என் பிரார்த்தனை

நீர் சூழ் உலகத்தில்,
வாழும் மாந்தரெல்லாம்,
நிம்மதியாய் வாழ,
நித்தம் காத்திடும் தாயே,
அன்னை மீனாட்சி,
நின் கருணை வேண்டி பாதம் பணிகின்றோம்.

சுத்தம் பேணி சுகம் நாடி ,
வாராத நோய்தனை ,
வந்த வழியே போக்கிடவே,
எந்த வழியும் தெரியாத நிலைமாறி,
நிதம் காணும் பயம் மாற்றிடவே
அத்தனவன் பாதம் பணிகின்றோம்.

அறியாமல் செய்தவை
அறிந்தே புரிந்தவை,
அத்தனையும் நீக்கி,
கருணை காட்டும் தாயென
காலமெல்லாம் காக்க வேண்டும்.

கால நேரம் பார்க்காமல்
கடமையே கருத்தாய்
உயர் பணி, ஓய்வில்லா தொடர் பணியாற்றும்
மருத்துவர்கள்,செவிலியர்கள்,
ஊழியர்கள், காவலர்கள்,
இவர்கள், இவர்கள் குடும்பத்தாரும்,
மேலான பலன் பெறவே,
மேதினியில் மேன்யுறச் செய்ய வேண்டும்.

கண்ட நோய்க்கு, காரணம் அறிந்து,
காக்கும் நல் மருந்து கண்டு காத்தருள வேண்டும்.
வந்த நோய் வந்த வழி போகட்டும்,
யாவருக்கும் இனி எப்போதும் வாராமல் இருக்கட்டும்,
பாதிப்புக் கண்டோர், கலக்கம் நீங்கி,
பூரண நலம் பெற வேண்டும் .

அன்னை மீனாட்சி தாயே,
அருள் புரிவாய், அருள் புரிவாய்.

எழுதியவர் : arsm1952 (26-Mar-20, 8:42 am)
சேர்த்தது : arsm1952
Tanglish : en pirarththanai
பார்வை : 523

மேலே