மனக்கவிஞன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மனக்கவிஞன் |
இடம் | : உடுமலைப்பேட்டை / சென்னை -க |
பிறந்த தேதி | : 17-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 1128 |
புள்ளி | : 326 |
*கவிதைகளின் மேல் இப்போது மோகம் கொண்டுள்ள நான் எழுதிய கவிதைகள்
*மனதில் கொண்ட எண்ணங்களை கூறும் மனக்கவிஞன்
*என் படைப்புகள் அனைத்து தமிழ் கவிஞர்களுக்கும் சமர்ப்பணம்
*புதியதாக கிறுக்கும் என்னை நீங்கள் எழுத வைக்க நினைத்தால் உங்கள் கருத்துகளை +919843788058 என்ற என்னில் கூறுங்கள்
-மனக்கவிஞன்
பூனையின் மீசையை முறுக்கிய
குழந்தை ஆண் என்றது
-மனக்கவிஞன்
நிறைந்திருந்த விடைகளும்
வரிசையில் காத்திருந்த கேள்விகளும்
கடலை வாங்கிய பொட்டலத்தில்
-மனக்கவிஞன்
விலாசம் அறியாத பயணச்சீட்டு
போலும் வாழ்க்கை வேண்டும்
-மனக்கவிஞன்
தேன் குடித்த வண்டை
பார்த்துக் கொண்டே நகர்ந்த
தேனி கொட்டியது கொடுக்கில்
-மனக்கவிஞன்
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️
*நீ யார்....?*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️
நீ புத்தனாகலாம்
போதி மரம்
தேவையில்லை....
நீ துறவியாகலாம்
எதையும் துறக்க
வேண்டியதில்லை.....
நீ ஞானியாகலாம்
எதையும்
நஷ்டப்படத்தேவையில்லை....
அதற்கு
ஒரு வழி இருக்கிறது....
*நீ யார்?* என்று
உன்னை நோக்கி
நீயே! கேட்பதுதான்...
இப்போது கேள்
நீ யார்....?
"பெயர்" தான்
நீ என்றால்
நீ எழுத்துக்களால்
ஆனவனா.....?
"தொலைபேசி" எண் தான்
நீ என்றால்
நீ எண்களால் ஆனவனா ...?
"ஆதார் அட்டை" தான்
நீ என்றால்
எண் எழுத்து
இரண்டாலும் ஆனவனா...?
"போட்டோ" தான்
வேப்ப மர நிழலில்
விழாமல் துள்ளித்திரிந்த அணிலும்
விழுந்த பூக்களும்
இதமளித்தது
-மனக்கவிஞன்
பாலைவனத்திலும் பூக்களுண்டு
பாவை அணைத்திடும் பணியுமுண்டு
முள்ளுடை கள்ளிக்கும் கனிகளுண்டு
கல்லுடை மனதிற்கும் காதலுண்டு
காவிரி காண மறுப்பதினால் காய்ந்தவையெல்லாம் பாலைவனம் தான்
கனகம் தேடும் காளையரில் காண்பவையெல்லாம் காமமடி
குனகம் பாரும் உலகினிலே
நானும் யாருமற்ற நரகத்திலே...
தனிமைச் சுடும் போதினிலே
கவிதை தந்த ஆதரவில்
கவலை மறந்து போகிறேனே....
பிரியமானவர்கள் வீட்டுக்கு வந்ததால்
பிரியா விடை கொடுக்கக் காத்திருந்த தோசை கல்
-மனக்கவிஞன்
நெற்பயரிடம் அந்தரங்க கேள்வி கேட்டேன்
நீ எந்த வகையான அரிசி என்று
-மனக்கவிஞன்
சிவந்தி
செந்நீரில் செழித்திருக்க
நெற்றியில் மிலிர்ந்திருக்க
மண்பானைகளின் ஆதாரமாய்
மயில் தோகைகளின் கூடாரமாய்
அந்தியின் சகுனமாக
பிந்திமனதி புருவங்களின் வேலியாக
கோயில் சுவற்றினில் செங்குத்தாக
செம்பூத்தின் கண்க(ள்)ளில் வாயிலாக
மிளகாயின் காரமாக
மிளகாய் பஜ்ஜியின் ஓரமாக
உதிரங்களின் தொடரியாக
தொடர்விபத்துக்களின் கூலியாக
மூவண்ணத்தின் தொடக்கமாக
முடியும் வாயின் ஓரம் வெற்றிலையாக
-மனக்கவிஞன்
நடமாடும் நதிகள் 54
1, காலணி தைப்பவன்
தைக்கிறான் பாதசுவடுகளோடு
பித்தவெடிப்புகளோடு
2, பிள்ளையின் பாசத்தை
நிறைவேத்துகிறாள் அம்மா
அடகுக் கடைகளில்
3, பசுமை விவசாயி
குளிக்கிறான்
கட்டனக் கழிப்பறையில்
4, போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை எடுக்க
5, ராணி தேனியை காத்துக் கொண்டிருந்தது
ஆண் தேனீக்கள்
கொலை செய்த பெண்சடலம் முன்பு
6, புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள்
செய்முறை விளக்கத்தில்
பொக்கை வாய் பாட்டிகள்
7, கசாப்பு கடைகளின்
வெட்டுக்கத்தி காத்திருந்தது
அறுவடை செய்ய
8, வெள்ளை வேட்டி வாங்கினார்
வயலில் இறங்கும்
விவசாயி
9,
பெற்றெடுத்தப் பிள்ளைகள் பின்னாளில் பார்க்குமென்று
உற்றுவுற்று பார்க்கும் உறவுகளே! – கற்றபின்னே
கைப்பிடிக்கும் காரிகையின் சொல்கேட்டு கைகழுவும்
மெய்யுணர்ந்து மண்மேல் மரமொன்று நாட்டுங்கள்.
பொய்யான பந்தங்கள் போனாலும் வாழ்வினிலே
கைகொடுக்கும் காலம் கனிந்து.
*மெய்யன் நடராஜ்