ராஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜா |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 12-Nov-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 32 |
பாடலாசிரியர் , Lyricst writer
காற்றோடு ஒப்பந்தம்
கையெழுத்தாவில்லை
நிவாரணமாய் வந்த மழைகூட
நிதானிக்காமல் கடக்கிறது -
புயலாய்...
மூடிய விழிகளுக்குள்
மூன்றாம் உலகபோர் நடத்துகிறேன்
இருண்ட என் இரவுகளை
இமைகள் மூடி விரட்டுகிறேன்
காலைபனியாய்
என் காதுமடல் கடித்து
காதல் மொழி ஓதுகிறாய்
விரட்டிய இரவை
விரட்டிதேடி தோற்று
நான் விழித்து பார்க்கும் முன்
காணாமல் போய்விட்டாய்
வினாவுகின்றேன் விடைகளொ
நீ வெகுதூரம் என்று
அன்பே நீ சென்னைக்கு சென்றாயொ
இல்லை செவ்வாய்க்கு சென்றாயொ
உன்னால் சிவந்து நிற்க்கிறேன்
அரைத்த மருதாணியாய் நான்
நிறங்கள் மாறலாம் நாளாக
உன் நினைவுகள் மாறுமா ?
நீ வருவாய் வருவாய் என்று
வாடாத பூக்களால் வாசம் சேகரித்து
உன் வரவுக்காக காத்திருக்கிறேன்
நீதான் என் வாழ்வென்று எண்ணி....
அனுக்கதிர்களாய்
அலைபாய்கிறது -அடுப்பு
அனலில்கூட உன் நினைவலைகள்;
கரும்புகையிலும்
கண்கள் இமைக்க -மறுக்கிறது;
காண்பதெல்லாம்
உன் பிம்பம் என்று ;
நான் ஊதி, ஊதி
எரித்தாலும்-என்
உள்ளம் தான் கொதிக்கிறது;
உன் அருகில்
நான் இல்லை -என்று
உலைகூட கொதிக்க மறுக்கிறது...
அனுக்கதிர்களாய்
அலைபாய்கிறது -அடுப்பு
அனலில்கூட உன் நினைவலைகள்;
கரும்புகையிலும்
கண்கள் இமைக்க -மறுக்கிறது;
காண்பதெல்லாம்
உன் பிம்பம் என்று ;
நான் ஊதி, ஊதி
எரித்தாலும்-என்
உள்ளம் தான் கொதிக்கிறது;
உன் அருகில்
நான் இல்லை -என்று
உலைகூட கொதிக்க மறுக்கிறது...
மூடிய விழிகளுக்குள்
மூன்றாம் உலகபோர் நடத்துகிறேன்
இருண்ட என் இரவுகளை
இமைகள் மூடி விரட்டுகிறேன்
காலைபனியாய்
என் காதுமடல் கடித்து
காதல் மொழி ஓதுகிறாய்
விரட்டிய இரவை
விரட்டிதேடி தோற்று
நான் விழித்து பார்க்கும் முன்
காணாமல் போய்விட்டாய்
வினாவுகின்றேன் விடைகளொ
நீ வெகுதூரம் என்று
அன்பே நீ சென்னைக்கு சென்றாயொ
இல்லை செவ்வாய்க்கு சென்றாயொ
உன்னால் சிவந்து நிற்க்கிறேன்
அரைத்த மருதாணியாய் நான்
நிறங்கள் மாறலாம் நாளாக
உன் நினைவுகள் மாறுமா ?
நீ வருவாய் வருவாய் என்று
வாடாத பூக்களால் வாசம் சேகரித்து
உன் வரவுக்காக காத்திருக்கிறேன்
நீதான் என் வாழ்வென்று எண்ணி....
வானத்தின் காதலை
மண்மகள் ஏற்கிறாள்
மனம்பறித்தவன்
மனம் குளிர
திசையெல்லாம்
பச்சைவண்ணம் பூசி
கொதிக்கும் கண்கொண்டு
உன்காதலை கோடையாக்க
துடிக்கும் சூரிய கள்வனை
உன் அங்க ஆடை மேகத்தால் தடுத்து
உன்பாச பரிதவிப்பை பறைசாற்றுகிறாய்!
உரசும் காதலில்லை உன் காதல்
தொடாமலே பூக்கிறாள் பூமி
ஊணக்காதல் இல்லை உனது
உன்னதகாதல் உன் காதல்
மழைமுத்தம் கேட்குதோ!
மரக்கிளைகள்
ஆடி ,ஆடி அழைக்கிறது
ஆசைக்காதல் இல்லை உனது
அன்புக்காதல்
உயிர் இல்லை என்றாலும்
உயிர்கள் வாழுதே உன் காதலால்
உயர்ந்த காதல்தான் உன் காதல்...!
வானுக்கும் உன்மேல் காதல்
மேகதோழிகள் துணையோடு
எழுதியது
காதல் கடிதம் -மழை...
காரணங்களை தேடிகொண்டிருக்கிறேன்
அவன் நினைவுகளை
என் இதயத்திலிருந்து
விரட்டி அடிக்க...ஆனால்
அதுவே ஒரு காரணமாகிவிட்டது
அவன் நினைவுகள்
தினம் தினம்
என்னை உரசி செல்ல...
அவளது தாலாட்டை
தலையணையாகவும் -அவள்
தாய் பாசத்தை போர்வையாகவும்
கொண்டு உறங்கிய
நாட்களை எண்ணும்
பொழுதெல்லாம் நெஞ்சம்
கனத்து போகிறது....
விழிகளோ அழ யாசகம்
கேட்டு விம்மி நிற்கிறது...
ஆனால் அன்றொரு
நாள் அவள் கூறினாள்
பிள்ளைங்க அழுதா
செத்தாலும் பெத்தவ
நெஞ்சு தாங்காதாம்....
கூறிவிட்டு சென்றுவிட்டாள் அவள்...
ஒரு முறையாவது
என் சோகத்தை போக்க
அழுது கொள்கிறேன்
என்று ஒவ்வொருமுறையும்
அவள் புகைப்படத்திற்கு
முன் மண்டியிட்டு கிடக்கிறேன் நான்...
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின்அறிவிப்பு
திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 21-06-2015 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை "திருக்குறள் தேசிய நூல் மாநாடு"ஒன்றினை அனைத்து இந்திய மக்களின் சார்பாக கடலூர் மாவட்டம் வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்த உள்ளது . இதை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திருக்குறள் சம்பந்தமான கட்டுரைப் போட்டிகள் , குறள் ஒப்புவித்தல் போ (...)