மனக்கவிஞன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மனக்கவிஞன் |
இடம் | : உடுமலைப்பேட்டை / சென்னை -க |
பிறந்த தேதி | : 17-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 771 |
புள்ளி | : 178 |
*கவிதைகளின் மேல் இப்போது மோகம் கொண்டுள்ள நான் எழுதிய கவிதைகள்
*மனதில் கொண்ட எண்ணங்களை கூறும் மனக்கவிஞன்
*என் படைப்புகள் அனைத்து தமிழ் கவிஞர்களுக்கும் சமர்ப்பணம்
*புதியதாக கிறுக்கும் என்னை நீங்கள் எழுத வைக்க நினைத்தால் உங்கள் கருத்துகளை +919843788058 என்ற என்னில் கூறுங்கள்
-மனக்கவிஞன்
மணல் வீடு
வீட்டீன் ஞாபகம் வந்தது
தூக்கம் கலைந்தது
எழுந்தது மணல் மேட்டில்
-மனக்கவிஞன்
நனைந்த கைக்குட்டை
நினைவலைகளில் நனையும் போது
நிறங்கள் தெரியவில்லை
தலையை துவட்டியது வண்ணமான கைக்குட்டை
-மனக்கவிஞன்
வீடு வேண்டுமா உனக்கு வீடு
வீடா எந்த வீடு அந்த வீடு
என்று கேட்ட அவர் காணவில்லை
எந்த வீடு என்று இன்னும் முடிவு
செய்ய இயலவில்லையே ஏன் இன்னும்
இந்த வயதிலும் ஏன் ...............
இதற்கு விடை தெளிந்தால்
அந்த வீடுதான் வேண்டும் என்பாய்...
கண்மை எடுத்து அழகாய் தீட்டி வைத்தாற் போல்
நீண்டு கொண்டே செல்லும் நெடுச்சாலை..
தண்ணீர் கிரகிக்கும் சூரியன் கானல் நீரை சாலை
எங்கும் கொட்டி கொண்டிருக்கும் உச்சி வேளை..
கண்சிமிட்டாமல் அருகே செல்ல செல்ல கட்டணமே
வாங்காமல் மாயாஜாலம் செய்து மறைந்து சென்றது கானல் நீர்ச்சாலை...
அனுமதி ஏதும் இன்றி ஜன்னல் வழி வந்த வெப்ப காற்று
என்னை சற்று சூடாக்கி செல்லும் வேளை!
அவ்வவ்போது வரும் வேகத்தடைகளால் கொஞ்சம் தூங்காமல்
பேருந்தை ஓட்டினார்
அந்த அழகான கருப்பு மனிதர்..
வேகத்தடை என்ற பெயர் தவறானது என்று மனதில் பட..!
ஆம். அது ஓட்டுனர்களின் தூக்க தடை தானே!! என சிந்திக்கையில்
திடீரென பேருந்து நிற்க எதிரில் ஆட
பட்டத்து இளவரசியாய் என் வீட்டில்
அடுத்து
மகாராணியாக என் வாழ்க்கை என
கற்பனை கோட்டையில் உலா சுயவரம் இல்லை எனினும்
சுயவிவரம் தந்து மணம்பேசி அமைந்த
வாழ்க்கை என்னை பார்த்து சிரித்தது
சமூக அமைப்பு தெரியாது கனவுகாண
சொந்த காலில் நிற்கும் சூழல்
மீண்டும் சமூகப்பாடம் படிக்கவேண்டிய கட்டாயம்
நன்றி சொன்னேன் சமூகத்திற்கு நான்
படித்து தேரிய பிறகு இன்று
உண்மையில் நான் மகாராணி என் ஆளுமை
இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டதால்
பெண் ஈசல்
விடியலே உனை தேடினோம்
விட்டில் பூச்சியாய்
பிடியிலே நாங்கள்
வெளிச்சத்தின் பிடியிலே
கூடலே எங்கள்
ஒளியின் தேடலே
உறங்கினோம் விடியலை நோக்கி
பாடினோம் பறக்கவில்லை
