arsm1952 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  arsm1952
இடம்:  madurai
பிறந்த தேதி :  26-May-1952
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Sep-2013
பார்த்தவர்கள்:  1688
புள்ளி:  706

என்னைப் பற்றி...

படிப்பு : B .Sc .,B .L .,

என் படைப்புகள்
arsm1952 செய்திகள்
arsm1952 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2021 9:31 pm

சிவனவன் திருமேனி
அகம் மகிழும் ஏடகப் பெருமானாய்,
செகம் காக்கும் அன்னையவள்
குலம் காக்கவே ஏலவார்
குழலி அம்மையாய்,
எழுந்தருளி வந்தமர்ந்த இடம்
திருஏடகப் பதியாம்.
கண் காட்டும் திசையெல்லாம்,
காலம் காட்டும் நாயகனாய்,
நித்தம் வழி காட்டும் ஏடகப் பெருமான்.
மண் இருக்குமிடமெல்லாம்,
குணம் தரும் மாதரசி,
நலம் பெருக்கும் பெண்ணரசி,
மாதவப் பொன் மணி,
ஏலவார் குழலி அம்மை.
வைகை நதிக்கறையோரம்,
ஓங்கு வளர் தென்னையோடு,
பாங்கு மிகு மலர் சோலை,
பார்த்தவர் கை தொழும் திருக் கோவில்.
முன்னோர் செய்வித்த தர்மம்,
தலைமுறைகள் தாண்டி ,
காலம் காலமாய் தொடரட்டும்.
சீறார் போற்றி சிவன் தாள் பணிந்து,
அத்தன் உனக்கு பணி என்று

மேலும்

arsm1952 - எண்ணம் (public)
19-Feb-2021 10:29 am

மறந்தான், மறந்தான்
மரம் தான் மழைக்கு
ஆதாரம்  என்பதை
மறந்தான், மறந்தான் மனிதன். 

காடு, நிலம் அழித்தான், 
வேண்டியவை பழித்தான், 
வேண்டாதவை நினைத்தான், 
நோய் நொடி கொண்டு வந்து சேர்த்தான், சேர்த்தான் மனிதன். 


இயற்கையை மாற்றுதல், 
இயல்பை மாற்றுதல், 
இல்லாதவைக்கு ஏங்குதல்
எதற்கும் ஆசைப் படுதல்
என்றே இவை பின்னே 
ஓடுகிறான் ஓடுகிறான் மனிதன். 

அவசரம், ஆத்திரம், 
ஆலாய்ப் பறந்து, 
பொறுமை மறந்து, 
பொல்லாத பணத்தை நினைத்தே, 
தள்ளாடுகிறான், தள்ளாடுகிறான் மனிதன். 

அன்பு, பண்பு, அறம் 
அத்தனையும் விட்டு
சொத்து, சுகம் என்றே
நாளும் 
தடுமாறுகிறான், தடுமாறுகிறான் மனிதன். 

நல்ல ஒரு சொல்லும், 
நயமான ஒரு செயலும், 
தினம் ஒன்று என்று வாழ்பவனே, 
கண்ணால் கண்ட, 
கண்ணால் கண்ட, 
கடவுளுக்கு நிகர் மனிதன். 

மேலும்

arsm1952 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2020 4:57 pm

புண்ணியம் கோடி,
பண்ணியவர்கள் ஆயிரமாயிரமாம்.

தெள்ளிய நுண் மதியால்,
தெளிந்த நல் வழியாம்
மருத்துவ சேவைதனை
கரும மிகு சோதனையாய்,
வணங்கத்தகு சாதனையாய்
பணிதனை செய்திடும்
மருத்துவர்,செவிலியர்,
மருத்துவ மனை ஊழியர்,
காவலர், சுகாதாரம் பேணிடும்
துப்புரவாளர்கள் எல்லோரும்
எல்லாமாய் முன் நிற்பது
ஈடாகும் ஏழேழு பிறவிப்
புண்ணியமாம்.

நெருடல் மிகு பெரும் பாடு
நினைக்கவில்லை தன் நினைவு,
குடும்பம், மனைவி, பிள்ளைகள்
அத்தனையும் பின் தள்ளி
ஆற்றுகின்றார் சேவை ஆயிரமாயிரமாய்.

கடவுள்தனை கண்டதில்லை,
காதாரக் கேட்டதுண்டு,
உங்கள் வடிவிலே,
கண் நிறையக் கண்டோம்
கை கூப்பி வணங்குகின்றோம்.

மேலும்

arsm1952 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2020 8:42 am

நீர் சூழ் உலகத்தில்,
வாழும் மாந்தரெல்லாம்,
நிம்மதியாய் வாழ,
நித்தம் காத்திடும் தாயே,
அன்னை மீனாட்சி,
நின் கருணை வேண்டி பாதம் பணிகின்றோம்.

சுத்தம் பேணி சுகம் நாடி ,
வாராத நோய்தனை ,
வந்த வழியே போக்கிடவே,
எந்த வழியும் தெரியாத நிலைமாறி,
நிதம் காணும் பயம் மாற்றிடவே
அத்தனவன் பாதம் பணிகின்றோம்.

அறியாமல் செய்தவை
அறிந்தே புரிந்தவை,
அத்தனையும் நீக்கி,
கருணை காட்டும் தாயென
காலமெல்லாம் காக்க வேண்டும்.

கால நேரம் பார்க்காமல்
கடமையே கருத்தாய்
உயர் பணி, ஓய்வில்லா தொடர் பணியாற்றும்
மருத்துவர்கள்,செவிலியர்கள்,
ஊழியர்கள், காவலர்கள்,
இவர்கள், இவர்கள் குடும்பத்தாரும்,
மேலான பலன் பெறவ

மேலும்

arsm1952 - arsm1952 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2017 8:58 am

கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்த காலம்,
கேட்டுத் தெரிந்து கொள்ளும் சமயமிது.

வீதிக்கு வீதி வீடுகள் தனித்தனியாய் இருந்த போது,
வாழ்ந்தவர்கள் அரவணைப்பு ஆயிரம்.

தெரியாதவர் என்ற யாருமில்லை,
வசதிகள் அதிகமில்லை என்ற போதும்,
வரம்பு மீரா தொல்லையில்லை.

உறவுகள் உன்னதம் சொல்லாமலே புரிந்தது,
கள்ளம், கபடம் தெரியாமலே இருந்தது.

உண்மையின் உயர்வுகள் மனதில் நின்றன,
சொல் வாக்கும், செல்வாக்கும் மாறாமல் வளர்ந்தது.

இன்று........

அடுக்கு மாடி குடியிருப்பில்,
அருகருகே இருக்கும் போதும்,
அடுத்த வீட்டில் இருப்பது யார் என்று,
தெரிந்து கொள்வதில்லை.

காலுக்குக் கீழே தளமும் நமக்கில்லை,
கைக்கு மேலே

மேலும்

தனி வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு, இரண்டுக்குமான சாதக, பாதகங்கள், மற்றும் இரண்டுக்குமான ஒரு ஒப்பீடு மட்டுமே. 13-Sep-2017 2:35 pm
நகரத்தில் அனைவர்க்கும் தனி வீடு அமையுமா ? அடுக்ககத்தில் அறிமுகத்தின் அவசியங்கள் புரியுமா ? சிந்திக்கலாம் . 12-Sep-2017 4:45 pm
arsm1952 - arsm1952 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2017 10:40 am

நற்றமிழ் நயம் பட உரைத்து,
சொற்பொருள் பெருக்கி,
கற்றவர் கருத்துரு செதுக்கி,
நலம் தரும் கவி பல படைத்து,
வளம் காண்பதும் சேர்ப்பதும்,
செந்தமிழுக்கு சிகரமாகும்.

மேலும்

arsm1952 - arsm1952 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2017 8:52 am

வான் முட்டும் மாடக் கோபுரங்கள்,
மலர் இதழென வரிசை வீதிகள்,
மாதமெல்லாம் திருவிழாக்கள்,
சொக்கன் கொடுத்த நதியும்,
சொல்லமுடியாப் பேரழகு மீனாட்சி தாயும்,
கால்மாறி ஆடிய கவின் மிகு ஈசனும்,
நாளும் கருத்தாய் காத்திடும்,
மண்ணு புகழ் தங்கும் மா மதுரை இது.

மேலும்

arsm1952 - arsm1952 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2017 8:12 pm

நினைக்காத ஒன்றும்,
நடக்காத ஒன்றும்,
நடந்து விட்டால் , அதுவே ஆச்சரியம்.
பார்க்காத ஒன்றும்,,
படிக்காத ஒன்றும்,
பார்த்து விட்டால், அதுவே அதிசயம்.
கிடைக்காத ஒன்றும்,
தொலைந்த ஒன்றும்,
கிடைத்து விட்டால், அதுவே அதிர்ஷ்டம்.
தெரியாத ஒன்றும்,
புரியாத ஒன்றும்,
புரிந்து விட்டால், அதுவே அனுபவம்.

மேலும்

arsm1952 - arsm1952 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2017 8:19 pm

கால்கள் ஓட தூரங்கள் கடந்துவிடும்,
காலங்கள் ஓட துயரங்கள் மாறிவிடும்,
மனம் மாற துன்பங்கள் நீங்கி விடும்,
குணம் கூட பெருமை தேடி வரும்.

நினைப்பெல்லாம் உழைப்பென்றால்,
உயர்வு உன்னை நாடி வரும்.
உண்மையே உன் வழியென்றால்,
உயர்வே உன் மொழியாகும் .

உதவிக்கு நீ கரம் நீட்ட,
மனதினில் நம்மதி கூடும்.
மனம் நினைக்க உடன் கொடுப்பது,
உன்னதப் பண்பாகும்.

இருப்பதில் கொடுப்பதே இன்பம்,
இல்லாதவர் பெறுவதே தர்மம்.
இல்லை என்பது இல்லாமல் போவது,
மண்ணின் உயர்வாகும்.

மேலும்

கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) SivaNathan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2017 5:09 pm

வளைத்து எழுது -----புதுக் கவிதையில் எழுதவும்

வளைந்து கொடுத்துநீ வாழ் ----என்ற ஈற்றடி அமைய வெண்பா எழுதவும் புதுக் கவிதையிலும் எழுதலாம் .

----கவின் சாரலன்

மேலும்

அய்யா வணக்கம்.. தங்களுடைய ஈற்றடி.. கிரியைக் குவாரியாக் காமல் குடையாய் சிறுவிரலில் சேர்த்தவன்; மாதரோ,மது ராவோ மதுக்கடை யின்றியே ஆண்டவன் யாராம்? மதனகோபா லாநீதா னா ? வண்ணவண்ண சேலை வனிதைக் களித்தும் வண்ணங்கள் மாசாகி வண்டலில் வீழாது நதியமுனை காத்தவன்; வல்லவன்தான் யாராம்? மதனகோபா லாநீதா னா ? அன்புடன், அருணை ஜெயசீலி. 15-May-2017 12:00 pm
பெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., ---வளைத்து எழுதுவிற்கு அழகு சேர்க்கும் விழிப்புணர்வு கவிதை . வாழ்த்துக்கள் கவிப்பிரிய ஸை ஃ ப் உல் ஹத்திம் . அன்புடன், கவின் சாரலன் 06-May-2017 10:19 pm
சிறப்பான நேரிசை வெண்பா . அருமை தொடர்ந்து வெண்பா பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள் மதனகோபா லாநீதா னா என்பதை ஈற்றடியாய்க் கொண்டு கண்ணன் மீது ஒரு சிந்தியலோ அல்லது அளவடி வெண்பாவோ நேரிசை அல்லது இன்னிசையில் தாருங்கள் அன்புடன்,கவின் சாரலன் 06-May-2017 10:14 pm
வளைத்து எழுது....., உன் எழுத்துக்களை வளைத்து எழுது....., கூன் கொண்ட மனிதங்கள் நிமிர வேண்டும் ....., வலித்து எழுது....., வெறி கொண்ட அதிகாரங்கள் உன் எழுத்தை வளைத்திடாது வலித்து எழுது......, பெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., உன் மனதின் நெளிவுகள் நீங்க வளைத்து எழுது...., இதை வலித்திடாமல் எழுது.........., 06-May-2017 7:01 pm
குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2016 9:01 pm

ரகசியம் பாதுகாக்கபடும் இடம் எது.?
1- ராணுவம்
2-ஐ.நா சபை
3-அரசியல்
4-அப்பல்லோ மருத்துவமனை


நன்றி.:நாகூர்கவி

மேலும்

கசிவது தடுத்தல் ரகசியம். சொல்லியுள்ள நாலும் அவசியம் . எந்நாளும் காத்திடல் அதிசயம். ராணுவம் நாட்டின் இதயம். இதயம் பிரதானம், ராணுவத்தில் ரகசியம் காத்தல் மூலதனம். ஐநா சபை - பத்தோடு பதினொன்று, ரகசியம் இங்கு பாதுகாக்க அவசியமில்லா ஒன்று. அரசியல் - குப்பை. குப்பையில் எங்கே பாதுகாப்பு. அப்போல்லோ மருத்துவ மனை - அப்போல்லோ மட்டுமல்ல, அப்பா வீட்டு மருத்துவ மனையும் பாதுகாப்பே. சொல்லுறுதி, தர்ம நெறி காத்தல் உறுத்துமே. 12-Oct-2016 5:20 pm
அனைத்திலுமே முக்கியம் ரகசியம் ! 08-Oct-2016 9:29 pm
மருத்துவமனை விவகாரம்: நோய்வாய்பட்ட ஒருவரின் நோயைப் பற்றியோ, அவரது பிணியின் தன்மை பற்றியோ அறிவிப்பது மருத்துவரகள் எடுத்துக்கொண்ட ஹிப்போகிரிடிக் உறுதிமொழிக்கு எதிரானது. மருத்துவர் என்ற தகுதிச் சான்றிதழ் பெறுமுன்பே ஒருவர் தன்னிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நோயாளிகளின் பிணி பற்றிய தகவல்களை "யாருக்கும் சொல்லமாட்டேன்" என்ற உறுதி மொழியை எடுத்துக்கொள்கிறார். அதை ஒரு மருத்துவர் மீறக்கூடாது. 05-Oct-2016 11:00 pm
காவல் நிலையங்களில் புகார் மனுவைப் பதிவு செய்தவுடன் நிறைவேற்றப்படும் பணி: புகார் கொடுத்தவரின் புகைப்படம், அவர் பெயர், குடும்ப நபர்களின் பெயர்கள் முதலியவற்றை ஊடகங்களுக்கு தந்துவிடுகிறார்கள். கற்பழிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை, கள்ளக் காதல் போன்ற குற்றச்செயல்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஊடகங்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அவமானப்படும் நிலை ஏற்படுகிறது. இதைச் செய்வதைவிட குற்றவாளிகளை பிடித்துத் தண்டிப்பதில் முனைப்பு காட்டவேண்டும். 05-Oct-2016 10:46 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Aug-2014 8:46 am

பனித்துளி படர்ந்த பசும்புல் விரிப்பினில்
கனிவுடன் பார்க்கும் அழகுமிகு பறவை !
காணும் படமோ எடுத்தவர்க்கு பெருமை
நோக்கும் அழகோ அதனினும் அருமை !

எண்ணத்தில் தோன்றும் என்ன அதற்கும்
ஏக்கத்தில் விழியும் தாக்குண்டு வழியுதே !
மனிதம் மண்ணில் மறைந்தது காரணமா
மனிதரும் நம்மை மறந்தனரே என்கிறதா !

அலைபேசி கோபுரம் அடிக்கிறது எங்களை
அலைந்து திரிந்து அழிகிறோம் நாங்களும் !
விஞ்ஞானம் வளர்த்து விரட்டினர் எங்களை
விண்ணில் பறக்கவும் தடையா எங்களுக்கு !

சிந்திக்க வைக்கிறது சிந்தையை தொடுகிறது
நிந்திக்கும் பறவையின் வார்த்தையும் புரிகிறது !
காத்திடுவோம் பறவை இனத்தை இவ்வுலகில்
வகுத்திடுவோம் வழியு

மேலும்

நன்றி தம்பி கவிஞர் பழனி குமார் அவர்களே. பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைதான் தற்போது. மின்னஞ்சலில் ஓரிரு நாட்களில் தெரிவிக்கிறேன். 29-Aug-2016 12:40 am
ஆஹ்ஹா ....மிக சரியாக கூறினீர்கள் அண்ணா . மிகவும் நன்றி . நலமா .... 28-Aug-2016 3:20 pm
பட்டாசு வெடித்து பறவைகள், வீட்டு விலங்குகள், முதியோர், பச்சிளங்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரை அச்சுறுத்தும் கொடுஞ்செயலைச் செய்யாதவரே நல்லவர், உயர்ந்த மனிதர். இதயநோயாளிகளை எமலோகம் அனுப்பி வைக்க ஆசைப்படுவோரை தெய்வம் என்று ஒன்று இருந்தால் நாட்டுமிராண்டித்தனம்/ நகரமிராண்டித்தனம் புரிவோரை உடனே எமலோகம் அழைத்துச் செல்ல ஆசைப்படுவார். 28-Aug-2016 2:00 pm
மிக்க நன்றி பழனி 11-Aug-2016 6:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (54)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (54)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (55)

user photo

shaan hussain

nuraichcholai,puttalam,sri lanka.
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே