srk2581 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  srk2581
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Apr-2017
பார்த்தவர்கள்:  934
புள்ளி:  175

என் படைப்புகள்
srk2581 செய்திகள்
srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2020 1:13 pm

ஐந்தாம் அத்தியாயம்

குரவைக் கூத்து

அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வௌியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், "கந்தமாறா! கந்தமாறா!" என்று அழைத்தது. "அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன் தட்டுத்தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர் அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது.

தன்னைப் பற்றித்தான் அவ்விதம் அவர்கள் கேலி செய்து சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் வந்தியத்தேவனுக்

மேலும்

srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2020 7:04 pm

நாலாம் அத்தியாயம்

கடம்பூர் மாளிகை

இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.

கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆ

மேலும்

srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2020 6:59 pm

மூன்றாம் அத்தியாயம் விண்ணகரக் கோயில்

சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.

பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.

"அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன்.

"குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன்.

"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட

மேலும்

srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2020 6:26 pm

இரண்டாம் அத்தியாயம்
ஆழ்வார்க்கடியான் நம்பி

ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே? கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார

மேலும்

srk2581 - srk2581 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2017 5:38 pm

ஒரு ராஜா அவரோட
தளபதிக்கு வயசாயிடுச்சுனு . வேற
ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு.
இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன்
வந்தாங்க.
ராஜா, தகுதி உள்ள எல்லாரையும்
அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த
கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40
அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட
கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது.
இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க
முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம்
ராஜா பேசினாரு.
இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம்
இருந்திருப்பாங்க .அவங்களாலயே திறக்க
முடியல ! நம்மால
எப்பிடி முடியும்னு கிளம்பிட்டாங்க.
இதை கேட்ட கூட்டம் 10
பேரா குறைஞ்சுடுச்சு! .
ராஜா மீதமிருந்த

மேலும்

srk2581 - srk2581 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2018 2:06 pm

ஏனோ நீ வெட்கம் கொள்ளும் போதெல்லாம்
வானவில்லின் அத்தனை வண்ணங்களும் வந்து
ஒட்டிக் கொள்கின்றன உன் மேனியில்....

பூக்களுக்கும் வலிக்காமல் சிரிக்கும்
வித்தையைக் கற்றுக் கொண்டவளே
காரணம் ஏதுமில்லை உன்னுடன் நான்
காதல் கொள்ள உன் அன்பை தவிர...

கண்மூடி மயங்கி நிற்கிறாயே
காதல் மஞ்சத்தில் என்னை தள்ளிவிட்டு
காற்றுக்கும் வியர்க்க வைத்து விடுவாயடி
உன் காந்தப் பார்வையிலே...

மெல்ல இமைகளை திறந்துவிடு
களவுப் போக காத்திருக்கிறேன்
இமையென்ற குளத்தில் இறங்கி
இதயக்கரையில் சேர்ந்துவிடவே

மேலும்

srk2581 - srk2581 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2018 4:59 pm

அவள் அன்று காட்டிய சின்ன சின்ன அன்புகள்
இன்று பெரிய பெரிய ஏக்கங்களாய் - என்
இதயத்தில் கிடந்து அழுத்துகிறது...

அந்த ஏக்கங்களை எல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணீரில்
கரைத்துக் கொண்டிருக்கிறேன்...

மேலும்

srk2581 - srk2581 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2018 12:48 pm

ஏதோ ஒரு எண்ணை
அலைபேசியில்
தேடுகையில்..
உன் பெயர் பார்த்ததும்
ஒரு கணம் நின்று பின்
பயணிக்கின்றன விரல்கள்.!!

மேலும்

srk2581 - srk2581 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2017 5:03 pm

என் இதயத்தை பிளந்து
உடைந்த விறகாக்கினாய் ...!
என் இரவை கிழித்து
பகலையும் ரணமாக்கினாய்..!
தூக்கம் வரும் முன்பே
தூக்கம் களைத்து
தூக்கிலிட செய்தாய்..!
உன் பார்வையாலே என்
பாதையையும் மாற்றி
உன் பாதசுவட்டில் பதியவைத்தாய்...!
என் ரத்த சூட்டில்
மொத்தமாய் குடியேறி
பித்தனாய் மாற்றினாய்...!
என் மொத்த பாவத்தையும்
மெத்தனமாய் தின்று செரித்தாய்...!
போதும் போதும்
என்னை
மொத்தமாய்
கொன்றுவிடு...!
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று விடாதே...!
வலிகள் என்பது
எனக்கு மட்டுமல்ல
உனக்கும் தான் !

மேலும்

நன்றி. 25-Sep-2017 1:30 pm
அவளுக்காகவும் அவனே வேதனை அனுபவிக்கின்றான் இது தான் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 12:52 am
மேலும்...
கருத்துகள்

மேலே