😡கொரோனா யுத்தம் 😠😠

👉 நாடு எங்கும் காற்று மாசு முற்றிலும் குறைந்து காற்று வழி மண்டலம் பல நூற்று ஆண்டுகளுக்கு அப்புறம் சுத்தமானது....

👉 நாடு எங்கும் சாலை விபத்து பெரும் அளவு குறைந்தது...இதனால் குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 உயிர் இழப்பு தவிர்க்கப்படுகிறது....

👉சாலைகளில் விபத்து இல்லாமல் போனதால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க படுகிறது....

👉வாகன சத்தம் தொலைந்து ..தொலைந்து போன பறைவகளின் சத்தம் இப்போது கேட்கிறது...

👉புனித ஆறுகள் தங்களது உண்மையான புனித தன்மையை தற்பொழுது தான் பெற்றுள்ளது..குறிப்பாக அத்தனை நதிகளும் சுத்தமானது..

👉தேவை இல்லாத கலவரம்..ஊர்வலம் ஏதும் இல்லாமல் அனைத்து ஊர்களும் அமைதி பெற்றது..

👉மது வியாபாரம் இல்லா நாடாக மாறி பல தாய் மார்களின் கனவு மெய்ப் பட்டது..

👉இறைவன் என்பவன் நாலு சுவர் உள்ள கோவிலில் இருப்பவன் இல்லை என்பது புரிய வைக்கப்படுகிறது...

👉பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடனும்...குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடனும் முழு நேரத்தை செலவழிகின்றனர்...

👉ஜாதி...மதம்..இனம்... மொழி...தாண்டி மனிதனை உலகு எங்கும் ஒன்று திரட்டி ஒரே விஷயத்திர்க்காக போராட ஒற்றுமை படுத்துகிறது....

👉எத்தனை பெரிய அழகனோ...!! அழகியோ.!!..இன்று அத்தனை முகங்களும் #முககவசத்திற்குள் தான்!! ....இவ்வளவு தான் அழகு, என்பதை நான் அம்புட்டு அழகு என்ற கர்வதில் உள்ள மனிதர்களுக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது....

👉பணத்தையும் தாண்டினது மனித வாழ்க்கை பணம் மட்டும் ஒருவனை வாழ வைக்காது பணத்தால் எந்த சூழலிலும் ஒரு மனிதனைக் காக்க முடியாது, என்பதை மனிதனுக்கு இயற்கை பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறது #கொரோனா எனும் ஆசிரியர் மூலம்...

👇👇👇👇👇👇👇👇👇👇👇
இந்த ஆசிரியர் கொஞ்சம் கடுமையானவர் தான்..பொறுமை இழந்தால் அவர் தரும் தண்டனை கொடுமையானது தான்..

👉இனியாவது நமக்குள் ஓர் உறுதி மொழி எடுப்போம்..
இயற்கைக்கு புறம்பான வகையில் ஏதும் செய்யாமல் இயற்கையை மதித்து எல்லா உயிர் இனங்களையும் தன் உயிராக நினைத்து வாழ கற்றுக்கொள்வோம்...

மனிதனை மனிதன் ஏமாற்றாமல் ..சொன்ன சொல் காத்து..பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,மனித மனதிற்கு மதிப்பு கொடுத்து வாழ முனைவோம்...

இந்த மனித வாழ்வென்பது வெறும் ஒரு காற்றுக்குமிழ் போல், எந்த நொடி பொழுதும் அந்த குமிழ் உடையலாம் என இன்றைய உலகசூழல் பார்த்து கற்றுக் கொள்வோம்..

இதில் பணம்...பதைவி...புகழ்...பகட்டு எல்லாம் அந்த இயற்கைக்கு முன் இறைவனுக்கு முன் ஒன்றும் இல்லை என உணர்ந்து கொள்வோம்...

☀️தீதும் நன்று தரும்.... என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்...☀️

எந்த சூழலிலும் தன்னை மிகை படுத்திக் கொள்ளமால்...✍️
தன்னை தாழ்திக்கொள்ளாமல்✍️
பிறரை எக்காரணதிற்கும் எதிர் நோக்காமல்✍️
எவரையும் எதிரியாக எண்ணாமல்✍️
இறை என்ற ஒன்றை முழுமையாக மனதில் நிறுத்தி✍️
எதார்த்தத்தை எண்ணத்தில்நிறுத்தி✍️
நேற்றைய பொழுதை மறந்து
நாளைய பொழுதை துறந்து
இயற்கையோடு இயன்று இன்றைய பொழுதில் அமைதியோடு வாழ்ந்தால் ...
நமக்கு எதுவோ அதை இறைவன் தருவான்...

இனியாவது மாறிடுவோம்✍️
கோரொனா வென்றிடுவோம்✍️

என்றும்....என்றென்றும்....
ஜீவன்...✊✊

எழுதியவர் : ஜீவன் (8-Apr-20, 2:13 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 512

சிறந்த கட்டுரைகள்

மேலே