மனைவி...மக்கள்...
சுற்றம்...நட்பு...
இவர்களின் பங்களிப்போம் ஏராளம்.
அப்படியென்றால் சுயம்?
ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட
ஒன்றை சில...சில...மாற்றங்கள் செய்து
புதி