எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின்அறிவிப்பு திருக்குறளைத் தேசிய...

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின்அறிவிப்பு

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 21-06-2015 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை "திருக்குறள் தேசிய நூல் மாநாடு"ஒன்றினை அனைத்து இந்திய மக்களின் சார்பாக கடலூர் மாவட்டம் வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்த உள்ளது . இதை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திருக்குறள் சம்பந்தமான கட்டுரைப் போட்டிகள் , குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தி பங்கு பெறும் பள்ளிகள் ,கல்லூரிகள், மாணவர்களுக்கு தமிழ் அறிஞர்கள் , சான்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது .
அந்தந்த பள்ளிகள் / கல்லூரிகள் ஒரு ஆசிரியரை நியமித்து போட்டியை நடத்தி பள்ளி / கல்லூரி முத்திரையுடன் " பொதுச் செயலாளர் , தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் , எண்-1, நேரு நகர் , மண்ணூர்பேட்டை , சென்னை - 600 050. என்ற முகவரிக்கு 15-06-2015 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விழா மலரில் உங்களது படைப்புகள் (கவிதை / கட்டுரை) சேர்க்கப்படும். விளம்பரங்கள் குறைந்த செலவில் வெளியிடப்படும். தொடர்புக்கு - 9786755988 (பேராசிரியர் வேல் முருகன்) தேசத்தின் வளர்ச்சிக்கு திருக்குறளை தேசிய நூலாக்க கடலூரில் கூடுவோம் வாரீர் ...! - செம்மொழிப்போராளி கவிஞர் க.ச.கலையரசன்
call : 9551547027 / 9786755988 / 8438263609

நாள் : 8-Jun-15, 9:21 am

மேலே