பாக்யராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாக்யராஜ்
இடம்:  மேலக்கலங்கல்
பிறந்த தேதி :  01-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2021
பார்த்தவர்கள்:  2915
புள்ளி:  863

என்னைப் பற்றி...

தமிழ் பிறந்த தென்காசி பொதிகை மாவட்டத்தில் மேலக்கலங்கல் என்ற கிராமத்தில் ஞான.அந்தோனி- மேரி தம்பதிகளுக்கு தலை மகனாகப் பிறந்தேன்
ஆர்.சி.துவக்கப் பள்ளி மேலக்கலங்கலில் ஆரம்பக் கல்வியும்,சிஇடி டென்னிசன் உயர்நிலைப் பள்ளி கீழக்கலங்கலில் உயர்நிலைக் கல்வியையும்,ஜசிஜ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தென்காசியில் மேல்நிலைக் கல்வியையும்,ஹெட்வெல் மருத்துவமனை ஜங்ஷன் திருநெல்வேலியில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப பட்டயப் படிப்பை படித்து
தனியார் மருத்துவமனையில் 25 ஆண்டுகளை கடந்து ரத்தப் பரிசோதனையாளராக பணியாற்றுகிறேன்..
நான் ஒன்பது வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறேன்

என் படைப்புகள்
பாக்யராஜ் செய்திகள்
பாக்யராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2026 10:16 am

சட்டம் ஒரு பக்கம்: காதல் கதை அத்தியாயம் 7

மணமாகி இணையும் கனவுகளோடு வந்த எலிசா மற்றும் ரமேஷ் காதல் ஏமாற்றுக் கதையாக முடிந்து விட.. மனதில் வேதனையோடு.. கண்களில் கண்ணீரோடு இரு மனங்கள் பிரிந்து விடைபெற்றது...

வாடிய முகத்துடன் வாடியூர்க்கு பேருந்து ஏறியிருந்த.. ரமேஷ்யை சார் நல்லா இருக்கீங்களா என்று வேதனை அடைந்த நெஞ்சில் ஈட்டியை குத்தியது போல் கேட்டாள்...

கருமேகம் சூழ்ந்த நிலா ஒன்றுக்குள் இரு தங்க நட்சத்திரம் ஜொலித்த போல்

மேலும்

பாக்யராஜ் - பாக்யராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2025 6:56 pm

சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 4

எலிசா பள்ளிக்கு செல்ல வீட்டின் வாசல் வரவே.. வாசலில் நின்றிருந்த எலிசாவின் அப்பா ஆல்பர்ட்...இது என்ன புதுசா இருக்கு? என்றான்... நம்ம காதல் தெரிந்து விட்டதோ...என்று நினைத்தவள்..அந்த நொடியில் எலிசா கதிகலங்கி போனாள்...

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி school leave..govt leave ஆக இருந்தால் பள்ளிக்கு போக மாட்டடாயே .. இன்று.. இழுத்தார் ஆல்பர்ட்..

Leaveனு எனக்கு தெரியும்..என்னை principal madam வரச் சொன்னாங்க போரேன் என்று மழுப்பி விட்டு விரைந்தாள்...

மெய் மறக்கும் கொடிய காதல் கத்தரிக்காய்னு தேவை தானா என்று தலையில் அடித்து கொண்டாள்...

பேருந்து ஏறி அமர்ந்தவள

மேலும்

பாக்யராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2026 1:01 pm

சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 6

பங்குத்தந்தை ஜான் பிரான்சிஸ் காதலர்களிடம் இருவருக்கும் திருமணத்திற்கு சம்மதம் தானே என கேட்டார்... காதலர் சம்மதம் என்றனர்.. இந்த சபையில் கிருத்துவ நண்பர்கள் யாராவது காதல் திருமணத்திற்கு சாட்சியாக இருக்கிறீர்களா என்று மைக்கில் பாதர் கேட்க... ஆலயத்தில் உள்ளவர்கள் ஆல்பர்ட்க்கு பயந்து ஒரு விசுவாசியும் முன் வரவில்லை...

" இந்தியா கிருத்துவ திருமண சட்டம் 1872யின் படி திருமண ஜோடிகள் சம்மதமும் ..கிருத்துவ மத விசுவாசி ஒருவரின் சாட்சியமும் தேவை" என்று கூறுகிறது.. சாட்சியம் அளிக்க யாரும் முன் வராத காரணத்தால் உங்கள் திருமணத்தை ஆலயத்தில் நடத்தி வைக்க இயலாது என்று பாதர் க

மேலும்

பாக்யராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2026 6:55 pm

சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 5

இருவரும் அருகில் நெருங்க நெருங்க இதயம் கசக்கி பிழிவது போன்றும் நொறுங்குவது போன்றும் இருந்தது..இது மகிழ்ச்சியின் நிகழ்வோ .. இல்லை பயத்தின் நிகழ்வோ ? புரியவில்லை அவர்களுக்கு

இருவரும் அருகருகே வந்தபோதும் மெளனமாக மெதுவாக மேகங்கள் நகர்வது போல் இருவரும் மெல்ல நகர்ந்தனர்..

மேகத்தை விட்டு வெளியே நகர்ந்த சூரியனைப் போல் பெண்களுக்கே முன்னுரிமை என்பதாக எலிசா மெளனம் கலைத்து.. என் பெயர் எலிசா.. ஊர் மேலக்கலங்கல் .. உங்கள் பெயர் ..? என்று ரமேஷ்யை நோக்கி வினவினாள்

அதற்கு அவன் என் பெயர் ரமேஷ் அய்யங்கார் மருத்துவமனையில் Lab technician னாக இருக்கிறேன் என்றான் ரமேஷ்..

மேலும்

பாக்யராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2025 6:56 pm

சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 4

எலிசா பள்ளிக்கு செல்ல வீட்டின் வாசல் வரவே.. வாசலில் நின்றிருந்த எலிசாவின் அப்பா ஆல்பர்ட்...இது என்ன புதுசா இருக்கு? என்றான்... நம்ம காதல் தெரிந்து விட்டதோ...என்று நினைத்தவள்..அந்த நொடியில் எலிசா கதிகலங்கி போனாள்...

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி school leave..govt leave ஆக இருந்தால் பள்ளிக்கு போக மாட்டடாயே .. இன்று.. இழுத்தார் ஆல்பர்ட்..

Leaveனு எனக்கு தெரியும்..என்னை principal madam வரச் சொன்னாங்க போரேன் என்று மழுப்பி விட்டு விரைந்தாள்...

மெய் மறக்கும் கொடிய காதல் கத்தரிக்காய்னு தேவை தானா என்று தலையில் அடித்து கொண்டாள்...

பேருந்து ஏறி அமர்ந்தவள

மேலும்

பாக்யராஜ் - பாக்யராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2023 8:26 pm

உண்மைகள் பொய்க்காது
×××××××××××××××××××××××
உழவர்கள் உழைக்காது/
உணவுகள் கிடைக்காது/

விவசாயம் இல்லாது/
உயிரினம் வாழாது/

வனம் காக்காது/
வானம் பொழியாது/

வாய்மை உரைக்காது/
உண்மைகள் பொய்க்காது/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

மேலும்

நன்றிகள் சகோ.. 22-Nov-2023 7:49 pm
உழைப்பு வீண்போகாது 21-Nov-2023 11:47 pm
பாக்யராஜ் - பாக்யராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2023 8:29 pm

கை கொடுக்கும் கை
&&&&&&&&&&&&&&&&

கையுடன் கை கோர்த்து மகிழ்வுடன்/
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை /
சாதி மதம் பேதம் இல்லாமல்/
சாதிக்க இணைந்த கைகளால் முடியும்/

ஏணிபோல் உயர்த்திட உதவிக்கரம் நீட்டினால்/
ஏழைகள் வறுமைக் கோட்டினை தாண்டலாம்/
பிள்ளைகள் பெற்றோரின் பின்னாளில் காத்திட /
பாசத்தில் கைகொடுக்கும் காலம் கனியட்டும் /

கடின முயற்சியின் வின்தொடும் முன்னேற்றத்திற்கு/
கடின உழைப்பே கை கொடுக்கும் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

மேலும்

நன்றிகள் சகோ.. 22-Nov-2023 7:45 pm
நிச்சயம் கை கொடுக்க வேண்டிய கவிதை. அருமை 21-Nov-2023 11:41 pm
பாக்யராஜ் - பாக்யராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2023 3:59 pm

கீழ்கதுவாய் மோனையில் கவிதை
××××××××××××××÷×××××××××××××××

இறுதிவரை உறுதியாகும் காதல்
×××××××××××××××××××××××××××××
கண்கள் கலந்திட வருகின்ற காதல்
சாணயளவு சற்றும் பிணைப்பில் சறுக்காது
பண்போடு பற்றிடும் அன்பை பகிர்ந்திட
ஆண்டுகள் ஆயிரம் இல்லறம் அற்புதமே

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

மேலும்

நன்றிகள் ஐயா 21-Nov-2023 10:17 pm
நன்றி கவி அவர்களே முயல் கிறேன்.. 21-Nov-2023 10:16 pm
கண்ணிரண்டு கலந்திட வருகின்ற பூங்காதல் கண்ணதிலே சற்றுமே பிணைப்புதன்னில் சறுக்காது பண்போடு பற்றிடும் அன்பினிலே பகிர்ந்திட்டால் எண்ணற்ற ஆண்டிலும் இல்லறம்தான் என்றுமேமேல் ---எதுகை மோனையும் பொலிந்திட காய் விளம் காய் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டு கலிவிருத்தமாய் ஆக்கியிருக்கிறேன் யாப்பு விதிகளை உள்வாங்கி முயலுங்கள் பா பாவினம் வசமாகும் வாழ்த்துக்கள் 20-Nov-2023 2:59 pm
கீழ்க் கெதுவாய் மோனை இலக்கணம் சரி. இது வெண்பாவா கலிப்பாவா விருத்தமா என்ன வாய்ப்பாடு கண்டுகொள்ள முடியவில்லை அதை ஏனோ குறிப்பிடவில்லை.. சாணயளவு என்பது கூவிளங்கனி ஆகும். இந்த கனி எப்பாவிலும் வருதல் தப்பாகும் நாலடி அல்லது மூவடி நாற்சீரில் வந்தால் இலக்கனப்பிழை என்பர் பிறகு மோனையை வைத்து என்ன பயன்..... 19-Nov-2023 7:36 pm
பாக்யராஜ் - பாக்யராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2023 8:14 pm

கல்விக்கூடக் காலங்கல்
×××××××××××××××××××××
கல்விக்கூடக் காலங்கல்
களையாத கோலங்கல்
கால்சட்டை சீறுடை
கலப்படமாகும் ஒற்றுமையே

நடந்தே சென்றோம்
நன்னடத்தை மாறாது
கடந்தே வந்தோம்
கல்வியில் சிறந்தவர்களாக

அடித்து கற்பிக்க
அனுமதித்தனர் பெற்றோர்
படித்தோம் பயமுடன்
பயணிக்கிறோம் நல்லவராக

விளையாட்டோடு கல்வி
வியதியின்றி வெற்றி
களைந்தோம் பிரிந்தோம்
கவலையில் ஆழ்ந்தோம்

" யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

மேலும்

நன்றிகள் சகோ.. 18-Nov-2023 8:03 pm
காலங்கல் - காலங்கள் களையாத கோலங்கல் - கலையாத கோலங்கள் சீறுடை - சீருடை வியதியின்றி - வியாதியின்றி களைந்தோம் - கலைந்தோம் எத்தனை பிழைகள்; கவனமாக எழுதலாமே! 16-Nov-2023 9:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே