பாக்யராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பாக்யராஜ் |
இடம் | : மேலக்கலங்கல் |
பிறந்த தேதி | : 01-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 2423 |
புள்ளி | : 853 |
தமிழ் பிறந்த தென்காசி பொதிகை மாவட்டத்தில் மேலக்கலங்கல் என்ற கிராமத்தில் ஞான.அந்தோனி- மேரி தம்பதிகளுக்கு தலை மகனாகப் பிறந்தேன்
ஆர்.சி.துவக்கப் பள்ளி மேலக்கலங்கலில் ஆரம்பக் கல்வியும்,சிஇடி டென்னிசன் உயர்நிலைப் பள்ளி கீழக்கலங்கலில் உயர்நிலைக் கல்வியையும்,ஜசிஜ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தென்காசியில் மேல்நிலைக் கல்வியையும்,ஹெட்வெல் மருத்துவமனை ஜங்ஷன் திருநெல்வேலியில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப பட்டயப் படிப்பை படித்து
தனியார் மருத்துவமனையில் 25 ஆண்டுகளை கடந்து ரத்தப் பரிசோதனையாளராக பணியாற்றுகிறேன்..
நான் ஒன்பது வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறேன்
ராகம் தேடும் பல்லவி அவள்
+++++++++++++++++++++++++++
வீணை தொடும்
விளரி இசையே/1
தேனின் இனிப்பும்
தேனிசை குரலே/2
வானை ஒளியாக்கும்
விண்வெளி நிலவே/3
வளையோசை ஒலிக்கும்
வானவில் நிறமே/4
சேனை காத்திடும்
சோலை இதயத்தில்/5
சுவர் தாண்டும்
பூனையாக அமர்ந்தவளே/6
அணை கட்டிய
அற்புதக் கற்பனை/7
கவிதை உருவெடுத்து
காகிதம் நிறைத்ததே/8
ராகம் தேடும்
ரகசிய பல்லவியே/9
சோகம் ஊட்டும்
சொற்களை பகிராதே/10
வெற்றிடம் புகும்
காற்றும் இசையாகுமே/11
மெளனமாகும் உதடுகளும்
சம்மதிக்கும் கீதமே/12
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்
முரண்பாடு தவிர்த்து உடன்படு
*************************************
பணம் எதற்கு யென்பான்
பகட்டான சோம்பேறி
குணம் எதற்கு யென்பான்
கூடி வாழத் தெரியாதவன்
வரம்புகள் மீறிய
வலிய உணவினை
எறும்புகள் கடத்தியே
இருப்பிடத்தில் சேமிக்கும்
எதற்காக சிந்திப்பிர்..
ஓரிரு நாட்கள்
உயிர்வாழும் கரையான்கள்
உடலில் சிறுத்தாலும்
உன்னதமாகக் கட்டும்
வீட்டைப் பாரீர் ..
பகுத்துண்டு வாழும்
காகத்தின் நற்பண்பு
காலங்கள் கடந்தும்
மாறவில்லை காண்பீர்..
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா ஞான அ பாக்யராஜ்
கண் மூடி ரசித்தவளே
**************************
கை இரண்டும்
கண் மூட
கைவிரல் இரண்டு
சிறிது விலக்கி
பார்வை விதைத்தாய்
தைக்கும் ஊசியாக
மனதில் நுழைந்தாய்
நூல் அருந்த பட்டமாக
கனவில் பறந்தேன்
மயில் விரிக்கும்
வண்ணத் தோகையாக
உதடுகள் மலர்ந்து
குயிலாக பாடும் பாட்டு
குருதி வழி பாய்ந்திடத்
தயிர் கடையும் மத்தாக
உள்ளத்தை கலக்கியே
கயிறு திரிக்கும் நாராக
இதயத்தில் பிணைந்தாயே
சமத்துவ புறா ஞான அ பாக்யராஜ்
இறுதியில் மனிதன்
************************
அசையும் சொத்தும்
அசையா சொத்தும்
அசைவற்ற உடலுக்கு
அனு யளவும்
பயண் யேதுமில்லை
இறுதியில் புறம்போக்கு
இடத்தின் ஆறடி
இடுகாட்டுப் பள்ளமும்
இலையாக மடியும் வரையே
இறந்தவருக்கு சொந்தம்..
கோடி ரூபாய் ஆடையும்
கூட வரவில்லை
கோமணத்து அளவிலான
கோடித் துணி யென்னும்
கிழிசல் துணியே
ஆடி அடங்கிய உடலுடன்
கூட வரும்..
உயர் ரக வாகனம்
உடன் இருந்தும் உயிரற்ற
உடல் தாங்கும்
அமரர் ஊர்தியை
அடைக்கலம் தருமே..
பிச்சை யெடுப்பவனும்
பிச்சை போடுபவனும் -உயிர்
பிரிந்தால் அவன் பிணமே..
காசை சம்பாதித்தாலும்
உறவை சம்பாதித்தாலும்
புதைப்பது தனிமையில் தானே..
உண்மைகள் பொய்க்காது
×××××××××××××××××××××××
உழவர்கள் உழைக்காது/
உணவுகள் கிடைக்காது/
விவசாயம் இல்லாது/
உயிரினம் வாழாது/
வனம் காக்காது/
வானம் பொழியாது/
வாய்மை உரைக்காது/
உண்மைகள் பொய்க்காது/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
கை கொடுக்கும் கை
&&&&&&&&&&&&&&&&
கையுடன் கை கோர்த்து மகிழ்வுடன்/
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை /
சாதி மதம் பேதம் இல்லாமல்/
சாதிக்க இணைந்த கைகளால் முடியும்/
ஏணிபோல் உயர்த்திட உதவிக்கரம் நீட்டினால்/
ஏழைகள் வறுமைக் கோட்டினை தாண்டலாம்/
பிள்ளைகள் பெற்றோரின் பின்னாளில் காத்திட /
பாசத்தில் கைகொடுக்கும் காலம் கனியட்டும் /
கடின முயற்சியின் வின்தொடும் முன்னேற்றத்திற்கு/
கடின உழைப்பே கை கொடுக்கும் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
கீழ்கதுவாய் மோனையில் கவிதை
××××××××××××××÷×××××××××××××××
இறுதிவரை உறுதியாகும் காதல்
×××××××××××××××××××××××××××××
கண்கள் கலந்திட வருகின்ற காதல்
சாணயளவு சற்றும் பிணைப்பில் சறுக்காது
பண்போடு பற்றிடும் அன்பை பகிர்ந்திட
ஆண்டுகள் ஆயிரம் இல்லறம் அற்புதமே
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
கல்விக்கூடக் காலங்கல்
×××××××××××××××××××××
கல்விக்கூடக் காலங்கல்
களையாத கோலங்கல்
கால்சட்டை சீறுடை
கலப்படமாகும் ஒற்றுமையே
நடந்தே சென்றோம்
நன்னடத்தை மாறாது
கடந்தே வந்தோம்
கல்வியில் சிறந்தவர்களாக
அடித்து கற்பிக்க
அனுமதித்தனர் பெற்றோர்
படித்தோம் பயமுடன்
பயணிக்கிறோம் நல்லவராக
விளையாட்டோடு கல்வி
வியதியின்றி வெற்றி
களைந்தோம் பிரிந்தோம்
கவலையில் ஆழ்ந்தோம்
" யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்