மானெழுதியவிழி நீவந்தென் முன்னின்றாய்

வானமெனம் நீலநிற வண்ணவெளி வெண்ணிலா
தேனமுதை சிந்திட பேனா எடுத்தபோது
நானெழுத எச்சொல்லும் நல்கவில்லை நற்றமிழ்
மானெ ழுதியவிழி நீவந்தென் முன்னின்றாய்
தானாக வந்ததுவெண் பா

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-24, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே