arsm1952 - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : arsm1952 |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 26-May-1952 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 1405 |
புள்ளி | : 705 |
படிப்பு : B .Sc .,B .L .,
புண்ணியம் கோடி,
பண்ணியவர்கள் ஆயிரமாயிரமாம்.
தெள்ளிய நுண் மதியால்,
தெளிந்த நல் வழியாம்
மருத்துவ சேவைதனை
கரும மிகு சோதனையாய்,
வணங்கத்தகு சாதனையாய்
பணிதனை செய்திடும்
மருத்துவர்,செவிலியர்,
மருத்துவ மனை ஊழியர்,
காவலர், சுகாதாரம் பேணிடும்
துப்புரவாளர்கள் எல்லோரும்
எல்லாமாய் முன் நிற்பது
ஈடாகும் ஏழேழு பிறவிப்
புண்ணியமாம்.
நெருடல் மிகு பெரும் பாடு
நினைக்கவில்லை தன் நினைவு,
குடும்பம், மனைவி, பிள்ளைகள்
அத்தனையும் பின் தள்ளி
ஆற்றுகின்றார் சேவை ஆயிரமாயிரமாய்.
கடவுள்தனை கண்டதில்லை,
காதாரக் கேட்டதுண்டு,
உங்கள் வடிவிலே,
கண் நிறையக் கண்டோம்
கை கூப்பி வணங்குகின்றோம்.
நீர் சூழ் உலகத்தில்,
வாழும் மாந்தரெல்லாம்,
நிம்மதியாய் வாழ,
நித்தம் காத்திடும் தாயே,
அன்னை மீனாட்சி,
நின் கருணை வேண்டி பாதம் பணிகின்றோம்.
சுத்தம் பேணி சுகம் நாடி ,
வாராத நோய்தனை ,
வந்த வழியே போக்கிடவே,
எந்த வழியும் தெரியாத நிலைமாறி,
நிதம் காணும் பயம் மாற்றிடவே
அத்தனவன் பாதம் பணிகின்றோம்.
அறியாமல் செய்தவை
அறிந்தே புரிந்தவை,
அத்தனையும் நீக்கி,
கருணை காட்டும் தாயென
காலமெல்லாம் காக்க வேண்டும்.
கால நேரம் பார்க்காமல்
கடமையே கருத்தாய்
உயர் பணி, ஓய்வில்லா தொடர் பணியாற்றும்
மருத்துவர்கள்,செவிலியர்கள்,
ஊழியர்கள், காவலர்கள்,
இவர்கள், இவர்கள் குடும்பத்தாரும்,
மேலான பலன் பெறவ
அகிலம் உய்யவும், அவனி சிறக்கவும்
ஆண் பெண் தாம்பத்தியம் அவசியம் என்பதாலே,
திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்.
பாருக்குள்ளோர் பார்த்தறியும் விவசாயமிது.
நிச்சயமில்லா காலத்தில் தினம் கடக்கும் காட்சியிது.
பயிருக்கெல்லாம் கால நேர விளைச்சல் உண்டு.
நேரான வாழ்வெனும் பாங்கான பார் போட்டு
பண்பெனும் விதை நட்டு,
கனிசமாய் கனிவு எனும் நீர் பாய்ச்சி,
காலத்தில் நலமெனும் நன்மை பெறுதலே
நல்லோர் வாழ்வின் நாயகமாம்.
உழைப்பது கூடிட பயிர் செழித்திடும்,
உணவதைப் பகிர்ந்திட ஜெகம் சிறந்திடும்,
உணர்வது மேலிட உறவுகள் மகிழ்ந்திடும்,
உண்மைகள் உயர்ந்திட நன்மைகள் கூடிடும்.
நன்மைகள் செய்வோம் என்றென்றும
பச்சை என்பது துவக்கம்,
சிவப்பு என்பது நிறுத்தம்,j
மஞ்சள் என்பது தயார் நிலை.
இது வீதி விளக்கின் விதி .
வாழ்க்கை வழிக்கும் இது பொருத்தமென்பேன்.
பச்சை என்பதை கனிவென்று கொண்டு
நாளதைத் தொடங்கு.
சிவப்பு என்ற கோபம் வரும் நேரம்,
செய்தலை நிறுத்தி பின் செயலதைத் தொடங்கு.
மஞ்சள் என்பது மங்கலம் என்றே மனதில் நிறுத்தி,
சோம்பல் தவிர்த்து என்றும் தயார் நிலை கொள்.
கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்த காலம்,
கேட்டுத் தெரிந்து கொள்ளும் சமயமிது.
வீதிக்கு வீதி வீடுகள் தனித்தனியாய் இருந்த போது,
வாழ்ந்தவர்கள் அரவணைப்பு ஆயிரம்.
தெரியாதவர் என்ற யாருமில்லை,
வசதிகள் அதிகமில்லை என்ற போதும்,
வரம்பு மீரா தொல்லையில்லை.
உறவுகள் உன்னதம் சொல்லாமலே புரிந்தது,
கள்ளம், கபடம் தெரியாமலே இருந்தது.
உண்மையின் உயர்வுகள் மனதில் நின்றன,
சொல் வாக்கும், செல்வாக்கும் மாறாமல் வளர்ந்தது.
இன்று........
அடுக்கு மாடி குடியிருப்பில்,
அருகருகே இருக்கும் போதும்,
அடுத்த வீட்டில் இருப்பது யார் என்று,
தெரிந்து கொள்வதில்லை.
காலுக்குக் கீழே தளமும் நமக்கில்லை,
கைக்கு மேலே
நற்றமிழ் நயம் பட உரைத்து,
சொற்பொருள் பெருக்கி,
கற்றவர் கருத்துரு செதுக்கி,
நலம் தரும் கவி பல படைத்து,
வளம் காண்பதும் சேர்ப்பதும்,
செந்தமிழுக்கு சிகரமாகும்.
வான் முட்டும் மாடக் கோபுரங்கள்,
மலர் இதழென வரிசை வீதிகள்,
மாதமெல்லாம் திருவிழாக்கள்,
சொக்கன் கொடுத்த நதியும்,
சொல்லமுடியாப் பேரழகு மீனாட்சி தாயும்,
கால்மாறி ஆடிய கவின் மிகு ஈசனும்,
நாளும் கருத்தாய் காத்திடும்,
மண்ணு புகழ் தங்கும் மா மதுரை இது.
நினைக்காத ஒன்றும்,
நடக்காத ஒன்றும்,
நடந்து விட்டால் , அதுவே ஆச்சரியம்.
பார்க்காத ஒன்றும்,,
படிக்காத ஒன்றும்,
பார்த்து விட்டால், அதுவே அதிசயம்.
கிடைக்காத ஒன்றும்,
தொலைந்த ஒன்றும்,
கிடைத்து விட்டால், அதுவே அதிர்ஷ்டம்.
தெரியாத ஒன்றும்,
புரியாத ஒன்றும்,
புரிந்து விட்டால், அதுவே அனுபவம்.
கால்கள் ஓட தூரங்கள் கடந்துவிடும்,
காலங்கள் ஓட துயரங்கள் மாறிவிடும்,
மனம் மாற துன்பங்கள் நீங்கி விடும்,
குணம் கூட பெருமை தேடி வரும்.
நினைப்பெல்லாம் உழைப்பென்றால்,
உயர்வு உன்னை நாடி வரும்.
உண்மையே உன் வழியென்றால்,
உயர்வே உன் மொழியாகும் .
உதவிக்கு நீ கரம் நீட்ட,
மனதினில் நம்மதி கூடும்.
மனம் நினைக்க உடன் கொடுப்பது,
உன்னதப் பண்பாகும்.
இருப்பதில் கொடுப்பதே இன்பம்,
இல்லாதவர் பெறுவதே தர்மம்.
இல்லை என்பது இல்லாமல் போவது,
மண்ணின் உயர்வாகும்.
வளைத்து எழுது -----புதுக் கவிதையில் எழுதவும்
வளைந்து கொடுத்துநீ வாழ் ----என்ற ஈற்றடி அமைய வெண்பா எழுதவும் புதுக் கவிதையிலும் எழுதலாம் .
----கவின் சாரலன்
ரகசியம் பாதுகாக்கபடும் இடம் எது.?
1- ராணுவம்
2-ஐ.நா சபை
3-அரசியல்
4-அப்பல்லோ மருத்துவமனை
நன்றி.:நாகூர்கவி
பனித்துளி படர்ந்த பசும்புல் விரிப்பினில்
கனிவுடன் பார்க்கும் அழகுமிகு பறவை !
காணும் படமோ எடுத்தவர்க்கு பெருமை
நோக்கும் அழகோ அதனினும் அருமை !
எண்ணத்தில் தோன்றும் என்ன அதற்கும்
ஏக்கத்தில் விழியும் தாக்குண்டு வழியுதே !
மனிதம் மண்ணில் மறைந்தது காரணமா
மனிதரும் நம்மை மறந்தனரே என்கிறதா !
அலைபேசி கோபுரம் அடிக்கிறது எங்களை
அலைந்து திரிந்து அழிகிறோம் நாங்களும் !
விஞ்ஞானம் வளர்த்து விரட்டினர் எங்களை
விண்ணில் பறக்கவும் தடையா எங்களுக்கு !
சிந்திக்க வைக்கிறது சிந்தையை தொடுகிறது
நிந்திக்கும் பறவையின் வார்த்தையும் புரிகிறது !
காத்திடுவோம் பறவை இனத்தை இவ்வுலகில்
வகுத்திடுவோம் வழியு
நண்பர்கள் (54)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

உதயசகி
யாழ்ப்பாணம்

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
இவர் பின்தொடர்பவர்கள் (54)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்
முத்துலாபுரம் தேனிமாவட்

ஆரோக்ய.பிரிட்டோ
இடையாற்றுமங்கலம்
