நித்திரை உன்நினைவால் நித்தம் கலைகிறது

நித்திரை உன்நினைவால் நித்தம் கலைகிறது
சித்திரை வான்நிலா செந்தமிழ்த் தேன்நிலா
புத்தகம் போல்விரிந்து கண்ணால்போ திக்கிறாய்
புத்தனைப்போல் போதியின் கீழமர்ந்தேன் உன்னாலென்
சித்தம்ரோ ஜாவான தேன்

--ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-24, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே