Piyu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Piyu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 153 |
புள்ளி | : 38 |
கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு..
எனவே படிப்பது,✍️ விருப்பங்கள்.
மச்சுவீடு வேணான்னு
தென்னகீத்து வேஞ்சுட்டு
தன்னோட மாட்டுக்கு
பனங்கீத்து வேஞ்சவன்டா
நம்மூரு விவசாயி !!
வட்டிக்காரன்கிட்ட கடன்வாங்கி
மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்
வீட்டுக்கு ரேஷனரிசியும்
சாப்பிடற அவலமிங்கே
நம்மவூரு விவசாயிக்கு!!
வயசுக்கு வந்த பொன்னவச்சுட்டு
சேத்து வச்ச நகையெல்லாம்
தோட்டத்துல முதல்போட்டு
தேம்பியழுது நிக்கிறாண்டா
நம்ம ஊரு விவசாயி!!
உறவூட்டுக்கு போனாலும்
காபிகுடிக்க நேரமில்லை
கால்நடைக்கு பசிக்கும்னு
கால்வலிக்க ஓடிவருவான்
நம்மவூரு விவசாயி !!
மணிபன்னெண்டு ஆனாலும்
சூரியன் சுட்டெரிச்சலும்
வேர்வையிலே நனைஞ்சுக்கிட்டு
பாடுபடறவன்டா
நம்ம ஊரு விவசாயி !!
இட்லி தோசை சாப்பிட்
எது நிரந்திரம் இப்பரந்த பூமியில்
கடல் வற்றி மலையாகிறது இமயம்
நேற்று வரை பாய்ந்த நதிகள்
சுவடு மட்டும் தெரிய காணாமல் போகும்
காடுகள் மறையலாம் இத்தனை ஏன்
வானின் சந்திர சூரியரும் இன்னும் தாரகைகள்
செவிக்கு
உணவில்லை
என்றபோது
சற்றே ...
வயிற்றுக்கும்
ஈயப்படும் ...
இது நான் கேட்ட
பழமொழி .....
புத்தகங்களே
உன் மீது கொண்ட
காதலே...
உணரவும்
செய்கிறேன்
காதல் என்ற
புனிதத்தை
உன்னிடத்தில் ....
புத்தகங்களில்
பொதிந்திருக்கும்
பொற்குவியலே ...
உன்னை சுகித்த
நாள் முதல்
உன்னிடம்
கொண்டேன்
தீரா காதலை !.....
🌼🙏🌼
✍️
piyu
அந்த கார் ஊட்டி செல்லும் மலை பாதையை அடைந்து அதன் கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்ல இன்னும் ஒரு மணி நேர பயணம் இருந்தது .
மயூரன் மற்றும் அவன் மனைவி
ஸ்ரீ லேகா இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாத காலமே ஆனதால் ஊட்டி ஹனிமூன் கொண்டாடும் மகிழ்ச்சியில் சென்று கொண்டிருந்தனர் .
காரின் மெல்லிய இசையும் வழியில் தெரியும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்தவண்ணம் .
வழியில் அங்காங்கே கிடைக்கும் இளநீர் மற்றும் ஸ்னாக்ஸ் கொரித்து கொண்டும் பயணித்தனர்.
அவ்வபோது கண்களால் மௌன மொழி பேசியபடி . இந்த இன்பமான தம்பதிகளை சுமந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென்று பாதையில் நின்றுவிட்டது .
வழியில் உதவிக்
அரண்மனை போன்ற வீட்டில் எப்போது ஓய்வு நேரம் கிடைத்தாலும் தன் புத்தக அறையிலேயே செலவிடுபவன் ருத்ரன் .
ஆம்... கதையின் நாயகன் இவன் தான் .
படித்து படித்து பண்பாளனாக மாறிய செல்வந்தன் . மூன்று தலைமுறைக்கு அமர்ந்து உணனும் செல்வம் பெற்ற குடும்பத்தின் மூத்த மகன் .
புத்தகங்களின் மீது கொண்ட காதலால் திருமணத்தை தவிர்த்து வந்தவன் . வயது முப்பத்தைந்தை கடந்துவிட்டது .
