திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 11-Oct-1962 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 2824 |
புள்ளி | : 209 |
நான் பகுதி நேர கல்லூரிப் பேராசிரியர். எனக்கு தெய்வீகப் பாடல்கள் புனைவது. மற்றும் இசைப்பது, தேச பக்திப் பாடல்கள், இயற்கை வாழ்த்துப் பாடல்கள் , நன்னெறிக் கதைகள் போன்றவை இயற்ற மிகவும் பிடிக்கும். மேலும் தமிழ் மொழிக்காக என்னால் இயன்ற பணிகளை அவ்வப்பொழுது ஆற்றியும் வருகின்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றன்று பிரித்து எழதுக
Karaiyoram pirithu Aluthuga
1. அம்பிகையே ஈஸ்வரியே மெட்டு
தந்தை உந்தன் தாள் மலரைப்
போற்றிப் பாடித் தேடி நாளும் ஓடி வந்தேன் நான்
தாழ்மையுடன் வேண்டி நிதம்
வாழ்த்திப் பாடும் பாடல்களை ஏற்றருள்வாய்…(தந்தை)
பாசமுடன் நாளும் நாளும் பேணிவளர்த்தாய்
பல பண்புகளைப் புகட்டி என்னைப் பாதுகாத்தாய்(2)
பலவாறு துன்பங்களை ஏற்றபோதிலும்…..
பெரிதாகக் காட்டிடாடமல் பாசம் காட்டினாய்(தந்தை)
வேண்டியதைத் தேடித் தேடி நாளும் நல்கினாய்….
சிறிது வெறுப்பேதும் காட்டிடாமல் வாரி அணைத்தாய்(2)
வேதனைகள் அடுத்தடுத்து உற்ற போதிலும்…………….
அதனை வெளிக்காட்டாப் பெருந்தகை உனக்கீடு ஏதப்பா(தந்தை)
அன்புடன் ஸ்ரீ விஜயலஷ்மி
கோயம்புத்தூர் 22
அவளுக்குள் (சிறுகதை)
அன்று மதிய இடைவேளையில் டிபன் பாக்ஸை திறந்து வைத்துவிட்டு, ஏதோ சிந்தனையில் ழுழ்கினாள் கயல்விழி.
ஏய் கயல், என்னடி உணவு அருந்தாமல் தீவிரமாக யோசனை? எந்தக் கோட்டையை எட்டிப்பிடிக்க…. இது தோழி வசந்தாவின் கம்பீரமான குரல். அது எதுவும் காதில் விழாமல் வெறித்தபடி யோசனையில் ஆழ்ந்தாள். ஆம் இன்னும் 1 வருடம். ஓய்வூதியம் பெறும் வயதை எட்டியிருந்தாள் அவள்.
அப்பா! 15 வயதில் பள்ளிப்பருவம் முடித்து பணியில் சேர்ந்தது; எத்தனை இடத்தில் பணியில் அமர்ந்தது; தனியார் பணியிலேயே வாழ்க்கையை முடித்தது; செவிப்புலன் குன்றி, கண்பார்வை மங்கி, உடல் நோய்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து சிக்கெனப் பற்றிக்க
பாக்யாத லஷ்மி பாரம்மா.... (புரந்தர தாசர் பாடல் தமிழ் வடிவில்
பாக்யத்தைத் தரும் லஷ்மி வாம்மா -
சௌ பாக்யத்தைத் தரும் லஷ்மி வாம்மா
என் அம்மா… சகல
சௌ பாக்யத்தைத் தரும் லஷ்மி வாம்மா
சதங்கை அணிந்த கால்களில் சப்தம்
செய்தவாறு அடிமேல் அடியினை வைத்து
நன்கு படித்தவர்கள் பூஜிக்கும் வேளையில்
தயிரினில் வந்திடும் வெண்ணெயைப் போலே (பாக்யத்தைத்)
தங்க மழையினைப் பெய்தவாறு வந்தே
எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிடுவாய்
கோடிக் கதிரவனின் ஒளியினைக் கொண்ட
ஜனகனின் மகளே சீதையே விரைவில் (பாக்யத்தைத்)
எங்கும் செல்லாமல் உன் அன்பர் இல் வந்தால்
எப்போதும் திருவிழா என்றென்றும் மகிழ்ச்சி
உண்மையை இயம்பும் அன
வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடம் 1 கரிசல் மண்ணில் கற்குவியல்
வினாக்கள்:
1. கரிசல் மண்ணில் விளையும் பொருள்கள் யாவை?
கரிசல் மண்ணில் விளையும் பொருள்கள் கம்பு, பருத்தி, சோளம், மல்லி போன்றவை.
2. பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எத்தகையோர்?
உள்ளத்தில் வீரம் மிக்கவர்கள்
உயிரைவிட மானத்தைப் பெரிதென நினைக்கும் கொள்கை அவர்களின் ரத்தத்தில் ஊறியிருந்தது.
கொடுமைகளைக் கண்டு குமுறினர்
எதிர்ப்புகளுக்கு இன்முகம் காட்டினர்
வலிமைமிக்க எதிரிகளையும் வரவேற்றுப் பகை முடிப்பவர்
சாதிமத வேற்றுமையின்றி ஒன்றிணைந்து எதிரிகளை வீழ்த்திச் சரித்திரம் படைத்தனர்
3. தூத்துக்குடி மாவட்டத்தில் வீரம் விளைந்த பகுதி
பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற
புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்
பாகம் 3
வழங்குபவர்
திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22
அன்பு மாணவர்களே! கடந்த பதிப்பில் வெளியிட்டிருந்த புணர்ச்சி விதிகள் உங்களுக்குப் புரிந்தும், பிடித்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ இந்த மூன்றாம் பாகத்தினை உங்களுக்காக வெளியிடுகின்றேன்.
பயில்வோமா! வாருங்கள்: ஐயம் இருப்பின் தெளிவு பெற இதோ என் கைப்பேசி எண்கள் உங்களுக்காக. 9843297197 / 9043069396
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பினையும் நல்லாதரவையும் தர அன்புடன் பணிகின்றேன். இந்த நூல்கள் அனைவற்றையும் என் அன்பு பெற்றோர்களின் பொற்பாத கம
கவிதை, கதைகளை எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்
திருக்குறள் கவிதை
இதய ஒலிகள் அனைத்தினையும்
ஈரடி தனக்குள் அடக்கிவிட்டு
ஈடு இணையற்ற புகழனைத்தும்
இனிதாய் தனக்கே ஈட்டிக்கொண்ட
சீரினைப் பெற்றது திருக்குறளே
சிந்தை குளிர பல வரிகள்
செம்மைப் பெருக பல வரிகள்
சிறப்பாய் வாழப் பல வரிகள்
எண்ணில் அடங்கா கருத்துக்கள்
ஏற்றம் மிகுந்த சொல்லடைகள்
என்றென்றும் மிளிரும் ஒளிச்சுடராய்
எங்ஙணும் பரவிடும் அதன் கதிர்கள்
சாதிபேதம் எதுவுமின்றி
சமத்துவமாக விளங்கிநின்று
சர்வமயமாய் விளங்கி என்றும்
சாதனை புரியும் திருக்குறளே!
வார்த்தைகள் இல்லை வருணிக்க
வாழ்த்தொலி போதா எடுத்தியம்ப
வையகம் எங்ஙணும் செருக்குடனே
வட்டமிடுது திருக்குறளே!
ஒன்றும் புரியவில்லை
எதோ நினைக்கிறேன்
எல்லாம் சூனியம்
ஏதேதோ குரல்கள்
சிலபொழுது நிசப்தம்
சிலபொழுது பேரிரைச்சல்
பயம் பயம்
புரியாத பயம்
எங்கிருக்கிறேன்
என்ன செய்கிறேன்
எங்கிருந்தேன்
என்ன செய்தேன்
புரியவும் இல்லை
பிரியமான அரவணைப்புகள்
யார் இருக்கிறார்கள்?
என்னைச்சுற்றி
பார்க்க ஆவல்
பரிதவிக்கும் இதயம்
சிலபொழுது சிரிப்பு
சிலபொழுது அழுகை
ஏன் இந்தத் துடிப்பு?
மலரத்தான் ஆசை
நாளாக வேண்டுமே?
காண்பேனோ புது உலகை?
காணாமலே மறைவேனோ?
எத்தனை சிந்தனைகள்?
இந்த பிஞ்சு அரும்பிற்குள்?