Vignesh - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/gpies_47153.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Vignesh |
இடம் | : |
பிறந்த தேதி | : 05-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 0 |
தங்கமே
உனை நான் தவறவிடமாட்டேனே..
பொங்கும் புன்னகையை
உனக்காய் நான் அள்ளித்தருவேன்...
போகும் பாதையிலும்
உன் பாதம் தேடிச்செல்வேன்...
பொன்னும் கண் முன்னே
பாவையென நின்றிருப்பின்
மின்னும் உன் பார்வைதனில்
மயங்கியே நானிருந்தேன்...
தின்னும் கனவினிலும்
தீதாம் கலவி என்றேன், ஆயினும்
எனை தீண்டிய பொழுதெல்லாம்
உனை வேண்டியே நானிருந்தேன்..
விண்ணை விலகிநிற்கும்
கரைந்துவிட்ட வெண்நிலவும்
கண்ணே, கலங்காதே
உன்னை நானும்
விலகிச்செல்லமாட்டேனே
மண்ணுள் மடிந்தாலும்
மின்னல் விழும் மரமாய்
இருந்தாலும்
உன்னுள் நானிருப்பேன்...
உனை விடமாட்டேனே!!!
எனை கொன்று தீர்த்தாலும்...
உனைவிடமாட்டேனே
தங்கமே
உனை நான் தவறவிடமாட்டேனே..
பொங்கும் புன்னகையை
உனக்காய் நான் அள்ளித்தருவேன்...
போகும் பாதையிலும்
உன் பாதம் தேடிச்செல்வேன்...
பொன்னும் கண் முன்னே
பாவையென நின்றிருப்பின்
மின்னும் உன் பார்வைதனில்
மயங்கியே நானிருந்தேன்...
தின்னும் கனவினிலும்
தீதாம் கலவி என்றேன், ஆயினும்
எனை தீண்டிய பொழுதெல்லாம்
உனை வேண்டியே நானிருந்தேன்..
விண்ணை விலகிநிற்கும்
கரைந்துவிட்ட வெண்நிலவும்
கண்ணே, கலங்காதே
உன்னை நானும்
விலகிச்செல்லமாட்டேனே
மண்ணுள் மடிந்தாலும்
மின்னல் விழும் மரமாய்
இருந்தாலும்
உன்னுள் நானிருப்பேன்...
உனை விடமாட்டேனே!!!
எனை கொன்று தீர்த்தாலும்...
உனைவிடமாட்டேனே
பூக்கள் ௭ன்றாலே
புயலாய் கோபம் கொள்பவள்
புதிதாய் விருப்பம் ௭ன்று
அதை விரல்களில் ஏந்தி
௭ன்னை நோக்கி வருகிறாள்!
௭ழுந்து அதை நான் வாங்க நினைத்தேன்!
ஆனால்
கல்லறையில் தான்
அதற்கு வசதியில்லை...!!
மலரை
கைகளில் ஏந்தி நிற்கும் மலரே!
முத்தமிட ஆசை ௭ன்று
முட்கள் அழுது கூட கேட்கும்
அனுமதி கொடுத்து விடாதே!
அதைக்கூட ௭ன் மனம்
தாங்கிக்கொள்ளாது...!!
என்னவளே...
விரும்பாமல் கரை ஒரே
இடத்தில இருந்தாலும்...
அலைகள்
ஒவ்வொரு முறையும்...
கரையை
தொட்டுவிட்டுதான் செல்கிறது...
நீ என்னை
வெறுத்து சென்றாலும்...
காலை மாலை உன் நிழலை
தொட்டுவிட்டுத்தான் செல்கிறேன்...
உனக்கு பிடிவாத குணம்
எனக்கு இளகியமனம்...
சேர்வது
கடினம்தான் என்றாலும்...உ
ன்னை சேர துடிக்குதடி
என் உள்ளம்...
கல்லுக்குள்ளும் ஈரம்
உண்டு என்பார்கள்...
உன் மனதுக்குள் நான்
ஒருநாள் வருவேனடி...
இன்று உன் நிழலை
தொட்டு செல்லும் நான்...
நாளை உன் கரம்
கோர்ப்பேனடி...
ஓவ்வொரு நாளும்
நம்பிக்கையுடன்...
நானும் காத்திருக்கிறேன்
உனக்காகவும்
சிரிக்கத் தெரியாத கண்கள்
அழுகைத் தெரியாத உதடுகள்
மறக்கத் தெரியாத உள்ளம்
நினைக்கத் தெரியாத உடல்
கடக்க முடியாத பாதை
நடக்க முடியாத பயணம்
"என் வாழ்க்கை"
கிழக்கே இல்லாத சூரியன் போல
உதிப்பது எங்கே
உதயமாவது எங்கே என்று
தொடக்கமும் முடிவும் இல்லாமல்
எங்கோ சுற்றிக் கொண்டிருக்கின்றன...
காதலே,
எங்கேனும் நீயும் கண்டால்
என் முகவரி கொடு இல்லையேல்
என் முடிவுரையை நீ எழுதிடு....
இப்படிக்கு,
காத்திருக்கும் கல்லறை நான்...
நீள்வட்டப் பாதையில்
கோள்கள்
சுற்றி வருவதைப் போல
நானும்
உன்னையே
சுற்றி வருகிறேன்
நெருங்கவும் முடியாமல்
உன்னை
விட்டு
விலகவும் முடியாமல்
என் தூங்கா இரவுகளில் உன்னிடம் சொல்லப்படாத சில நேசங்களும் கேட்கப்படாத சில ஆசைகளும் விழித்தே இருக்கின்றன என் இருண்ட இமைகளுக்குள் அளந்து பேசும் உன்னிடம் எப்படி சொல்வேன் இன்னும் உன் கை பிடித்து நடை பழகும் சிறு குழந்தையாகவே இருக்க விரும்புகிறேன் என்று