பாக்யராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பாக்யராஜ் |
இடம் | : மேலக்கலங்கல் |
பிறந்த தேதி | : 01-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 649 |
புள்ளி | : 4 |
தமிழ் பிறந்த தென்காசி பொதிகை மாவட்டத்தில் மேலக்கலங்கல் என்ற கிராமத்தில் ஞான.அந்தோனி- மேரி தம்பதிகளுக்கு தலை மகனாகப் பிறந்தேன்
ஆர்.சி.துவக்கப் பள்ளி மேலக்கலங்கலில் ஆரம்பக் கல்வியும்,சிஇடி டென்னிசன் உயர்நிலைப் பள்ளி கீழக்கலங்கலில் உயர்நிலைக் கல்வியையும்,ஜசிஜ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தென்காசியில் மேல்நிலைக் கல்வியையும்,ஹெட்வெல் மருத்துவமனை ஜங்ஷன் திருநெல்வேலியில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப பட்டயப் படிப்பை படித்து
தனியார் மருத்துவமனையில் 25 ஆண்டுகளை கடந்து ரத்தப் பரிசோதனையாளராக பணியாற்றுகிறேன்..
நான் ஒன்பது வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறேன்
ஆசைக் காதலனே
●●●●●●●●●●
அன்பால் உருவான ஆசைக் காதலனே /
அல்லிகள் விளையாடும் தாமரைக் குளக்கரையில் /
தனிமையில் காத்திருக்கேன் ஒற்றைப் பனைமரமா /
தனிச்சுவை நானும்தாரேன் என்னை மொய்த்திடவா /
பூப்பெய்த நாள்முதல் தேன்சுவைக்கும் வண்டுகளைப்போல் /
பூச்சூடி காத்திருக்கேன் தேன்சுவைக்க நீவருவாய்யென /
கதிரவன் வானத்தை வட்டமடித்து வருவதுபோல் /
காலமெல்லாம் உன்னை சுற்றி நான்வருவேன் /
கடல் தண்ணீர் அலை போல /
கடைசிவரை நான் உன்னுடன் வருவேன் /
தண்ணீர் தாகம்
••••••••••••••••••••••
தாகம் தீர்க்கும்
சிறுதுளி நீர்சேர்ந்து
தங்கத்தினை காட்டிலும் பெரிதாக தோன்றும்
நீர்நிலைகள் காத்து நீரை சேமிக்கவிடில்
மனிதன் மட்டுமின்றி விலங்கினமும் வதைபடும்
மழைநீர் சேமிப்போம் தாகம் தீர்ப்போம்
நெஞ்செல்லாம் நீதானே
••••••••••••••••••••••••••••••••••○
நீ தானே நீ தானே
என் நெஞ்சம் முழுமையும் நீதானே
உன்னை கண்ட நாள் முதல்
கண்ணின் கருவிழிக்குள் தெரிவதும் நீதானே
உதடுகள் உச்சரிக்கும் பெயர் நீதானே
சுவாசத்தில் கலந்த விசுவாசம் நீதானே
காதில் கேட்கும் கானாப்படலும் நீதானே
கைகள் எழதும் கவிதையும் நீதானே
இதயத்தில் சரிபாதி குடியிருப்பது நீதானே
நினையாத நாளில்லை நினைவெல்லாம் நீதானே
உன்னையே ரசிக்கிறேன்
++++++++++++++++++++++
உன்னையே ரசிக்கிறேன் உன்னையே நேசிக்கிறேன் /
ஆவணி திங்கள் தேரின் அழகினை /
தாவணி பெண்னை உன்னில் ரசிக்கிறேன் !
காதல் வயப்பட்ட உன் இதயத்தை /
காதலின் சின்னமாக நான் ரசிக்கிறேன் /
பெண்நிலவே வெண்நிலவாக உன்னை ரசிக்கிறேன் /
கார்மேக கூந்தலுக்கிடையில் நின்றாடும் ஒற்றைக் /
கால் ரோசாப்பூவின் ஆட்டத்தை ரசிக்கிறேன் /
உதடுகள் சிந்தும் மெல்லிசை சிரிப்பில் /
உதயமாகும் வானவில்லின் வண்ணத்தை ரசிக்கிறேன் /
இயற்கை
(((((((())))))
இறைவன் தந்தது
இயற்கையெனும் வரம் /
ஒரு மரமாவாது
நடவேண்டும் தினம் /
பேனிக் காத்திடல்
வேண்டியது வனம் /
மும்மாரி பொழிந்து
பெருகிடும் குளம் /
நெல் விளைந்து
நிறைந்திடும் களம் /
நாட்டில் செழித்து
வளர்த்திடும் வளம் /
காடுகள் வனவிலங்குகளின்
இருப்பிடங்களின் பலம் /
விலங்குகள் அழியாது
காப்பது நலம் /
சாப்பிட்ட விதைகளுடன்
வெளியேறும் மலம் /
மரங்கள் பரவிட
காரணம் மாவினம் /
பறவைகளுக்கு புகலிடம்
தருவது மரம் /
அசுத்தகாற்றை ஈர்த்துதரும்
நல்லகாற்றால் சுகம் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
இமையே தூதுபோ
~~~~~~~~~~~~~
வயதான தாய்தந்தையரை பேணி காத்திட
வாலிபர்களின் மூளைக்கு தூது விடு
மரம் வளர்த்து இயற்கை காற்றை
மண்வாசனையுடன் சுவாசிக்க மூக்குக்கும்
பிறமொழி கலக்காமல் செந்தமிழ்
பேசிட உதடுகளுக்கு தூது விடு
துரித உணவுகளை தவிர்த்து சிறுதானிய
சரிவிகித ஆரோக்கியமான உணவாக சாப்பிடுவதற்க்கு
நாக்கிற்க்கு தூது விடு
மனிதநேயத்துடன் ஏழைகளுக்கு உதவி
மகிழ்ந்திட கைகளுக்கு தூது விடு
காந்தியின் அகிம்சை வழியில் நடந்திட
கால்களுக்கு இமையே தூது விடு...
என்னவளே
××××××××××
புன்னகைப் பறித்த
கன்னக் குழியில்/
வீழ்த்திய என்னவளே
இதயம் கலந்தவளே /
உன்னோடே வாழனும்
உறவாகத் தொடருனும்/
என்னோடு சேரனும்
எல்லையில்லா இன்பத்திலே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பழைய ராகம்...புதிய பாடல்
பாடல் : தங்கத் தாயரை மகளே
படம் : மின்சாரக் கனவு
பல்லவி
;;;;;;;;;;;;;;;;;
மங்களத் தாரகைப் பெண்ணே தா மடியே/
சக்தி குறையுது கண்ணே தா மடியே/
துள்ளும் மனமும் துள்ளும்/
பெரு அன்பில் மாறுது சோர்வும்/
அவை இல்லாமால் மறையுது பண்பாலே/
(மங்களத் தாரகைப் பெண்ணே)
சரணம் : 1
வடித்த சிலையில் கவர்ந்து இழுக்கும் கலைதானே/
உன் இடுப்பு வரியில் பசையால் கொண்டு சேர்ந்தேனே/
விரித்த இமையில் பேசிடும் எந்தன் தாய்மொழியே/
என் திறக்க இதயக் கூட்டுக்குள்ளே
சுவாசத்தில் தான் கலந்தவளே/
கூந்தலுக்கு வெளியே மாலை கொண்டு பதிக்க/
அந்த முடி ஒட்டு வாசம் மூக்கைத் தொலைக்க
சேரட்டுமா கொள்ள