வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்- கருத்துகள்

எளிமை நடை, இனிய சொற்கள் கோவை, சிந்திக்க வைக்கும் வரிகள் ......
அந்த கடைசி வரிகள்.....'நீ எமக்கு மகளாய், தாயாய்' நெஞ்சைத் தொட்டது
அருமையான கவிதை இளைய ராஜா அவர்களே.....வாழ்த்துக்கள்

சகோதரி சாந்தி.... முதற்கண் என் வணக்கம்....நவராத்திரி இனிய வாழ்த்துக்கள்
தங்கள் இந்த படைப்பு என் மனதை தொட்டது
இன்று பாரதியை நினைப்பவர் குறைவே.....பாரதியைபோன்றோர் கவிஞன் பல நூறு வருடங்களுக்கோர் முறை தான் அவனியில் பவனி வருவான்.....பாரதி இவ்வுலகோர்க்கு சொல்லாதது ஒன்றுமே இல்லை....அவன் ஓர்
ஞானி.....தீர்கதரிசி....

தங்கள் கவிதையில் பாரதியும் கலந்து மனப்படை படிக்கும் பொது உணர்ந்தேன்

வாழ்த்துக்கள்.

அருமை அருமை.....அம்மையப்பன் துதி....
இன்னும் இத்தர வெண்பாக்கள் எழுதி
ஏத்துங்கள் ஞான விளக்கு .....மற்றோரும்
இறைவன் பதம் நாட

வாழ்த்துக்கள் நண்பரே கவின் சாரலன்

நண்பரே கவின் சாரலன்..... பல மாதங்களுக்கு பிறகு தங்கள் கவிதையைப் படித்து மகிழ்ந்தேன்
சங்க மனம் வீச....

திங்கள் முடி சூடுமலை....தென்றல் விளையாடும் மலை .....என்ற பலம் பெரும் செய்யுள் ஞாபகத்தில் வந்தது

மேற்கண்ட பாதிப்பு.......நண்பரே தர்மராஜு.....ஹைக்கூ கவிதைகள் அல்ல...
கொஞ்சம் தயவிட்டு...ஹைக்கூ பற்றி படியுங்கள்..... நண்பரே

விரைவில் குமரன் அருளால் குமரன்
குறட்பா அமுதம் படைப்பேன்

அழகு.....ஆஹா....அழகு
இந்த குமரன் துதி குறள் அழகு

நண்பரே கவின் சாரலன்.....இந்த உங்கள் கவிதை
அன்று கவியரசு எழுதிய 'கட்டி தங்கம் வெட்டி எடுத்து...
அவள் தள தள வென்று ததும்பி நிற்கும் பருவமடா....பாடலை
நினைவுகூர வைத்தது.....அந்த பாடல் முழுவதும் ரெட்டைக் கிளவிகள்
ததும்பி நிற்கின்றன.....உங்கள் பாடலிலும்....

அசத்தல் போங்க....ரசித்தேன்

'கட்டோடு குழல் ஆட ஆட.....கண்ணோடு மீன் ஆட ஆட'
பழைய கவியரசர் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது நண்பரே
கவின் சாரலன்...... நாட்டுப்புற சூழ்நிலை....வயல்....நாற்று நடுதல்...கயல் விழியால்
இவை தத்ரூபமாய் கண்முன்னே......வளமான கவிதை....வாழ்த்துக்கள்

பெண்களின் கண்ணிற்கு அப்படியோர் மகத்துவம்......ஹும்ம்ம்ம்.
நணபரே.....இரண்டாம் அடியில்.....'பேனா' வுக்கு பதில் 'மைக்கோல்'
என்றிருந்தால் பேனா தமிழாகி இருக்கும் என்று நினைத்தேன்
எப்போதும்போல் அருமையான கவிதை கவின் சாரலன் எழுதுகோல் தந்தது
மகிழ்ச்சி.....

அன்பு ராம் , ............ஆண்டாள் பக்தியால் சரணாகதி செய்தால்
நாராயணன் தாள் சேரலாம் என்று அறிவுறுத்திய வைணவ பெண்திலகம்
அயனை அல்ல.....அயன்....பிரமன் ஆவார் .....'நாராயணனே நமக்கே பறைதருவான்'
என்று 'திருப்பாவை' முதல் பாடலிலேயே சரணாகதி தெளிவாய் போதித்தவர்.
அவர் பாசுரங்கள்....உபநிஷத்தின் சாரம் என்பர் ஆன்றோர்.....அதனால் அவர்
பாடிய....'திருப்பாவை' கோதாபநிஷத் என்றே வழங்கப்படுகிறது..ஆண்டாளின்
வடமொழி ஆக்கம்...கோதை .....

இப்படியும் நாலடிக் கவிதையில் ஒரு
காதல் கதையே எழுதி வைத்ததோ
சந்தி வேளையில் அவள் ஓரவிழிப் பார்வை ?

அழகு காதல் கவிதை கவிஞரே சாரலன்
வாழ்த்துக்கள்

நல்ல கருத்து, நல்ல வெண்பா
வாழ்த்துக்கள்.நண்பரே சக்கரை வாசன்

ஆஹா.....ஸ்பரிசம் முத்திரையில் வெகு நாட்களுக்கு பிறகு
படித்து ரசித்தேன் ஓர் கருத்துள்ள புது கவிதை...

" காயமே இது பொய்யடா,,,,வெறும் kaatradaithap பையடா " என்றார்
அதுபோல இந்த மாயையும்....இருப்பதுபோல் தோன்றும்
இல்லாமையே....நீலவானம்.....காண முடிகிறது...ஆனால் எது வானம்
யாரறிவார்...கானல்....காணமுடிகிறது....வெறும் நிழலே..."

இன்னும் எழுதுங்கள் நண்பரே எமக்காக...

அருமை.....நண்பரே கவின் சாரலன்
'மானல்லவோ கண்கள் தந்தது....' கண்ணதாசன் பாடல்
நினைவுக்கு வந்தது...

காதலனை உள்ளதால் காதலிப்பவன்
தாலியைக் அவனென்றே காதலிப்பாள்
ஆம் அது காவல் வேலியம்தான்

நன்றி பாளை பாண்டி


வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே