பேரழகன்-ஆனந்தி

அசர வைக்கும்
அழகை காட்டி
எனக்குள் உற்ச்சாகம்
பல நூறு கூட்டி
பார்வைக்குள்
நங்கூரமிட்டு கண்களை
இமைக்க விடாமல்
பார்க்க
வைத்துவிடுகிறான்
என்னை.....

முத்தம் இடுகையில்
முத்திரை பதிக்கவா
அவனது இதழ்கள்
செவ்விதழ்களாய்....

பூத்துக்குலுங்கும் மொத்த
பூக்களாய்
அவனது புன்னகை
பார்க்கையில்
கிடைத்திடும்
பூலோகத்திலே சொர்க்கம்....

ஒவ்வொரு முறை
பார்க்கையிலும்
வெவ்வேறு விதமாய்....

மீளமுடியா
அவஸ்த்தையிலே
ஒன்றி போகிறேன் ...

மல்லிகை பூ
மாலையும் மயங்கி
கிடக்கிறது அவனது
மார்பினில்....

குழலின் ஓசையும்
மரகத வாசமும்
மண்டியிட்டு
மடிகிறது அவன்
வசமாகிட.......

வானவில்லும் பிரமித்து
நிற்கிறது
இமைகளின் அழகினில்....

சில்லென்ற காற்றும்
சிறை பட்டு கிடக்கிறது
அவன் மேனி
தீண்டலில்.....

கும்மாளமிட்டு
இறங்குகிறது அவன்
கன்னத்தில்
வியர்வைத்துளி....

கொஞ்சி குலவி
குலவி கிடக்கிறது
அவனது கழுத்தினில்
ருத்ராட்சம்.....

இரகசிய எட்டாவது
அதிசயமும் இவனா

சேர்க்காமல் சேர்ந்த
பொக்கிஷத்தின் பொருளா.....

சென்மங்கள் ஏழு
உண்டெனில்
அவனே
என்னவனாகிட
வரம் வேண்டுமெனக்கு......

எழுதியவர் : ஆனந்தி .ரா (7-Oct-15, 3:57 pm)
பார்வை : 307

மேலே