சந்திர மௌலீஸ்வரன்-மகி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சந்திர மௌலீஸ்வரன்-மகி |
இடம் | : பெரிய குமார பாளையம், |
பிறந்த தேதி | : 01-Jan-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 702 |
புள்ளி | : 97 |
சந்திர மௌலீஸ்வரன்.மகி. மின்னணுவியல், கணினியியல், இயந்திரவியல் ஆகியவற்றில் பட்டதாரி. இயற்கை வேளாண்மை அறக்கட்டளை நிறுவனர்-அறங்காவலர். அழகுத் தமிழ் மரபுக் கவிதை ஆர்வலர். தொழில்-இயற்கை வேளாண்மை. துணைத்தொழில்-ஆசிரியர்-(ஆவாஸ்) - ஆஸ்ட்ரா வாழ்வியல் கல்வி நிறுவனம்.
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்"
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் -
*"அர்ஜுனா! கேட்பாயாக!"
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்".
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || - 10- 35||
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி!
ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் - 10; ஸ்லோகம் - 35
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில்
இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.
"உன் ஐந்து புலன்களும் நானே!
ஐந்து புலன்களின் நுகர்வும் நானே!
ஐந்து புலன்களின் காரணமும் அவற்றின் காரியங்களும் நானே!
அவை ஆற்றும
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்"
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் -
*"அர்ஜுனா! கேட்பாயாக!"
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்".
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || - 10- 35||
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி!
- - - - - - ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் - 10; ஸ்லோகம் - 35
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில்
இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.
"உன் ஐந்து புலன்களும் நானே!
ஐந்து புலன்களின் நுகர்வும் நானே!
ஐந்து புலன்களின் காரணமும் அவற்றின்
காலம் தரும் செண்டு
======================
வறுமையெனும் சுமைகடந்து
விடுவதற்கே நாளும் - தினம்
வருங்கனவு நீளும் - ஒரு
வசந்தமென ஆளும் - அதை
வாழ்க்கையென நம்பிவிடின்
வறட்சிநிலை சூழும்
*
பொறுமையுடன் திட்டமிட்டுப்
புதுவாழ்வைத் தேடும் - சிலர்
புயலெதிர்க்கப் போடும் - பெரும்
போராட்டம் நாடும் - ஒரு
பொன்விடியல் தனைக்காட்டிப்
பூமாலை சூடும்
*
வாழ்வினிலே ஏற்றமதை
வரவழைக்க வென்று - பல
வழிகளிலே சென்று - பலர்
வாசலிலே நின்று - ஒரு
வசந்தமதைக் காண்பதற்கே
வதைபடுவா ருண்டு
*
ஆழ்கடலில் முத்தெடுக்க
ஆசைகொளல் போன்று - பெறும்
ஆர்ப்பரிப்பு தோன்றும் - அது
ஆழமாய்வே ரூன்றும் - தினம்
அலைமீதினில் படகா
எது காதல்?
*************
கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்
கலவரம் தானோ காதல்
மனவறைக் குள்ளே மணவறை காணும்
மதுரச மாமோ காதல்
தினசரி போலே தினம்விழி பார்க்கத்
தேடிடுவ தாமோ காதல்
இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்
இணைத்திடும் தேனோ காதல்
*
இருவரு மொன்றி இருதயம் சேர்க்கும்
இலக்கிய மாமோ காதல்
ஒருவரு மறியா உறவது காணும்
ஒருவரம் தானோ காதல்
திருமண மென்னும் திருவிழா காணும்
தெய்வமோ இந்த காதல்
கருவினை சுமக்க கணவரைச் சேரும்
கவிதையைப் போலோ காதல்
*
இல்லற வண்டி இயங்கிட வுள்ள
எரிபொரு ளாமோ காதல்
அல்லலில் சிக்கி அவதிகள் கொள்ளும்
ஆபத் தாமோ காதல்
மெல்லவும் முடியா விழுங்கவும் முடியா
மீன்முள் போலோ காதல
"ஐரோப்பிய நாடுகளின் பெண்களில் பெரும்பாலானோர் ஏன் "குதியுயர் காலணிகள்" அணிகிறார்கள்?"
ஆஹா! அருமையான கேள்வி நண்பரே!
இதை அந்தப் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்! சற்றுக் கர்வத்துடன் பதில் வரும்:
"உயரமான பெண்களை, அல்லது "உயரமாகத் தெரியும் பெண்களை", ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்று ஒரு பெரிய ஆய்வு தெரிவிக்கிறது! அத்துடன் எங்கள் அநுபவத்திலும் நாங்கள் பார்த்திருக்கிறோம்! உயரமாக இருந்து, நிமிர்ந்து நடந்தாலே அது கொஞ்சம் அதிகக் கம்பீரத்தை நமக்குத் தருகிறது! எல்லாவற்றையும் விட உயர்ந்த உருவம் ஆளுமையின் அடையாளம் தெரியுமா?" இன்னும் சற்று நேரம் பேசினால், இன்னும் கொஞ்சம் அசமஞ்சத் தனமாகப் பல ஆதாரங்களை அவ
தீபவொளித் திருநாளில் நல்வாழ்த் துக்கள்!
கதிரவனின் பொன்னொளியும் உயிர்கட்கெல்லாம்,
கவடின்றி அமுதெனவே பொழியக் கண்டீர்!
கதிரவனின் பொற்றுளிதான் விளக்கின் சுடராய்க்
காரிருளைச் சிதைப்பதுவே தீபத் திருநாள்!
கார்வண்ணன் துணையன்ற சுரனைக் கொன்றாள்,
கண்ணனவன் துயரோட்டும் தீபத் திருநாள்!
- - - - - - "சித்திரைச் சந்திரன்"
செல்வப் ப்ரியா சந்திர மௌலீஸ்வரன் மகி,
நேரிசை வெண்பா
விழுமிழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் - தொழுநையுள்
மாலையும் மாலை மயக்குறுத்தாள் அஃதால்
சால்பினைச் சால்பறுக்கு மாறு. 12
- பழமொழி நானூறு
*மால் + ஐயும்
பொருளுரை:
எல்லோரானும் விரும்பப்படும் பொற்கலன் அணிந்த பெண்களுடைய வெருண்ட மான்போன்ற நோக்கங்கள் ஆடவருடைய செறிந்த நாணினைத் தோன்றாமல் மறைக்க வல்லதாம்! யமுனையின் கண்ணே திருமாலையும் பின்னை யென்பாள் தன்னழகினால் மயங்கச் செய்தாள்; அது மிகுதியினை மிக்க தொன்றனால் அறுக்கு மாற்றை ஒக்கும்.
கருத்து:
அறிவான் மிக்கார் மகளிரைச் சார்ந்தொழுகல் கூடாது.
விளக்கம்:
வீழு மிழை, விழு மிழையென்று முதற்குற
இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்பக் குறள் வெண்பா
உரைநடை பாட்டை படைக்க முடியா
சுரைவிறைக்கச் சொல்சுரைக்காய் கும்
உரைநடையெல்லாம் கவிதையா சொல்லு. இலக்கணம் யில்லாததை கவிதையென்று
எப்படி சொல்வது.
சுரைவேண்டும் சுரை விதையல்லவா விதைக்க வேணடும். அவரை விதையால் விதைக்க
சுரைக்காய் காய்க்குமா சொல். இரண்டும் வேறு வேறு புரியாதா உனக்கு. !jQuery171004583887741582815_1634727873397?!
=============================
மார்கழியாள் பூம்பனியால் மாலைகட்டிச் சென்றதனால்
*மங்கை தை சூடிடவே மலர்ப்பாதம் வைக்கின்றாள்
கூர்விழியாம் கதிரென்னும் கொழுந்தனாரின் பார்வையிலே
-குளுகுளுன்னு நாணமுற குறுநகையும் பூக்கின்றாள்
மார்பினிலே பசுமைதனை மாராப்பாய் போட்டபடி
-மாங்கனியும் தேன்சுவையும் மனசாரத் தருகின்றாள்
ஏர்பிடித்த உழவனுக்கு இன்பமென்னும் செல்வத்தை
-இதயத்தின் வாசலிலே எடுத்திங்கே வருகின்றாள்
**
வருமவளை பொங்கலிட்டு வரவேற்கும்
எழுத்து உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள்
புது புது கனவுகள்
கனவினை கான,
சிறகுகள் விரித்தேன் !!
சிறகுகள் மிதக்க,
இலக்குகள் புலர்ந்தது !!
இலக்கினை எட்ட,
படபடத்த சிறகுகள் !!
தளர்வினை கொண்டு,
தனிந்தது கீழே !!
சிறகுகள் அகல,
தடைகள் உடைந்தது !!
முயற்சிகள் வெல்ல,
உயர்ந்தது மேலே !!
எல்லையை எட்டிட,
மகிழ்ச்சியில் மிதந்தது!!
மகிழ்ச்சியின் நீட்சியில்,
பிறந்தது புதுக் கனவு!!!
உங்கள்
தௌபீஃக்
====================
அறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்
செறிவுள்ள தாக்கிச் சிற.71
*
சிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி
வறட்சியில் வாடும் பொழுது.72
*
பொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்
தொழுமியற்கை நீக்கும் துயர்.73
*
துயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ
பயனுள்ள வற்றைப் படை.74
*
படைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்
துடைத்திடு வான்கொண்ட மாசு.75
*
மாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே
நாசங்கள் இல்லை நமக்கு.76
*
நமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை
அவமதித் தலில்லை அறம்.77
*
அறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே
மரமீ யுதிங்கு மகிழ்ந்து.78
*
மகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண
=========================
முத்துக்கள் தந்தெம்மை மகிழ்ச்சிக் குள்ளே
மூழ்கவிட்டக் கடலன்று முகத்தை மாற்றிச்
சொத்துசுக மேதுமற்றுச் சொந்த மற்றுச்
சூனியமா யாக்கியனா தையெனுந் துன்ப
வித்துக்கள் விதைத்திங்கு விட்ட நாளை
விதியெனவே கடப்பதற்குள் விரைந்த போதும்
கத்துகின்ற உள்மனது கற்ற பாடம்
கல்மேலே எழுத்தானக் கதைபோல் நிற்கும்
**
மெய்யன் நடராஜ்
நண்பர்கள் (18)

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

சரவணன்
covai
