சந்திர மௌலீஸ்வரன்-மகி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்திர மௌலீஸ்வரன்-மகி
இடம்:  பெரிய குமார பாளையம்,
பிறந்த தேதி :  01-Jan-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  748
புள்ளி:  114

என்னைப் பற்றி...

சந்திர மௌலீஸ்வரன்.மகி. மின்னணுவியல், கணினியியல், இயந்திரவியல் ஆகியவற்றில் பட்டதாரி. இயற்கை வேளாண்மை அறக்கட்டளை நிறுவனர்-அறங்காவலர். அழகுத் தமிழ் மரபுக் கவிதை ஆர்வலர். தொழில்-இயற்கை வேளாண்மை. துணைத்தொழில்-ஆசிரியர்-(ஆவாஸ்) - ஆஸ்ட்ரா வாழ்வியல் கல்வி நிறுவனம்.

என் படைப்புகள்
சந்திர மௌலீஸ்வரன்-மகி செய்திகள்
சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2023 2:25 pm

""" தொண்டைக்குக் கீழே போன பின்னால்! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

( இக்கதை கடந்த 1970 களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு பெரும்புகழ் பெற்ற சொற்பொழிவாளர், சமயச் சொற்பொழிவாளர் சொன்ன உண்மைக் கருத்தின் அடிப்படையில் உருவான கதை. அவர் ஒரு முறை, அசைவ உணவு சமைக்கும் வீடுகளில் அதற்காகத் தனிச் சமையல் அறை, தனிப் பாத்திரங்கள், தனிக் கருவிகள், தனி அடுப்பு என்று வைத்திருப்பதைத் கிண்டலாகக் குறிப்பிட்டு, "தொண்டைக்குழிக்குக் கீழே போனபின் அவை என்ன சைவ உணவு அசைவ உணவு என்று பிரிந்தா இரண்டு இரைப் பைகளில் விழுகின்றன? தொண்டைக்குக் கீழே போனபின் சைவமாவது அசைவமாவது எல் - ல் -

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2023 2:20 pm

""" மிகவும் சுலபமான குடும்பக் கட்டுப்பாடு! """

சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

ஆப்பிரிக்கா. ஆமஃஜான் காடு. ஒரு நதிக்கரை ஓரமாக இருந்த ஒரு சிறிய குக் குக் குக்கிராமத்தில் ஊர்க்கூட்டம். மாட்டிவிகளின் கொலபாயோ கிராமம். ஊர் மைதானம். ஷிக்காரி தொப்பி அரை டவுசர் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். அவர்கள் எல்லாரும் சொல்லிவைத்த மாதிரி, ஒரு அர்ரதல் ஜீப்பின் பின்பக்கத்தில் அமைத்திருந்த டீக்கடை பெஞ்ச் மேடையில் "கட்டியிருக்கும் இந்த நார்க்கயிறு தாங்குமா?" என்று அங்கேயே பார்த்துக் கொண்டு அச்சத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை விட அந்த ஜீப் டிரைவருக்கு ஒரு பெரிய அ

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2023 2:12 pm

""" தொழிலிற்குப் பொருத்தமான இருப்பிடம்! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

ஆளுங்கட்சி அமைச்சர் - ஆட்டையாம்பட்டி.
வாஷின் மெஷின் உற்பத்தியாளர் - வாஷிங்டன்.
வாஷிங் பௌடர் உற்பத்தியாளர் - வாஷிங்டன்.
நேஷனல் ரிங் சர்க்கஸ் நிறுவனர் - சிங்கப்பூர்.
வங்கிக் காசாளர் - காஷ்மீர்.
பாம்பாட்டி- - நாக்பூர்.
ஆள்துளைக் கிணறு அமைப்பவர் - போர்பந்தர்.
ராணுவ அதிகாரி - போர்பந்தர்,
வெங்காய வியாபாரி - பெல்லாரி.
மேம்பாலக் கட்டுமான நிறுவனர் - பாலமேடு.
பாக்கு உற்பத்தியாள

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2023 2:00 pm

""" கல்லிற்குள் அமுதம் - ஒன்பது மணி நேர வேலை """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

(கதை மாந்தர்கள் அதிகமாக மலையாள மொழி பேசுவதாக இருப்பதால் இயல்பாக மலையாள மொழிச் சொற்களும் அவை இருப்பதால் ஆங்கில மொழிச் சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இயந்திரவியல் மற்றும் விமானபடையுடன் தொடர்புடைய ஆங்கிலத் தொழில் நுட்பச் சொற்களும் அதிகமாக உள்ளன. தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் பொதிந்த மண்ப்பிரவாள நடை என்றும் கொள்ளலாம்!)