வீட்டில் ருத்ரனுக்கு இரண்டு உடன் பிறப்புகள் இருக்கின்றனர் . ஒன்று தங்கை மற்றொன்று தம்பி .
பக்கத்து ஜெமீன் பரம்பரையில் யாழ்வேந்தன் என்ற மணாவாளனுக்கு திருமணம் முடித்து அனுப்பிவிட்டன தங்கை மீனலோச்சினியை .
மீதம் இருக்கும் தம்பி
மணம் வீசும் மலரொன்று
மலர்ந்திருக்கும் நிஜ பொழுதே
செடிகளுக்கு பேருவகை ..
நிறம் கொண்ட மலர்களிடத்தே
வண்டுகளுக்கு பேருவகை ....
மழை வரும் நேரத்தில்
மண் கொள்ளும் பேருவகை...
கவிதை வரிகள் கண்டுவிட்டால்
மனம் கொள்ளும் பேருவகை ....
✍️
Piyu
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
சீவி முடித்த அடர்முடி
வட்ட வட்ட நிலா முகம்
நெற்றியில் குங்குமப் பொட்டு
நேர்த்தியான மூக்கு
அதில் சிவப்புக்கல் மூக்குத்தி
அழகிய கர்ணங்கள் அதில்
மணம் வீசும் மலரொன்று
மலர்ந்திருக்கும் நிஜ பொழுதே
செடிகளுக்கு பேருவகை ..
நிறம் கொண்ட மலர்களிடத்தே
வண்டுகளுக்கு பேருவகை ....
மழை வரும் நேரத்தில்
மண் கொள்ளும் பேருவகை...
கவிதை வரிகள் கண்டுவிட்டால்
மனம் கொள்ளும் பேருவகை ....
✍️
Piyu
கவிதை என்பது...
காகிதக் கடலில்
எழுத்துகளின் வெள்ளோட்டம்!
நடைபழகும் குழந்தைபோல்...
இலக்கிய வீதிகளில்
தடுமாறி விழும்
கவிஞனின் விடாமுயற்சி!
கற்பனைக் கொடியில்
கசக்கி காயப்போட்ட
எண்ணங்களில்...
பக்குவமாக உலர்ந்த
வார்த்தைகளின் சேமிப்பு!
வாழ்வில் தோற்றுப்போன
ஏதோ ஓர் உயிரின்...
வெற்றிக் கதவுகளை
தட்டும் கரங்கள்!
ஸ்வரங்களை
மனதில் அடக்கிக்கொண்டு
அதன் அலைநீளத்தின்
நீட்சியில்....
வலி தாங்காத
ஊமைக்குயிலின்
சிறகுகள் பாடும் சங்கீதம்!
வருத்தத்திலும்...
மகிழ்ச்சியிலும்...
மூளைக்கு மனம் அனுப்பும்
அதிர்வுகளை
பதிவு செய்யும்
எழுதுகோலின் தரவுகள்!
வாழ்வின்
அற்புத நிமிடங்களை
👉 நாடு எங்கும் காற்று மாசு முற்றிலும் குறைந்து காற்று வழி மண்டலம் பல நூற்று ஆண்டுகளுக்கு அப்புறம் சுத்தமானது....
👉 நாடு எங்கும் சாலை விபத்து பெரும் அளவு குறைந்தது...இதனால் குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 உயிர் இழப்பு தவிர்க்கப்படுகிறது....
👉சாலைகளில் விபத்து இல்லாமல் போனதால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க படுகிறது....
👉வாகன சத்தம் தொலைந்து ..தொலைந்து போன பறைவகளின் சத்தம் இப்போது கேட்கிறது...
👉புனித ஆறுகள் தங்களது உண்மையான புனித தன்மையை தற்பொழுது தான் பெற்றுள்ளது..குறிப்பாக அத்தனை நதிகளும் சுத்தமானது..
👉தேவை இல்லாத கலவரம்..ஊர்வலம் ஏதும் இல்லாமல் அனைத்து ஊர்களும் அமைதி பெற்