என்றும் ஒழுக்கம் பிழையா தவர் - ஆசாரக் கோவை 21
இன்னிசை சிந்தியல் வெண்பா
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர்! 21
- ஆசாரக்கோவை
பொருளுரை:
என்றும் நல்ல ஒழுக்கத்தினின்றும் தவறாத பெரியோர்கள் விருந்தினர், மிக முதியவர்கள், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள் என்று சொல்லப் பட்ட இவர்களுக்கு உணவு கொடுக்காமல் உண்ண மாட்டார் .
கருத்துரை:
விருந்தினர் முதலியவர்களுக்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது.
சிறை - சிறகுகளையுடைய பறவை
விருந்தினர் - புதியவர்; விருந்து - புதுமை;
அவர் இரு வகையார், பண்டறிவுண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தாரும் எனப்படுகிறது.