சுப்பிரமணி புதிதாகப் படையில், விமானப் படையில், சேர்ந்திருக்கிறான். ஆறேழு மாத காலம் ஆகிறது. தனது சுறுசுறுப்பாலும் மிகுந்த பணிவாலும், முன்பின் அவன் அறிந்திறாத புதிய

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2023 7:05 pm

மங்கல தீபம் வரிசையில் ஏற்றுவர்
திங்களெழில் மங்கையர் கார்த்திகை வீதியில்
குங்குமம் நெற்றி தனில்துலங்க தீபங்கள்
சங்கமப் பேரெழில் பார்
----இன்னிசை வெண்பா

மங்கலநற் தீபங்கள் வரிசையிலே ஏற்றுவார்கள்
திங்களெழில் மங்கையர்கள் கார்த்திகைப்பொன் வீதியிலே
குங்குமம்நல் லெழில்நெற்றி தனில்துலங்க தீபங்கள்
சங்கமத்தின் பேரெழில்பார் கார்த்திகைநன் நாளினிலே

-----கலிவிருத்தம் ---நற்காய் நான்கு எதுகை மோனை

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி! குறிலீற்று மா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்; விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்! 2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும் விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்) (1, 3 சீர்களில் மோனை)... மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை யிணையடி நீழலே! - [திருநாவுக்கரசர் தேவாரம்] 28-Nov-2023 7:17 am
யாப்புக் கருத்துப் பரிமாற்றத்தில் மகிழ்ந்து கருத்துரைத்ததில் மிக்க மகிழ்ச்சி கம்பனின் தண்டலை மயிகளாட தாமரை விளக்கந் தாங்க .....எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிக்க நன்றி கவிப்பிரிய சந்திர மௌலீஸ்வரன்-மகி 27-Nov-2023 4:03 pm
கவிஞர் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! மிக்க நன்றி! இதுதாம் முறையான செழுமையான ஆரோக்கியமான இலக்கணக் கவிமேடைக் கருத்தாட்டம், கருத்தூட்டம்!! இவ்வகையான கருத்தாட்டங்களைப் பார்த்து நீண்ட நெடுங்காலமாயிற்று! சட்டென்று கண்களுக்குத் தெரியும் தவறுகளையும் இலக்கண மாற்றுக்களையும் திருத்தப் போனால், ஒவ்வாது சுணங்கும் இக்காலத்தில் இப்படிப் பார்த்துப் பார்த்து வழிகாட்டுவது ஒரு மிகப் பெரிய மாண்பு ஆகும்! இந்த ஒரு பதிவில் நீவிர் இருவரும், யாப்புக் கவி இலக்கணம், மரபுக் கவி உறுப்பிலக்கணம், அசை - சீர் - அடி - தொடை அமைப்பு என்று ஒரு கவியாக்க வகுப்பினையே தந்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி! மிக்க நன்றி! """உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே. (கம்பன்) உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் (சேக்கிழார்) """ --- ---- கம்பனின் ஆக்கங்களையும் சேக்கிழார் பெருமானின் ஆக்கங்களையும் ஊன்றிப் படித்தாலே போதும் தமிழ்க்கவியாக்க இலக்கணம் மனதில் பதிவேறும்தானாக, அல்லவா? சிறுவயதில் படித்த "மருத நில மாண்பு " தண்லலை மயில்கள் ஆட - - - - -" இன்றும் என்னுள் அன்றாடம் இசைக்கிறது!! 27-Nov-2023 3:22 pm
அமைக்கலாம் உரிய கற்பனைவரின் இவ்வாறும் முயல்கிறேன் 27-Nov-2023 2:27 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2023 12:56 pm

மோனைக்கு முட்டியே மோதிடும் பாழ்நெஞ்சே
ஆனைக்கா அற்புதன் அப்புநாமம் போதுமே
தேனைப் பிழிகொன்றைத் தார்மார்பன் அந்தயிளம்
மானைச்சேர் வானை நினை
----இன்னிசை வெண்பா

மோனைக்கு முட்டிமுட்டி மோதுகின்ற பாழ்நெஞ்சே
ஆனைக்கா அற்புதனாம் அப்புநாமம் போதாதோ
தேனைச்சிந் தும்கொன்றைத் தார்மார்பன் அந்தயிளம்
மானைச்சேர் வானைநீயும் நினைத்திடுவாய் நித்தமுமே

---எத்துணை மோனையுடன் முற்றிலும் காய்ச்சீரால்
அமைந்த கலிவிருத்தம்

மேலும்

தங்கள் யாப்புக் கவிதை ரசனைக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள் மிக்க நன்றி யாப்புக் கவிதைப்பிரிய சந்திர மௌலீஸ்வரன்-மகி 23-Nov-2023 12:36 pm
ரசித்துப் படித்து மனமுவந்து சொன்ன அழகிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சந்திர மௌலீஸ்வரன் -மகி 23-Nov-2023 12:33 pm
திரு. கவின் சாரலன், எனக்கு மிக மிகப் பிடித்தமாக கலிவிருத்தக் கவியொன்றைப் பதித்ததற்கு மிக்க நன்றி! எத்தனை எழுதினாலும் ஒரு நாளில் ஒரு கலிவிருத்தத்தையாவது எழுதாவிட்டால் பெரிதாக எதையோ இழந்ததைப் போல் உணர்கிறேன். மிக்க நன்றி! வணக்கம்! 23-Nov-2023 8:50 am
"""மோனைக்கு முட்டிமுட்டி மோதுகின்ற பாழ்நெஞ்சே ஆனைக்கா அற்புதனாம் அப்புநாமம் போதாதோ தேனைச்சிந் தும்கொன்றைத் தார்மார்பன் அந்தயிளம் மானைச்சேர் வானைநீயும் நினைத்திடுவாய் நித்தமுமே!""" - - - - - கவின் சாரலன், இந்தப் பாவிரண்டும் மிக இயல்பாக அமைந்து கடினச் சொற்கள் இன்றி அமைந்துள்ளன! பாராட்டுக்கள்! " - - - தேனைச்சிந் தும்கொன்றைத் தார்மார்பன்!" - - - - அருமை!! 23-Nov-2023 8:47 am
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2023 1:08 am

காதல்
*******
பெற்றோர் பேச்சைக் கேட்காதல்
பிழையா சரியா பார்க்காதல்
கற்றோர் வழிநின் றொழுகாதல்
கற்கச் சொன்னால் பிடிக்காதல்
உற்றார் உறவை மதிக்காதல்
உயரும் எண்ணம் வளர்க்காதல்
முற்றும் திருந்த நினைக்காதல்
முடிவாய் எதையும் ஏற்காதல்
*
கூடா நண்பர் தவிர்க்காதல்
குடியும் புகையும் மறக்காதல்
ஆடா திருக்க ஆகாதல்
அவமா னத்தை துடைக்காதல்
காடாம் தாடி மழிக்காதல்
கவனக் குறைவை தடுக்காதல்
தேடாத் தீமை வெறுக்காதல்
திமிராய்த் திரிய மறுக்காதல்
*
நகத்தைக் கூட நறுக்காதல்
நாளைக் கென்று ஒதுக்காதல்
முகநூல் மூடி வைக்காதல்
முடியை அளவாய் குறைக்காதல்
அகந்தை தன்னை நீக்காதல்
அழுக்குத் த

மேலும்

மிக்க நன்றி, திரு. பழனி ராஜன்! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. """மூன்றுபதின் மூன்றுமுறை காதல் காதல், முத்தாய்ப்பாய் ஒருமுறைதான் பாதல்!" - - - - சரிதான் என்று நம்புகிறேன் நண்பரே! அப்புறம், """மிகவும் நன்றாக ஒரு முத்துச் சரத்தைப்போலக் கோத்திருக்கிறீர்கள். அமைப்பும் இன்னோசையும் மிகவும் பொருத்தமாக இழைந்துள்ளன. ஈற்றடி முடியச் சற்றும் தொய்வில்லாமல் ஒரே குதியோட்ட நடையில் அமைத்துள்லமை மிகவும் சிறப்பானது""" - - - - இதுவும் கூடச் சரிதான் என்றும் நம்புகிறேன் நண்பரே! அப்புறம், திரு. மெய்யன் நடராஜ் அவர்களின் அறுசீர்க்கழிநெடிலடி ஆரிய விருத்தம் மீது நான் எழுதியது, """ மிகவும் நன்றாக ஒரு முத்துச் சரத்தைப்போலக் கோத்திருக்கிறீர்கள். அமைப்பும் இன்னோசையும் மிகவும் பொருத்தமாக இழைந்துள்ளன. ஈற்றடி முடியச் சற்றும் தொய்வில்லாமல் ஒரே குதியோட்ட நடையில் அமைத்துள்ளமை மிகவும் சிறப்பானது""" - - - என்று, பாராட்டித்தானே எழுதியிருக்கிறேன்? 27-Nov-2023 3:56 pm
நன்று ஐயா 06-Nov-2023 3:33 pm
நானே எண்ணவில்லை . நீங்கள் எண்ணிப்பார்த்திருக்கின்றீர்கள். நீங்கள் எண்ணிப்பார்த்ததை எண்ணிப் பார்க்க எண்ணற்ற மகிழ்ச்சி . மிக்க நன்றி ஐயா 06-Nov-2023 3:33 pm
நன்றி 06-Nov-2023 3:31 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2021 1:11 am

காலம் தரும் செண்டு
======================
வறுமையெனும் சுமைகடந்து
விடுவதற்கே நாளும் - தினம்
வருங்கனவு நீளும் - ஒரு
வசந்தமென ஆளும் - அதை
வாழ்க்கையென நம்பிவிடின்
வறட்சிநிலை சூழும்
*
பொறுமையுடன் திட்டமிட்டுப்
புதுவாழ்வைத் தேடும் - சிலர்
புயலெதிர்க்கப் போடும் - பெரும்
போராட்டம் நாடும் - ஒரு
பொன்விடியல் தனைக்காட்டிப்
பூமாலை சூடும்
*
வாழ்வினிலே ஏற்றமதை
வரவழைக்க வென்று - பல
வழிகளிலே சென்று - பலர்
வாசலிலே நின்று - ஒரு
வசந்தமதைக் காண்பதற்கே
வதைபடுவா ருண்டு
*
ஆழ்கடலில் முத்தெடுக்க
ஆசைகொளல் போன்று - பெறும்
ஆர்ப்பரிப்பு தோன்றும் - அது
ஆழமாய்வே ரூன்றும் - தினம்
அலைமீதினில் படகா

மேலும்

மிக்க நன்றி 05-Nov-2021 3:35 pm
மகிழ்ச்சி நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!! மிகவும் நன்றாக அமைந்த சிந்து! "வேர்களற்றுப் போயிடினும் விழுதுகளால் தாங்கும் - மனம் விருட்சமென ஓங்கும் - அதில் விடியும்வரை தூங்கும் - ஒரு விடைதெரியா துயர்பறவை வெண்பனிபோல் நீங்கும்!" இக்காலத்தில் பற்பல துயர்களால் மிக்க மன அழுத்தத்தில் துவளும் மக்கட்கு அருமையாக நம்பிக்கை தரும் கவிதை! மனமார்ந்த பாராட்டுக்கள், திரு, மெய்யன் நடராஜ்! 04-Nov-2021 5:56 pm
மிக்க நன்றி 29-Oct-2021 12:35 pm
உண்மைகளின் தொகுப்பு 28-Oct-2021 6:39 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2020 2:16 am

=============================
மார்கழியாள் பூம்பனியால் மாலைகட்டிச் சென்றதனால்
*மங்கை தை சூடிடவே மலர்ப்பாதம் வைக்கின்றாள்
கூர்விழியாம் கதிரென்னும் கொழுந்தனாரின் பார்வையிலே
-குளுகுளுன்னு நாணமுற குறுநகையும் பூக்கின்றாள்
மார்பினிலே பசுமைதனை மாராப்பாய் போட்டபடி
-மாங்கனியும் தேன்சுவையும் மனசாரத் தருகின்றாள்
ஏர்பிடித்த உழவனுக்கு இன்பமென்னும் செல்வத்தை
-இதயத்தின் வாசலிலே எடுத்திங்கே வருகின்றாள்
**
வருமவளை பொங்கலிட்டு வரவேற்கும்
எழுத்து உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள்

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2019 1:55 am

புது புது கனவுகள்

கனவினை கான,
சிறகுகள் விரித்தேன் !!

சிறகுகள் மிதக்க,
இலக்குகள் புலர்ந்தது !!

இலக்கினை எட்ட,
படபடத்த சிறகுகள் !!

தளர்வினை கொண்டு,
தனிந்தது கீழே !!

சிறகுகள் அகல,
தடைகள் உடைந்தது !!

முயற்சிகள் வெல்ல,
உயர்ந்தது மேலே !!

எல்லையை எட்டிட,
மகிழ்ச்சியில் மிதந்தது!!

மகிழ்ச்சியின் நீட்சியில்,
பிறந்தது புதுக் கனவு!!!

உங்கள்
தௌபீஃக்

மேலும்

நன்றி நன்றி 21-Feb-2020 4:06 pm
நன்றிகள் கோடி 21-Feb-2020 4:06 pm
ஷிபா தௌபீக், மிக எளிய சொற்களில் அமைந்துள்ள கவிதை இன்றைய இளைஞருக்கு ஒரு ஆலோசனையாக உள்ளது!! பாராட்டுக்கள்! 10-Jan-2020 11:03 pm
நன்றி தோழா.. 17-Oct-2019 11:15 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2020 2:27 am

====================
அறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்
செறிவுள்ள தாக்கிச் சிற.71
*
சிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி
வறட்சியில் வாடும் பொழுது.72
*
பொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்
தொழுமியற்கை நீக்கும் துயர்.73
*
துயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ
பயனுள்ள வற்றைப் படை.74
*
படைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்
துடைத்திடு வான்கொண்ட மாசு.75
*
மாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே
நாசங்கள் இல்லை நமக்கு.76
*
நமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை
அவமதித் தலில்லை அறம்.77
*
அறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே
மரமீ யுதிங்கு மகிழ்ந்து.78
*
மகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண

மேலும்

நன்றி ..வள்ளுவன் அளவு உயரத்தில் இல்லை நான் .. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன் அவ்வளவுதான் 27-Jan-2020 1:30 am
அருமை ஐயா .. மீண்டும் ஒரு வள்ளுவர் நாங்கள் வாழும் காலத்தில்... 26-Jan-2020 8:36 am
நன்றி 09-Jan-2020 4:38 pm
பெய்துந்தான் கொடுக்குமழை பெய்யாதுந் தாங்கொடுக்கும் பெய்யாதுங் கெடுக்குமது பெய்தும்!! உங்கள் குறட்கள் கருத்தாழத்துடன் நன்றாக அமைக்கப் பட்டுள்ளன! மிக்க நன்றி ! மனமார்ந்த பாராட்டுக்கள்! 08-Jan-2020 10:23 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2019 2:00 am

=========================
முத்துக்கள் தந்தெம்மை மகிழ்ச்சிக் குள்ளே
மூழ்கவிட்டக் கடலன்று முகத்தை மாற்றிச்
சொத்துசுக மேதுமற்றுச் சொந்த மற்றுச்
சூனியமா யாக்கியனா தையெனுந் துன்ப
வித்துக்கள் விதைத்திங்கு விட்ட நாளை
விதியெனவே கடப்பதற்குள் விரைந்த போதும்
கத்துகின்ற உள்மனது கற்ற பாடம்
கல்மேலே எழுத்தானக் கதைபோல் நிற்கும்
**
மெய்யன் நடராஜ்

மேலும்

மிக்க நன்றி 27-Dec-2019 2:58 am
அது ( சுனாமி ) காலைத்தொட்டு சிரத்தையும் மூழ்த்தியது ... உங்கள் கவிதை எங்கள் நெஞ்சைத்தொட்டு இதயத்தை வாட்டுகிறது ! சிறப்பாக நினைவுகூறினீர் , கவிஞரே! 27-Dec-2019 12:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

செல்லம்மா பாரதி

செல்லம்மா பாரதி

யாதும் ஊரெ!!! யாவரும் கேளிர
மேலே