பொன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொன்
இடம்:  வாழ்வது சென்னை ..பிறந்தது
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jul-2015
பார்த்தவர்கள்:  350
புள்ளி:  11

என்னைப் பற்றி...

எனக்கான புதிரை விடுவிக்க முயலும் ஒருவன்..நான்!rnதிருவள்ளுவர்..அவ்வை..பாரதி..rnபாரதிதாசன்..ஜெயகாந்தன்..rn

என் படைப்புகள்
பொன் செய்திகள்
பொன் - அச்சலா சுகந்தினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2013 12:12 pm

குழல் இனிது யாழ் இனிது என்பர்
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்
குறளிலே நாம் படித்துள்ளோம்
குடும்பத்தில் மட்டும் தன் குழந்தையா ?

சிறுவர் தினம் என்று ஒரு
சிறந்த நாளை கொண்டாடி விட்டு
சிற்றின்பம் காண்பதற்கு ஒரு
சிறுமியை அழைத்தல் நன்றாகுமோ?

படிப்பது தேவாரம்
படித்து விட்டு
இடிப்பது சிவன் கோவில்
துடிக்கின்றது என் இதயம்!

தொழிற்சாலை ஒன்று வைத்து
தொண்ணூறு கோடி கண்டு விட்டு
தொலைவில் உள்ள தன் மகனுக்கு
தொங்கு தோட்டத்தில் பிறந்த நாளாம்!

தன் விருத்திக்காக வியாபாரத்தில்
தணலிடை மெழுகாய் உருகும்
தன் பெறா மக்கள் கூட்டமதை
தன்மையாக நடத்துவாரோ?

பெற்ற தாயை விட்டு ஒர

மேலும்

அருமை 22-Jun-2016 9:52 pm
நல்ல கருத்துள்ள கவிதை! "தன் விருத்திக்காக வியாபாரத்தில் தணலிடை மெழுகாய் உருகும் தன் பெறா மக்கள் கூட்டமதை தன்மையாக நடத்துவாரோ?" வரிகள் சிறப்பு!.. 11-Oct-2013 9:53 am
கவிதா காளிதாசன் அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jun-2015 2:09 pm

கண்கவர் அழகில்லை நான்
எனினும் எண்ணங்களில்
வண்ணம் நிறைந்தவள்...

பிறர் என் வாழ்வில் கண்ணீரை
விதைத்தாலும் புனைகை பூக்களை
பூப்பவள் நான்....

உன் கைகோர்க்கவும்,
உன் தோள் சாயாவும்,
நம் விதியில் எழுதப்படவில்லை...

உன் எண்ணங்களில் கலந்து,
உன் மனதில் வாழும்
வரம் கிடைத்தது எனக்கு...

சராசரி பெண்ணாய் இராமல்
நம் பிரிவில் காதலை ரசிக்கிறேன் நான்...!

மேலும்

காதல் வெற்றியில் காதலர்களாய் மானிடர்களை மட்டுமே அறிகிறோம்.......... காதல் தோல்வியில்தான் காதலைப்பற்றி அறிந்து கொள்கிறோம்....... மலரட்டும் மனக்கசப்பல்ல.......... இனிய நினைவுகள் நெஞ்சினிலே...... 06-Jan-2016 1:39 pm
நன்றிகள் ஐயா.. 04-Nov-2015 1:41 pm
சோகத்தில் சுகப்படக் கற்றுக் கொண்டு விட்டால் சுவைக்க இயலும் வாழ்வினை என்ற தத்துவம் பொதிந்த தரமான கவிதை. தொடர்ந்து எழுதவும் 04-Nov-2015 1:09 pm
மிக்க நன்றிகள் ponnarasu 21-Oct-2015 10:02 am
பொன் - ஆனந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2015 3:57 pm

அசர வைக்கும்
அழகை காட்டி
எனக்குள் உற்ச்சாகம்
பல நூறு கூட்டி
பார்வைக்குள்
நங்கூரமிட்டு கண்களை
இமைக்க விடாமல்
பார்க்க
வைத்துவிடுகிறான்
என்னை.....

முத்தம் இடுகையில்
முத்திரை பதிக்கவா
அவனது இதழ்கள்
செவ்விதழ்களாய்....

பூத்துக்குலுங்கும் மொத்த
பூக்களாய்
அவனது புன்னகை
பார்க்கையில்
கிடைத்திடும்
பூலோகத்திலே சொர்க்கம்....

ஒவ்வொரு முறை
பார்க்கையிலும்
வெவ்வேறு விதமாய்....

மீளமுடியா
அவஸ்த்தையிலே
ஒன்றி போகிறேன் ...

மல்லிகை பூ
மாலையும் மயங்கி
கிடக்கிறது அவனது
மார்பினில்....

குழலின் ஓசையும்
மரகத வாசமும்
மண்டியிட்டு
மடிகிறது அவன்
வசமாகிட...

