சந்திர மௌலீஸ்வரன்-மகி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்திர மௌலீஸ்வரன்-மகி
இடம்:  பெரிய குமார பாளையம்,
பிறந்த தேதி :  01-Jan-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  702
புள்ளி:  97

என்னைப் பற்றி...

சந்திர மௌலீஸ்வரன்.மகி. மின்னணுவியல், கணினியியல், இயந்திரவியல் ஆகியவற்றில் பட்டதாரி. இயற்கை வேளாண்மை அறக்கட்டளை நிறுவனர்-அறங்காவலர். அழகுத் தமிழ் மரபுக் கவிதை ஆர்வலர். தொழில்-இயற்கை வேளாண்மை. துணைத்தொழில்-ஆசிரியர்-(ஆவாஸ்) - ஆஸ்ட்ரா வாழ்வியல் கல்வி நிறுவனம்.

என் படைப்புகள்
சந்திர மௌலீஸ்வரன்-மகி செய்திகள்
சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2022 5:31 pm

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்"

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் -
*"அர்ஜுனா! கேட்பாயாக!"
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்".

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || - 10- 35||

மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி!
ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் - 10; ஸ்லோகம் - 35

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில்
இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

"உன் ஐந்து புலன்களும் நானே!
ஐந்து புலன்களின் நுகர்வும் நானே!
ஐந்து புலன்களின் காரணமும் அவற்றின் காரியங்களும் நானே!
அவை ஆற்றும

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2022 5:21 pm

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்"

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் -
*"அர்ஜுனா! கேட்பாயாக!"
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்".

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || - 10- 35||

மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி!
- - - - - - ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் - 10; ஸ்லோகம் - 35

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில்
இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

"உன் ஐந்து புலன்களும் நானே!
ஐந்து புலன்களின் நுகர்வும் நானே!
ஐந்து புலன்களின் காரணமும் அவற்றின்

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2021 1:11 am

காலம் தரும் செண்டு
======================
வறுமையெனும் சுமைகடந்து
விடுவதற்கே நாளும் - தினம்
வருங்கனவு நீளும் - ஒரு
வசந்தமென ஆளும் - அதை
வாழ்க்கையென நம்பிவிடின்
வறட்சிநிலை சூழும்
*
பொறுமையுடன் திட்டமிட்டுப்
புதுவாழ்வைத் தேடும் - சிலர்
புயலெதிர்க்கப் போடும் - பெரும்
போராட்டம் நாடும் - ஒரு
பொன்விடியல் தனைக்காட்டிப்
பூமாலை சூடும்
*
வாழ்வினிலே ஏற்றமதை
வரவழைக்க வென்று - பல
வழிகளிலே சென்று - பலர்
வாசலிலே நின்று - ஒரு
வசந்தமதைக் காண்பதற்கே
வதைபடுவா ருண்டு
*
ஆழ்கடலில் முத்தெடுக்க
ஆசைகொளல் போன்று - பெறும்
ஆர்ப்பரிப்பு தோன்றும் - அது
ஆழமாய்வே ரூன்றும் - தினம்
அலைமீதினில் படகா

மேலும்

மிக்க நன்றி 05-Nov-2021 3:35 pm
மகிழ்ச்சி நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!! மிகவும் நன்றாக அமைந்த சிந்து! "வேர்களற்றுப் போயிடினும் விழுதுகளால் தாங்கும் - மனம் விருட்சமென ஓங்கும் - அதில் விடியும்வரை தூங்கும் - ஒரு விடைதெரியா துயர்பறவை வெண்பனிபோல் நீங்கும்!" இக்காலத்தில் பற்பல துயர்களால் மிக்க மன அழுத்தத்தில் துவளும் மக்கட்கு அருமையாக நம்பிக்கை தரும் கவிதை! மனமார்ந்த பாராட்டுக்கள், திரு, மெய்யன் நடராஜ்! 04-Nov-2021 5:56 pm
மிக்க நன்றி 29-Oct-2021 12:35 pm
உண்மைகளின் தொகுப்பு 28-Oct-2021 6:39 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2021 1:26 am

எது காதல்?
*************
கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்
கலவரம் தானோ காதல்
மனவறைக் குள்ளே மணவறை காணும்
மதுரச மாமோ காதல்
தினசரி போலே தினம்விழி பார்க்கத்
தேடிடுவ தாமோ காதல்
இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்
இணைத்திடும் தேனோ காதல்
*
இருவரு மொன்றி இருதயம் சேர்க்கும்
இலக்கிய மாமோ காதல்
ஒருவரு மறியா உறவது காணும்
ஒருவரம் தானோ காதல்
திருமண மென்னும் திருவிழா காணும்
தெய்வமோ இந்த காதல்
கருவினை சுமக்க கணவரைச் சேரும்
கவிதையைப் போலோ காதல்
*
இல்லற வண்டி இயங்கிட வுள்ள
எரிபொரு ளாமோ காதல்
அல்லலில் சிக்கி அவதிகள் கொள்ளும்
ஆபத் தாமோ காதல்
மெல்லவும் முடியா விழுங்கவும் முடியா
மீன்முள் போலோ காதல

மேலும்

மிக்க நன்றி ஐயா 05-Nov-2021 3:36 pm
"மனவறைக் குள்ளே மணவறை காணும் மதுரச மாமோ காதல்?" "உள்ளநாள் வரைக்கும் உயிருடன் உயிரை உயிராய் கொள்வதோ காதல்?" ஆஹா! மிகவும் அருமையாகத் தொடுத்திருக்கிறீர்கள், திரு. மெய்யன் நடராஜ்! "பிறவிகள் தோறும் பிரியா திருக்கும் பெரும்பே ரன்றோ காதல்! பிரிவறு வுறவால் பிறப்பைத் தொடரும் பேராண் மையே காதல்!" பாராட்டுக்கள்! 04-Nov-2021 5:50 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2021 5:28 pm

"ஐரோப்பிய நாடுகளின் பெண்களில் பெரும்பாலானோர் ஏன் "குதியுயர் காலணிகள்" அணிகிறார்கள்?"

ஆஹா! அருமையான கேள்வி நண்பரே!

இதை அந்தப் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்! சற்றுக் கர்வத்துடன் பதில் வரும்:

"உயரமான பெண்களை, அல்லது "உயரமாகத் தெரியும் பெண்களை", ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்று ஒரு பெரிய ஆய்வு தெரிவிக்கிறது! அத்துடன் எங்கள் அநுபவத்திலும் நாங்கள் பார்த்திருக்கிறோம்! உயரமாக இருந்து, நிமிர்ந்து நடந்தாலே அது கொஞ்சம் அதிகக் கம்பீரத்தை நமக்குத் தருகிறது! எல்லாவற்றையும் விட உயர்ந்த உருவம் ஆளுமையின் அடையாளம் தெரியுமா?" இன்னும் சற்று நேரம் பேசினால், இன்னும் கொஞ்சம் அசமஞ்சத் தனமாகப் பல ஆதாரங்களை அவ

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2021 4:13 pm

தீபவொளித் திருநாளில் நல்வாழ்த் துக்கள்!

கதிரவனின் பொன்னொளியும் உயிர்கட்கெல்லாம்,
கவடின்றி அமுதெனவே பொழியக் கண்டீர்!
கதிரவனின் பொற்றுளிதான் விளக்கின் சுடராய்க்
காரிருளைச் சிதைப்பதுவே தீபத் திருநாள்!
கார்வண்ணன் துணையன்ற சுரனைக் கொன்றாள்,
கண்ணனவன் துயரோட்டும் தீபத் திருநாள்!

- - - - - - "சித்திரைச் சந்திரன்"
செல்வப் ப்ரியா சந்திர மௌலீஸ்வரன் மகி,

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2021 8:12 pm

நேரிசை வெண்பா

விழுமிழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் - தொழுநையுள்
மாலையும் மாலை மயக்குறுத்தாள் அஃதால்
சால்பினைச் சால்பறுக்கு மாறு. 12

- பழமொழி நானூறு

*மால் + ஐயும்

பொருளுரை:

எல்லோரானும் விரும்பப்படும் பொற்கலன் அணிந்த பெண்களுடைய வெருண்ட மான்போன்ற நோக்கங்கள் ஆடவருடைய செறிந்த நாணினைத் தோன்றாமல் மறைக்க வல்லதாம்! யமுனையின் கண்ணே திருமாலையும் பின்னை யென்பாள் தன்னழகினால் மயங்கச் செய்தாள்; அது மிகுதியினை மிக்க தொன்றனால் அறுக்கு மாற்றை ஒக்கும்.

கருத்து:

அறிவான் மிக்கார் மகளிரைச் சார்ந்தொழுகல் கூடாது.

விளக்கம்:

வீழு மிழை, விழு மிழையென்று முதற்குற

மேலும்

வணக்கம், திரு. வ.க. கன்னியப்பன்! ஒரு சிறு உதவி வேண்டுகிறேன். எனது "விரநாணை - - - வைரமறுக் கும்" பாவிற்கு, உங்கள் நோக்கில் ஆன பொருள் விளக்கம் தர முடியுமா? எனது தமிழ்ப்பயிற்சி, மரபுக் கவிப் பயிற்சி மாணவியர் மாணவருக்கு ஒரு பாவின் பொருளுரையைப் "பல்வேறு நோக்கிலும் எப்படி அமைக்கலாம்" எனக் காட்டி வருகிறேன். இதில் திருக்குறளின் உட்புலப் பொருள் எவ்வாறு தற்காலத் தொழில் துறைகள் பலவற்றிற்கும் சரியாகப் பொருந்துகிறது என்பதை விளக்கிக் காட்டி அவர்களுக்கு அவற்றைத் தொகுக்கும் திட்டப் பணியைத் தந்துள்ளேன். உங்களுடைய தமிழாழம் அவர்களுக்குப் பயன்படும் என நம்புகிறேன். நீங்கள் இதில் பதிவிட்டாலும் சரி; அன்றி எனது மின்னஞ்சலிற்கு அனுப்பினாலும் சரி. செய்வீக்ரளானால் மிகவும் மகிழ்வேன். மிக்க நன்றி, வணக்கம்! சந்திரமௌலீஸ்வரன் ம.கி. 20-Oct-2021 9:15 pm
மிகச் சரியே! தங்கள் கருத்திற்கு நன்றி; ரம்பம் கடினமான மரத்தை அறுத்து விடுகிறது. சிறிய அரம் கடினமான இரும்பை அறுக்கிறது. கவர்ச்சியான பெண் தன் அங்க அசைவாலும், கண்ணசைவாலும் மிக ஒழுக்கமானவனையும் தடுமாறச் செய்கிறது எனச் சொல்லப்படுகிறது. 20-Oct-2021 7:27 pm
மனமார்ந்த பாராட்டுக்கள், திரு. வ. க. கன்னியப்பன்! "சால்பினைச் சால்பறுக்குமாறு!" பழமொழி நானூற்றுப் பாடலிற்குப் பொருளுரை, மிகவும் நன்றாக உள்ளது! "விரனாணை வேலெய்யும் விழிவில்லார் அறுப்பதுவேன்? வைரத்தை வைரமறுக் கும்!" நான் இதை விளக்கிக் கொண்டமை சரியா? 20-Oct-2021 5:46 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2021 4:34 pm

இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்பக் குறள் வெண்பா


உரைநடை பாட்டை படைக்க முடியா
சுரைவிறைக்கச் சொல்சுரைக்காய் கும்

உரைநடையெல்லாம் கவிதையா சொல்லு. இலக்கணம் யில்லாததை கவிதையென்று
எப்படி சொல்வது.
சுரைவேண்டும் சுரை விதையல்லவா விதைக்க வேணடும். அவரை விதையால் விதைக்க
சுரைக்காய் காய்க்குமா சொல். இரண்டும் வேறு வேறு புரியாதா உனக்கு. !jQuery171004583887741582815_1634727873397?!

மேலும்

உரைநடைப் பாட்டைப் படைத்துவிட்டு நீயும் சுரைவிதைக்க வேறொன்றா மோ ? உரைநடையில் கவிதை எழுதினால் உரைநடையாகத்தான் இருக்கும் சுரைக்காய் விரை விதைத்தால் சுரைக்காய்தான் முளைக்கும் வேறொன்றாமோ ---கத்தரிக்காயோ வெள்ளரிக்காயோ ஆகா ---முளைக்காது இவ்வாறு நான் புரிந்து கொண்டேன் எண்ணத்தில் கவிதை எழுதி மறுபடி காப்பி பேஸ்ட் செய்தால் ப்ரோஸ் பார்மெட்டில் உரைநடை அமைப்பில் பதிவு செய்கிறது என் செய்வது ? 23-Oct-2021 3:35 pm
சந்திர மௌலீஸ்வரன் மகி அவர்களுக்கு எழுச்சிபெற நானும் எழுதுகின்றேன் குற்றம் எழுப்பாதீர் வேண்டுத லின்று ஆயிறதெட்டுக் குடும்பப் பிரச்சனையில் மனத்திருப்திக்காக பாட்டு எழுதுகிறேன் போட்டிக்காகவோ பாராட்டுக்காகவோ எழுதவில்லை தமிழர் யாப்புப் பயிலல் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். நானும் யாப்பில் பலதை தினமும் கற்றுக் கொண்டே வருகிறேன். விளக்கம் எழுதும்போது நானொன்று அடிக்க வேறொன்று விழுவது சகஜமாகி விட்டது . அதை திருத்த பலமுறையும் பாடல்கள் அழிந்து மறைந்துள்ளது. ஆகையால் நானதை திருத்த முயலுவதில்லை. சக்கரை என்பதற்கு சாக்கடை என்று பதிவாக அதை நீக்கவே முடியவில்லை. அவர் பெருந்தன்மையாக அதை கவனித்துக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மன்னிக்கும் படிக் கேட்டுக் கொண்டேன். பலமுறை எனது கலித்துறை விருத்தம் வெண்பாக்களில் தவறை சுட்டிக் காட்டத் திருத்தி யுள்ளேன். விளக்கம் கருத்து எழுதுதலில் என்னால் கவனம் செலுத்த முடிவதில்லை. மன்னிக்கவும் நான் என்னுடய முந்தைய பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன் 21-Oct-2021 9:54 pm
வணக்கம், திரு. பழனிராஜன் அவர்களே! எனது இதற்கு முந்தைய பதில் பதிவு, இவ்வாறே எந்த வித உண்ணோக்கமும் இல்லாமல் சாதாரணமாக எழுதியதுதான். பலருடைய எழுத்துக்களிலும் நான் சுட்டிய பிழைகள் நிறைய இருப்பதால் அவற்றைச் சுட்டிக் காட்டலாமே என்று எழுதியதுதான். உங்களுடை தமிழ் அநுவபத்தையும் ஆழத்தையும் உங்களுடைய பல ஆக்கங்களிலும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அப்படி இருக்க, எனது விமரிசனம் உங்களுக்கு வருத்தமளித்தது மிகவும் எனக்கு உறுத்துகிறது. உங்களுடைய எழுத்தைக் கடந்த பல வருடங்களாகப் படித்து வருகிறேன். எனது மாணவர்களுக்கு உங்களுடைய பல பதிவுகளை அவற்றின் பொருள் ஆழத்திற்காக மேற்கோள்களாகத் தந்திருக்கிறேன். இந்தக் குறளைப் படிக்கும் போது அதன் பிழைகள் சட்டென்று கண்ணில் பட்டதால் வெளிப்படையாக எடுத்துக் காட்டி எழுதினேன். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன். தமிழில் தட்டச்சுச் செய்யும் போது ஆங்கிலத்தில் போலில்லாது, பல எழுத்துக்களுக்குத் ஒன்றிற்கு மேற்பட்ட விசைகளை அழுத்துவதால் பலருக்கும் அவரது எழுத்தில் பிழைகள் விழுந்து விடுவதை நான் நன்கு அறிவேன். ஒருவேளை அது நீங்கள் தொடுதிரைக் கைப் பேசியில் தொட்டச்சுவதால் விழுந்திருக்கும் எனும் எண்ணத்தில் அவற்றைச் சரிசெய்ய அந்த மென்பொருள் உதவுமே என்று சொன்னேன். அவ்வளவுதானே ஒழிய உங்கள் எழுத்தில் குறை காணும் நோக்கம் எனக்கு அணுவளவும் இல்லை. நான், "ஒருவருடைய எழுத்தாக்கம், அவருடைய குழந்தை. அதைத் மாற்றி அமைக்க மற்றவர்க்கு உரிமை இல்லை" எனும் கொள்கை உடையவன். உங்களுக்குத் துளியும் பிடிக்காத ஒன்றை எழுத நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். மிக்க நன்றி! வணக்கம்! உங்களுடைய உடனடியான பதிலிற்கு மிக்க நன்றி! வணக்கம். 20-Oct-2021 7:36 pm
பாராட்டுக்கள், திரு. பழனி ராஜன் அவர்களே! நீங்கள் எழுதிய குறட்பா மிகவும் சரியானது என்பதையும் அதன் அமைப்பும் மிகச் சரியானது என்பதையும் உங்களுடைய விளக்கத்தால் மிக நனறாகப் புரிந்து கொண்டேன். புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி, அண்ணன்!! "ஓலி பெயர்ப்புச் செய்து தரும்" என்பதில் அந்த "ச்" என்பது "பெயர்ப்பு + செய்து" எனும் சொற்கள் புணரவதால் இட வேண்டிய "மிகு ஒற்று" (சந்தி ஒற்று).அது இல்லவிட்டால் அது "சந்திப் பிழை" நான் படித்து அறிந்தது இப்படித்தான் அண்ணன்! முதல் வரியிலேயே குறளின் பொருளைப் பற்றிப் பாராட்டியிருக்கிறேன். தவறுகளைச் சுட்டினால் அவற்றை ஏற்றுக் கொண்டு சரி செய்ய வேண்டும் அண்ணன்! மிக்க நன்றி வணக்கம். உங்களுக்குப் பிடிக்காத அந்த விமர்சனக் குறிப்பை விரைவில் நீக்கி விட முயற்சி செய்கிறேன். அப்புறம், நான் உங்களுடைய தம்பி எனும் அழைப்பிற்கான வயதைச் சுமார் ஐமபது ஆண்டுகளுக்கு முன்பே கடந்தாயிற்று! . 20-Oct-2021 7:03 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2020 2:16 am

=============================
மார்கழியாள் பூம்பனியால் மாலைகட்டிச் சென்றதனால்
*மங்கை தை சூடிடவே மலர்ப்பாதம் வைக்கின்றாள்
கூர்விழியாம் கதிரென்னும் கொழுந்தனாரின் பார்வையிலே
-குளுகுளுன்னு நாணமுற குறுநகையும் பூக்கின்றாள்
மார்பினிலே பசுமைதனை மாராப்பாய் போட்டபடி
-மாங்கனியும் தேன்சுவையும் மனசாரத் தருகின்றாள்
ஏர்பிடித்த உழவனுக்கு இன்பமென்னும் செல்வத்தை
-இதயத்தின் வாசலிலே எடுத்திங்கே வருகின்றாள்
**
வருமவளை பொங்கலிட்டு வரவேற்கும்
எழுத்து உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள்

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2019 1:55 am

புது புது கனவுகள்

கனவினை கான,
சிறகுகள் விரித்தேன் !!

சிறகுகள் மிதக்க,
இலக்குகள் புலர்ந்தது !!

இலக்கினை எட்ட,
படபடத்த சிறகுகள் !!

தளர்வினை கொண்டு,
தனிந்தது கீழே !!

சிறகுகள் அகல,
தடைகள் உடைந்தது !!

முயற்சிகள் வெல்ல,
உயர்ந்தது மேலே !!

எல்லையை எட்டிட,
மகிழ்ச்சியில் மிதந்தது!!

மகிழ்ச்சியின் நீட்சியில்,
பிறந்தது புதுக் கனவு!!!

உங்கள்
தௌபீஃக்

மேலும்

நன்றி நன்றி 21-Feb-2020 4:06 pm
நன்றிகள் கோடி 21-Feb-2020 4:06 pm
ஷிபா தௌபீக், மிக எளிய சொற்களில் அமைந்துள்ள கவிதை இன்றைய இளைஞருக்கு ஒரு ஆலோசனையாக உள்ளது!! பாராட்டுக்கள்! 10-Jan-2020 11:03 pm
நன்றி தோழா.. 17-Oct-2019 11:15 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2020 2:27 am

====================
அறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்
செறிவுள்ள தாக்கிச் சிற.71
*
சிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி
வறட்சியில் வாடும் பொழுது.72
*
பொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்
தொழுமியற்கை நீக்கும் துயர்.73
*
துயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ
பயனுள்ள வற்றைப் படை.74
*
படைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்
துடைத்திடு வான்கொண்ட மாசு.75
*
மாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே
நாசங்கள் இல்லை நமக்கு.76
*
நமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை
அவமதித் தலில்லை அறம்.77
*
அறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே
மரமீ யுதிங்கு மகிழ்ந்து.78
*
மகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண

மேலும்

நன்றி ..வள்ளுவன் அளவு உயரத்தில் இல்லை நான் .. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன் அவ்வளவுதான் 27-Jan-2020 1:30 am
அருமை ஐயா .. மீண்டும் ஒரு வள்ளுவர் நாங்கள் வாழும் காலத்தில்... 26-Jan-2020 8:36 am
நன்றி 09-Jan-2020 4:38 pm
பெய்துந்தான் கொடுக்குமழை பெய்யாதுந் தாங்கொடுக்கும் பெய்யாதுங் கெடுக்குமது பெய்தும்!! உங்கள் குறட்கள் கருத்தாழத்துடன் நன்றாக அமைக்கப் பட்டுள்ளன! மிக்க நன்றி ! மனமார்ந்த பாராட்டுக்கள்! 08-Jan-2020 10:23 pm
சந்திர மௌலீஸ்வரன்-மகி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2019 2:00 am

=========================
முத்துக்கள் தந்தெம்மை மகிழ்ச்சிக் குள்ளே
மூழ்கவிட்டக் கடலன்று முகத்தை மாற்றிச்
சொத்துசுக மேதுமற்றுச் சொந்த மற்றுச்
சூனியமா யாக்கியனா தையெனுந் துன்ப
வித்துக்கள் விதைத்திங்கு விட்ட நாளை
விதியெனவே கடப்பதற்குள் விரைந்த போதும்
கத்துகின்ற உள்மனது கற்ற பாடம்
கல்மேலே எழுத்தானக் கதைபோல் நிற்கும்
**
மெய்யன் நடராஜ்

மேலும்

மிக்க நன்றி 27-Dec-2019 2:58 am
அது ( சுனாமி ) காலைத்தொட்டு சிரத்தையும் மூழ்த்தியது ... உங்கள் கவிதை எங்கள் நெஞ்சைத்தொட்டு இதயத்தை வாட்டுகிறது ! சிறப்பாக நினைவுகூறினீர் , கவிஞரே! 27-Dec-2019 12:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

செல்லம்மா பாரதி

செல்லம்மா பாரதி

யாதும் ஊரெ!!! யாவரும் கேளிர
மேலே