தேடினோம் கிடைக்கவில்லை
பிறிந்தோம் இறக்கை விட்டு
உடன் பிறிந்தோம்
உணர்ந்தோம் இறக்கை கொண்டு
உடன் பிறந்தோம்
விடியல் எங்களுக்கு விடிவில்லை
இறவில் எங்களுக்கு இறக்கமில்லை
நாங்கள்
இறக்கை முறிக்கப்பட்ட பெண் ஈசல்
-மனக்கவிஞன்
சிவந்தி
செந்நீரில் செழித்திருக்க
நெற்றியில் மிலிர்ந்திருக்க
மண்பானைகளின் ஆதாரமாய்
மயில் தோகைகளின் கூடாரமாய்
அந்தியின் சகுனமாக
பிந்திமனதி புருவங்களின் வேலியாக
கோயில் சுவற்றினில் செங்குத்தாக
செம்பூத்தின் கண்க(ள்)ளில் வாயிலாக
மிளகாயின் காரமாக
மிளகாய் பஜ்ஜியின் ஓரமாக
உதிரங்களின் தொடரியாக
தொடர்விபத்துக்களின் கூலியாக
மூவண்ணத்தின் தொடக்கமாக
முடியும் வாயின் ஓரம் வெற்றிலையாக
-மனக்கவிஞன்
சிவந்தி
செந்நீரில் செழித்திருக்க
நெற்றியில் மிலிர்ந்திருக்க
மண்பானைகளின் ஆதாரமாய்
மயில் தோகைகளின் கூடாரமாய்
அந்தியின் சகுனமாக
பிந்திமனதி புருவங்களின் வேலியாக
கோயில் சுவற்றினில் செங்குத்தாக
செம்பூத்தின் கண்க(ள்)ளில் வாயிலாக
மிளகாயின் காரமாக
மிளகாய் பஜ்ஜியின் ஓரமாக
உதிரங்களின் தொடரியாக
தொடர்விபத்துக்களின் கூலியாக
மூவண்ணத்தின் தொடக்கமாக
முடியும் வாயின் ஓரம் வெற்றிலையாக
-மனக்கவிஞன்
நடமாடும் நதிகள் 54
1, காலணி தைப்பவன்
தைக்கிறான் பாதசுவடுகளோடு
பித்தவெடிப்புகளோடு
2, பிள்ளையின் பாசத்தை
நிறைவேத்துகிறாள் அம்மா
அடகுக் கடைகளில்
3, பசுமை விவசாயி
குளிக்கிறான்
கட்டனக் கழிப்பறையில்
4, போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை எடுக்க
5, ராணி தேனியை காத்துக் கொண்டிருந்தது
ஆண் தேனீக்கள்
கொலை செய்த பெண்சடலம் முன்பு
6, புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள்
செய்முறை விளக்கத்தில்
பொக்கை வாய் பாட்டிகள்
7, கசாப்பு கடைகளின்
வெட்டுக்கத்தி காத்திருந்தது
அறுவடை செய்ய
8, வெள்ளை வேட்டி வாங்கினார்
வயலில் இறங்கும்
விவசாயி
9,
பெற்றெடுத்தப் பிள்ளைகள் பின்னாளில் பார்க்குமென்று
உற்றுவுற்று பார்க்கும் உறவுகளே! – கற்றபின்னே
கைப்பிடிக்கும் காரிகையின் சொல்கேட்டு கைகழுவும்
மெய்யுணர்ந்து மண்மேல் மரமொன்று நாட்டுங்கள்.
பொய்யான பந்தங்கள் போனாலும் வாழ்வினிலே
கைகொடுக்கும் காலம் கனிந்து.
*மெய்யன் நடராஜ்
கார் தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலாளர் அடித்து துன்புறுத்தல் - சென்னை
நாம் வெளிநாட்டவர்களுக்கு தான் பெரும்பாலும் வேலை செய்கிறோம் குடும்பங்களை பிரிந்து வறுமையின் காரணத்திற்கு
நெஞ்சம் கொதித்தது அந்த துன்புறுத்தும் காட்சியை கண்டு
நாம் அடிமைகளோ இன்னும் என்று சிந்திக்க வைத்தது
-மனக்கவிஞன்