மேலும்

அருமை 10-May-2016 1:03 am
தரமான வரிகள் அழகான கற்பனை மிதமான உணர்வுகள் .. உங்கள் கவிதை .. தோழி 30-Dec-2015 7:01 pm
நன்றி....தங்களின் கருத்து புது உற்சாகத்தை அளித்தது.... தங்களின் வருகையில் மிக்க மகிழ்ச்சி எனக்கு..... 27-Oct-2015 8:33 pm
கவிக்குயில்,குடும்ப விளக்கே கவிதை இலக்கியம் மேன்மேலும் படைக்க தமிழ் அன்னை ஆசி வேண்டுகிறேன் பாராட்டுக்கள். 27-Oct-2015 2:47 pm
ஆனந்தி அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Oct-2015 6:31 am

இன்று 
என் தலையில் 
முள் கிரீடம் 
சூட்டியது யார்... 

கலங்கிய 
கண்களுக்குள் 
கல்லெறிந்து 
சென்றது யார்... 

கனவான 
பெருந்துயரை 
இன்று கவிழ்த்து 
போட்டது யார்.... 

அழகான 
என் வாழ்வை 
சுனாமியாய் 
பெயர்த்தெடுத்தது 
யார்.... 

என் பொழுதுகளை 
களவாடி சென்றது 
யார்.... 

என் வார்த்தைகளை 
வதைத்து போட்டது 
யார்.... 

என் வாழ்வோடு 
வலிகளை 
கலந்தது 
யார்... 

என் மௌனத்தோடு 
கண்ணீரையும் கூடவே 
வெந்நீரையும் 
தெளித்து சென்றது 
யார்.... 

எல்லாமே 
என்னவனின் செயலா... 

செயல் தான் எனில் 
ஏழு சென்மமும் 
அவனை நினைத்து 
தவித்து தனித்தே 
கிடக்கும் வரம் 
வேண்டுமெனக்க

மேலும்

மன பாரம் தீர்ந்தது .....தங்களின் வருகையில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.....நன்றி.....நன்றி..... 21-Oct-2015 9:02 am
......தங்களின் வருகையிலும், வார்த்தைகளிலும் மனம் மகிழ்ந்தேன்......நன்றி..... 21-Oct-2015 8:41 am
கவிதை அருமை தோழி ..!நீங்கள் சொல்லும்..தனித்து தவித்து ..எல்லாம் அருமை ..வள்ளுவன் உளறினான் என்று சொல்லும் அறிவு இங்கே யாருக்கு உண்டு..கிருஷ்ணன் ? நீங்கள் எல்லாம் அறிந்தவர? நீங்களே அறியாத போது..மற்றவர்க்கு ஏனிந்த உபதேசம் ? கடவுள் இல்லை என்பது ஒரு நிலை ..அதுபோல கடவுள் உண்டு என்பதும் .. கருது திணிப்பு வேண்டாம் ...வள்ளுவன் உளறினான் என்று சொல்வதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.. அப்படி பார்த்தல் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் உளறுகிறார்கள் என்றும் சொல்லலாமே ..? நீங்கள் சொல்லும் அப்துல் ரஹ்மான் ..கடவுள் உண்டு என்று சொல்பவர் ..அவரிடம் சொல்வீர..எனித முட்டாள் தனம் என்று/ 21-Oct-2015 12:15 am
அருமை ! இருப்பினும் , செயல் தான் எனில் சென்மம் ஏழிலும் அவனை நினைத்து தவித்து தனித்தே கிடக்கும் வரம் வேண்டுமெனக்கு....சென்மம் ஏழு !? எழுமையும் என்று வள்ளுவன் உளறினால் நாமும் அதைச் செய்யலாமா.. ( Without knowing any thing(k) Please Don'i TOUCH some thing(k) ) வரம்...வரங்களே சாபங்களானால் இங்கே தவங்கள் எதற்கு !? - 'கவிக்கோ ' அப்துல் ரகுமான் அல்லது அவருக்குப் பிடித்த கவிதைகளுள் ஒன்று. தவித்து தனித்து...தனி என்பது தவிப்பு அல்ல. தனி என்பது கடலில் அலை...உடலில் உயிர்... வாழிய நலம் !! 08-Oct-2015 8:32 am
பொன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 12:04 pm

அன்பின் சொருபமே !
அன்பின் சொருபமே !
ஆணை முகத்தோனே !
எம் ஆணவம் அழித்தோனே!

அன்னை பார்வதியின்
அருந்தவ புதல்வா !
ஆடல் நாயகனின்
ஆசை பாலகா!
அன்னையும் பிதாவும்
அகில மென்று
அனைவருக்கும் உணர்த்தியோனே!

அற்புதம் புரிவோனே !
எங்கும் இருப்போனே !
எதிலும் முதல்வனே
ஏகாந்தமானவனே!
எளிய வடிவோனே!

நவ கிரகங்களின்
உச்சியில் அமர்ந்து
நன்மை புரிந்திடுவாய்!
நா வன்மை கொடுத்திடுவாய்!

சின்னக் குழந்தைகளின்
செல்லத் தோழனே !
செல்லப் பிள்ளையாரே!
சிறப்பைத் தந்திடுவாய்
செல்வ வளத்தினைத் தந்திடுவாய்!

அறம் பொருள் இன்பம்
அனைத்தும் தருவாய்!
சோகங்கள் நீக்கி
சுகம்தனை தருவாய்!

அன்பின்

மேலும்

நன்றி அனுஆனந்தி! 05-Aug-2015 7:43 pm
அற்புதமான படைப்பு .... 05-Aug-2015 2:27 pm
பொன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 12:57 pm

என்னதான் சுயநல உலகம்
என்று சொன்னாலும்
எல்லோரும் எப்பொதும்
தனக்காகவே வாழ்ந்து விட்டு போவதில்லை!

மேலும்

பொன் - பொன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2015 11:13 pm

அவளிடமே காசு வாங்கி
சேலை எடுத்து கொடுத்தாலும்
"எம்மவன் வாங்கி கொடுத்தான்"
என்று சொல்ல
வேறு யாரால் முடியும்
அம்மாவை தவிர!

மேலும்

நன்றி சியாமளா 15-Jul-2015 6:20 pm
உண்மைதான் ! சிறப்பு ! 14-Jul-2015 10:30 pm
நன்றி மணிமீ..உங்க பெயர் புதுசா இருக்கு 11-Jul-2015 12:48 pm
இது அம்மக்களுக்கான சுதந்திரம் உரிமை அழகு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... கவிதை அழகு வாழ்க வளமுடன் 10-Jul-2015 11:17 pm
பொன் - எண்ணம் (public)
14-Jul-2015 10:13 pm

கலைக்கொரு தோல்வி கிடையாது…கிடையாது ..கிடையாது...

எபோதும் எம் ஸ் வீ என்றால் நினைவு வரும் இரு பாடல்கள் ..ஒன்று சங்கமம் திரை படத்தில் வரும்
மழை த்துளி ..மழை த்துளி..பாட்டும் ..கன்னத்தில் முத்தமிட்டால் லில் வரும் " விடை கொடு எங்கள் நாடே"
பாட்டும்
என்ன ஒரு கனத்த ..80 வயதிலும் உச்சஸ்தாயில் பாடும் கணீர் குரல் ..இரண்டு பாடல்கள் கேட்கும் போதும் மனதை பிசையும் அவர் குரல் ..இசையின் மன்னன் என்று சொன்னால் இப்பொது கூட எழுந்து வந்து " அப்டில்லாம் இல்லைங்க தம்பி , பெரியவங்க ஆசீர்வாதம் ..எதோ கொஞ்சம் வ (...)

மேலும்

பொன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 1:18 pm

மறுப்பு சொல்லை தலைப்பாக்க
நீயே காரணம் ...

விலகி செல்ல
உன் இதழ் உத்தரவிட
உன்விழிகளோ
விலங்கிடுகிறது..

கடுமையை
வார்த்தையில் காட்டி
விலகிப்போவென
சொல்ல
நானோ வெட்கம் கெட்டவனாக
உன் வெட்கம் கெட
யுத்தம் தொடர்ந்தேன் ..
என்ன செய்ய ..
மீறாதே என் வார்த்தையை
என்றாய் ...
கவிதைக்கு கூட
இலக்கணம் மீறி
பழக்கம்...
இதில் மட்டும் மீறாமலா..

இறுதியில் நீ சொன்னதே
ம்ம்ஹ்ஹூம்ம் !
பலமாய் யுத்தம் செய்ய
பணித்ததாக வீறு கொண்டேன்!

மேலும்

தவறுகளை திருத்திவி ட்டேன் .... 10-Jul-2015 1:02 pm
நன்றி நண்பர்களே 10-Jul-2015 12:44 pm
வித்தியாசம்... நன்று.. ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... கொஞ்சம் எழுத்துப் பிழையை பாருங்கள் தோழரே... 10-Jul-2015 4:35 am
புதுமையான வரிகள் 09-Jul-2015 2:59 pm
பொன் - கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2015 12:28 pm

ஒவ்வொரு
*****நாள்மலரிலும்
*********தேனாய்
************சூல் கொள்கிறேன்....

************வாழ்க்கை என்னை
*********சுவைக்கிறது
*****ஒரு அழகிய
பொன்வண்டாய்....! (2013)

மேலும்

நல்ல கவிதை தோழரே! 15-Jun-2015 4:16 pm
உங்கள் நந்தவனத்தில் மலரலாம் போலிருக்கிறதே.. 15-Jun-2015 3:54 pm
:) தேனாக்கிக் கொள்ளுங்கள் தேகத்தையும், அகத்தையும்....! வரும், பொன்வண்டு நிச்சயம் :) !! பொன்வண்டாய் சுவைத்தேன் :) 15-Jun-2015 2:02 pm
அஹா மிக அழகு தோழரே ..... 15-Jun-2015 1:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

user photo

கோபி சுரேஷ்

திருநெல்வேலி
ராம்

ராம்

காரைக்குடி
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே