பாக்யராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாக்யராஜ் |
இடம் | : மேலக்கலங்கல் |
பிறந்த தேதி | : 01-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 1372 |
புள்ளி | : 819 |
தமிழ் பிறந்த தென்காசி பொதிகை மாவட்டத்தில் மேலக்கலங்கல் என்ற கிராமத்தில் ஞான.அந்தோனி- மேரி தம்பதிகளுக்கு தலை மகனாகப் பிறந்தேன்
ஆர்.சி.துவக்கப் பள்ளி மேலக்கலங்கலில் ஆரம்பக் கல்வியும்,சிஇடி டென்னிசன் உயர்நிலைப் பள்ளி கீழக்கலங்கலில் உயர்நிலைக் கல்வியையும்,ஜசிஜ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தென்காசியில் மேல்நிலைக் கல்வியையும்,ஹெட்வெல் மருத்துவமனை ஜங்ஷன் திருநெல்வேலியில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப பட்டயப் படிப்பை படித்து
தனியார் மருத்துவமனையில் 25 ஆண்டுகளை கடந்து ரத்தப் பரிசோதனையாளராக பணியாற்றுகிறேன்..
நான் ஒன்பது வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறேன்
மழையே வா மறு வாழ்வு தா
மழையின்றி வறண்ட
மண்ணும் பாறையாச்சு /
வானம் பார்க்கும்
விவசாயிக் குடிகளை /
கை கொடுக்க
கர வேட்டிகளுடன் /
கார்மேகமே நீயும்
கை விரித்தால் /
பசித் தீர்க்கும்
பாட்டாளியின் நிலையறிவாய் /
மழையே வா
மறுவாழ்வுத் தா /
பிழைப்புக்கு வழியின்றி
போராடியே வாழ்கிறோம்/
வாங்கியக் பயிர்கடன்
வட்டியும் குட்டிபோட்டு /
வாட்டி வதைத்திட
வாழ வழியின்றி /
பூச்சிக்கொல்லி மருந்தருந்தி
புழுவாக மடிகிறோம் /
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்
விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000: பாகம் 4
++++++++++++++++++++++++++
ஜாதகத்தில் 4 க்கு உரிய
கிரகம் வலிமை பெறாத நிலையிலே
மூணாறு போன சனி
மூன்று மாதம் பின்பு
புகுந்த வீடு வர
பற்றுதல் பற்றிட பகையின்றியே வாழ்ந்திட
காக்கா கூட்டம் பேச்சைக் கேட்டு
கத்தியே சண்டையிட முயன்றிட
காக்கா வலிப்பும் வந்தது மூதேவிக்கு
காலிரண்டும் கையிரண்டும் வெட்டியே இழுத்திட
கட்டியவளுக்கு இழுக்கிறதுனு
கவலையில் உருகியவன்டி நான்
கவிதாளுக்கு இழுக்குதுனு
கவிதை பாட மறந்தவனடி நான்..
ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்த
அவலம் கண்டு அலறி துடித்தேனேடி
குளுக்கோஸ் தண்ணீ ஏறிடவே
குலம் போச்சுனு அழதேனேடி
காக
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 15
தமிழகத்தின் பெரும் துயரமான மதுவால் சீரழியும் குடும்பங்களில் ஒன்று கெளதமின் குடும்பம்.
கெளதமின் அப்பா சிங்காரம்,அம்மா வடிவுக்கரசி இருவரும் விவசாய கூலிகள்.சிங்காரம் வாங்கும் கூலி ₹ 400 அப்படியே மதுபான கடை மூலம் அரசின் கல்லாவை சென்றடையும்.. வடிவுக்கரசி வாங்கும் ₹ 200 தினக் கூலில்தான் குடும்பச் செலவுகள், கெளதம் படிப்பு செலவு, கடன் வட்டி யென அனைத்தையும் பார்த்து வந்தார்...
அன்று மதுபானக் கடையில் மதுவை அருந்திவிட்டு வீட்டுக்கு சைக்களில் வந்த சிங்காரம் போதையில் கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவுகள் ஆன தகவல்தான், உறவினர் மூலம் கல்லூரியில் இருந்த கெள
விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000 : பாகம் 3
+++++++++++++++++++++++++++++++++++
புகுந்த வீட்டுச் சனி
பிறந்த வீடான மூணாறு போக
குரு பார்க்க தொடர்ந்தது தடைபட்ட
கல்லூரி படிப்பு..
லக்கனத்தில் 2,8 ராகு கேது வந்து
தடை போட்ட கல்லூரிக் காதலியோ
நடை போட்டு வந்தாள் கல்லூரிக்கு
சான்றிதழ் வாங்கிடவே ..
பார்த்து விட்டு பகிர்ந்து கொண்டேன்
பாதகனின் திருமண வாழ்க்கையை
பரிதாபமாக நின்றவனை கைப்பிடித்து தேர்த்தியவள்
பஸ்யேற்றி விட வரும்படி கூற
கைநழுவிப் போனவளை
கைப்பிடித்து பஸ்யேற்றி விட
அமர்ந்தவள் அமைதியாக சில நொடி சிந்திக்க
அழைத்தாள் பாக்யாயென்று..
கடகடவென்று பஸ்ஸை விட்டு இறங்கியவள்
உண்மைகள் பொய்க்காது
×××××××××××××××××××××××
உழவர்கள் உழைக்காது/
உணவுகள் கிடைக்காது/
விவசாயம் இல்லாது/
உயிரினம் வாழாது/
வனம் காக்காது/
வானம் பொழியாது/
வாய்மை உரைக்காது/
உண்மைகள் பொய்க்காது/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
கை கொடுக்கும் கை
&&&&&&&&&&&&&&&&
கையுடன் கை கோர்த்து மகிழ்வுடன்/
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை /
சாதி மதம் பேதம் இல்லாமல்/
சாதிக்க இணைந்த கைகளால் முடியும்/
ஏணிபோல் உயர்த்திட உதவிக்கரம் நீட்டினால்/
ஏழைகள் வறுமைக் கோட்டினை தாண்டலாம்/
பிள்ளைகள் பெற்றோரின் பின்னாளில் காத்திட /
பாசத்தில் கைகொடுக்கும் காலம் கனியட்டும் /
கடின முயற்சியின் வின்தொடும் முன்னேற்றத்திற்கு/
கடின உழைப்பே கை கொடுக்கும் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
கீழ்கதுவாய் மோனையில் கவிதை
××××××××××××××÷×××××××××××××××
இறுதிவரை உறுதியாகும் காதல்
×××××××××××××××××××××××××××××
கண்கள் கலந்திட வருகின்ற காதல்
சாணயளவு சற்றும் பிணைப்பில் சறுக்காது
பண்போடு பற்றிடும் அன்பை பகிர்ந்திட
ஆண்டுகள் ஆயிரம் இல்லறம் அற்புதமே
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
கல்விக்கூடக் காலங்கல்
×××××××××××××××××××××
கல்விக்கூடக் காலங்கல்
களையாத கோலங்கல்
கால்சட்டை சீறுடை
கலப்படமாகும் ஒற்றுமையே
நடந்தே சென்றோம்
நன்னடத்தை மாறாது
கடந்தே வந்தோம்
கல்வியில் சிறந்தவர்களாக
அடித்து கற்பிக்க
அனுமதித்தனர் பெற்றோர்
படித்தோம் பயமுடன்
பயணிக்கிறோம் நல்லவராக
விளையாட்டோடு கல்வி
வியதியின்றி வெற்றி
களைந்தோம் பிரிந்தோம்
கவலையில் ஆழ்ந்தோம்
" யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்